search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுவார்த்தை"

    • அரசாணை வெளியிட்ட பின் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடங்க வேண்டும்.
    • ஆழ்துளை கிணறுகள் அமையவிருக்கும் பகுதியில் கதவணை அமைக்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் தாலுகாவில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார்.

    கல்யாணசுந்தரம் எம்.பி., பாபநாசம் தாசில்தார் பூங்கொடி , கூட்டு குடிநீர் திட்ட நிர்வாகப் பொறியாளர் ஜெயக்குமார், உதவி நில நீர் வல்லுநர் லெட்சுமணன், ஒன்றியகுழு தலைவர்கள் கலைச்செ ல்வன், சுமதி .கண்ணதாசன் , மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுதா, கூத்தரசன், அமானு ல்லா ஆகியோர் முன்னிலை ,வகித்தனர்.இந்த கூட்டத்தில், கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடங்குவதற்கு முன்னர் நிலத்தடி நீரை தக்க வைக்கும் பொருட்டு ஆழ்துளை கிணறுகள் அமையவிருக்கும் பகுதியில் கதவணை அமைக்க அரசை கேட்டுக் கொண்டு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பணிகளை தொடங்குவதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம்.

    அரசு சார்பில் வாழ்க்கை - தூத்துர் இடையே கொள்ளிடத்தில் கதவணை கட்ட அறிவிப்பு வழங்கி அரசாணை வெளியிட்ட பின் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயப் பிரதிநிதிகள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

    தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #DMDK
    சென்னை:

    கோயம்பேட்டில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை. நல்லதே நடக்கும். இந்த கூட்டணி அமையக்கூடாது என எதிரிகள் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் பலிக்காது.

    பா.ம.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடியும் வேலைகளை சிலர் செய்கின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே திரித்து கோபம் வரும் அளவுக்கு சிலர் கருத்து சொன்னாலும் நாங்கள் ஒருமித்த கருத்தோடு தேர்தலை சந்திப்போம். கட்சிகளுக்குள் கொள்கைகள் மாறுபடலாம். இது தேர்தல் கூட்டணி. தி.மு.க.-காங்கிரசை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தே.மு.தி.க. குறித்து சொன்ன கருத்து கட்சி கருத்து அல்ல. இதற்கும் பேச்சுவார்த்தைக்கும் சம்பந்தம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #DMDK

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.
     
    இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்று ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்றார். பிரதமர் மோடியும் உடனிருந்தார். 

    இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, சவுதி இளவரசர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.



    முன்னதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சவுதி இளவரசரை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது. #SaudiArabiaCrown #MohammedBinSalman #India 
    ஆந்திர கடலோரத்தில் மீன்பிடித்த 200 தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களை விடுவிக்கக்கோரி அரசு சார்பில் அமைச்சர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். #TNfishermen
    திருவொற்றியூர்:

    ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், அதிக குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளை பயன்படுத்துவதாகவும், ஆந்திர மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விடுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநில கடல் பகுதிக்கு கடந்த 16-ந் தேதி மீன்பிடிக்க சென்ற 27 விசைப்படகுகளையும், அதில் இருந்த 200 மீனவர்களையும் ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்தனர்.

    சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், துப்பிலிபாலம், மைப்பாடு உள்ளிட்ட 20 மீனவ கிராமங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    சிறைபிடிக்கப்பட்ட சென்னை மீனவர்களை விடுவிப்பதற்காக மீனவ சங்க நிர்வாகிகள் ஆந்திரா சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தமிழக மீனவர்களை விடுவிக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனையும் அவர்கள் ஏற்கவில்லை.

    மேலும் தமிழக மீனவர்கள், ஆந்திர கடற்கரையோரம் மீன்பிடி தொழிலை மேற்கொள்ளக்கூடாது. அதிக குதிரை திறன்கொண்ட என்ஜின், இரட்டை மடி வலைகளை பயன்படுத்தக்கூடாது. 300 அடி தூரத்தில், ஆழ்கடலில் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்கும் வரை, மீனவர்களை விடு விக்க மாட்டோம் என்று ஆந்திர மீனவர்கள் கூறிவிட்டனர்.

    இந்த நிலையில், சென்னை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்பரிதி, உதவி இயக்குனர் வேலன் தலைமையில் தமிழக அதிகாரிகள், ஆந்திர மாநில மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் ஆந்திர மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாகவும், சென்னை மீனவர்கள் விதிகளை மீறி மீன் பிடித்தொழில் மேற்கொண்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமரசம் பேசினர். அதன்பின்னரும் தமிழக மீனவர்களை விடுவிக்காமல் ஆந்திர மீனவர்கள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #TNfishermen

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. #ParliamentElection #DMK #Congress
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிடுகிறார்.

    அ.தி.மு.க.வை தொடர்ந்து, தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்க இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

    தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு, தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி கனிமொழி விளக்கி கூறினார். இந்தநிலையில் மீண்டும் ராகுல்காந்தியை கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். நேற்று மாலை 5 மணி தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7 மணிவரை நீடித்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் வழங்கப்பட இருக்கிறது.

    முன்னதாக, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.

    டெல்லியில் ராகுல்காந்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதற்காக கனிமொழி எம்.பி. நேற்று இரவு உடனடியாக சென்னை புறப்பட்டார். தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இன்று (புதன்கிழமை) சென்னை வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் 10 இடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். தொகுதி பங்கீடுக்கான விவரமும் வெளியிடப்படுகிறது. 
    ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
    சென்னை:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி செய்து வருகிறது. குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
     
    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    குறிப்பாக, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கடந்த 14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும்,தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.



    இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடக்கும் ஓட்டலை வந்தடைந்தனர்.

    இன்று நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அளிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance 
    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வதற்காக, சென்னையில் இன்று அதிமுக மற்றும் பாமக கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். #LSPolls #ADMK #PMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநில கட்சிகளுடன் கூட்டணியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

    பீகார், மராட்டியம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்துள்ள பா.ஜனதா தலைவர்கள் அடுத்தக்கட்டமாக தென் மாநிலங்களில் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.

    தென்இந்தியாவை பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா கட்சிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் எந்த கூட்டணியும் அமையவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே பா.ஜனதாவுக்கு பலமான கூட்டணி அமைய உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி ஏற்கனவே உருவாகிவிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டணியை உருவாக்க கடந்த சில வாரங்களாக பா.ஜனதா தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆளும் அ.தி.மு.க. தலைமையில் அந்த கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதற்காக அ.தி.மு.க. - பா.ஜனதா மூத்த தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேசி வந்தனர். அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் தலா 5 சதவீத வாக்கு வங்கிகளை வைத்துள்ள பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை சேர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இணைவது தொடர்பாக நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உடன்பாட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்ப அ.தி.மு.க- பா.ஜனதா தலைவர்கள் இன்று காலை தங்களது நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாற்றி அமைத்தனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணி அறிவிப்பை வெளியிடும் ஏற்பாடுகள் இன்று காலை மும்முரமாக நடந்தன. இதற்காக இன்று காலை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோல 11 மணிக்கு மத்திய மந்திரி பியூஸ்கோயல் சென்னை வருவார் என்று தகவல்கள் வெளியானது. அதன்பின்னர் காலை 10 மணி அளவில் அமித்ஷாவின் தமிழக பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது.

    ஆனால், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்று மத்திய மந்திரி பியூஸ் கோயலும் மதியம் 12.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் மொத்தம் 9 கட்சிகள் இடம்பெறும் என்று தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெறுகின்றன.



    இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்படும். அதன்பின்னர் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. #LSPolls #ADMK #PMK
    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ராகுல்காந்தி, கனிமொழி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். #ParliamentElection #DMK #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.



    இந்தநிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுக்க டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து நீண்ட நேர விவாதம் நடந்தது. அப்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு, தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி கனிமொழி விளக்கி கூறினார்.

    இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. தி.மு.க. 25 இடங்களில் போட்டியிட உள்ளது. மீதம் உள்ள 15 இடங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகள் வரை பெறுவதிலேயே குறியாக இருந்தது. தற்போது காங்கிரஸ் தாங்கள் கேட்ட தொகுதிகளில் இருந்து இறங்கி வந்துள்ளது. ஆனாலும் இரட்டை இலக்க தொகுதிகளை பெறுவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறது. 10-க்கு மேல் ஓரிரு இடங்களையாவது பெற வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுகிறது.

    ராகுல்காந்தி-கனிமொழி சந்திப்பில் தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து மட்டும் பேசப்பட்டது. மற்ற கூட்டணி கட்சிகளின் இடங்கள் குறித்து பேசப்படவில்லை.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கனிமொழி மீண்டும் ராகுல்காந்தியை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கான தொகுதிகள், இடங்கள் உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் உறுதி செய்யப்பட இருக்கிறது.

    தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதியான பிறகு, டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் சென்னை வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. #ParliamentElection #DMK #Congress

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளிடையே புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது. #Pakistan #Taliban
    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இதற்கு தலீபான்களும் சம்மதித்தனர்.

    அதன்படி கடந்த மாதம் இறுதியில் கத்தார் தலைநகர் தோகாவில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆப்கன் விவகாரத்தில் தீர்வுகாண ஒரு ஒப்பந்தத்தை கட்டமைக்க இரு தரப்பும் ஒப்புதல் அளித்தன. அதே சமயம் குறிப்பிடத்தக்க வகையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

    இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளிடையே புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண நிலைக்கு தீர்வு காண்பது மற்றும் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்ப பெறுவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது.
    ராஜஸ்தானில் போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். #GujjarProtest #GujjarReservation #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தின்மீது கூடாரங்களை அமைத்து அவர்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து போராட்டக் குழுவினருடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைச்சர் விஸ்வேந்திர சிங் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் பவான் ஆகியோர் குஜ்ஜார் சமூக தலைவர் கிரோரி சிங் பெயின்ஸ்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே, போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

    மூன்றாவது நாளான நேற்று தோல்பூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த வந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த ஆத்திரத்தில் சிலர், காவல்துறையின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.



    இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் சமூகனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஆனால், சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

    குஜ்ஜார்களின் போராட்டம் காரணமாக கோட்டா ரெயில்வே கோட்டத்தில் புதன்கிழமை வரை 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 37 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் வடக்கு ரெயில்வே, இன்று 10 ரெயில்களை ரத்து செய்துள்ளது. நாளை 12 ரெயில்களும், நாளை மறுதினம் 15 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. #GujjarProtest #GujjarReservation #AshokGehlot
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு வியட்நாமின் தலைநகரமான ஹனோய் நகரில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. #DonaldTrump #KimJongUn #Vietnam
    வாஷிங்டன்:

    எதிரிகளாக திகழ்ந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இந்த பேச்சு வார்த்தையின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டனர். இதையொட்டி ஒரு உடன்பாடும் செய்து கொண்டனர். ஆனாலும் இதில் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானபோதும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுத்து, முயற்சி மேற்கொண்டார். அதை டிரம்ப் ஏற்றார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை ஆற்றிய டிரம்ப், வியட்நாமில் 27, 28-ந்தேதிகளில் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசுகிறேன் என அறிவித்தார்.

    இந்த நிலையில், டிரம்ப், கிம் சந்தித்துப் பேசும் 2-வது உச்சி மாநாடு வியட்நாமின் தலைநகரமான ஹனோய் நகரில் நடைபெறும் என டிரம்ப் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர், “வடகொரிய தலைவர் கிம்ஜாங் அன்னை சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன். இது அமைதிக்கான நடவடிக்கையை முன்னெடுத்து செல்லும்” என குறிப்பிட்டுள்ளார். #DonaldTrump #KimJongUn #Vietnam
    அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். #Putin #Trump
    மாஸ்கோ:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா-ரஷியா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக அர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார்.

    இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருக்கிறது” என புதின் குறிப்பிட்டுள்ளார்.

    ரஷியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி என புதின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

    அதே போல் சிரிய அதிபர் பாஷர் அல் ஆசாதுக்கு புதின் எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாதத்தை எதிர்க்கவும், இறையாண்மையைக் கட்டிக்காக்கவும் சிரிய அரசுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ரஷியா தொடர்ந்து செய்யும் என உறுதியளித்து உள்ளார். #Putin #Trump
    ×