search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தளபதி"

    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் பிரபல அரசியல்வாதி இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது இவர்களோடு பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத், ‘எல்கேஜி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 63’ படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
    அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய், இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சியாளர் மூலம் புதிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறார். #Vijay #Vijay63
    நடிகர் விஜய், ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    விளையாட்டு தொடர்பான இந்த படத்தில் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். எனவே, பிரத்யேக பயிற்சியாளர் மூலம் அவரது உடல் அமைப்பு மாற்றப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். 



    கலை இயக்குநர் முத்துராஜ், படத்துக்கான செட் வேலைகளைத் தொடங்கிவிட்டார். வரும் 20ம் தேதி பூஜை போடப்பட்டு, 21ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. ‘மெர்சல்’, ‘சர்கார்’ வரிசையில், இதுவும் தீபாவளிக்கு ரிலீசாகிறது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 63 படத்தில் அவருடன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
    சென்னை:

    தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் - அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என படக்குழுவினர் இன்று தெரிவித்துள்ளனர். #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
    விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதற்கு உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். #ThalapathyVijay #Udhayanidhi
    இளைய தளபதி என்று அழைக்கப்பட்டவர் நடிகர் விஜய். இவர் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் தளபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மெர்சல் திரைப்படத்தில் இருந்து தளபதி விஜய் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

    அரசியலில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள், பொதுமக்கள் தளபதி ஸ்டாலின் என்று அழைத்து வருகிறார்கள். தற்போது விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதால், இணையதளத்தில் ஒருவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியிடம் ‘விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று கேள்வி கேட்டிருக்கிறார்.



    இதற்கு உதயநிதி ஸ்டாலின் ‘ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான்!’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    விஜய்யின் சர்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க என்று டுவிட் போட்டிருக்கிறார். #Sarkar #Varalaxmi
    விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். அரசியல் கதையாக உருவாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. 

    விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், தற்போது பேட்ச் ஒர்க்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இன்று முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக நடிகை வரலட்சுமி அறிவித்திருக்கிறார். மேலும், ‘இப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. விஜய்யுடன் நடிக்க இருந்த என் கனவு நினைவாகி இருக்கிறது. தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க’ என்று கூறியிருகிறார்.



    சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி ஆடியோ வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். #Sarkar
    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #IS #US #Afganistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவம் இணைந்து ஐ.எஸ் அமைப்பு பதுங்கி இருந்ததாக கருதிய இடங்கள் மீது பல்வேறு வித தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை தளபதி அபு சயீத் உயிரிழந்ததாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷா உசைன் தெரிவித்துள்ளார்.

    இதே தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IS #US #Afganistan
    தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்திற்கு சீனாவில் மிகப்பெரிய கௌரவம் கிடைக்க இருக்கிறது. #Mersal
    விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

    இந்தப் படத்தில் மத்திய அரசின் திட்டங்களான டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி. ஆகியவற்றைப் பற்றி வசனங்கள் இடம்பெற்றிருந்ததால், சில பிரச்சனைகள் எழுந்தது. பின்னர் சர்ச்சைகளை கடந்து இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

    அதுமட்டுமின்றி, உலக அளவிலும் ‘மெர்சல்’ படத்துக்கு கவனம் கிடைத்துள்ளது. சில விருதுப் போட்டிகளிலும் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சீனாவில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட இருக்கிறது. இப்படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை எச்.ஜி.சி. நிறுவனம் பெற்றுள்ளது.



    இப்படம் இந்த வருட கடைசி அல்லது அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் படங்களின் கதைகளை வெளிநாட்டவர்கள் விரும்ப ஆரம்பித்திருப்பதால், இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது.

    மேலும் ‘மெர்சல்’ திரைப்படம் சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்றும் கூறப்படுகிறது. 
    நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வருவதை அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியிருக்கும் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #Vijay #ThalapathyVijay
    தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார்.

    இதற்கு அடுத்த தலை முறை நடிகர்களான அஜித், விஜய் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    குறிப்பாக மதுரையில் அஜித், விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். வருகிற 22-ந்தேதி விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



    அதில் “தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார்”, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே என அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்தில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    கடந்த மே மாதம் இதேபோல் அஜித் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களும் இதேபோன்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
    ×