என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குலதெய்வம்"
- பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குல தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
- பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள்.
"குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது!"
"குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்கக்கூடாது" என்பவை பழமொழிகள்.
குல தெய்வம் என்று கூறப்படும் தெய்வங்கள், அந்தந்தக் குடும்பங்களில் அல்லது குழுவினரில், இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமெனில், ஒவ்வொரு சாதிப்பிரிவினரில் தோன்றி தங்கள் குலம் செழிக்கப்பாடுபட்டு, தியாகம் புரிந்து, இன்னல்களில் இருந்து காப்பாற்றியவர்கள் ஆவர்.
அப்படி நம் முன்னோர்களின் கண்முன்னே வாழ்ந்து மறைந்தவர்களை நாம் வணங்குவது நமது தலையாய கடமையாகும்.
குல தெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை...
இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள்.
இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குல தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதுடன், பங்குனி உத்திரம் நாளில் சென்று வழிபடுவது மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது!
பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம்.
குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.
இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!
- குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும்.
- பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
நாம் நினைக்கும் போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும். நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.
குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து விட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.
நீங்கள் எந்த சுப காரியங்கள் செய்யும் முன், குலதெய்வத்தை நேரில் தரிசிக்க முடியாவிட்டால், ஒரு தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டின் வாசலுக்கு வந்து சூரியனை கும்பிட்டுவிட்டு உங்க வீட்டிற்கு எந்த திசையில் உங்கள் குலதெய்வம் இருக்கிறதோ, அந்த திசையை பார்த்து குலதெய்வத்தை மனதுக்குள் துதித்துக்கொண்டே தேங்காயை உடைத்து விட்டு நீங்க செய்யப்போகும் சுப காரியத்தை செய்யுங்கள். கண்டிப்பாக குலதெய்வம் உங்களை எப்போதும் பாதுகாக்கும். இதை, குலதெய்வ ஆலயத்திற்கு தொலை தூரத்தில் இருப்பவர்கள் செய்யலாம். மற்றபடி குல தெய்வ ஆலயங்களின் அருகில் இருப்பவர்கள் கட்டாயம் எந்த சுப காரியங்களை செய்வதற்கு முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு செய்வது தான் நல்லது.
பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
குலதெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
இந்த ஆண்டு 2023,ஏப்ரல் / 5 ஆம் நாள் ( 5-4-2023) பங்குனி உத்திர நட்சத்திர நாள் ஆகும். அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் வழிபட, மிகமிக உகந்த நாளாகவும் அமைகிறது. மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதுடன், பங்குனி உத்திரம் நாளில் சென்று வழிபடுவது மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது !
பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவதும், குலதெய்வத்தை திருப்திப்படுத்தும்.
பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம். குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.
மேலும் இந்த பங்குனி உத்திர தினம் ஒரு அற்புதமான தினம். இந்த தினத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் திருமணம் நடந்தது. குறிப்பாக சபரி சாஸ்தா என சொல்லக்கூடிய ஐயப்பன் அவதரித்தது பங்குனி உத்திர தினம் அன்றுதான். முருகப்பெருமான் திருமணமும் அன்றுதான். இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!
தொடர்புக்கு:- 9442729693
- குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம்.
- குடும்பப் பெரியவர்களிடம் குலதெய்வம் பற்றி தெரிந்துகொண்டு வழிபடலாம்.
ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு மூன்று தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள் புரிவதாக ஐதீகம். அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது, குலதெய்வம். பிறகு காவல் தெய்வம் ஆகியவையாகும். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் குலம் தழைத்து, சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.
படிப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய நிலை பலருக்கும் உள்ளது. எப்போதேனும் ஒருமுறை பிறந்த ஊருக்குச் சென்றாலும்கூட, குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபடமுடியாத நிலை காணப்படுகிறது. முன்பெல்லாம் குடும்பப் பெரியவர்கள் நம்முடைய குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரிந்துகொள்ளமுடியாத நிலையில், குடும்பப் பெரியவர்களிடம் குலதெய்வம் பற்றி தெரிந்துகொண்டு வழிபடலாம்.
குல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொண்டு, வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாற்றி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படிக்கு பூஜை செய்து வேண்டிக் கொண்டால், குடும்பத்தின் குல தெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்ற தகவலை ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
- குலதெய்வத்தின் அருள் இருந்தால் எந்த பிரச்சனைகளும் நம்மை அண்டாது.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
'ஓம் பவாய நம,
ஓம் சர்வாய நம,
ஓம் ருத்ராய நம,
ஓம் பசுபதே நம,
ஓம் உக்ராய நம,
ஓம் மஹாதேவாய நம,
ஓம் பீமாய நம,
ஓம் ஈசாய நம'
என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.
- கலசம் முழுவதும் நூலைச் சுற்ற வேண்டும்.
- நூல் சுற்றத் தெரியாதவர்கள், பட்டுத் துணியை சுற்றலாம்.
நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் குடியிருக்க, வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பார்கள். மேலும் மனதில் தீய எண்ணங்கள் இன்றி, நேர்மறையான வார்த்தைகளைப் பேசி வாழ்பவர்களின் வீட்டில் லட்சுமி குடியேறுவாள் என்பது நம்பிக்கை. அதே போல் நம்முடைய குலதெய்வ சக்தியையும், நாம் நம்முடைய வீட்டில் குடியேற்றலாம் என்கிறார்கள்.
அதற்கு மஞ்சள், மண், சந்தனம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி போன்றவற்றை சிறிதளவு எடுத்து, அதை ஒரு சிவப்பு துணியில் வைத்து முடிச்சுப் போட்டு, வீட்டின் வாசல்படி உட்புறம் நிலைப்படியின் மையத்தில் மேல் பகுதியில் ஆணி அடித்து மாட்டி வைக்க வேண்டும். பின்னர் தினமும் அதற்கு தூப, தீபம் காட்டி வழிபட்டு வந்தால், குலதெய்வ சக்தியை வீட்டில் வரவழைக்கலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து.
ஒரு கலச சொம்பில், சிறிதளவு வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய், பன்னீர் ஆகியவற்றை போட வேண்டும். பன்னீர் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் அந்த கலசம் முழுவதும் நூலைச் சுற்ற வேண்டும். நூல் சுற்றத் தெரியாதவர்கள், பட்டுத் துணியை சுற்றலாம்.
பின்னர் வீட்டின் பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதன் மீது வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி பரப்பி, அதன் மீது கலச சொம்பை வைக்க வேண்டும். கலசத்தின் மீது வாழைப்பூவை, நுனிப் பகுதி மேல்நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். வாழைப்பூவுக்கும், கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைக்க வேண்டும்.
பின்னர் கலசத்திற்கு வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். கலசத்தின் மீது வைத்திருக்கும் வாழைப்பூ, மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பூஜை செய்வதற்கு அந்த மூன்று நாட்களே போதுமானது. தொடர்ந்து பூஜை செய்ய விரும்புவர்கள், வாழைப்பூவை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
கலசத்தில் உள்ளவற்றை வீட்டைச் சுற்றி தெளித்தும், குளிக்கும் நீாில் விட்டு நீராடவும் செய்ய வேண்டும். அதோடு 'ஓம் பவாய நம, ஓம் சர்வாய நம, ஓம் ருத்ராய நம, ஓம் பசுபதே நம, ஓம் உக்ராய நம, ஓம் மஹாதேவாய நம, ஓம் பீமாய நம, ஓம் ஈசாய நம' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.
- ஒரே ஒரு குறிக்கோளை வைத்துதான் வேண்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- எச்சில் படாத பாத்திரமாக இருக்க வேண்டும்.
ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. தினம்தோறும் இஷ்ட தெய்வத்தை வேண்டி வழிபட்டாலும், குலதெய்வத்தின் நாமத்தை ஒரு முறையாவது உச்சரித்து, தீபம் ஏற்றுவது நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது.
குலதெய்வத்தை வியாழக்கிழமை அன்று, இந்த முறைப்படி விரதமிருந்து வழிபடும் போது, நீங்கள் என்ன நினைத்து விரதத்தை தொடங்குகிறீர்களோ, அந்த வேண்டுதலானது 14வது வாரம் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
வியாழக்கிழமை காலையிலேயே வீட்டை துடைத்து சுத்தம் செய்துவிடுங்கள். அதன் பின்பு குளித்து முடித்துவிட்டு, இறைவனுக்கு பூக்களை அணிவித்து, ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து, உங்களின் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து, உங்களுடைய வேண்டுதலை சொல்லி உங்களது விரதத்தை தொடங்க வேண்டும். சில பேருக்கெல்லாம் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத கஷ்டம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும். அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று கூட, வேண்டுதலை வைக்கலாம். 14 வாரமும் அந்த வேண்டுதலை நினைத்துதான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரே ஒரு குறிக்கோளை வைத்துதான் வேண்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும். வேண்டுதலை மாற்றக்கூடாது.
காலையில் உங்களது விரதத்தை தொடங்கலாம். உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள், அந்த நாள் முழுவதும் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். அதுவும், குறிப்பாக நாட்டு பசும்பாலால் செய்யப்பட்ட தயிர் சாதத்தை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது கோடி புண்ணியத்தை உங்கள் குலத்திற்கே தேடித் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த தயிர் சாதத்தில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் இன்னும் உத்தமம். பிடிக்காதவர்கள் உப்பு சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை.
வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் பெண்களாக இருந்தால், இந்த வியாழக்கிழமை நாள் முழுவதுமே குலதெய்வத்தை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். அதாவது நீங்கள் வேலை செய்தது போக மீதம் இருக்கும் நேரத்தில். மாலை நேரம் வழக்கம் போல் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளிக்கிண்ணமாக இருந்தாலும் சரி, அல்லது பித்தளை பாத்திரமாக இருந்தாலும் சரி. கண்ணாடிக் கிண்ணமாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். எச்சில் படாத பாத்திரமாக இருக்க வேண்டும். சில்வர் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம்.
அந்த சிறிய கிண்ணத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று சொல்லி, மனமுருகி, மாலையும் குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மாலை தீபம் ஏற்றிவைத்து உங்களது விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். அதனால் இரவு நிச்சயம் சாப்பிடக் கூடாது. ஒரு வேலை தயிர் சாதம் சாப்பிடுவதோடு மட்டும் விரதம் இருக்கலாம்.
14வது வாரம் உங்களது விரதம் முடியும்போது, அந்த ஒரு ரூபாய் நாணயங்களை குலதெய்வக் கோவில்களில் கொண்டுபோய் செலுத்திவிடலாம். குலதெய்வக் கோயில் தூரமாக உள்ளவர்கள், ஒரு மஞ்சள் துணியை எடுத்து, அந்த நாணயங்களை, முடிந்து வைத்து விடுங்கள். எப்போது குலதெய்வ கோயிலுக்கு செல்கிறீர்களோ, அப்போது அந்த நாணயங்களை குலதெய்வ கோயிலில் சேர்த்து விடுங்கள்.
வாரம் தோறும் வரும் வியாழக்கிழமை அன்று, மேல் சொல்லப்பட்ட முறைப்படி சுலபமான முறையில் குலதெய்வ வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் போதும். 14வது வாரம் வியாழக்கிழமை அன்று, உங்களது இந்த விரதம் முடியும் போது, உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். நம்பிக்கையோடு பிரார்த்தனை வைத்து குல தெய்வத்தை வேண்டி தான் பாருங்களேன்! ரொம்ப நாளா உங்க வீட்ல இருக்கிற பிரச்சினை கூட விரைவில் ஒரு முடிவுக்கு வரும். இந்த விரதத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை, உங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்பு தான், உங்களால் உணர முடியும். ஆனால், நீங்கள் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுவதற்கான முயற்சியை, நீங்கள்தான், இடைவிடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதை மட்டும் மறந்துடாதீங்க! உங்களை கைதூக்கி விடும் ஒரு ஊன்றுகோல் தான் உங்கள் குலதெய்வம்.
- குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
- குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும்.
ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று பல்வேறு நிலைகளில் வழிபாட்டுக்கு உரிய தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக ஒருவரது குல தெய்வமே குறிப்பிடப்படுகிறது. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக போற்றப்படுவது ஐதீகம். தனது அருளை குலதெய்வம் அளிப்பதுடன், மற்ற தெய்வ வழிபாடுகளுக்கான பலன்களையும் அளிப்பது ஒருவரது குல தெய்வம்தான் என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.
ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும். அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை என்றும் சொல்லப்படுகின்றன. குல தெய்வங்கள் இல்லாத குடும்பத்தினர் எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டு, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், முற்றிலும் நிவர்த்தி செய்ய இயலாது என்ற ஆன்மிக சூட்சுமத்தை சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஒவ்வொருவருக்கும் இரண்டு விதமான பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருக்கின்றன. அவை, முன்னோர் செய்த பாவ, புண்ணியங்களால் வரும் நன்மை, தீமைகள் மற்றும் அவரவர் வாழ்கையில் செய்துள்ள பாவ, புண்ணியங்களால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகியவையாகும்.
பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பர். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது இலந்தைகுளம் என்ற கிராமம்.
- இந்த குலதெய்வத்தை வழிபடும் மக்கள் வெள்ளை நிற ஆடைகளையே அணிகிறார்கள்.
முன்னோர் ஏற்படுத்திய பல பழக்கவழக்கங்களை பல நூறு ஆண்டுகளாக தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்துள்ளோம். ஆனால், அவற்றில் பலவற்றை காலப்போக்கில் பலரும் மறந்துவிடுகிறோம். இருப்பினும் ஆங்காங்கே பழமையான பழக்க வழக்கங்களை மறக்காமல் பின்பற்றுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில் சிறுதெய்வ வாக்கினை பின்பற்றும் வகையில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள், பல நூறு ஆண்டுகளாக ஒரு பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அதுபற்றிய சுவாரசியமான தகவலை இங்கே பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது, இலந்தைகுளம் என்ற கிராமம். இங்கு வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினர், பல தலைமுறைகளாக வெள்ளை உடைகளை மட்டுமே உடுத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் கணவனை இழந்த பெண்கள்தான் வெள்ளை ஆடையை அணிவார்கள் என்ற நிலை இருந்தது. அந்த நிலை இப்போது வெகுவாக மாறியிருக்கிறது.
ஆனால் இலந்தைகுளம் கிராமத்தில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்கள் மற்றும் குழந்தைகளும் கூட தங்களின் வாழ்நாள் முழுவதும் வெள்ளை நிற ஆடைகளையே அணிந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதுபற்றி அந்த கிராமத்தைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் கூறும்போது, "பல தலை முறைகளுக்கு முன்பு பொம்மியம்மாள் என்ற பெண், தெய்வீகத் தன்மையுடன் வாழ்ந்துள்ளார். அவரை எங்களின் மூதாதையர்களும் அவர்களைத் தொடர்ந்து நாங்களும் தெய்வமாக வணங்கி வருகிறோம்.
அந்த பொம்மியம்மாள், 'என்னை நினைத்து வெள்ளை உடை உடுத்தி தொடர்ந்து வணங்குபவர்களை, சகல வசதிகளையும், நன்மைகளையும் தந்து காத்தருள்வேன்' என்று கூறியுள்ளார். அவரது வாக்கின்படி, பல தலைமுறைகளாக நாங்கள் வெள்ளை உடைகளை உடுத்தி, அவரை வணங்கி வருகிறோம்" என்றார்.
பொம்மியம்மாளுக்கு, சேடபட்டி சின்னக்கட்டளை பகுதியில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. அழகர் மலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் கள்ளழகரின் தங்கைதான் பொம்மியம்மாள் என்று சொல்கிறார்கள். ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவின்போது, இலந்தைகுளம் கிராமத்தில் உள்ளவர்கள், பொம்மியம்மாளை சின்னக்கட்டளையில் உள்ள அவரது பீடத்தில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இலந்தைகுளத்தில் இருப்பவர்கள் பொம்மியம்மாளை நினைத்து வெள்ளை நிற ஆடை அணிவதைப் போல, பல்வேறு கிராமங்களில் இருந்தபடி அந்த குலதெய்வத்தை வழிபடும் மக்களும் கூட அங்கு வெள்ளை நிற ஆடைகளையே அணிகிறார்கள். பொம்மியம்மாளை குலதெய்வமாக வழிபடுபவர்கள், தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு அரைஞாண் கயிறைக் கூட, வெள்ளை துணியில்தான் கட்டுகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் துணிகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கின்றன.
பள்ளிக்கூடம் செல்வதற்கு சீருடை அவசியம் என்பதால் அந்த நேரத்தில் மட்டும், பள்ளி செல்லும் பிள்ளைகள் சீருடை அணிகிறார்கள். பள்ளி முடிந்து வந்ததும், அவர்களும் வெள்ளை நிற ஆடைக்கு மாறிவிடுகிறார்கள். பொம்மியம்மாளை வணங்கும் பெண்கள், பூ, பொட்டு, நகை அணிகிறார்கள். ஆனால் வீட்டில் இருந்தாலும், வேலைக்குச் சென்றாலும், விசேஷ நிகழ்வுகளுக்குச் சென்றாலும் வெள்ளை நிற ஆடைதான் அவர்கள் மகிழ்வுடன் அணியும் ஆடையாக இருக்கிறது.
குலதெய்வம் என்பது ஆண்கள் வழியில் வரும் வழிபாடு என்பதால், இங்கிருந்து திருமணமாகி வேறு வீட்டிற்குச் செல்லும் பெண்கள், புகுந்த வீட்டின் பழக்க வழக்கப்படி இருக்கலாம். அவர்களுக்கு இந்த வெள்ளை நிற ஆடை கட்டுப்பாடு கிடையாது. அதே நேரம், வேறு ஒரு இடத்தில் இருந்து திருமணாகி பொம்மியம்மாளை குலதெய்வமாக ஏற்று வரும் பெண்கள், வெள்ளை நிற ஆடையை அணிந்துதான் ஆக வேண்டும் என்பது அவர்களது குல வழக்கமாக இருக்கிறது.
உளவியல் ரீதியாக ஒரு ஆன்மா, பூமியில் தன் வினைப் பயனை கூட்டவோ, குறைக்கவோ தன் பயணத்தில் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறது. நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் தன் வினைப் பயனே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதை உணரும் ஆன்மா, பாக்கிய பலனை அதிகரித்து முக்திக்கு வழி தேடும். அவ்வாறு பாக்கிய பலனை அதிகரிக்க, ஒருவரது 5-ம் பாவம் தொடர்பான வழிபாடு நல்ல பலன் தரும்.
இங்கே 5-ம் பாவம் என்பது, 5-ம் பாவத்தின் 5-ம் பாவமான 9-ம் பாவம் ஆகும். 9-ம் பாவம் என்பது தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களை குறிப்பதாகும். குலத்தை காக்கவும் தனது வாரிசுகளின் நலனை காக்கவும் முக்தியடைந்த ஆன்மாக்களே குல தெய்வமாக இருந்து ஆசி வழங்குகிறார்கள். தெய்வங்களில் மிகவும் வலிமையானது குல தெய்வமே. அது மற்ற தெய்வங்களின் வழிபாட்டு பலன்களையும் பெற்றுத் தரும் ஆற்றல் மிக்கது.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே இருக்கும். ஆனால் அளவற்ற சக்தியுடையது. இவ்வளவு மகிமை வாய்ந்த குல தெய்வம், பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். தெரிந்தவர்கள் பலரும் அதனை முறையாக விரதம் இருந்து வழிபாடு செய்யாமல் இருக்கலாம். அப்படி தெரிந்தும் வழிபடாமல் இருப்பதால் ‘குலதெய்வ குற்றம்’ ஏற்படும். ஒரு ஜாதகத்தின் 5-ம் பாவத்திற்கான அதிபதி மற்றும் 5-ம் பாவம் குல தெய்வ அருளை காட்டும். ஐந்தாம் பாவத்தை பார்க்கும் அல்லது ஐந்தாம் பாவ அதிபதியுடன் சேரும் கிரகத்தின் தன்மையைக் கொண்டு, ஒருவரது குல தெய்வ அனுக்கிரகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அறியலாம்.
* ஒரு ஜாதகத்தில் குரு அல்லது 1, 5, 9 ஆகிய இடங்கள் வலிமையாக இருந்தால், அந்த நபரின் குரலுக்கு குல தெய்வம் முன் வந்து நிற்கும்.
* 1, 5, 9 ஆகிய இடங்களுக்கான அதிபதி அல்லது குரு 5-ம் பாவத்துடன் சம்பந்தம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு குலதெய்வத்தின் அருள் நிச்சயம் உண்டு.
* 5-ம் பாவ அதிபதியின் மீது, சனி, செவ்வாய், ராகு-கேது பார்வை விழுந்தால், குல தெய்வ வழிபாட்டை தடை செய்யும்.
* 5-ம் பாவ அதிபதி நீச்சம் அல்லது அஸ்தமனம் அடைந் திருந்தால், அவர்களுக்கு குலதெய்வம் இருந்தும், அதனை வழிபாடு செய்வதில் ஆர்வம் இருக்காது.
* 5-ம் பாவ அதிபதி 8-ல் மறைந்திருந்தால், குல தெய்வ குற்றம், சாபம் இருக்கிறது என்று பொருள். குலதெய்வ குற்றம், சாபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய கோவிலை சரியாக பராமரித்து, முறையான அபிஷேக ஆராதனை செய்து, வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, உணவு படைக்க வேண்டும். அத்துடன் கோவிலுக்கு வருடம் ஒரு முறையாவது சென்று வழிபட்டு, தான தர்மம் செய்ய வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குலதெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் பாதுகாக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட ஊரில் உருவாகும் இயற்கை சீற்றத்திற்கும் கூட, குலதெய்வ சாபமே காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு. அந்த ஊரில் நடக்கும் தொடர் அசம்பாவிதங்களுக்கு குலதெய்வம் மகிழ்வோடு இருக் கிறதா? இல்லையா? என்பதை காண்பித்து விடும். ஒரு வருக்கு தங்களின் குலதெய்வம் தெரியாமல் இருப்பதும் கூட, ஒரு வகையில் குலதெய்வ சாபம் தான்.
குலதெய்வ சாபம் உள்ளவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் ஜோதிட ரீதியாக 5-ம் பாவ அதிபதி தொடர்பான தெய்வத்தை கண்டறிந்து, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி, தீபத்தை குலதெய்வமாக பாவித்து, சர்க்கரை பொங்கல் படையலிட்டு வாருங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால், குலதெய்வம் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.
பெண்கள் அனைவரும் தங்களின் திருமணம் முடிந்த பிறகு, பிறந்த விட்டு குலதெய்வத்தையும், புகுந்த வீட்டு குலதெய்வத்தையும் வணங்கி வந்தால் பலன்கள் இரட்டிப்பாகும். பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும்.
விநாயகர், முருகன், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற தெய்வங்கள், ஒருவருக்கு இஷ்ட தெய்வமாக இருக்க முடியுமே தவிர, குல தெய்வமாக இருக்கும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை.
குல தெய்வங்கள் கர்ம வினைகளை நீக்க வல்லவை. தென் தமிழ்நாட்டில் சில சமூகத்தினர், குல தெய்வம் தெரியாதவர்களின் வீட்டில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை. குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும் அது பயனற்றது தான். குலதெய்வத்தை பலர் மறந்துவிடுகிறார்கள். குலதெய்வ வழிபாட்டை முறையாக விரதம் இருந்து செய்பவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. ஆகவே குலதெய்வத்தை கண்டுபிடித்து சரணாகதி அடையுங்கள். உங்கள் வம்சம் தழைத்தோங்கும்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்