search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125970"

    தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. #VigilanceRaid
    சென்னை:

    சென்னையில் அசோக் நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 900 கைப்பற்றப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 250 மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஜெய்சங்கர் என்பவர் உர மானியம் பெற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராமச்சந்திரனை அணுகினார். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு அவரிடம் லஞ்சப்பணம் கொடுத்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

    ஈரோடு மாவட்டம் சிக்கரசன் பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் நிலம் தொடர்பான விவகாரத்திற்கு கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் ரங்கசாமி ரூ.65 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்ச பணத்தை கொடுத்த போது ரங்கசாமி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருலோகசுந்தர், புதிதாக கட்டிய திருமண மண்டபத்திற்கு சுகாதார சான்றிதழ் கேட்டு சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜை அணுகியபோது ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச பணமாக ரூ.6 ஆயிரத்தை பெற்றபோது லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. #VigilanceRaid
    அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் பத்திரங்களை பதிவு செய்யும் டோக்கன் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. #RegistrationOffice
    சென்னை:

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் தற்போது பல்வேறு நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று பத்திரப்பதிவுக்கு இனிமேல் காத்திருக்க தேவையில்லை. முன்கூட்டியே 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ளலாம்.

    அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தினசரி 50 டோக்கன் கொடுக்கப்படும்.

    காலை 10 மணி முதல் 1 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா 10 டோக்கன் வீதம் 30 டோக்கன் அளிக்கப்படும்.

    பிற்பகல் 1 முதல் 1.30 மணி வரை 5 டோக்கனும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை 10 டோக்கனும், மதியம் 3.30 மணி வரை 5 டோக்கன் என பிரித்து வழங்கப்படும்.

    இதில் உள்ள நேரத்தில் சென்று பத்திரங்களை பதிவு செய்யலாம்.

    முன்பதிவு செய்தவர்கள் குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் அந்த விவரம் அங்குள்ள கம்ப்யூட்டரில் காண்பிக்கப்படும். அதன் பிறகுதான் அடுத்த ஆவண பதிவை தொடர முடியும். இதற்கேற்ப கம்ப்யூட்டரில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட நாட்களில் அனைத்து முன்பதிவு டோக்கன்களுக்கும் உரிய பதிவு நடைமுறை விரைவாக முடிந்துவிட்டால் அடுத்த நாளில் முன்பதிவுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன்களை வரவழைத்து பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #RegistrationOffice
    பத்திரப்பதிவுக்கு மனை அங்கீகார கடிதம் கட்டாயம் சமர்ப்பிக்கபட வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பத்திரப்பதிவு துறையில் அண்மைகாலமாக பல்வேறு நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. பத்திரங்களை பதிவு செய்ய ஆன்-லைனில் முன்பதிவு செய்வது உள்பட பல நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனையை பதிவு செய்யக் கூடாது என்று பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யப்படிருந்தாலும், சில சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    இதை தடுக்கும் வகையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மனை விற்பனை பத்திரத்துடன் மனைக்கு அங்கீகாரம் வழங்கிய சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. ஆகியவற்றின் கடித நகலை இணைக்க வேண்டும்.


    பத்திரத்துடன் அங்கீகார கடித நகல் இணைத்து அதில் விற்பவர், வாங்குபவர் கையெழுத்திட வேண்டும்.

    பத்திரத்தை ஸ்கேன் செய்வது போல் இந்த இணைப்பையும் ஸ்கேன் செய்ய வேண்டும். இதில் அசல் கடிதத்தை இணைக்க கோரி கட்டாயப்படுத்த கூடாது. இந்த உத்தரவு வருகிற 13-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் பத்திரப்பதிவுக்கான புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வெளியிட்டார்.#TELANGANACM #ChandraSekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் விவசாய மக்களுக்காக ரைத்து பந்து என்ற முதலீட்டு உதவி திட்டத்தை கரீம்நகரில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பத்திரப்பதிவுக்கான புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த புதிய திட்டத்தின்படி விவசாயிகள் தங்களிடம் உள்ள பட்டா, பாஸ்புத்தகம் மூலம் எளிதாக வங்கி கடன்களை பெற இயலும். மாநிலம் முழுவதும் உள்ள 2.38 கோடி ஏக்கர் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டதில், 1.4 கோடி ஏக்கர் விவசாய நிலமாக அறியப்பட்டு அவை முறையாக டிஜிட்டல் முறையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த புதிய முறை ஜூன் 2-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருவதோடு, மண்டல் ரெவின்யூ அலுவலர்கள் சார் பதிவாளர்களாக செயல்பட இருக்கிறார்கள். தெலுங்கானா மாநிலம் உருவான நாளில் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இந்த திட்டத்தின்படி இணையதளம் மூலம் பத்திரப்பதிவுக்கான தேதியை பதிவு செய்து விட்டு, அந்த நாளில் பத்திரபதிவை மிக எளிதாக செய்து முடிக்க முடியும். இது குறித்த தகவல் 4 அல்லது 5 நாட்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தெலுங்கானா அரசால் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீரமைப்புகள் அடிப்படையில் பத்திரப்பதிவு முறைகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பத்திரப்பதிவு சமயத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இந்த முறை பெரும் உதவியாக இருக்கும் என்று தெலுங்கான அரசு தெரிவித்துள்ளது. #TELANGANACM #ChandraSekharRao
    ×