search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர்கள்"

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. #MBBS #MedicalEducation

    சென்னை:

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

    புதிதாக கரூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க நிதி ஒதுக்கி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மருத்துவ கல்வி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 23 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு செயலாற்றி வருகிறது.

    ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க 400 கோடி ரூபாய் செலவிட வேண்டிய நிலை உள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதின் மூலம் எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வருடம் கடந்த ஆண்டை காட்டிலும் 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 95 எம்.பி.பி.எஸ். இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 இடங்களும் அதிகரிக்க வேண்டும் என மருத்துவ கவுன்சிலிடம் அரசு முறையிட்டு உள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கூடுதல் இடங்களை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா? என இந்திய மருத்துவ கவுன்சில் பல்வேறு கட்டமாக ஆய்வு செய்துள்ளது.

    அதனால் இந்த வருடம் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

    இது தவிர 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக இடங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் இதன் மூலம் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும் கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கினால் அங்கு 100 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 2,900 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கின்றன.

    இதுதவிர கூடுதலாக 345 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு இடங்கள் கடந்த ஆண்டு வரை 1,250 இருந்தன. இந்த வருடம் கூடுதலாக 112 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MBBS #MedicalEducation

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து இந்த மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அங்கும் மருத்துவ பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு 7 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதுதவிர இங்கு செவிலியர்கள், மருந்தாளுனர், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

    இங்கு பணியாற்றிய மருத்துவர்கள் தற்காலிக பணிக்காக அருகில் உள்ள வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டதால் தான் தற்போது போதிய மருத்துவர்கள் இல்லாமல் இந்த மருத்துவமனை உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கூறியதாவது:-

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால் இங்குள்ள அறிவிப்பு பலகையில் 7 மருத்துவர்கள் வரை உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினம்தோறும் இங்கு வரும் நோயாளிகளுக்கு 2 மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனால் நீண்டவரிசையில் நின்று நோயாளிகள் மருத்துவரை பார்க்க வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் ஒரு மாத காலத்தில் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. ஆனால் பெண் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் தான் பிரசவங்கள் பார்க்கும் நிலை உள்ளது. அதேபோல் மருந்தாளுனர் ஒருவர் மட்டும் பணி செய்வதால் மருந்துகளை வாங்குவதற்கு பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இதய துடிப்பு முழுமையாக நின்ற பின்பு ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ கருவி பொருத்தியது ஆணைய விசாரணையில் தெரியவந்துள்ளது. #JayalalithaaDeath #Jayalalithaa #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுந்தர் நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.



    2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட போது அவரது இதயத்தை செயல்பட வைப்பதற்கு ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது. இந்த குழுவில் மருத்துவர் சுந்தர் இடம் பெற்று இருந்தார்.

    ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது தொடர்பாகவும், அதன்மூலம் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதா? என்பது குறித்தும் மருத்துவர் சுந்தரிடம் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதற்கு அவர் பதில் அளித்தார்.

    அவர் தனது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அவரது இதயத்தை செயல்பட வைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மின்சாரம்(‘கரண்ட் ஷாக்’) மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் முன்னேற்றம் இல்லாததால் மார்பகத்தை பிளந்து இதயம் மசாஜ் செய்யப்பட்டது. அது சரிவரவில்லை என்றதும், ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது. இருந்தபோதிலும் ரத்த ஓட்டம் சீராகவில்லை. இதன்காரணமாக மூளை செயல் இழந்து ஜெயலலிதா இறக்க நேரிட்டது’ என்று கூறினார்.

    எந்தெந்த சூழ்நிலையில் ‘எக்மோ’ கருவி பொருத்த வேண்டும் என்று உலகளாவிய மருத்துவ ஒப்பந்தத்தில் கூறி இருப்பதை சுட்டிக்காட்டி மருத்துவர் சுந்தரிடம், ஆணையத்தின் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார்.

    இதய துடிப்பு குறைவாக இருந்து அதனால் உடல் பாகங்களுக்கு ரத்தம் சரிவர செல்லவில்லை என்றால் மட்டுமே ‘எக்மோ’ கருவி பொருத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறி இருப்பது குறித்தும், இதயம் செயல் இழந்த பின்பு எக்மோ பொருத்துவது குறித்து ஒப்பந்தத்தில் எதுவும் சொல்லப்படாதது குறித்தும் கேட்ட ஆணையத்தின் வக்கீல், ‘ஜெயலலிதாவுக்கு இதய துடிப்பு முழுமையாக நின்ற பின்பு எக்மோ பொருத்தியது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மருத்துவர் சுந்தர், ‘கடைசி முயற்சியாகவே ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது’ என்றார். #JayalalithaaDeath #Jayalalithaa #ArumugasamyCommission

    ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடலை மருத்துவமனைக்கு வெளியே சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய் அன்று மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல் பார்மெர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, நேற்று அவர்களது உடலுக்கு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்வதாக திட்டமிடப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு வெளியே இருந்த சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் அம்மாநில செய்திகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.



    இந்நிலையில், இன்று இதுதொடர்பாக பேசிய மாவட்ட கூடுதல் ஆட்சியர், செய்திகளில் வெளியானவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். #Rajasthan
    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஹெல்மெட் அணிந்தபடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். #Hyderabad
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஓஸ்மானியா என்ற மிகப்பழமையான மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும், அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மீதும் விழுந்து காயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மேற்கூரை இடிந்து விழுந்து காயம் ஏற்படாமல் இருக்கும்வண்ணம் தலைகளில் ஹெல்மெட் அணிந்தபடி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தை மேற்கொண்டனர்.



    ஐதராபாத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டிடத்தைப் புதுப்பிக்கக் கோரி மருத்துவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி சிகிச்சை அளித்து வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக வெளி நோயாளிகளை மரத்தடியில் வைத்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள், கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #Hyderabad
    காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பதற்றம் குறைந்தது.

    இந்நிலையில், இன்று வழக்கம் போல் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மருத்துமனை சார்பில் எவ்வித அறிக்கையும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. தற்போது மருத்துவமனையில் இருந்த புறப்பட்ட தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படியே கருணாநிதி தற்போதும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக தெரிகிறது.

    முக ஸ்டாலினை தொடர்ந்து துரை முருகனும் செய்தியாளர்களை சந்தித்தார். அவரும் கருணாநிதி தீவிர கண்காணிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் ஈராக்கைச் சேர்ந்த தியீ அலீம் என்பவரது மார்பில் இருந்து 9 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி மருத்துவர்கள் அவருக்கு புதுவாழ்வு அளித்துள்ளனர். #doctorsmadelife
    சண்டிகர்:

    பல மாதங்களாக மூச்சு விடமுடியாமல் தவித்து வந்த ஈராக்கைச் சேர்ந்த தியீ அலீம் என்பவருக்கு ஃபோர்ட்டீஸ் நினைவு ஆரய்ச்சி மருத்துவமனையில் மார்பில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையில் அவருடைய மார்பில் இருந்து 9 கிலோ அளவிலான கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவர் உத்ஜித் திர் கூறுகையில், ‘தியீ அலீமின் மார்பில் நுரையீரலுக்கும் இதயத்துக்கும் இடையே இருந்த கட்டி அவரை மூச்சு விட விடாமல் செய்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு பலனளிக்கவில்லை. தியீ அலீம் ஃபோர்ட்டீஸ் மருத்துவமனையை அணுகும்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தார்.

    கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது மார்பில் இருந்து இரத்தக்குழாய்களை அடைத்துக்கொண்டிருந்த 9 கிலோ எடையுள்ள கட்டியை நீக்கினோம். இப்போது அவர் நல்ல முறையில் சுவாசித்து நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்’  என தெரிவித்துள்ளார். #doctorsmadelife
    ×