search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்ட்டி"

    நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக கிசுகிசு பரவிய நிலையில், இதுகுறித்த ஜெய் அளித்த பேட்டியில், அஞ்சலியுடனான நட்பு தொடரும் என்றும், கண்டிப்பாக தான் காதல் திருமணம் தான் செய்வேன் என்றார். #Jai #Anjali #Nayanthara
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய் நடிப்பில் ‘பார்ட்டி’, ‘நீயா-2’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘மதுரராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    ‘எங்கேயும் எப்போதும்’, ‘பலூன்’ ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்தி பரவியது. ஆனால், அந்த காதல் சீக்கிரமே முறிந்து போனதாகவும் பேசப்படுகிறது.



    இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அஞ்சலி என் காதலி அல்ல; தோழிதான். எங்கள் நட்பு தொடரும்” என்று கூறினார்.

    “எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. மிகவும் மென்மையானவரும் அவர் தான். 2013-ல் நாங்கள் இருவரும் ‘ராஜாராணி’ படத்தில் இணைந்து நடித்தோம். படப்பிடிப்பின்போது எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.



    “திருமணம் பற்றி கேட்டதற்கு, எனது திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அப்படி திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்.” இவ்வாறு நடிகர் ஜெய் கூறினார். #Jai #Anjali #Nayanthara #Neeya2 #Party

    பட விழாக்களில் கலந்துக் கொள்ளாமல் இருந்த நடிகர் ஜெய், தற்போது தனது கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறார். #Jai #Neeya2 #Party
    நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஜெய் அளித்த பேட்டி:-

    உங்கள் நடிப்பில் அடுத்து வர இருக்கும் படங்கள்?

    நீயா 2, பார்ட்டி படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. மம்முட்டிக்கு தம்பியாக மதுர ராஜா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறேன். புலி முருகன் படத்தை இயக்கிய வைசாக் இயக்குகிறார். பார்ட்டி படத்தில் வில்லத்தனம் கலந்த வேடம். அதற்கு அடுத்து கோபி நயினார் படம். இதில் வடசென்னையை சேர்ந்த கால்பந்து வீரராக நடிக்கிறேன்.

    உங்கள் பலமே காதல் படங்கள் தான். அதை விட்டு விட்டு ஆக்‌‌ஷன் பாதைக்கு செல்வது ஏன்?

    ஒரு மாற்றம் வேண்டும் என்று காதல் பாதையில் இருந்து மாறினேன். அதன் பிறகு காதல் படங்கள் அமையவில்லை. இப்போது கதைகள் கேட்டு வருகிறேன்.

    இரண்டு கதாநாயகர்கள் படங்களில் அதிகம் நடிப்பது ஏன்?

    இந்தி சினிமாவை போல் நடிகர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அறிமுகமானதில் இருந்தே அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் படங்களில்தான் நடித்துள்ளேன். நண்பர், பெரிய டைரக்டர் என்பதால் நான் இதை பெரிதாக பார்க்கவில்லை.

    வாலு போன்ற சில ஹிட் படங்கள் கையைவிட்டு போனதில் வருத்தம் உண்டா?

    இல்லை. அந்த படம் சிம்பு நடித்ததால் இந்த அளவுக்கு போனது. நான் நடித்து இருந்தால் எப்படி வந்து இருக்கும் என்று தெரியும்.

    எந்த டைரக்டர் படத்தில் நடிக்க ஆசை?

    கவுதம் மேனன், முருகதாஸ். சசிகுமார் சாருடன் இன்னொரு படம் பண்ணவும் ஆசை.

    படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லையே, ஏன்?

    எனது கூச்ச சுபாவம் தான் படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்கு வராமல் இருந்ததற்கான காரணம். சரியான வழிகாட்டியும் இல்லை. இப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சுதான் எனது மாற்றத்துக்கு காரணம். இனி படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவேன்.



    சன்னி லியோனுடன் 2-வது படம் நடிக்கும் அனுபவம்? தொடர்பில் இருக்கிறீர்களா?

    இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். அவங்க ரொம்ப பிரெண்ட்லி. டுவிட்டரில் மட்டும்தான் தொடர்பில் இருக்கிறேன்.

    காதல் அனுபவம்?

    நிஜ வாழ்க்கையில் இதுவரை சீரியசான காதல் வரவில்லை. காதல் அமைந்தால் காதல் திருமணம் செய்வேன். இல்லாவிட்டால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்கும். இப்போது திருமணம் செய்ய திட்டம் இல்லை. சினிமாவில் இன்னும் சாதிக்கவேண்டி இருக்கிறது.

    உங்களுக்கு பிடித்த கதாநாயகி?

    அப்படி யாரும் ஸ்பெ‌ஷலாக இல்லை. நயன்தாராவுடன் நடித்த போது மிகவும் வசதியாக உணர்ந்தேன். அவர் மிகவும் மென்மையானவர்.
    அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடிகர் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். #Party #Shaam
    கடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். 

    சமீப காலமாக கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ஷாம், படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என செலக்டிவாக நடித்து வருகிறார்.

    தற்போது அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ படத்தில் கலக்கலான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஷாம். 

    இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது, “அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர். அவரிடமிருந்து திடீரென ஒருநாள் அழைப்பு வந்தது. அவர் தயாரித்து வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடிக்குமாறு என்னிடம் கேட்டார். 



    இயக்குநர் வெங்கட் பிரபு இளைஞர்களை ஈர்க்கும் படம் பண்ணக்கூடியவர். அவரது படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது  ஆசை. ப்ளஸ் சிவா அண்ணன் படம். டபுள் தமாக்கா! உடனே ஓகே சொல்லி பிஜிக்கு போனேன்.

    அதற்கேற்ற மாதிரி அந்த கதாபாத்திரமும் என் மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. நட்புக்கு மரியாதை கொடுக்குற அற்புதமான டீம்! கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும்னு நம்புறேன்.

    இன்னொரு பக்கம் கதாநாயகனாக நடித்துவரும் ‘காவியன்’ படம், முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர நல்ல படங்களையும் எனது தயாரிப்பில் உருவாக்கும் பொருட்டு, இரண்டு கதைகளைத் தேர்வு செய்துள்ளேன். மேலும் வெளி தயாரிப்பில் அருமையான கதை ஒன்றைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது’ என்றார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'.

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து `மாநாடு' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். #PARTY #VenkatPrabhu

    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி படத்தில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி, படப்பிடிப்பின் போது ரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra
    பார்ட்டி படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள். ரெஜினாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கும் பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு.

    இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன். முடியவில்லை. சூதுகவ்வும் வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குப் போய் இருந்தேன். அங்கே `பிரியாணி’ படப்பிடிப்பு நடந்துவந்தது.



    அங்கேதான் வெங்கட் பிரபுவை முதன்முதலாக சந்தித்தேன். `சூதுகவ்வும்‘ படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி’ படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்’ என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra

    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. 

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PARTY #VenkatPrabhu

    வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா மற்றும் கார்த்தி பாடியுள்ள ‘பார்ட்டி’ படத்தின் சாரே பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். #Suriya #Karthi
    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `பார்ட்டி'. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கேசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். நடிகர் ஷாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் அறிமுக பாடலான ‘ச்சா ச்சா சாரே...’ எனத் தொடங்கும் பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இந்த சூர்யா மற்றும் கார்த்தி முதல் முறையாக இணைந்து பாடியிருக்கிறார்கள். மேலும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, கரீஷ்மா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.



    ஒரு ஜாலியான பெப்பி வரிசையில் பார்ட்டி கொண்டாடும் வகையில் இந்த பாடல் பாடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. #ChaChaCharey

    பாடலை பார்க்க....


    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பார்ட்டி’ படத்தில் முதல் முறையாக சூர்யாவும், கார்த்தியும் இணைந்திருக்கிறார்கள். #VenkatPrabhu #Suriya #Karthi
    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `பார்ட்டி'. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். நடிகர் ஷியாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஒரு பாடலை ஜூலை 2ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். ‘ச்சா ச்சா சாரே...’ எனத் தொடங்கும் இந்த பாடலை சூர்யா மற்றும் கார்த்தி முதல் முறையாக இணைந்து பாடியிருக்கிறார்கள்.



    தற்போது இந்த பாடலுக்கான புரமோ ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். இது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
    ×