search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதி"

    மத்திய மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். #SSAhluwalia #DelhiAIIMS
    புதுடெல்லி:

    மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று அவருக்கு மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



    மேற்கு வங்கத்தில் கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மந்திரி அலுவாலியா கலந்துகொண்டார். அங்கிருந்து டெல்லி திரும்பிய பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், தற்போது உடல்நிலை மோசமடைந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அவரது உதவியாளர் கூறியுள்ளார். #SSAhluwalia #DelhiAIIMS
    மும்பையில் டான்ஸ் பார்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு நடன அழகிகளும், டான்ஸ் பார் உரிமையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #DanceBars #SC
    புதுடெல்லி:

    மும்பையில் நட்சத்திர ஓட்டல்கள் தவிர சிறிய மது பார்களில் நடனம் அனுமதிக்கப்படுகிறது.

    டான்ஸ் பார்களில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதாகவும், பெண்களை சித்ரவதை செய்வதாகவும் கூறி மராட்டிய அரசு டான்ஸ் பார்களுக்கு தடை விதித்தது.

    அதன்பிறகு கடுமையான நிபந்தனைகளுடன் டான்ஸ் பார்களுக்கு அரசு அனுமதி அளித்தது. டான்ஸ் பார்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்பட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தது.

    இதை எதிர்த்து டான்ஸ் பார் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், டான்ஸ் பார்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி அனுமதி அளித்தது.

    டான்ஸ் பார்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்ற மராட்டிய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். நடனம் ஆடும் பெண்கள் மீது பணத்தை வாரி இறைக்க கூடாது, நடனமாடும் மேடையும், மது அருந்தும் மேடையும் அருகருகே இருக்க கூடாது போன்ற நிபந்தனைகள் விதித்து உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு நடன அழகிகளும், டான்ஸ் பார் உரிமையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #DanceBars #SC
    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காய்ச்சல் பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். #BJP #AmitShah
    புதுடெல்லி:

    மத்தியில் உள்ள பாஜக ஆட்சி இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. அதற்கான வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க பாஜக முழு வீச்சில் வேலை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியினரை தேர்தல் வேலைகளில் ஈடுபடுத்தி வருகிறார்,

    இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #BJP #AmitShah
    திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். #DMK #Anbalagan #ApolloHospital
    சென்னை:

    திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென இன்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    தகவல் அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். #DMK #Anbalagan #ApolloHospital
    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். #NewYear2019
    சென்னை:

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஓட்டல்களில் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை நியமிக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    2018-ம் ஆண்டு விடைபெறுகிறது. 2019 புத்தாண்டு வருகிற செவ்வாய்க்கிழமை பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை நகரில் கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும், ஆட்டம்-பாட்டத்தோடு இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டல்களில் பாதுகாப்பான முறையில், புத்தாண்டு கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன் ஆகியோர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்யவேண்டும்? என்பது குறித்து போலீசார் அறிவுரைகளை வழங்கினார்கள்.

    அதன் விவரம் வருமாறு:-

    * புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணி வரை கொண்டாடலாம்.

    * 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான இசை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது.

    * ஆனால் மது பார்கள் அந்தந்த ஓட்டல்கள் லைசென்சு பெறும்போது, என்னென்ன நேரம் ஒதுக்கப்பட்டதோ, அந்த குறிப்பிட்ட நேரம் வரை திறந்து வைத்திருக்கலாம்.

    * சில ஓட்டல்களில் 24 மணி நேரமும் மது பார்களை திறந்து வைத்திருக்க அனுமதி பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த ஓட்டல்களில் மட்டும் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணி வரையோடு மது பார்களை மூடிவிட வேண்டும்.

    * நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    * பெண் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கவனிப்பதற்காக பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.

    * புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களிடம் அத்துமீறி நடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களை அனுமதிக்கக்கூடாது.

    * வாடிக்கையாளர்களின் கார்களை சோதிக்க வேண்டும்.

    * வாடிக்கையாளர்களின் உடைமைகளையும் சோதிக்க வேண்டும்.

    * ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    * போதையில் இருக்கும் வாடிக்கையாளர்களை வாகனம் ஓட்டிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. உரிய டிரைவர்களை ஏற்பாடு செய்து போதையில் இருப்பவர்களை கார்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

    * தேவைப்பட்டால் டிராவல்ஸ் நிறுவனங்களின் கார்களையும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

    * புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களை மூடிவிட வேண்டும். நீச்சல்குளத்தின் மேல் பகுதியிலோ அல்லது அருகிலோ புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான மேடை எதையும் அமைக்கக்கூடாது.

    * நீச்சல் குளங்களை மூட வசதியில்லாதபட்சத்தில், அருகில் காவலாளிகளை காவலுக்கு நிறுத்த வேண்டும்.

    * நட்சத்திர ஓட்டல்களின் வாசல்கள், வாகன நிறுத்தும் இடங்கள், இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும், கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

    மொத்தத்தில் விபத்து இல்லாமல், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற இடம் கொடுக்காமல், மகிழ்ச்சியாக புத்தாண்டு விழாவை கொண்டாட ஓட்டல் நிர்வாகத்தினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட நட்சத்திர ஓட்டல்களின் அதிகாரிகள் அறிவுரைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். #NewYear2019
    மேற்கு வங்காளத்தில் பாஜக நடத்தவுள்ள ரதயாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #Rathyatra #BJP #KolkattaHighCourt
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை தாங்க உள்ளார். ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
     
    இதையடுத்து ரதயாத்திரை நடத்த அனுமதி கோரி மாநில பாஜக சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மத ரீதியிலான மோதல்கள் ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தார். இதையடுத்து பாஜக சார்பில் ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 



    மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பாஜக ரதயாத்திரைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், ரத யாத்திரைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்தார்.

    இதுதொடர்பாக, நீதிபதி தபப்ரதா சக்கரவர்த்தி கூறுகையில், ‘12 மணி நேரம் மட்டுமே பேரணி நடத்த வேண்டும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்காத வகையில் அமைதியான முறையில் ரதயாத்திரையை நடத்த வேண்டும். யாத்திரையால் பாதிப்பு வந்தால் அதற்கான முழு பொறுப்பும் பாஜகவை சேரும்’ என்றார்.

    கொல்கத்தா நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாநில பாஜகவினர் வரவேற்றுள்ளனர். #Rathyatra #BJP #KolkattaHighCourt
    ‘தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 4,900 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    ‘தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 4,900 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் தீவுத்திடல் உள்பட 900 பட்டாசு கடைகள் அமைக்கப்பட உள்ளது’ என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக தீயணைப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 4,900 பட்டாசு கடைகள் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 5,640 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கினோம்.

    சென்னையில் தீவுத்திடல் உள்பட 900 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தீயணைப்புத்துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன் உத்தரவின்பேரில், இந்த ஆண்டு பட்டாசு தீ விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    பட்டாசு கடை வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் கட்டிடங்களில் மட்டுமே பட்டாசு கடைகள் நடத்த வேண்டும். நடைபாதைகளை ஆக்கிரமித்து பட்டாசு கடைகள் போடக்கூடாது. உயர்அழுத்தம் மின்கம்பி செல்லும் பகுதியில் பட்டாசு கடை அமைக்கக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்பு அருகிலும் பட்டாசு கடை நடத்த அனுமதியில்லை.

    மருத்துவமனைகள், சமையல் கியாஸ் குடோன்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் அதிகளவில் மக்கள் கூடும் வணிக வளாகம் போன்ற இடங்களில், பட்டாசு கடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    தீவுத்திடலில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பட்டாசு கடைகளை வைக்க அனுமதித்துள்ளோம். ஒவ்வொரு பட்டாசு கடையிலும் தீயணைப்பு சாதனங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

    சென்னையில் அடிக்கடி பட்டாசு தீ விபத்து ஏற்படக்கூடிய 60 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு தீயணைப்பு வண்டி தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு நிலைய அதிகாரி தலைமையில் 5 வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

    சென்னையை பொருத்தமட்டில் 75 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 15 தீயணைப்பு வாகனங்கள் தீபாவளி பண்டிகைக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் பணியில் இருப்பார்கள்.

    தீ விபத்து இல்லாமல் தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாடவேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக வைத்து தீயணைப்புத்துறை செயல்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி 166 இடங்களில் பட்டாசு தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் 4 இடங்களில் தான் கடந்த ஆண்டு பட்டாசு தீ விபத்து நிகழ்ந்தது.

    பட்டாசு கடைகளை கண்காணிக்க தீயணைப்புத்துறையில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு படையினர் ஆங்காங்கே ரோந்து சுற்றி வருவார்கள். பட்டாசு விற்பனை நடக்கும் கடைகளை கண்காணிப்பார்கள். விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு கடைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #DMK #Anbalagan #AppolloHospital
    சென்னை:

    திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    தகவல் அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். #DMK #Anbalagan #AppolloHospital
    கல்லலில் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி வழங்கக்கோரி 22 கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    கல்லல்:

    காரைக்குடியை அடுத்த கல்லலில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான, தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதிலும் இந்த திருவிழாவின்போது நடைபெறும் தேரோட்ட விழாவில் கல்லலில் உள்ள 44 ஊராட்சிக்குஉட்பட்ட 22 கிராம மக்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்காக மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருவது மற்றொரு தனிச்சிறப்பாக இருந்து வருகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது.

    இதையடுத்து கோவிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் கோவில் சுவற்றுக்கு வர்ணம் அடிப்பதற்காக சாரம் பூசப்பட்ட நிலையில் இந்து சமய நிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகத்திற்கான அனுமதி வழங்காததால் இன்றுவரை அந்த கோவிலில் எந்தவித திருப்பணியும் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதையடுத்து கோவில் கோபுரங்களில் திருப்பணி வேலைக்காக கட்டப்பட்ட சாரம் உறுதியற்ற நிலையில் தற்போது உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- கல்லலில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விமான கோபுரம் உள்பட 13 கோபுரங்கள் உள்ளன. இதுதவிர சிவன், அம்பாள், பைரவர், மகாலெட்சுமி, படிக்காசு விநாயகர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்காமல் உள்ளதால் இந்த பகுதியில் போதிய மழையில்லாமலும், தெப்பக்குளத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்து வருகிறது.

    பல்வேறு கிராம மக்கள் இந்த தெப்பக்குளத்தை குளிப்பதற்கு, துணி சலவை உள்ளிட்ட தேவைக்கு பயன்படுத்தி வரும் வேளையில் தற்போது தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கும் செயலாக உள்ளது.

    எனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கி விட்டு கல்லல் மற்றும் அதை சுற்றியுள்ள 22 கிராம மக்களும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து திமுக தரப்பில் ஐகோர்ட்டில் இன்று முறையிடப்பட்டது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தி.மு.க. முடிவு செய்தது. கமி‌ஷன், கரப்சன்,கலெக்சன் என்ற தலைப்பில் வருகிற அக்டோபர் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்திருந்தது.

    இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காதது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடர உள்ளோம். அந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை தாக்கல் செய்யுங்கள், திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார். #DMK #MadrasHC
    திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Dmk #Stalin #ApolloHospital
    சென்னை:

    திமுக தலைவராக முக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறார்.

    இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சிறுநீரக தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.
    #Dmk #Stalin #ApolloHospital
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துவிட்டு நாடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Vijayakanth #DMDK
    சென்னை:

    நடிகரும், தேமுதிக தலைவருமாக விஜயகாந்த் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.

    இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அவரது உறவினரும் கட்சி நிர்வாகிகளில் ஒருவருமான சுதீஸ் கூறுகையில், வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சுதீஸ் பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். #Vijayakanth #DMDK
    ×