search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கி"

    துருக்கி அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ள தாயிப் எர்டோகனுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TurkeyElection #Erdogan #VladimirPutin
    அங்காரா :

    550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதில், 52.5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் துருக்கியின் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்க உள்ளார் எர்டோகன்.

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற எர்டோகனுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசி வாயிலாக இன்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது, துருக்கி மற்றும் ரஷியா இடையிலான இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    மேலும், பிராந்திய பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்த அவர்கள், முக்கியமாக சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பரஸ்பரம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #TurkeyElection #Erdogan #VladimirPutin
    துருக்கி அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட தாயிப் எர்டோகன் மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றியுள்ளார். #TurkeyElection #Erdogan
    அங்காரா:

    550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த 1-11-2015 அன்று தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே தேர்தலை நடத்த அதிபர் தாயிப் எர்டோகன் முடிவெடுத்தார்.

    அதன்படி, அதிபர் தேர்தலின் போது பாராளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் தேர்தலில் தனக்கு செல்வாக்கு நிலவுவதால், அதன் மூலம் பாராளுமன்றத்திலும் அதிக இடங்களை வெல்லலாம் என்ற கணக்கில் எர்டோகன் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    இதற்கிடையே, அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. ஏ.கே. கட்சி சார்பில் தாயிப் எர்டோகனும், குடியரசு மக்கள் கட்சி சார்பில் முஹாரம் இன்ஸ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

    இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 53 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு மக்கள் கட்சி வேட்பாளர் முஹாரம் இன்ஸ்சுக்கு 31 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

    அதிபர் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தாயிப் எர்டோகன் மீண்டும் அதிபராகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதும் எர்டோகன் வெற்றி பெற்றதை அறிந்து அவரது கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. #TurkeyElection #Erdogan
    துருக்கியில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயணிகள் விமான ஒன்று நின்று கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் பின்பக்கத்தில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இஸ்தான்புல்:

    துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர்.

    அந்த விமானம் ஓடுதளத்தில் புறப்பட தயாராக சென்று கொண்டிருந்தபோது, ஓடுதளத்தை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கியை சேர்ந்த மற்றொரு விமானத்துடன் மோதியது.



    கொரிய விமானத்தின் இறக்கைகள், துருக்கி விமானத்தின் பின் பகுதி இறக்கையுடன் மோதியது. இதில் துருக்கி விமானத்தின் பின்பக்க இறக்கை சேதமடைததோடு, தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து உடனடியாக கொரிய விமானம் நிறுத்தப்பட்டது. உடனடியாக தியணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.

    கொரிய விமானமும் சேதமடைந்ததால் அதிலிருந்த பயணிகள் உடனடியாக இறக்கப்பட்டு, ஹோட்டலில் தங்கவைக்கபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் பயணிகள் விமான ஒன்று நின்று கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews


    ×