search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிவினைவாதிகள்"

    ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. #Saparatistscallforstrike
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும், பிரிவினைவாத அமைப்புகள், இரண்டு நாட்களுக்கு முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன.

    அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.   முழு அடைப்பு போராட்டத்தினால் ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளையும் போராட்டம் நீடிக்கும்.

    ஹூரியத் மாநாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய ஜேஆர்எல் அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

    இது குறித்து ஜேஆர்எல் வெளியிட்ட அறிக்கையில், 'ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலோ, தீர்ப்புகள் வெளியானாலோ மாநிலம் முழுவதும் தீவிர போராட்டம் வெடிக்கும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. #Saparatistscallforstrike 
    ஜம்மு காஷ்மீரில் அப்சல் குருவின் ஆறாவது நினைவு தினத்தையொட்டி பிரிவினைவாதிகள் இன்று நடத்திய ஸ்டிரைக் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. #Saparatistscallforstrike
    ஸ்ரீநகர்:

    பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குரு கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று தூக்கிலிடப்பட்டான். பின்னர் டெல்லியில் உள்ள திகார் சிறையிலேயே அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அப்சல் குருவின் ஆறாவது நினைவு தினத்தையொட்டி, ஜம்மு காஷ்மீரில் இன்று பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டன. வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.  இதனால் ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



    ஹூரியத் மாநாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய ஜேஆர்எல் அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சிறையில் அடக்கம் செய்யப்பட்ட அப்சல் குருவின் உடலை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான சையத் அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாத வகையில் அவர்களை போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்காக, காஷ்மீரின் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். #Saparatistscallforstrike

    கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #CameroonAdduction
    யாவுண்டே:

    மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் நேற்று தடுத்து நிறுத்தியது. பின்னர், பயணிகளின் அடையாள அட்டைகளை பறித்த அந்த கும்பல் அனைவரையும் கீழே இறக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. பேருந்து டிரைவரை, கும்பா பேருந்து நிலையத்திற்கு திரும்பி செல்லும்படி, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டி அனுப்பி உள்ளனர்.

    பேருந்து டிரைவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடத்தப்பட்ட பயணிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்று, நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்து அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். ஆனால், கடத்தப்பட்டவர்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

    கோப்புப்படம்

    இந்த பிராந்தியங்களில் ஆட்கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள் தான் காரணம் என அரசு குற்றம்சாட்டுகிறது. ஆனால், தங்கள் சுதந்திரப் போராட்டத்தை சர்வதேச அளவில் களங்கப்படுத்தும் வகையில், அரசாங்கத்தால் இந்த கடத்தல் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்படுவதாக பிரிவினைவாதிகள் கூறுகின்றனர். #CameroonAdduction
    ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா மற்றும் ஸ்ரீநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #SrinagarPulwama #Section144
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கிய போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களில் 7 பேர் உயிர் இழந்தனர்.

    இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்தன. மேலும் இன்று (திங்கட்கிழமை) தலைநகர் ஸ்ரீநகரில் பதாமி பாக் என்கிற இடத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தை நோக்கி பொதுமக்கள் பேரணி நடத்தவும் அந்த அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளன. இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா மற்றும் ஸ்ரீநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அந்த பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் 2 மாவட்டங்களிலும் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. #SrinagarPulwama #Section144 
    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் படுதோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanGeneralPolls
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில் 66 இடங்கள் மட்டுமே பெற்ற நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி எதிர்க்கட்சி ஸ்தானத்தை பிடித்துள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்ட பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கங்கள் மூலம் ஆதரிக்கப்பட்டவர்கள் படுதோல்வி அடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தடை செய்யப்பட்ட ஜமாத் உல் தாவா இயக்கத்தின் ஆதரவு பெற்ற கட்சியின் வாக்காளர்கள் எவரும் வெற்றி பெற வில்லை என்றும், கோடிக்கணக்கில் பதிவான வாக்குகளில் 1 லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் மட்டுமே அந்த வாக்காளர்கள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், சிந்து மாகாண தேர்தலில் போட்டியிட்ட பிரிவினை வாத கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களில் இருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதரீதியிலான கட்சிகள் கூட 5 ஆயிரம், 9 ஆயிரம் என சொர்ப்ப வாக்குகளில் தோல்வியை தழுவியதாக கூறப்பட்டுள்ளது.

    பயங்கரவாதிகளின் கூடாரம் என உலக நாடுகளால் கூறப்படும் பாகிஸ்தான் நாட்டின் மக்கள் எவரும் பயங்கரவாதத்தையும், பிரிவினை வாத எண்ணம் கொண்ட தலைவர்களையும் ஏற்கவில்லை என்பது இந்த தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது. #PakistanGeneralPolls
    ×