search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பந்த்"

    ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. #Saparatistscallforstrike
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும், பிரிவினைவாத அமைப்புகள், இரண்டு நாட்களுக்கு முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன.

    அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.   முழு அடைப்பு போராட்டத்தினால் ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளையும் போராட்டம் நீடிக்கும்.

    ஹூரியத் மாநாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய ஜேஆர்எல் அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

    இது குறித்து ஜேஆர்எல் வெளியிட்ட அறிக்கையில், 'ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலோ, தீர்ப்புகள் வெளியானாலோ மாநிலம் முழுவதும் தீவிர போராட்டம் வெடிக்கும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. #Saparatistscallforstrike 
    ஜம்மு காஷ்மீரில் அப்சல் குருவின் ஆறாவது நினைவு தினத்தையொட்டி பிரிவினைவாதிகள் இன்று நடத்திய ஸ்டிரைக் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. #Saparatistscallforstrike
    ஸ்ரீநகர்:

    பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குரு கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று தூக்கிலிடப்பட்டான். பின்னர் டெல்லியில் உள்ள திகார் சிறையிலேயே அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அப்சல் குருவின் ஆறாவது நினைவு தினத்தையொட்டி, ஜம்மு காஷ்மீரில் இன்று பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டன. வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.  இதனால் ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



    ஹூரியத் மாநாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய ஜேஆர்எல் அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சிறையில் அடக்கம் செய்யப்பட்ட அப்சல் குருவின் உடலை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான சையத் அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாத வகையில் அவர்களை போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்காக, காஷ்மீரின் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். #Saparatistscallforstrike

    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. #KeralaShutdown #SabarimalaHartal
    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

    இந்நிலையில், நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.



    முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பத்தனம்திட்டா பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்காமல் பேருந்துகளை இயக்கியதால் போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    60க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தி வைப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. போராட்டக்காரர்களின் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #KeralaShutdown #SabarimalaHartal
    தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் இன்று 46 அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #CitizenshipBill #AssamBandh
    கவுகாத்தி:

    மத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 46 அமைப்புகள் சார்பில் இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.



    ஆனால், முழு அடைப்பு போராட்டத்திற்கு மாநில பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. அரசு ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பணிக்கு செல்ல வேண்டும் என்றும், முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கும் வர்த்தக நிறுவனங்களின் லைசென்சுகள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. #CitizenshipBill #AssamBandh
    எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. #BharatBandh #SCSTAmendmentAct
    புதுடெல்லி:

    எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன்  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

    வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்து இருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு, அண்மையில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது.



    இந்த நிலையில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளன. உயர்ஜாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் டயர்களை சாலையில் கொளுத்திப்போட்டும், மரங்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பதற்றம் நிறைந்த 35 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பிற்பகல் 2 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    உத்தரபிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பீகாரின் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் டெர்மினல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. #BharatBandh #SCSTAmendmentAct

    முதல் மந்திரி குமாரசாமி விவசாயிகள் கடனை 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் கர்நாடகாவில் 28-ந் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார். #yeddyurappa #kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத் தேர்தலில் 77 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். ஏற்கனவே முதல்-மந்திரியாக இருந்தபோது செய்த தவறுகளை சரிசெய்ய விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இன்று சட்டசபையில் இருந்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர், சட்டசபை வளாகத்தில் பேட்டியளித்த எடியூரப்பா, விவசாயிகள் கடனை குமாரசாமி தலைமையிலான அரசு இன்னும் 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் வரும் 28-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என தெரிவித்தார். #yeddyurappa #kumaraswamy
    நாளை அனைத்துக்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #sterliteprotest
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடந்தது. இதில் பலர் உயிர் இழந்தனர்.

    இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நேற்று நடந்தது.

    இன்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

    துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கத்தினர் இன்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தினார்கள்.

    நாளை தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுகின்றன.



    நாளை பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  #sterliteprotest

    ×