search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகிலேஷ்"

    உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய 296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #AkhileshStopped #SamajwadiProtest
    லக்னோ:

    அலகாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். இதற்காக லக்னோ விமான நிலையத்துக்கு சென்ற அவரை விமானத்தில் ஏறவிடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். அலகாபாத் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.



    அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லக்னோ, பிரயாக்ராஜ், ஜான்ப்பூர், ஜான்சி, கானுஜ், பால்ராம்ப்பூர், கோராக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தினர். பிரயாக்ராஜ் பகுதியில் போலீசாரின் தாக்குதலில் தர்மேந்திர யாதவ் எம்பி உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.

    இவ்வாறு மாநிலம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  2 எம்பிக்கள் உள்ளிட்ட 46 முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் நேற்று உ.பி. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. சமாஜ்வாடி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #AkhileshStopped #SamajwadiProtest

    காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று லக்னோவில் அறிவிப்போம் என்று குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். #Congress #GhulamNabiAzad #SPBSP
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த இந்த கட்சிகள் திடீரென தனிக்கூட்டணியை உருவாக்கி இருப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

    எனவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசரமாக நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் ராஜ்பப்பர், மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    முன்னதாக மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. குறிப்பாக குலாம்நபி ஆசாத் பேசும்போது, ‘சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு குறித்து நாங்களும் கேள்விப்பட்டோம். எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை (இன்று) லக்னோவில் அறிவிப்போம்’ என்று மட்டுமே பதிலளித்தார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. #Congress #GhulamNabiAzad #SPBSP
    பாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவின் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #SPBSPAlliance #Mayawati #AkhileshYadav
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இப்போது பாஜகவை வீழ்த்துவதற்காக பாராளுமன்றத் தேர்தலில் கைகோர்த்துள்ளன. இது தொடர்பான சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தனர்.

    இந்நிலையில் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

    உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியில்லை என்றும் மாயாவதி கூறினார்.



    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வறுமை, வேலையின்மை மற்றும்  ஊழல்கள் பெருகியதால் அந்த கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை என்றும் மாயாவதி கூறினார். #SPBSPAlliance #Mayawati #AkhileshYadav
    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக மாயாவதி கட்சியுடன் கூட்டணியைத் தொடரவும், சில தொகுதிகளை விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது. #Akhilesh #UPAlliance
    ஆக்ரா:

    உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு மூன்றாவது அணி அமைக்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டு சேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்தியது.

    இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. இதற்காக சில தொகுதிகளை பகுஜன் சமாஜ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது.

    இதுபற்றி சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும். பா.ஜ.க.வின் தோல்வியை உறுதி செய்வதற்காக நாங்கள் 2 முதல் 4 தொகுதிகள் வரை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தால், அதனையும் செய்வோம். இந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

    சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்த எங்கள் மெகா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக நடந்த 4 இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. முக்கிய தொகுதியான கைரானா மக்களவை தொகுதி, நூபூர் சட்டமன்றத் தொகுதியை சமீபத்தில் இழந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    கூடுதல் இடங்கள் கொடுத்தால் மட்டுமே பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Akhilesh #UPAlliance
    ×