search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோலிவுட்"

    மலையாளத்தில் காதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகையை, தமிழில் அழைத்து வர பல இயக்குனர்கள் போட்டி போட்டார்களாம்.
    மலையாளத்தில் காதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகையை, தமிழில் அழைத்து வர பல இயக்குனர்கள் போட்டி போட்டார்களாம். இதில் ஒரு இயக்குனர் விடாபிடியாக இருந்து, நடிகையை தமிழுக்கு அழைத்து வந்தாராம். நடிகை நடித்த படம் ரசிகர்களை கவர, தொடர்ந்து ரவுடியான பாடலுக்கு நடனம் ஆட, அவரின் மார்க்கெட் திடீர் என உயர்ந்ததாம்.

    பல இயக்குனர்கள் நடிகை அதிக சம்பளம் கேட்பாரோ என்று பேச, நடிகையோ ஸ்கிரிப்ட் கரெக்டா இருந்தா, எனக்கு முக்கியத்துவம் இருந்தா சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். பட வாய்ப்புக்காக நடிகையின் புது டெக்னிக் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    சமீபத்தில் கிரிக்கெட் படத்தில் விளையாடிய நடிகை, தான் நடித்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்டாராம்.
    சமீபத்தில் கிரிக்கெட் படத்தில் விளையாடிய நடிகை, தான் நடித்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்டாராம். அதில் நடிகை பேசும்போது, "பலர் வெற்றி பெறாத படங்களுக்குக்கூட வெற்றி விழா நடத்துகின்றனர். இது தான் உண்மையான வெற்றி விழா" எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினாராம்.

    இதனால், சமூக வலைத்தளத்தில் பெரிய பிரச்சனை நடைபெற்றதாம். சமீபத்தில் வெளியான பெரிய நட்சத்திரங்களின் படங்களைத்தான் நடிகை குறிப்பிட்டு சொல்லியதாக சண்டை எற்பட்டதாம். இதையறிந்த நடிகை, நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். இதன் பிறகுதான் ரசிகர்கள் அமைதியானார்களாம்.
    முன்னணி நடிகை என்று பெயர் பெற்று, நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தாராம்.
    முன்னணி நடிகை என்று பெயர் பெற்று, நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தாராம். சமீபத்தில் விஸ்வாசமான படத்தில் நடிகருடன் நடிக்க சம்மதித்தாராம். 

    இதையடுத்து தளபதியார் நடிக்க இருக்கும் படத்தில் நடிகையை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாம். நடிகையும் நடிக்க சம்மதித்தாராம். ஆனால், சில நிபந்தனைகள் போட்டிருக்கிறாராம் நடிகை. அதிக பட்சமாக சம்பளம். குறைந்த நாட்கள் தான் கால்ஷீட் என படக்குழுவினருக்கு நிபந்தனை போட்டிருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும்...
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டாராம். அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். இதைப் பார்த்த பல இயக்குனர்கள், பல தயாரிப்பாளர்கள் நடிகையை அணுகி எங்கள் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுங்கள் என்று கேட்டிருக்கிறார்களாம்.

    ஆனால், நடிகை ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அந்த பாடலுக்கு ஆடியதால் தன்னுடைய இமேஜ் போய் விட்டது என்று நினைத்து, இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பலரிடமும் கூறி வருகிறாராம். 
    சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு...
    சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு இணையாக சம்பளம் கேட்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.

    சண்டை போடும் கோழி நடிகருடன் அவர் நடித்த புதிய படம் திரைக்கு வரட்டும். அதுவரை பொறுத்திருக்கலாம். படம் திரைக்கு வந்ததும், சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விடலாம் என்று திட்டவட்டமாக முடிவெடுத்து இருக்கிறாராம்.

    ஏறக்குறைய அவர் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்டார். வீரமான நடிகருடன்தான் இன்னும் இணையவில்லையாம். அதனால் அந்த வாரிசு நடிகையின் கவனம், நடிகரின் பக்கம் திரும்பியிருக்கிறதாம்!
    நான்கெழுத்தில் பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும்படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம்.
    நான்கெழுத்தில் பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும்படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம். வாரிசு நடிகர் உத்தரவாதம் அளித்ததன் பேரில், அந்த தயாரிப்பாளர் ஒரு பெரிய தொகையை கொடுத்தாராம். படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லையாம். கடனாக கொடுத்த தொகையை திருப்பி தரும்படி வாரிசு நடிகரிடம் அந்த தயாரிப்பாளர் கேட்க நான் உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன் என்று வாரிசு நடிகர், தயாரிப்பாளரை சமாதானப்படுத்தி இருக்கிறாராம்.

    இப்போது, வாரிசு நடிகர் சொன்னபடி நடித்து கொடுக்க மறுக்கிறாராம். தயாரிப்பாளர் தன்னை சந்திக்கிறவர்களிடம் எல்லாம், வாரிசு நடிகர் பற்றி புகார் செய்து வருகிறார்.
    பல வெற்றி படங்களை கொடுத்த பேய் இயக்குனர், தற்போது நடிகராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம்.
    பல வெற்றி படங்களை கொடுத்த பேய் இயக்குனர், தற்போது நடிகராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம். இவர் ஒரு புதுமுக நடிகரிடம் உன்னை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறி, பல கோடிகளை முன்பணமாக வாங்கி இருக்கிறாராம். அந்த பணத்தை செலவு செய்துவிட்டு, படம் விரைவில் ஆரம்பிக்கிறேன் என்று நடிகரிடம் கூறி வேறு படத்தை தயாரிக்க சென்று விட்டாராம்.

    அந்த எதிர்பார்த்தளவிற்கு லாபம் பெறவில்லையாம். இதையடுத்து, சங்க தலைவரை வைத்து படம் இயக்க சென்று விட்டாராம். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட புதுமுக நடிகர், அடுத்தது என்னை வைத்து தான் படம் இயக்குவார் என்று காத்துக் கொண்டிருந்தாராம்.

    ஆனால், இயக்குனரோ, மீண்டும் வேற நடிகரை வைத்து படம் இயக்க சென்று விட்டாராம். அந்த கதை, புதுமுக நடிகருக்கு உருவாக்கப்பட்ட கதையாம். இதையறிந்த நடிகர் இயக்குனர் மீது கோபப்பட்டு கேட்க, அதற்கு இயக்குனர் உன்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் இன்னும் அதிக பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.
    பீச் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீரமான பெண் என்று மிகவும் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றாராம்.
    பீச் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீரமான பெண் என்று மிகவும் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றாராம். அங்கு போராட்டத்தில் கலந்துக் கொண்டு பெற்ற நல்ல பெயரை கெடுத்துக் கொண்டாராம். அப்போது அவரை கிண்டல் செய்து பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்களாம்.

    வெளிவந்த அவர் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடிகையாக மாறியிருக்கிறாராம். இந்த நிலையில், அவரை மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்களாம். ஆனால், அவரோ மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

    மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றால், மீண்டும் அவரை கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயமாம்.
    தமிழில் அறிமுகமான ரெயின் நடிகைக்கு ஆரம்பம் முதலே கவர்ச்சி விசயத்தில் படுதாராளம் காட்டியதால், நடிகைக்கு எக்கச்சக்கமான படங்கள் கமிட் ஆனதாம்.
    தமிழில் அறிமுகமான ரெயின் நடிகைக்கு ஆரம்பம் முதலே கவர்ச்சி விசயத்தில் படுதாராளம் காட்டியதால், நடிகைக்கு எக்கச்சக்கமான படங்கள் கமிட் ஆனதாம். பல முன்னணி நடிகர்கள் நடிகைக்கு வலியவந்து தங்கள் படங்களில் சான்ஸ் கொடுத்தார்களாம். 

    இப்படி உச்சத்தில் இருந்த நடிகையின் மார்க்கெட் புதுவரவுகளால் டல்லடிக்க தொடங்கியதாம். இதையடுத்து, தெலுங்கு, கன்னடம் என வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகைக்கு தமிழில் ரீஎண்ட்ரியாகும் வாய்ப்பே இல்லாம் போனதாம். அங்கும் போதிய சான்ஸ் இல்லாததால், திருமணம் செய்து செட்டிலாகலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.

    தனது காதலரான வெளிநாட்டுக்காரரை கரமும் பிடித்தாராம். ஆனால் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால், பழையபடி கவர்ச்சி மழை பொழிய தயார் என இயக்குனர்களுக்கு தூதுவிட ஆரம்பித்திருக்கிறாராம். தனது பிகினி படங்களை இயக்குனர்களுக்கும், ஹீரோக்களுக்கும் அனுப்பி இதை வெளிப்படையாக தெரிவித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறார்களாம்.
    தளபதி, தல ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த இனிப்புக்கடை நடிகை அடுத்து, ஜெயமான நாயகனுடன் ஜோடி சேருவதற்கு தீவிர முயற்சிகளில் மேற்கொண்டிருக்கிறாராம்.
    தளபதி, தல ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த இனிப்புக்கடை நடிகை அடுத்து, ஜெயமான நாயகனுடன் ஜோடி சேருவதற்கு தீவிர முயற்சிகளில் மேற்கொண்டிருக்கிறாராம். இதற்காக பல தூதுக்கள், சிபாரிசு என பல முயற்சிகளும் அடங்கியதாம்.

    மேலும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயார் என்கிறாராம். அவருடைய ஆசை அநேகமாக நிறைவேறி விடுமாம். விரைவில் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவர இருக்கிறதாம். 
    மும்பையில் இருந்து இறக்குமதியான வனமகளான நடிகைக்கு மளமள என்று புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
    மும்பையில் இருந்து இறக்குமதியான வனமகளான நடிகைக்கு மளமள என்று புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். சக நாயகிகள் அனைவரும் அவருடைய அதிர்ஷ்டத்தை பார்த்து பொறாமைப்படுகிறார்களாம்.

    இந்த நிலையில், “தமிழ் பட உலகில், முதல் இரண்டு இடங்களில் இருக்கும் 2 நடிகைகளையும் விரட்டி காட்டுகிறேன், பார்” என்று தனது மானேஜர் முன்னிலையில் சபதம் எடுத்து இருக்கிறாராம், அந்த நடிகை.
    இயக்குனரை விவாகரத்து செய்த பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் பால் நடிகை, இதுவரை ரூ.40 லட்சம் சம்பளம் தான் வாங்கி வந்தாராம்
    இயக்குனரை விவாகரத்து செய்த பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் பால் நடிகை, இதுவரை ரூ.40 லட்சம் சம்பளம் தான் வாங்கி வந்தாராம். அவர் தற்போது தனது சம்பளத்தை திடீரென ஒரேயடியாக ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டாராம். 

    இந்த திடீர் சம்பள உயர்வு பற்றி நடிகையிடம் தயாரிப்பாளர் ஒருவர் கேட்டதற்கு, “நான் இந்தி பட நாயகி ஆகிவிட்டேன். அதற்கு தகுந்தாற்போல் சம்பளம் கேட்க வேண்டாமா?” என்று கேட்டு சிரிக்கிறாராம். இந்தி படத்தில் நடிக்க சென்றால் அவ்வளவு பணம் கேட்பாரா? என்று தயாரிப்பாளர் புலம்பிக் கொண்டே சென்றாராம்.
    ×