search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோலிவுட்"

    சுமார் மூஞ்சி நடிகர் நடித்து தயாரித்த மூன்றெழுத்து படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், வசூல் ரீதியாக திரையிட்ட அனைவருக்கும் திருப்தி அடைந்தார்களாம்.
    சுமார் மூஞ்சி நடிகர் நடித்து தயாரித்த மூன்றெழுத்து படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், வசூல் ரீதியாக திரையிட்ட அனைவருக்கும் திருப்தி அடைந்தார்களாம். ஆனால், அந்த படத்தை மொத்தமாக வாங்கிய நடிகர், திருப்தி அடையவில்லையாம்.

    தயாரிப்பாளரான நடிகரிடம், பணத்தை திருப்பி கேட்கிறாராம். “பணத்தை கொடு...அல்லது புதுசாக ஒரு படத்தை நடித்துக் கொடு” என்று நெருக்குகிறாராம். இருவருக்கும் இடையே பஞ்சாயத்து நடக்கிறதாம்.
    வனமகளான நடிகையை பற்றி தினம் தினம் ஒரு கிசுகிசுக்கள் வருகிறதாம். குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாராம்.
    வனமகளான நடிகையை பற்றி தினம் தினம் ஒரு கிசுகிசுக்கள் வருகிறதாம். குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாராம். மேலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரவும் இருக்கிறாராம்.

    சமீபத்தில் நடிகை தனது பிறந்தநாளுக்கு கொடுத்த பார்ட்டியால் முன்னணி நடிகரின் மகன் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கினாராம். பார்ட்டியில் நடன இயக்குனருடன் நெருக்கமாக இருந்ததை அடுத்து இருவருக்குள்ளும் காதல் என்று செய்தி கிளம்பியதாம். இந்நிலையில் தனது சம்பளத்தையும் அதிரடியாக ஏற்றிவிட்டாராம். 2 கோடி கேட்பதாக தகவல் கசிந்துள்ளதாம்.
    வனமகளாக வந்து நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த நடிகை, வேறு நடிகைகளுக்கு போக இருந்த புது பட வாய்ப்புகளை எல்லாம் தனதாக்கி கொண்டு வருகிறாராம்.
    வனமகளாக வந்து நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த நடிகை, வேறு நடிகைகளுக்கு போக இருந்த புது பட வாய்ப்புகளை எல்லாம் தனதாக்கி கொண்டு வருகிறாராம். புது பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்ற நுட்பத்தை மிக சரியாக புரிந்து கொண்டிருக்கிறாராம், அவர். 

    அதன்படி, தனக்கு பட வாய்ப்புகளை வாங்கி கொடுக்கும் தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் உதவி டைரக்டர்களுக்கு, நிறைய ‘கமிஷன்’ வெட்டுகிறாராம். மேலும் பிரபல கதாநாயகர்களுடன் அலைபேசியில் அடிக்கடி பேசி, புது பட வாய்ப்புகளை கைப்பற்றுகிறாராம். 
    வாரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம்.
    வாரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம். அதன்பின் சில சுமாரான படங்களில் நடித்து வந்த நடிகருக்கு சமீபத்திய படங்கள் வெற்றி பெற்றதாம். குறிப்பாக அடல்ட் படம் ஒன்று இளைஞர்களை கவர்ந்ததாம்.

    இளம் இயக்குனர்கள் சிலர் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் செய்தார்களாம். இதனால், தன்னுடைய சம்பளத்தை 1 கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்தினாராம். சம்பளத்தை உயர்த்தினாலும் தன்னை தேடி, நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று அந்த நடிகர் எதிர்பார்த்தாராம். அவருடைய எதிர்பார்ப்பு, ஏமாற்றமாகி விட்டதாம்

    கைவசம் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால், கடல் நடிகர் சோர்ந்து போய் காணப்படுகிறாராம்.
    இதயம் தொட்ட காதல் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர், தனது வாரிசை அறிமுகப்படுத்திய சில வருடங்களில் காலமாகி விட்டார்.
    இதயம் தொட்ட காதல் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர், தனது வாரிசை அறிமுகப்படுத்திய சில வருடங்களில் காலமாகி விட்டார்.

    ‘வாரிசு’ நடிகர் தன்னை தேடி வந்த படங்களில் மட்டும் நடித்தாராம். அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறாததால், பட வாய்ப்புகள் குறைந்ததாம்.

    எனவே சொந்த படம் எடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றார், நடிகர். முதல் தயாரிப்பே அவருடைய காலை வாரிவிட்டதாம். முதலீடு செய்த பணம் முழுவதையும் இழந்த அவர், “இனிமேல் சொந்த படம் எடுக்க மாட்டேன், சாமி” என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்!
    ஒரு பழைய கதாநாயகியின் வாரிசாக அறிமுகமாகி, மிக குறுகிய காலத்தில் ‘நட்சத்திர நாயகி’யாக உயர்ந்து,...
    ஒரு பழைய கதாநாயகியின் வாரிசாக அறிமுகமாகி, மிக குறுகிய காலத்தில் ‘நட்சத்திர நாயகி’யாக உயர்ந்து, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் புகழ் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருப்பவர், அந்த நடிகை. இவர் இதுவரை, ரூ.1 கோடி சம்பளம் வாங்கி வந்தாராம்.

    மறைந்த நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த பின், சம்பளத்தை இரண்டு மடங்காக கூட்டி விட்டாராம். இப்போது அவருடைய சம்பளம், ரூ.2 கோடியாம். யார் கதை சொன்னாலும், முதலிலேயே சம்பளத்தை பேசி விடுகிறாராம்.
    தெலுங்கில் ஒரு படம் மூலம் வெற்றி பெற்ற மேகமான நடிகை, ஒல்லி நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம்.
    தெலுங்கில் ஒரு படம் மூலம் வெற்றி பெற்ற மேகமான நடிகை, ஒல்லி நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். ஆனால், அந்த படம் 3 வருடங்கள் கடந்தும் இன்னும் வெளியாகவில்லையாம். அதுபோல் வாரிசு நடிகரின் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானாராம். அந்தப் படமும் இன்னும் வெளியாகவில்லையாம்.

    இதனால், ராசி இல்லாத நடிகை என்று பெயர் பெற்றிருந்தாலும், மற்றொரு வாரிசு நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படி படங்கள் இருக்க, திடீர் என்று நட்சத்திர நடிகர் படத்தில் நடிக்க பேசி வருகிறார்கள். பட வாய்ப்புகள் ஒரு பக்கம் வந்தாலும், நடித்த படங்கள் வெளியாகவில்லை என்று சோகத்தில் இருக்கிறாராம் நடிகை.
    பாலான நடிகை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படம், உடற்பயிற்சி புகைப்படம் என வெளியிட்டு வருகிறாராம்.
    பாலான நடிகை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படம், உடற்பயிற்சி புகைப்படம் என வெளியிட்டு வருகிறாராம். ஆனால், சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் சமூக வலைத்தளத்தில் அதிகமாக இருக்கவே மாட்டேன் என்று கூறினாராம். இதைக்கேட்ட ரசிகர்கள் நடிகையை திட்டி வந்தார்களாம்.

    இந்நிலையில், நடிகையின் படம் ஒன்று வெளியானதாம். ஆனால், எதிர்பார்த்தபடி படம் ஓடவில்லையாம். மாறாக நடிகருக்கு தான் பெயரை பெற்று கொடுத்ததாம். இதனால், கடுப்பான நடிகை, அழும்படி ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டாராம். இதை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என்று விசாரிக்க ஆரம்பித்தார்களாம். பின்னர், நடிகை படம் ஓடாததாலும், தன்னைப் பற்றி எந்த பெயரும் வராததாலும் இதுபோன்று புகைப்படத்தை வெளியிட்டு பப்ளிசிட்டி செய்கிறார் என்று திட்டியிருக்கிறார்களாம். 

    இது நடிகைக்கு மேலும் ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
    சின்னத்திரையில் பிரபலமாக இருந்த கடவுளின் பெயரைக் கொண்டவரை பெரியத்திரையில் பீச் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினாராம் இயக்குனர்.
    சின்னத்திரையில் பிரபலமாக இருந்த கடவுளின் பெயரைக் கொண்டவரை பெரியத்திரையில் பீச் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினாராம் இயக்குனர். தற்போது புகழின் உச்சியில் இருக்கும் நடிகரை அணுகி கதை சொல்லி இருக்கிறாராம் இயக்குனர். 

    கதையை கேட்ட நடிகர் கோடியில் சம்பளம் கேட்டாராம். இதற்கு இயக்குனர் அதிர்ச்சியாகி நெருங்கியவர்களிடம் நடிகரை பற்றி அதிக சம்பளம் கேட்கிறார் என்று சொல்லி வருகிறாராம்.

    இதையறிந்த நடிகர், நானும் இப்போது தயாரிப்பு கம்பெனி வைத்திருக்கிறேன். எனக்காக அவர் முதல் படத்திற்கு வாங்கின சம்பளத்தை பெற்றுக் கொண்டு படத்தை இயக்குவாரா? அவரும் இப்போது அதிக சம்பளம் வாங்குகிறார் தானே? என்று பதிலடி கொடுத்திருக்கிறாராம். 
    ×