search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்பாஸ்"

    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் `பியார் பிரேமா காதல்' படக்குழு அடுத்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. #PyaarPremaKaadhal #HarishKalyan
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் `பியார் பிரேமா காதல்'. இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர். 

    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 29-ஆம் தேதி நடைபெறஇருப்பதாக படக்கழு அறிவித்துள்ளது. 

    சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #PyaarPremaKaadhal #HarishKalyan

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அரசியல் வசனங்களை பேசி மக்களை கவர்ந்தார். #KamalHaasan #BiggBossTamil2
    கமல் அரசியலுக்கு வந்த பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அரசியல் பேசுகிறார். நேற்று முன் தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் “பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்கதான் மைனாரிட்டி. ‘மைனாரிட்டி போடற ஆட்டத்தைப் பார்த்து பொதுமக்களும் ஆட்டம் போட்டாங்கன்னா விளையாட்டு கெட்டுப் போயிடும்.

    ‘இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து ஒதுங்கியிருந்தாலும் விளையாட்டு கெட்டுப் போயிடும்’ என்று உள்ளே நுழைந்தவுடனேயே அரசியல் நையாண்டியுடன் பேசத் துவங்கினார் கமல்.



    முன்னாள் தலைவர்கள் கூடி ‘தகுதியற்ற தலைவர்’ என்கிற பரிசை ரம்யாவிற்கு தந்தார்கள். “இப்படித்தான்.. தலைவர்கள் தப்பு பண்ணும் போது.. அவங்களுக்கு பளிச்சுன்னு பரிசு தந்துடணும்’ என்று அரசியல் பொடியை நைசாக தூவினார் கமல். #KamalHaasan #BiggBossTamil2

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி, தனது பிறந்தநாளை அவரது நண்பருடன் அந்தமானில் கொண்டாடிய நிலையில், இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. #Julie #MarkHarman
    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் ஜுலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா என்று அடுத்தகட்ட முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார். 

    ஜூலி சமீபத்தில் அவரது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைதளங்களில் வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட் போட்ட ஜூலி, `தன்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி, உங்களது ஆசீர்வாங்களுக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார். பிறந்தநாளை அந்தமானில் எனது நண்பர் மார்க் ஹம்ரானுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடினேன்'. என்று கூறியிருக்கிறார். 



    மேலும் மற்றொரு ட்விட்டில், எனக்கு பலமாகவும், எனது வெற்றிக்கு உறுதுணையாகவும் இருக்கும் எனது நண்பர் மார்க் ஹமடரானுடன் ஸ்கூபா டைவிற்கு செல்வதாக கூறியிருக்கிறார். இதன் மூலம் ஜூலியும், சென்னையை சேர்ந்த மாடலான மார்க் ஹர்மானும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். 

    ஜூலி தற்போது டாக்டர்.அனிதா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Julie #MarkHarman
    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் செய்யும் தவறுகளை பெண்களும் செய்ய நினைக்க வேண்டாம் என்று பெண்களுக்கு கமல் அறிவுரை வழங்கினார். #BiggBossTamil2 #KamalHaasan
    பிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கத்திய நாடுகளிலும் வட இந்தியாவிலும் பிரபலமான நிகழ்ச்சி. குறிப்பிட்ட பிரபலங்களை 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கவைத்து அவர்கள் நடந்து கொள்வதை அப்படியே படம் பிடித்து காட்டும் நிகழ்ச்சி இது.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது.

    முதல் பாகத்தில் ஆரவ், ஓவியா காதல், ஜூலியின் நாடகம், ஓவியா தற்கொலை முயற்சி, காயத்ரி ரகுராமின் கெட்டவார்த்தை இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா நெருக்கம், ஒரே படுக்கையில் ஆணும் பெண்ணும் என வேறு பாதையில் செல்கிறது.

    இதை எல்லாம் கமல் நேர்த்தியாக சமாளித்து வருகிறார். யாரும் மனம் கோணாதபடி அதே நேரத்தில் அவர்களது தவறை உணரும் வகையில் அவர்களுக்கு புரிய வைக்கிறார்.



    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கப் போகும் நேரத்தில் பெண்களின் படுக்கை அறையில் மகத் படுத்துக்கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்தது குறித்து பொன்னம்பலம் பலத்த ஆட்சேபனை எழுப்பினார்.

    மகத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா கூட்டணி செய்யும் சில வி‌ஷயங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. ‘‘இங்கு எல்லை மீறிய சில வி‌ஷயங்கள் நடக்கின்றன. அது தொடரக் கூடாது. தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் பார்க்கிற நிகழ்ச்சி இது. தப்பாகிடக் கூடாது” என்றார்.

    “நான் பேச வேண்டும் என்று நினைத்ததை நீங்கள் பேசிவிட்டீர்கள்” என்று பொன்னம்பலத்தின் கருத்தை ஆதரித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் தரம் குறித்த பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கு என்று அனந்த் வைத்தியநாதன் கூறியபோது கமல் அதை வழிமொழிந்தார்.



    பொன்னம்பலம் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சிறைக்கு தள்ளினார்கள். அப்போது கமல் கூறியதாவது:-

    “பொன்னம்பலம் - அனந்த் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீட்டின் மீது அக்கறையுள்ளது. பொன்னம்பலம் ‘அப்பா’ வாக இருந்து கண்டித்தார். அனந்த் ‘தாத்தா’வாக இருந்து செல்லம் கொடுத்தார். பொன்னம்பலம் விழிப்பாக இருந்து கவனித்த சில வி‌ஷயங்களை தூங்கிவிட்டதால் அனந்த் கவனிக்கவில்லை. ஆணுக்குச் சமமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆண் செய்யும் தவறுகளையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது. ஆண்களை விடவும் சிறப்பான காரியங்களை செய்து அவர்களை ஜெயித்துக் காட்டணும்.


    நீங்கள் இன்னமும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். இதை அறிவுரை, ஆலோசனை, டிப்ஸ்’ என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சினிமாவில் நான் அப்படித்தான் பயன்படுத்திக்கிட்டேன். ஆரம்பத்துல என்னை யாரும் கவனிக்கவேயில்லை. பாலசந்தர் கண்களில் படும்படியாகச் சில காரியங்களைச் செய்தேன். புகழ்பெற்றேன். நீங்கள் நீங்களாக இருங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்’.

    இவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #KamalHaasan

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் மகத்தும், நடிகை யாஷிகா ஆனந்தும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #BiggBoss
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி நாளாக நாளாக சூடு பிடிக்கிறது. நிஜ கணவன் மனைவியான பாலாஜி - நித்யா இடையேயான சண்டை சுவாரஸ்யமாக மாறி வருகிறது. சண்டையோ சமாதானமோ இருவரும் ஓவராக செல்கிறார்கள்.

    அதுபோல், யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் படுத்திருந்த கட்டிலில் அவர்களுக்கு நடுவில் மகத் படுத்துக்கொண்டார். இதுவும் பலர் மத்தியில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.



    மகத்துக்கும் யாஷிகாவுக்குமான நெருக்கம் அதிகரித்து வருகிறது. இருவரும் காதலித்து விடுவார்களோ? காதலிக்கிறார்களா? என்றும் பார்வையாளர்கள் பலரும் பேசிவருகிறார்கள். பொன்னம்பலம் வீட்டில் நடப்பவற்றை பிக்பாசிடம் போட்டுக்கொடுக்கிறார் என்று அவர்மீது கடுப்பில் இருக்கிறார்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள். அவரை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிடுகிறார்கள்.
    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறி ‘பெப்சி’ தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். #BiggBossTamil2 #FEFSI
    திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் ‘பிக்பாஸ்’ டி.வி. நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.

    ‘பிக்பாஸ் முதல் பாகத்தின் போதே பெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம். அப்போது ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி. தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு பிடிபடாது. எனவே 50 சதவிகிதம் ஆட்களைப் பெஃப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த பாகங்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் பெப்சியில் இருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள்.



    அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது. ஆனால் 2-ம் பாகத்தில் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டை விட மோசமாக வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் மும்பை தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையும் நம்மூர் ஆட்களுக்கு வேறுவிதமான மரியாதையும் பணியிடத்தில் கிடைப்பதாக தெரிகிறது. கேட்டதற்கு சரியான பதில் தராமல் அடாவடியாகப் பேசுகிறார்கள். எனவேதான் நாங்களும் இதை வெளியில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதிகப்படியாக பெப்சி பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கோடிக்கணக்கில் பணம் போட்டு தமிழ்நாட்டில் தயாராகிற நிகழ்ச்சியில் நமது மாநில தொழிலாளர்களுக்கு வேலை தருவதில் என்ன பிரச்சினை?. எங்களது கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்காத பட்சத்தில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிற கமல் உள்பட அந்த 41 பேரும் (நடிகர் கமல் சம்மேளன உறுப்பினர்) அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறோம்.



    கமல் பல்வேறு காலங்களில் சம்மேளனத்துக்கு ஆதரவு தந்துள்ளார். அவரிடம் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் பெப்சி ஆட்களையே அதிகம் பயன்படுத்துவதாக தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள். நாங்கள் உண்மை நிலையை அவருக்கு தெரிவித்து விட்டோம். கடந்த முறையை போலவே இப்போதும் தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவார் அல்லது எங்கள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறோம்.

    குஷ்புவின் வேண்டுகோளுக்கு இணங்க அவகாசம் தந்து இருக்கிறோம்.

    தவறு செய்த நிறுவனம் மீது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் செய்து இருக்கிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் 25-ந்தேதி (நாளை) ஒரு நாள் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறோம். அன்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம்’.

    இவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #FEFSI 

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, ஆரவை ஒருதலையாக காதலித்து வந்த ஓவியா, தற்போது, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #Oviya #Arav
    ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள்.

    இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார்.

    அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர்.



    இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

    இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் பேச்சு கிளம்பி உள்ளது.
    கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் நடித்து வரும் பிந்து மாதவி, பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போகமாட்டேன் என்று கூறினார். #BiggBossTamil2 #BindhuMadhavi
    நடிகை பிந்துமாதவி கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்தவர். அவர் தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்து வருகிறார். 

    இதுகுறித்து பிந்துமாதவி பேசும் போது, 

    “இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமாக இது அமையும். வாழ்க்கையில் ஒருமுறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே இருந்து விட்டேன். அதுபோதும். இன்னொரு தடவை அது நடக்காது. 



    அப்படி வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனால் எப்போதாவது விருந்தாளி போல அழைத்தால் போகலாம். `பிக்பாஸ் 2’வில் கலந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். கண்டிப்பாக ஜெயிக்கலாம்‘’ என்று கூறி இருக்கிறார். #BiggBossTamil2 #BindhuMadhavi

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் தீவிரம் காட்டிவரும் நிலையில், இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டமிட்டுள்ளாராம். #KamalHaasan #BiggBoss2
    ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள கமல் நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.

    கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது கமல் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக அதில் சில அரசியல் வி‌ஷயங்களை பேசினார். அடுத்த மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் பாகத்தை தொகுத்து வழங்க இருக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியிலும் அரசியலை தீவிரமாக கையில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். நிழச்சியை தொகுத்து வழங்க தன்னை அணுகியவுடன் இதற்கு ஒப்புக்கொண்ட பிறகே சம்மதித்திருக்கிறார்.



    பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று மாதங்கள் நடக்கும். அதன் பிறகு சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் கதையும் நடப்பு அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதை தான். கமல் ஒரு பக்கம் தீவிர அரசியலையும் இன்னொரு பக்கம் மீடியா பணியையும் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

    தேர்தலில் அறிவித்து போட்டியிடும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க திட்டமிட்டு இருக்கிறார். தன்னுடைய எண்ணங்களை மக்களிடம் கொண்டு செல்ல இதுதான் சரியான வழி என்பதே கமலின் கணக்காக உள்ளது. #KamalHaasan #BiggBoss2 #Indian2 

    புதுமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் `பியார் பிரேமா காதல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #PyaarPremaKaadhal
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்து வரும் படம் `பியார் பிரேமா காதல்'.  
    இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் இருந்து `ஹய் ஆன் லவ்' என்ற பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 



    படம் பற்றி யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது,

    இயக்குநர் இளன் என்னிடம் கதை சொல்லும் போதே, இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும், ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன். ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்குப் பிறகு மிக பெரிய அந்தஸ்துக்கு உயர்வார். ரைசா வில்சன் ரசிகர்களை நிச்சயம் கவர்வார். அவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் "high on love"  பாடல் குறுகிய காலத்தில் 84 லட்சம் பார்வையாளர்களை பெற காரணம். 

    பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அசர்பேஜான் என்ற நாட்டுக்கு சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அசர்பேஜான் தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள். இந்த யுகத்துக்கு "பியார் பிரேமா காதல்" என்று நான் உறுதியாக கூறுவேன் என்றார். #PyaarPremaKaadhal

    கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இரண்டாவது சீசனுக்கான டீசர் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. #BiggbossTamil #KamalHaasan
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான டீசர் இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா, ஆரவ், ஜுலி என பலர் பிரபலம் ஆனார்கள்.

    இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் துவங்கவிருக்கிறது. கமல்ஹாசனே நடத்தவிருக்கிறார். கடந்த 3 ஆம் தேதி நிகழ்ச்சியின் டீசருக்கான படப்பிடிப்பு ஏவிஎம் அரங்கில் நடந்தது. அந்த டீசர் இன்று முதல் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சிக்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 



    பங்கேற்பாளர்களுக்கான தேர்வுகளும் நடந்துவருகின்றன. ஜுன் 25 முதல் செப்டம்பர் 30 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது. கடந்த முறையை விட இந்த முறை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு. #BiggbossTamil2 #KamalHaasan #BiggBossSeason2

    ×