search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128475"

    ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உகந்த வசந்த பஞ்சமி தினமான இன்று விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடையலாம் என்பது நம்பிக்கை.
    இன்று வசந்த பஞ்சமி தினம். இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீபஞ்சமி என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றது. மானிடர்கள் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானமே அதை அருளும் சரஸ்வதி தேவி அவதரித்த தினமாதலால் ஸ்ரீ பஞ்சமி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வங்காளத்தில் இது சரஸ்வதி பூஜை தினமாகவே கொண்டாடாப்படுகிறது.

    ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் லௌகிக உலசில் அறிவு சார் கலைகளில் முன்னேற்றம் கிடைப்பது மட்டுமல்லாது ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை.

    ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தில் ஐந்தாவது இடம் நுண்ணறிவுக்கான இடமாக குறிக்கப்படுகின்றது. பஞ்சமி திதியன்று செய்யப்படும் இறைவழிபாடுகள், நுண்ணறிவை சரியான பாதையில் செலுத்த வல்லவை.

    இந்தியாவில் தென் கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில் வசந்த பஞ்சமி தினம் புதுவருடத்துவக்கமாகவே கொண்டாடப்படுகிறது.

    இன்றைய தினம் வசந்த பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பூஜைகள் செய்வது மிகக்சிறப்பு. அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்வந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது. எந்த வகையான செயலாக இருந்தாலும் வெற்றிகரமாக முடிய இன்று தொடங்கலாம். ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான்.

    இந்த விரத பூஜை கொஞ்சம் வித்தியாசமானது. பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 முதல் 11 வரை. இது பூர்வாஹன காலம் என்று அழைக்கப்படுகிறது.

    முதலில் தூய்மையான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு கிழக்கு பார்த்து பூஜைமேடையை அமைக்க வேண்டும். கோலங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கவும். பூஜை துவங்கும் முன்பாக தூபங்கள் கமழச்செய்யும். தீபங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஏற்றி வைத்தல் சிறப்பு.

    பரிபூர்ணத்தை குறிக்கும் கலச ஸ்தாபனம் விநாயகர் பூஜை முதலியவற்றை முதலில் செய்ய வேண்டும். அதன் பின் ஸ்ரீவிஷ்ணுவையும் சிவனாரையும் விக்ரகங்கள் அல்லது படங்களில் ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்ய வேண்டும்.

    அம்பினை சத்வ குண ஸ்வரூபிணி...அம்பிகையின் வெண்பட்டு வஸ்திரம், ஸ்படிக மாலை முதலிய சத்வ குணத்தையும் தூய்மையையும் குறிக்கின்றன. ஆகவே தத்வகுண ஸ்வரூபனான திருமாலி பூஜை செய்யப்படுகின்றார். சில புராணங்களின் படி, சரஸ்பதி தேவி, சிவனாரின் சகோதரியாக கருதப்படுகின்றாள். ஆகவே சிவனாரும் பூஜையில் இடம் பெறுகின்றார்.

    சிவ, விஷ்ணு பூஜைகளுக்கு பின் சரஸ்பதி தேவியின் படத்திற்கு பூஜைசெய்ய வேண்டும். வெண்ணிற பட்டு வஸ்திரம் அல்லது மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி மஞ்சள் நிற மலர்கள் அல்லது மல்லிகை மலர்களால் மாலைகள் சூட்டி, அலங்கரித்து, மல்லிகை, தாமரை, செண்பக மலர்களால் அஷ்டோத்திரம் கூறி அர்ச்சனை செய்யவும். அம்பிகையின் பன்னிரு திருநாமங்களை  கூறி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

    பூஜை தினத்தன்று மாலையிலோ அல்லது மறுநாள் காலையிலோ இயன்றதை நிவேதனமாக செய்து புனர் பூஜை செய்து அம்பிகையையும் மற்ற தேவதைகளையும் யதாஸ்தானம் செய்யவும்.

    விருப்பமிருப்பவர்கள் மேற்கூறிய பூஜை முறைகளின் படி பூஜை செய்யலாம். சரஸ்வதி பூஜைக்கென சாரதா நவராத்திரியில் செய்யும் பூஜைமுறைகளையும் பின்பற்றலாம்.

    விஸ்தாரமான  பூஜைகள் செய்ய  இயலாதோரும், ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது பிரதிமையை அலங்கரித்து வைத்து தெரிந்த சரஸ்வதி துதிகளை பாராயணம் செய்து இயன்ற நிவேதனங்கள் படைத்து வழிபாடு செய்யலாம்.

    ஸ்ரீசரஸ்வதி தேவியை போற்றும் ஸ்ரீசரஸ்வதி அந்தாதி துதியை இன்றைய தினம் சொல்லி வழிபாடு செய்யலாம்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
    "ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி
    சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி
    வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி
    வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே
    ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே"

    இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
    ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், வாணியம்மைபாடி ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    சத்தியலோகத்தில் இருக்கும் பிரம்மனுக்கும், சரஸ்வதிக்கு ஒரு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ‘வாக்கு’ என்னும் கல்விக்கு அதிபதி என்ற கர்வம் சரஸ்வதியிடம் காணப்பட்டது. இதனால் பேசும் சக்தியை இழக்கும்படி சரஸ்வதிக்கு பிரம்மன் சாபம் கொடுத்தார்.

    தன் தவறை எண்ணி வருந்திய சரஸ்வதி, பூலோகத்தில் வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் (திருமறைக்காடு) சென்று அங்குள்ள ஈசனை நோக்கி தவமிருந்தாள். பின்னர் அத்தல அம்பாளிடம் யாழ் இசைத்து காண்பிக்க வந்தாள். அப்போது அம்பாளின் குரல், தன் யாழில் இருந்து வெளிப்பட்ட இசையை விட இனிமையாக இருப்பதைக் கண்டு, யாழை மூடிவைத்து விட்டாள். இதனால் தான் வேதாரண்யத்தில் உள்ள இறைவியின் பெயர் ‘யாழைப் பழித்த மென்மொழியாள்’ என்றானது.

    தன்னைப் பிரிந்து சென்ற சரஸ்வதியைத் தேடி பூலோகம் வந்தார் பிரம்மன். தவத்தில் இருந்த சரஸ்வதியை சமாதானம் செய்து, வாணியம்பாடி தலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் வழிபட்டதன் பயனாக சரஸ்வதிக்கு பேசும் சக்தி வந்தது. மேலும் அங்குள்ள ஹயக்ரீவன் முன்னிலையில் யாழை மீண்டும் சரஸ்வதி இசைக்க இறைவனும், இறைவியும் அருள்புரிந்தனர். இதையடுத்து சரஸ்வதி இனிய கீதம் இசைத்தாள்.

    சரஸ்வதிக்கு வாணி என்ற பெயரும் உண்டு. வாணி பாடிய தலம் என்பதால், அது ‘வாணியம்மைபாடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி ‘வாணியம்பாடி’ ஆனது.



    சரஸ்வதி பூஜையன்று இந்த தலத்தில் ஈசனையும், அம்பாளையும், கலைவாணியையும் முறையே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால் கல்வியறிவு ஊற்றெடுக்கும் என்பது நம்பிக்கை. ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், உயர்பதவிகள் கிடைக்கவும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வேலூரில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது வாணியம்பாடி.
    வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.
    வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், ‘சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.

    * வேதாரண்யம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதி தேவியை கண்டு வழிபடலாம்.

    * சிருங்கேரியில் சரஸ்வதி கோவிலில் ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம்.

    * கர்நாடக மாநிலம் பேலூர் என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் நடனமாடும் கோலத்தில் காட்சி தரும் சரஸ்வதியை கண்ணார கண்டு மகிழலாம்.

    * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள்.

    * ஜப்பானியர்கள் ‘பென்டென்’ என்னும் பெயரில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் வரும் இத்தேவி சிதார் இசைக்கிறார்.

    * இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்துப் பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த பூஜைக்கு ‘கலஞ்சன்’ என்று பெயர்.

    * விஜயதசமி நாளில் பாலித்தீவில் ‘தம்பாத் ஸரிம்’ என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
    ×