search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை
    • வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற பிரச்சார இயக்கம் ஜூன் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பிரச்சார இயக்கத்துக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், நம்ம ஊரு சூப்பரு பிரசார முனைப்பு இயக்கத்தினை அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தி, கிராமங்கள் தோறும் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொண்டு, சுத்தம் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்.

    அதன்படி, கிராம ஊராட்சிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றை பொதுமக்களோடு, கிராம துப்புரவு பணியாளர்களை ஒருங்கிணைத்து, அரசு பணியாளர்களும் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.இந்த பணியை அனைத்துதுறை அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியினை (பிளாஸ்டிக் பைகள்) பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    செப்டிக் டேங்க் கழிவுகளை நீரு நிலைகள் மற்றும் பொது இடங்களில் வெளியேற்றும் நிலயைத் தடுக்கும் வகையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் மலக்கசடு மேலாண்மை மையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.இதை மீறும் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் மீது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும், என்றார்.இதில் வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மது போதையில் வாகனங்களை ஓட்டியது தொடர்பாக வழக்குகளில் கடந்த 2 மாதங்களில் ரூ.11 கோடி அபராத தொகையை போலீசார் வசூலித்துள்ளனர்.
    • அழைப்பு மையங்கள் மூலம் கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்து 832 மது போதை வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

    சென்னை:

    மதுபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அபராத தொகையை பலர் செலுத்துவது கிடையாது. எனவே 8 ஆயிரத்து 206 மது போதை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

    இது போன்ற அபராத வழக்குகளில் தீர்வு காண்பதற்காக சென்னை போலீஸ்துறை சார்பில் 10 இடங்களில் அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) இயங்கி வருகின்றன. போக்குவரத்து விதிமீறலில் சிக்கிய வாகன ஓட்டிகள், மதுபோதையில் வாகனத்தை இயக்கி சிக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று இந்த மையங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நடவடிக்கையால் 698 மது போதை வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு ரூ.72 லட்சத்து 30 ஆயிரத்து 500 அபராத தொகையை போலீசார் வசூலித்தனர். இந்த அழைப்பு மையங்கள் மூலம் கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்து 832 மது போதை வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.11 கோடியே 20 லட்சத்து 85 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

    மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் வாகனம் மட்டுமின்றி அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று சென்னை போலீஸ்துறை சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 361 பேரின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றுள்ளனர்.

    • புலிகள் காப்பக பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததும் தெரிய வந்தது.
    • அந்த முதியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது‌.

    சத்தியமங்கலம், ஏப்.30-

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் கரடி, மான், சிறுத்தை யானை, புலிகள் என பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கேர்மாளம் வனச்சரகம் குத்தியாலத்தூர் காப்புக்காட்டு பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து ஒரு முதியவர் வந்தார்.

    இதை தொடர்ந்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கர்நாடகா மாநிலம் அண்டே குருபன்தொட்டி கிராமத்தை சேர்ந்த ராம்ஜி நாயக்கர் ( வயது 50) எனவும்,.

    அவர் பாதுகாக்கப்பட்ட அரசு காப்புக் காட்டு புலிகள் காப்பக பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துனை இயக்குனரின் உத்தரவின்படி அந்த முதியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காப்புக் காடுகளில் அத்துமீறி நுழையக்கூடாது என வனத்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு க்கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், துறைசார்ந்த அலுவலர்க ளுடன் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் சென்ற மாதம் விபத்து களினால் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதிகளில் விபத்து கள் ஏற்படா வண்ணம் மேற் கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்தும், தற்போது விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.

    நாகர்கோவில் மாநகராட்சி யில் நெருக்கடி பகுதிகளான வடசேரி, கார்மல் மேல்நிலைப் பள்ளி எதிர்புறம், புன்னைநகர், பால்பண்ணை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், போக்குவரத்துத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினர் இட ஆய்வு செய்து, பணிகளை முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை பலகைகள், வேகத்தடை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதிவேகமாக இருசக்கர வாகனங்கள் போட்டி ப்போட்டு ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அபராதம் விதிக்க போலீ சாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்திட நெடுஞ் சாலைத்து றைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, முக்கியமான சாலைகளில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால் விபத்துகள் ஏற்படுவதை கருத்தி ல்கொண்டு, அந்தந்த பகுதி நகராட்சி ஆணை யாளர்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலை யோரங்களி லுள்ள மரங்களில் ஒளிரும் வண்ண பூச்சுகள் மேற்கொள்ளுமாறும், சாலையோரங்களி லுள்ள மரங்களின் கிளைகள், மின்விளக்கு கள் மற்றும் மின்தடத்தில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அப்புறப் படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு சென்ற மாதம் 8141 நபர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிவதோடு, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் போட்டு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை –நிலமெடுப்பு) ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுரா மலிங்கம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சுப்பையா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது.
    • உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது.உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அறிவித்த மின் கட்டண உயர்வில் இருந்து 50 சதவீதத்தை அரசு குறைத்தது. மேலும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக வழங்கவும் அறிவிப்பு வெளியானது.

    போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதை தவணை முறையில் செலுத்த அவகாசம் வேண்டும் என விசைத்தறியாளர்கள், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர்.

    இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''விசைத்தறியாளர் கோரிக்கையை ஏற்று தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

    தற்போது பயன்பாட்டில் உள்ளதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் என்ற முறையில் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். விசைத்தறியாளர் நலனை கருத்தில் கொண்டு அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மீண்டும் மின் துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    • க.க.சாவடி போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 8 பேர் கேரள மாநிலத்தில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டியது தெரியவந்தது.

    கோவை,

    கேரளாவில் இருந்து சமீப காலமாக கோழிக்கழிவு, இறைச்சி கழிவுகளை சிலர் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்டம் பிச்சனூர் மற்றும் மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.

    இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து எழுந்த புகாரை தொடர்ந்து க.க.சாவடி போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளாவில் இருந்து மினி ஆட்டோவில் கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த மர்மநபர்கள் அதை சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட நவக்கரையில் கொட்டினர்.

    இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் கழிவுகளை கொட்ட வந்தவர்களை கையும், களவுமாக பிடித்ததோடு, க.க.சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் திருச்சசூர் மாவட்டம் சோளக்கரையை சேர்ந்த முரளி கிருஷ்ணன்(38), திருவள்ளாமலை அக்கபரம்பில்லை சேர்ந்த லியோ வர்கீஸ்(34) ஆகியோர் தலைமையில் 8 பேர் கேரள மாநிலத்தில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டியது தெரியவந்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் கழிவுகளை ஏற்றி வந்த மினி வாகனத்தை மாவுத்தம்பதி ஊராட்சியில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கோழிகழிவுகளை ஊராட்சி பகுதியில் கொட்டியதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது மாவுத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.

    அதுமட்டுமின்றி இனி மேல் கேரளாவில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து ஊராட்சியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் கோமதி செந்தில்குமார் எச்சரித்தார்.

    • மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிப்போர் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.
    • அரசு மற்றும் தனியார் பஸ்களில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சிவகுருநாதன் திடீர் சோதனை நடத்தினார்.

    கோவை,

    கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஊட்டிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் நகருக்குள் ஏற்படும் நெரிசலை குறைக்கும் நோக்கில் சாய்பாபா கோவில் அருகே கடந்த 2010-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றால் பயண தூரம் குறையும் என்பதால், புதிய ஸ்டேஜ் உருவாக்கி அதற்கேற்ப கட்டணத்தை குறைக்க வேண்டும் என முந்தைய கலெக்டர்கள் உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. தடை ஏதும் விதிக்கப்பட வில்லை. இருப்பினும் பஸ்களில் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படுவதை ேபாக்குவரத்து துறையினர் உறுதி செய்யாமல் இருந்து வந்தனர். இதனால் தினசரி மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிப்போர் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.

    இந்தநிலையில் காந்திபுரம்- மேட்டுப்பாயைம் வழி தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சிவகுருநாதன் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2018-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி கட்டணம் குறைக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறதா என சோதனை செய்ேதாம்.

    அப்போது புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பயணிக்க கட்டணமாக ரூ.20-க்கு பதில் ரூ.22 வசூலித்த 2 அரசு பஸ்கள், காந்திபுரம் - மேட்டுப்பாளையம் இடையே ரூ.23-க்கு பதில் ரூ.25 கட்டணம் வசூலித்த 2 தனியார், 4 அரசு பஸ்கள், ரூ.23-க்கு பதில் ரூ.30 வசூலித்த ஒரு அரசு பஸ் என மொத்தம் 9 பஸ்களுக்கு அபராதம் விதிக்க தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ்களுக்கு அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களுக்கு தணிக்கை அறிக்கை அனுப்பப்படும். அவர்கள் அபராதம் விதிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமணி முத்தாற்றில் சாயப்பட்டறை கழிவு நீர், தொழிற்சாலை கழிவுகள், கலப்பதால் நுரை தள்ளிய நிலையில் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் செல்கிறது.
    • திருமணி முத்தாற்றில் கழிவு நீரை திறந்துவிடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்தும் வருகின்றனர்.

    சேலம், ஏப்.23-

    சேலம் திருமணி முத்தாற்றில் சாயப்பட்டறை கழிவு நீர், தொழிற்சாலை கழிவுகள், கலப்பதால் நுரை தள்ளிய நிலையில் கொண்ட லாம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் செல்கிறது. இந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும், நிலத்தடி நீர் மாசு அடைந்து வருவதா கவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து, திருமணி முத்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகை யில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். திருமணி முத்தாற்றில் கழிவு

    நீரை திறந்துவிடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்தும் வருகின்றனர். இதைத்தவிர மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாயப்பட்டறை கழிவு நீரை வெளியேற்றும் சாயப் பட்டறையை மூடி யும், மின் இணைப்பு துண்டிக்கப் பட்டும் வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் விதிமுறையை மீறி செயல்படும் சாயப்பட்ட றைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல், சாயப்பட்டறையின் கழிவு நீரை வெளியேற்றிய 30க்கும் மேற்பட்ட சாயப்பட்ட றைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    அனுமதி பெறாத சாயப்பட்டறைக்கு வாட கைக்கு இடம் அளித்தால், அந்த உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும். அந்த உரிமையாளரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும் என்றனர்.

    • பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது.
    • ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற செய்யும் காவல் துறையினரே, அவற்றை மீறலாமா? சிசிடிவி கேமரா மற்றும் ஆன்லைன் சல்லான் முறை போன்ற வசதிகளால், விதிமீறல் சம்பவங்கள் எளிதில் வெளிச்சத்திற்கு வந்துவிடுகின்றன. பல சம்பவங்களில் போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை ஆதாரமாக கொண்டு விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

    இது போன்ற சம்பவங்களில் பொது மக்கள் மட்டுமின்றி போலீசாரும் சமயங்களில் சிக்கி இருக்கின்றனர். அந்த வரிசையில், ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் அரங்கேறி இருக்கிறது.

     

    சம்பவம் பற்றிய வீடியோ டுவிட்டர் தளத்தில் மஞ்சுள் என்பவர் பதிவிட்டுள்ளார். வீடியோவில், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் பைக்கில் இரண்டு போலீசார் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் போலீசார் ஹெல்மட் அணியாமல் செல்கின்றனர். காவல் துறை சீருடையில் பயணம் செய்வதோடு, விதிமீறலில் ஈடுபட்ட போலீசாரிடம், மற்றொரு வாகனத்தில் வந்த பெண் ஒருவர் சட்டம் உங்களுக்கு பொருந்தாதா என்று கேள்வி எழுப்புகிறார்.

    இதனை பெண் ஓட்டும் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை பார்த்த போலீசார், வீடியோ பதிவாவதை தெரிந்து கொண்டு பெண்ணிடம் எதுவும் பேசாமல், வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றனர். போலீசாரை துரத்தி சென்ற பெண் அவர்களை சிக்னல் ஒன்றில் வைத்து பிடித்தார். எனினும், போலீசார் அந்த பெண்ணிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது. இதனை பார்த்த காவல் துறை உயர் அதிகாரிகள் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதித்தனர். போலீசார் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே பலமுறை எடுக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைகவசம் அணிவது கட்டாயம் ஆகும். தலைகவம் அணிவதால் விபத்தின் போது வாகனம் ஒட்டுவோரின் உயிரை காக்கும்.

    • புளியங்குடி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சுப்ரமணியன் காட்டு பன்றியை வேட்டையாடியது விசாரணையில் தெரியவந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனவர் மகேந்திரன், குமார் தலைமையில் வனத்துறையினர் முருகேசன், அஜித் ராஜ், மணிகண்டன், தாசன் ஆசீர்வாதம், மாரியப்பன், திருமலை, சன்னாசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில், அவர் புளியங்குடி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பதும், அவர் கொய்யாப்பழத்தில் வெடி மருந்து வைத்து காட்டு பன்றியை கொன்று வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து வேட்டையில் ஈடுபட்ட சுப்ரமணியனுக்கு ரூ.40 ஆயிரம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.  

    • ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
    • ‘லக்கேஜ்’ எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.

    கடந்த 2022 ஏப்ரல் முதல், 2023 மார்ச் வரையான நிதியாண்டில் டிக்கெட் சோதனையின் போது, 15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக டிக்கெட் இல்லாமல் பயணித்த 2 லட்சத்து 821 பேரிடம், 14 கோடியே 10 லட்சத்து 7,028 ரூபாய், முறையற்ற பயணம் செய்தவர்களிடம் 1.43 கோடி ரூபாய், கூடுதல் 'லக்கேஜ்' எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.2021-22ம் நிதியாண்டில், 11.27 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதை விட, 4.30 கோடி ரூபாய் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    • டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரைகள், இருமல் மருந்துகள், வலி நிவாரண மாத்திரைகள் வழங்கப்ப டுகிறதா?
    • என அவ்வப்போது மருந்து கடைகளில் மருத்துவ கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரைகள், இருமல் மருந்துகள், வலி நிவாரண மாத்திரைகள் வழங்கப்ப டுகிறதா? என அவ்வப்போது மருந்து கடைகளில் மருத்துவ கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    அதன்படி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்து கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு மருந்து கடையில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கியது, பில் போடாமல் மருந்துகள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மருந்து கடை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதில், விதிமுறை மீறி செயல்பட்ட மருந்து கடை உரிமையாளருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ×