search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 129867"

    • 6 ஆயிரத்து 598 வாக்காளர்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். இங்கு பதிவான வாக்குகள் சேலம் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    • நாளை (12-ந் தேதி) காலை 8 மணி முதல் சேலம் ஒன்றிய அலுவலகம், காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம், தலைவாசல் ஒன்றிய அலுவலகம் மற்றும் மேச்சேரி ஒன்றிய அலுவலகத்திலும் இந்த வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    6 பதவிகள்

    மீதம் உள்ள சேலம் ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர், கிராம ஊராட்சிகளில் காடையாம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி 7-வது வார்டு, தலைவாசல் ஒன்றியம் தேவியாக்குறிச்சி 2-வது வார்டு, கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டு, மேச்சேரி ஒன்றியம் கூணான்டியூர் 7-வது வார்டு, பொட்டனேரி 6-வது வார்டு ஆகிய–வற்றிற்கு நேற்று முன்தினம் வாக்கப்பதிவு நடந்தது.

    சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியில் உள்ளார். அ.தி.மு.க.ைவ சேர்ந்த வெங்கடேஷ் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினையால் இரட்டை இலை சின்னம்

    கிடைக்காதால் சுயேட்சை–யாக போட்டியிட்டு உள்ளார். இங்கு 6 ஆயிரத்து 598 வாக்காளர்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். இங்கு பதிவான வாக்குகள் சேலம் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    நடுப்பட்டி ஊராட்சி 7-வது வார்டில் 346வ ாக்குகளும், தேவியாக்குறிச்சி 2-வது வார்டில் 202 வாக்குகளும், கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டில் 198 வாக்குகளும், கூணான்டியூர் 7-வது வார்டில் 370 வாக்குகளும் , பொட்ட னேரி 6-வது வார்டில் 275 வாக்குகளும் பதிவானது. இந்த வாக்கு சீட்டுகள் அந்தந்த ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது .

    நாளை வாக்கு எண்ணிக்கை

    இதையடுத்து நாளை (12-ந் தேதி) காலை 8 மணி முதல் சேலம் ஒன்றிய அலுவலகம், காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம், தலைவாசல் ஒன்றிய அலுவலகம் மற்றும் மேச்சேரி ஒன்றிய அலுவலகத்திலும் இந்த வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள்ஈடுபட்டு உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரத்தில் முடிவு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • 4 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
    • பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும்.

    மதுரை

    மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவுவின்படி இன்று தேர்தல் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியற்கு உட்படுத்த துவரிமான் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், கொட்டம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலவளவு ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்ல மரம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது.

    கொரோனா மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகள் நுண்பார்வையாளர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் சுமதி இறந்ததால் அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இது பொது பெண்கள் வார்டாகும். இங்கு 4 பெண்கள் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் மொத்தம் 452 வாக்குகள் உள்ளன. இதில் 253பேர் பெண் வாக்காளர்கள், 199 பேர் ஆண் வாக்காளர்கள்.

    இந்த வாடுக்கான தேர்தல் செல்லம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குசாவடியில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இங்கு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    மதுைர மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லமரம் பஞ்சாயத்தில் காலியாக உள்ள உறுப்பினர் தேர்தல் இன்று நடந்தது. முத்துலிங்காபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. 146 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள்.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வுடன் வார்டு மக்கள் திரளா னோர் வாக்களித்தனர்.

    திருப்பங்குன்றம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட துவரிமான் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் துவரிமான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று நடைபெற்றது.

    இங்கு உறுப்பினர் பதவிக்கு தெய்வம், பால்பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் மொத்தம் 510 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 255 பேர் பெண் வாக்காளர்கள். இதே எண்ணிக்கையில் ஆண் வாக்காளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு காமிராவில் பதிவு செய்யப்பட்டது.

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவளவு ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மகேஸ்வரி, சுந்தரி ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள் 494. இந்த தேர்தலை முன்னிட்டு மேலவளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தலை கொட்டாம்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    • குமரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
    • பலத்த போலீஸ் பாதுகாப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று நடந்தது.

    ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காற்றாடி தட்டு நடுநிலைப்பள்ளி , ஆத்திகாட்டுவிளை தொடக்கப்பள்ளியில் உள்ள 4 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடந்தது. காலையிலேயே பொதுமக்கள் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.

    வாக்குப்பதிவையடுத்து வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜாக்கமங்கலம் யூனியன் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளது. அங்குள்ள அறையில் வாக்கு ப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்படுகிறது.

    குருந்த ன்கோடு ஊராட்சி ஒன்றியம் 7-வது வார்டுக்கான தேர்தல் கக்கோட்டு தலை நடுநிலை ப்பள்ளி, தலக்குளம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பொதுமக்கள் காலையிலேயே வாக்கு பதிவு மையங்களுக்கு வந்தனர்.அவர்களுக்கு கொரோனா தடுப்பு எச்சரிக்கை நடவடிக்கையாக வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு கை கழுவும் திரவம் மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டடன.

    தொடர்ந்து வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வாக்கா ளர்கள் அடையாள அட்டை களை காண்பித்த பிறகு வாக்கு பதிவு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.வாக்குகளை பதிவு செய்தவர்களுக்கு கையில் மை வைக்கப்பட்டது. இங்கு பதிவாகும் வாக்குகள் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மருதூர் குறிச்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு பிலாவிளை அரசு நடுநிலைப் பள்ளியிலும், கண்ணனூர் கிராம ஊராட்சி 4-வது வார்டுக்கான வாக்குப்பதிவு கண்ணனூர் அரசு நடுநிலை பள்ளியிலும், காட்டாதுறை கிராம ஊராட்சி 5-வது வார்டுக்கான வாக்குப்பதிவு காட்டாதுறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தது.

    காலை 7 மணி முதல் வாக்குப்பதிவுகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். வாக்கு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 7 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 11 மணி நிலவரப்படி 24.8 சதவீத வாக்குகள் பதிவானது. 1 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    கிராம ஊராட்சிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த ஊராட்சிகளில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட உள்ள மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் வருகிற 12-ந்தேதி காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    • 2022-ஆம் ஆண்டு நகரப்புற அமைப்புகளுக்கான சாதாரண உள்ளாட்சி தேர்தல் நடை பெற்ற முடிந்துள்ள நிலையில் அய்யம்பேட்டை பேரூராட்சி வார்டு எண் 9 -க்கான தற்செயல் தேர்தல் வருகின்ற 9.7.2022 அன்று நடைறவுள்ளது.
    • அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடத்த–ப்பட்டது. வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் 3 எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகளும் 3 எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு கருவிகளும் சீரற்ற மயமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அய்யம்பேட்டை பேரூராட்சி வார்டு எண் 9-ல் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சீரற்ற மயமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு நகரப்புற அமைப்புகளுக்கான சாதாரண உள்ளாட்சி தேர்தல் நடை பெற்ற முடிந்துள்ள நிலையில் அய்யம்பேட்டை பேரூராட்சி வார்டு எண் 9 -க்கான தற்செயல் தேர்தல் வருகின்ற 9.7.2022 அன்று நடைறவுள்ளது.

    இந்த தேர்தல் நடைபெற உள்ள 2 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு பயன்படு–த்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சீரற்ற மயமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடத்த–ப்பட்டது. வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் 3 எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகளும் 3 எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு கருவிகளும் சீரற்ற மயமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2022-23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் மன்ற தேர்தல் பள்ளியில் நடத்தப்பட்டது.
    • மாணவர்கள் அனைவரும் வரிசையில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.

    திருப்பூர் :

    பல்லடம் அருகேயுள்ள செஞ்சேரிப்புத்தூர் அரசு துவக்க பள்ளியில்60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்படிக்கின்றனர். இப்பள்ளியில், ஆண்டுதோறும் ஓட்டுப்பதிவு முறைப்படி மாணவர் மன்ற தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து தலைமை ஆசிரியர் கணேசன் கூறுகையில், மாணவர்களுக்கு கல்வியறிவுடன் பொது அறிவும் அவசியம். விளையாட்டு போட்டிகள் மட்டுமன்றி, தூய்மை பணி, மரம் நடுதல், வீட்டு நூலகம், நீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறோம்.ஆண்டுதோறும் மாணவர் மன்றம் பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது. இதன் நிர்வாகிகள் ஓட்டெடுப்பு முறையில்தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இதன்படி 2022-23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் மன்ற தேர்தல் பள்ளியில் நடத்தப்பட்டது. 5-ம் வகுப்பு மாணவன் சபரீஸ் 33 ஓட்டுகள் பெற்று முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.இதேபோல், துணை முதல்வராக ராஜேஷ், கல்வித்துறை அமைச்சராக தீக்‌ஷிதா, பல்வேறு துறை அமைச்சர்களாக தமிழ்செல்வி, கிரிதரன், சித்தேஷ், பிரவீன், அஜய், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட துறைகளுக்கு உண்டான பணிகளை மேற்கொள்வர். அமைச்சரவை போன்று ஏற்படுத்தப்படும் இந்த கட்டமைப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவர்களின் அரசியல் அறிவும் வளரும் என்றார்.முன்னதாக மாணவர் மன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஓட்டு பெட்டியில், மாணவர்கள் அனைவரும் வரிசையில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவிப்பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
    • தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.04.2022வரை காலியாக உள்ள திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கழுமலம் மற்றும் வடமருதூர், உளுந்தூர் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நெய்வனை ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் அ.பாண்டலம் ஊராட்சி மன்ற வார்டு எண்-6, நெடுமானூர் ஊராட்சி மன்ற வார்டு எண்-7, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தின் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற வார்டு எண்-3, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் எல்லைகிராமம் ஊராட்சி மன்ற வார்டு எண்-1 மற்றும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் நிறைமதி ஊராட்சி மன்ற வார்டு எண்-4 ஆகிய 5 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் காலிப்பதவி யிடங்களுக்கான தற்செயல் தேர்தல்கள் நடத்திடும் பொருட்டு தமிழ்நாடுமாநில தேர்தல் ஆணையத்தால் திட்ட அறிவிக்கை வெளி யிடப்பட்டுள்ளது.

    அதன்படி வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் வருகின்ற 27 - ந் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனு பரிசீலனை 28- ந் தேதியும், வேட்பு மனுக்கள் திரும்பப் பெறும் நாள் 30- ந் தேதி ஆகும். அடுத்த மாதம் ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 12- ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    எனவே மேற்கண்ட பகுதியில் வருகின்ற ஜூலை 14- ந் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட 8 கிராம ஊராட்சிகள் முழுவதும் 18.06.2022 முதல் 14.07.2022 வரை நடைமுறையில் இருக்கும், மேற்படி பகுதிகளில் பொது இடங்களில் வேட்பாளர்கள் பெயரிலோ, கட்சிகளின் பெயரிலோ மற்றும் அதன் தொடர்பான அனைத்து விதமான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்வித விளம்பரத்தட்டிகளோ விளம்பரப் பட்டிகைகளோ சுவரொட்டிகளோ, விளம்பர படங்களோ இருப்பின் அவற்றை நீக்கவும், அரசுக் கட்டிடம், தனியார் கட்டிட சுவர்களில் வேட்பாளர்கள் பெயரோ, கட்சிகளின் பெயரோ அல்லது அதன் தொடர்பான வாசகங்கள் வண்ணப்பூச்சுகளால் எழுதப்பட்டிருந்தால், அவைகள் அனைத்தையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுவிதமான வண்ணப்பூச்சு களால் மறைத்து உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.மேற்படி தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேர்தல் அதிகாரியாக (பி.ஆர்.ஓ) எம்.கே.முஸ்தபா தேர்தலை நடத்திக் கொடுத்தார்.
    • சிறப்பு அழைப்பாளராக மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நவமணி கரிச்சியப்பன் கலந்து கொண்டார்.

    மங்கலம் :

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டார அமைப்பு தேர்தல் மங்கலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக (பி.ஆர்.ஓ) எம்.கே.முஸ்தபா கலந்து கொண்டு தேர்தலை நடத்திக் கொடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் (பி.சி.சி) பதவிக்கு ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் வே.முத்துராமலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார்.மேலும் பல்வேறு பொறுப்புகளுக்கு மங்கலத்தை சேர்ந்த சபாதுரை ,திருமலாகண்ணன், எபிசியண்ட் மணி, நடராஜ் ,அப்துல்அஜீஸ்,யாசுதீன்,செந்தில்,வேலுச்சாமி, அலாவுதீன், செந்தில் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் விருப்ப மனு கொடுத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நவமணி கரிச்சியப்பன் கலந்து கொண்டார்.

    • காங்கிரஸ் கட்சியில் உள்ள சுமார் 300 பதவிகளுக்கான தேர்தல் என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கினர்.
    • வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், அவிநாசி, காங்கயம், அன்னூர், சென்னிமலை ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் நபர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி பார்க் சாலையில் உள்ள ஐஎன்டியுசி. அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர்.கோபி தலைமையில் நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சியில் உள்ள சுமார் 300 பதவிகளுக்கான தேர்தல் என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும்,பாலக்காடு முன்னாள் சேர்மனுமான.பி.வி.ராஜேஷ்,வட்டார தேர்தல் அதிகாரிகள் சுப்பிரமணியம்,தீபக் ஆகியோரிடம் தொண்டர்கள் வழங்கினர்.

    மேலும் இதே போன்று வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம்,அவிநாசி,காங்கயம்,அன்னூர்,சென்னிமலை ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர்.

    • இந்த ஊராட்சியில் தலைவராக பதவி வகித்த நடராஜன் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்ததை அடுத்து, தலைவர் பதவி காலியாக உள்ளது.
    • வடக்குபட்டம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் நடப்பதற்கு முன்பு வரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகியவற்றை செய்து கொள்ளலாம்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாலுகா வடக்குபட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் முன்னேற்பாடு பணி நடைபெற்றது. அதை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.இந்த ஊராட்சியில் தலைவராக பதவி வகித்த நடராஜன் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்ததை அடுத்து, தலைவர் பதவி காலியாக உள்ளது.

    அதை தற்செயல் தேர்தல் நடத்தும் முகமாக மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக, வடக்கு பட்டம் ஊராட்சியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன் ,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் வடக்கு பட்டம் ஊராட்சியின் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.இந்த ஊராட்சியில் மொத்தம் 6 வார்டுகள், 378 ஆண் வாக்காளர்கள் 416 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 794 வாக்காளர்கள் உள்ளனர். வடக்குபட்டம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் நடப்பதற்கு முன்பு வரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகியவற்றை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நகர தலைவர் நந்தகுமார் வரவேற்றார்.

    வேதாரண்யம் :

    வேதாரண்யத்தில் பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நகர தலைவர் நந்தகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரகுமார், வைரமுத்து, பாலச்சந்திரன் வடக்கு ஒன்றிய தலைவர் இளவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர் .

    மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் அறிமுக செய்யபட்டனர்.

    பின்பு தேர்தலுக்கு வார்டு கமிட்டி அமைப்பது புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது அனைத்து ஊராட்சிகளிலும் கொடியேற்றுவது என தீர்மானிக்கபட்டது.

    கூட்ட முடிவில் வேதை தெற்கு ஒன்றிய தலைவர் கரு.நாகராஜன் நன்றியுரை கூறினார்.

    • குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • தேர்தலுக்கான இடம், நாள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. குமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 9 ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு வினியோகம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஒழு கினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    தலைமை கழக பிரதிநிதி வக்கீல் அருள்தாசன் விண்ணப்ப படிவங்களை வழங்குகிறார். நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினர் காலை 10 மணிக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு, அன்று மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவங்களை உரிய கட்டணத்துடன் மாவட்ட அலுவலகத்தில் தலைமை கழக பிரதிநிதியிடன் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    வேட்பு மனுவை பரி சீலனை செய்து போட்டி யிருக்கும் ஒன்றிய கழகத் தேர்தலை நாளை (செவ் வாய்க்கிழமை) முதல் 9-ந் தேதிக்குள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயலாளர் தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கான இடம், நாள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று வேல்முருகன் கூறியுள்ளார். #Velmurugan

    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம் இண்டூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகனிடம் யாருடன் கூட்டணி அமைப்பீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக உள்ள நான், 150க்கும் மேற்பட்ட தமிழக அமைப்புகள், தமிழர் இயக்கங்கள், பெரியார் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன். எங்களுக்கு என்று குறைந்தபட்ச செயல்திட்டங்கள் உண்டு. எங்கள் திட்டங்களையும், கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதா? அல்லது ஆதரவு கொடுப்பதா என்பது குறித்து பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 60 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு தமிழனுக்கு கூட பணி வாய்ப்பு இல்லை.அனைவரும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள். மத்திய அரசு பணி தமிழர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

    யூ.பி.எஸ்.சி. தேர்வில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுகிறது. கேள்வித்தாள்களை தனியாரிடம் விடுவதிலும் முறைகேடு நடைபெறுகிறது. எனவே தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள அலுவலகங்களில் 100 சதவீத பணியை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கவேண்டும். தமிழக அரசு ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டம் இயற்றி உள்ளதைப் போல வேலை உறுதி அளிப்பு சட்டம் இயற்ற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28-ந் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்ல உள்ளோம்.

    ராஜீவ்காந்தி வழக்கில் 7 பேரின் விடுதலையில் கவர்னர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி நடந்துகொள்கிறார். தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் தொடர்ந்து போராடுவோம். மத்திய அரசின் பட்ஜெட் மக்கள் நலனில் அக்கறை இல்லாத பட்ஜெட். எனவே தமிழக அரசின் பட்ஜெட் மக்கள் நலனை கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும்.

    தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை திட்டம் தேர்தல் அறிவிக்கும் போது மட்டும் அறிவிப்பு வரும். அதற்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடிக்கின்றனர். இதைச் செய்யாமல் கோரிக்கையை நிறைவேற்றினால் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார். #Velmurugan

    ×