search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோல்டர்"

    ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பிராத்வைட் நியமிக்கப்பட்டுள்ளார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்று, ஐசிசி அந்த அணியின் கேப்டன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்துள்ளது.

    இதனால் செயின்ட் லூசியாவில் வரும் சனிக்கிழமை தொடங்கும் 3-வது போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக கிரைக் பிராத்வைட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஆண்டிகுவா டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக ஹோல்டருக்கு ஐசிசி தடைவிதித்தது. இதற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #WIvENG
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் முதல் 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் மற்றும் கடைசி டெஸ்டில் விளையாட ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டிகுவாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மெதுவாக பந்து வீசியதால் அவரை சஸ்பெண்டு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐசிசி-யின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வார்னே டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    இந்த டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிந்துவிட்டது. ஹோல்டரை சஸ்பெண்டு செய்து இருப்பது முட்டாள்தனமான முடிவாகும். ஐசிசி-யின் இந்த முடிவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஐசிசி-யின் இந்த முடிவு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    வாகன் கூறும்போது, ‘‘246 ஓவர்களில் டெஸ்ட் போட்டி முடிந்து விட்டது. அதாவது 2.6 நாளில் முடிந்து உள்ளது. மெதுவாக பந்து வீச்சு என்ற காரணத்துக்காக ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது” என்றார்.

    இதேபோல் சமூக வலைத்தளங்களிலும் ஹோல்டர் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் மெதுவாக பந்துவீசியதால் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கடைசி டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #WIvENG #JasonHolder #ICC
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்டில் வென்று வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் 381 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.



    இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2-வது டெஸ்டில் மெதுவாக பந்துவீசியதால் ஐ.சி.சி. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதனால் பிராத்வெயிட் அந்த டெஸ்டுக்கு கேப்டனாக இருப்பார். ஹோல்டர இடத்தில் கீமோ பவுல் சேர்க்கப்பட்டுள்ளார். #WIvENG #JasonHolder #ICC
    பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 77 ரன்னில் சுருண்டது. #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. 2-ம் நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹெட்மையர் 81 ரன் எடுத்தார்.


    ஜோசப்

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 30.2 ஓவரில் 77 ரன்னுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக ஜென்னிங்ஸ் 17 ரன் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் ரோச் 11 ஓவர் வீசி 17 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், ஜோசப் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


    ஹோல்டர்

    212 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி இதுவரை 339 ரன் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 4 விக்கெட் உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வலுவான நிலையில் உள்ளது. இன்று 3-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. மேலும் ஒரு பெரிய வெற்றிக்கு இந்தியா ஆயத்தமாகிறது. #INDvWI
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை (12-ந்தேதி) தொடங்குகிறது. முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வென்று இந்தியா தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி பலவீனமான வெஸ்ட் இண்டீஸை எளிதில் மீண்டும் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டை ‘டிரா’ செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றி விடும்.



    2013-ம் ஆண்டில் இருந்து இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை. அந்த சாதனை வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவும் நீடிக்கும். கடந்த டெஸ்டில் கேப்டன் விராட் கோலி, புதுமுக வீரர் பிரித்வி ஷா, ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து முத்திரை பதித்தனர். இதேபோல் புஜாரா, ரி‌ஷப் பந்த் ஆகியோரும் சாதித்தனர். பந்து வீச்சில் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது‌ ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இதற்கிடையே இந்த டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆடா விட்டால் ரகானே கேப்டனாக பணியாற்றுவார். கோலி இடத்தில் மயாங்க் அகர்வால் இடம் பெறலாம்.  ராஜ்கோட் டெஸ்டை போலவே இந்த போட்டி யிலும் இந்தியா தனது ஆதிக் கத்தை செலுத்தும்.



    வெஸ்ட்இண்டீஸ் அணியை பொறுத்தவரை தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. அனுபவமற்ற அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடும் சவாலானது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் டெஸ்டை வென்றது கிடையாது.

    காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ஹோல்டர் இந்த டெஸ்டில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் முன்னேற்றம் அடைவது அவசியம். முதல் டெஸ்டில் ‘பாலோ-ஆன்’ ஆகி தோற்ற அந்த அணி இந்த டெஸ்டில் கடுமையாக போராடுவார்கள்.



    இரு அணிகளும் நாளை மோதுவது 96-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 95 போட்டியில் இந்தியா 19-ல், வெஸ்ட் இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    ஜமைக்காவில் நடைபெற்ற 2-வது டெஸ்டிலும் வங்காள தேசத்தை 166 ரன்னில் வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ். #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த 12-ந்தேதி (வியாழக்கிழமை) ஜமைக்கா கிங்ஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய கிரேக் பிராத்வைட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 110 ரன்கள் சேர்த்தார். ஹேட்மையர் 86 ரன் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காள தேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தமிம் இக்பால் (47), ஷாகிப் அல் ஹசன் (32) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் வங்காள தேசம் 149 ரன்னில் சுருண்டது.

    205 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷாகிப் அல் ஹசனின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாம் 129 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ். ஷாகிப் அல் ஹசன் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    முதல் இன்னிங்சில் 205 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் 129 ரன்னுடன் 334 ரன்கள் முன்னிலைப் பெற்றது வெஸ்ட் இண்டீஸ். இதனால் வங்காள தேசத்திற்கு 335 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்.



    335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேச அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் தமிம் இக்பால் டக்அவுட்டில் வெளியேறினார். லித்தோன் தாஸ் 33 ரன்களும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 54 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்களும் அடிக்க 168 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் 166 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றிருந்ததால் 2-0 என தொடரைக் கைப்பற்றியது. முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஹோல்டர், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    ×