search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130456"

    தஞ்சை அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆக்கிரமிப்பு செய்ததாக 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததை கண்டித்து வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு வெளியே தரைக்கடை வியாபாரிகள் பூஜை பொருள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் 2 கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அரண்மனை தேவஸ்தானம் சார்பில் கோர்ட்டில் இருந்து அதிகாரிகள் வந்து கடைகளுக்கு சீல்வைத்து விட்டு சென்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள சுமார் 120 தரைக்கடைகளும் அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை இந்த பகுதியில் உள்ள 120 தரைக்கடை வியாபாரிகளும், அதிகாரிகளை கண்டித்து கடைகளை அடைத்து விட்டு அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

    இவர்களது போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சாலையில் இருபுறம் உள்ள தரைக்கடைகள் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிதில் பூஜை பொருட்களை வாங்கி செல்வதற்கு இங்குள்ள தரைக்கடைகள் தான் உள்ளது.

    இதை அப்புறப் படுத்தினால் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் வாழ்க்கை பாதிக்கும் நிலைமை ஏற்படும். மேலும் தற்போது இந்த கடைகளை அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதனை காரணம் காட்டி கோவில் பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது அராஜகமான செயலாகும். இதனை முதல்வர் பார்வைக்கு எடுத்து செல்ல வேண்டும். அதிகாரிகள் தொடர்ந்து இங்குள்ள கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக தீவிரமடையும்.

    சில்லரை வணிகத்தை ஒழித்துவிட்டு ஆன்-லைன் வணிகத்தை மக்கள் இடத்தில் கொண்டு வருவதற்கே இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    லாரிகள் வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் புதுவை மாநில லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர். இன்று 6-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தால் புதுவையில் இயங்கும் 3 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. இவை அனைத்தும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரிலும், கோரிமேடு எல்லைப்பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    புதுவைக்கு பெங்களூர், வேலூர், மேட்டுப்பாளையம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிகளவில் வரும். லாரி வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வருகின்றனர். இதனால் புதுவையில் காய்கறிகளுக்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஒரு சில காய்கறிகளுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மினிவேன் மூலம் காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், மளிகை பொருட்கள் ஆகியவையும் தடையின்றி கொண்டுவரப்படுகிறது. #tamilnews
    கடை வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தாம்பரம்:

    தாம்பரத்தில் உள்ள துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு கடைக்கும் ஆண்டுக்கு ரூ.3500 வரியாக நகராட்சி வசூலித்து வந்தது. இந்த நிலையில் வரி கட்டணத்தை ரூ.46.300 ஆக நகராட்சி உயர்த்தியது. இதை கட்டாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடை வரி பல மடங்கு உயத்தப்பட்டதால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது விக்கிரமராஜா கூறியதாவது, தாம்பரம் துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வரியை 110 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இந்த வரி உயர்வை குறைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம், முதல்வரை சந்தித்தும் முறையிடுவோம் என்றார்.

    வரி உயர்வை குறைக்க கோரி கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய வியாபாரிகள் பின்னர் கலைந்து சென்றனர்.
    வத்தலக்குண்டு பகுதியில் ரசாயனக்கல் பீதியால் மாங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இவை அனைத்தும் செழித்து வளர்ந்து நல்ல விளைச்சல் கண்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மாங்காய்களை மதுரை சாலையில் உள்ள கமிசன் கடையில் விற்பனை செய்வது வழக்கம்.

    பொதுவாக மாங்காய்கள் பழுத்து மாம்பழங்களாக ஒருவாரம் காத்திருக்க வேண்டும். ஆனால் விரைவில் பழுக்க வைக்க சில வியாபாரிகள் ரசாயனகல் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் மாங்காய்கள் ரசாயனகல்லில் உள்ள வீரியத்தால் ஒரேநாளில் பழுத்து விடுகிறது. ஆனால் இதனை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வயிற்றுவலி உள்ளிட்ட உடல்உபாதைகள் ஏற்படுகிறது.

    மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே மாம்பழம் சாப்பிடுவதை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர்.

    இதனால் 10 முதல் 15 மாம்பழ பெட்டிகள் கொள்முதல் செய்த வியாபாரிகள் ஒரு பெட்டி வாங்குகின்றனர். மேலும் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்பட்ட மாம்பழங்கள் தற்போது ரூ.10க்கு விற்பனையாகிறது. எனவே விவசாயிகள் மாம்பழங்களை என்ன செய்வது என தெரியாமல் சாலையோரங்களில் வீசிச்செல்கின்றனர்.

    மழை இல்லை என்றால் வறட்சியால் பாதிப்பு. ரசாயனகல் பீதியால் நல்ல விளைச்சல் இருந்தபோதும் போதிய அளவு விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    கடத்தூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயத்தை 2 ரூபாய், 5 ரூபாய் கமி‌ஷனுக்கு வாங்கி வருகிறார்கள்.
    கடத்தூர்:

    மத்திய அரசால் அச்சடிக்கப்பட்டு 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நாணயங்களை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். அரசு பஸ்களிலும் கண்டக்டர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.

    ஆனால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவது கிடையாது.

    குறிப்பாக தருமபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி, பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை, ரேசன் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை.

    இதேபோல மின் அலுவலகங்களில் மின்சார கட்டணம் செலுத்த நாணயங்களை கொடுத்தாலும் வாங்குவதில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளிலும் வாங்க மறுக்கிறார்கள்.

    இதேபோல பெட்டிகடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத் தும் வியாபாரிகளும் இதை வாங்க மறுக்கிறார்கள்.

    தற்போது இந்த நாணயங்களை பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் கமி‌ஷனுக்கு வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    கடத்தூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயத்தை கமி‌ஷனுக்கு வாங்கி வருகிறார்கள். ஒரு சிலர் ரூ. 2 கமி‌ஷனுக்கு வாங்குகிறார்கள். இன்னும் சிலர் 5 ரூபாய் வரை கமி‌ஷன் கழித்து இந்த நாணயங்களை வாங்கிக் கொள்கிறார்க்ள.

    தற்போது வியாபாரிகளுக்கு இந்த புது தொழில் கைகொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்கும் வியாபாரிகள் சென்னை சென்று இதை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசிலர் தருமபுரி வந்து வங்கிகளில் மொத்தமாக 50 முதல் 500 நாணயங்கள் வரை கொடுத்து மாற்றிக் கொள்கிறார்கள்.

    நிபா வைரஸ் பீதியால் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு வியாபாரம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. மாம்பழம் வாங்க வியாபாரிகள் தயங்குகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னேரி, நரசாரெட்டி கண்டிகை, புதுகுப்பம், ஆம்பாக்கம், பேரடம், மதனம்பேடு, என்.எம். கண்டிகை, தாராட்சி, நெல்வாய், பாலவாக்கம், கரடிபுத்தூர், செங்கரை, தேர்வாயகண்டிகை, கண்ணன்கோட்டை.

    பூண்டி, சீதஞ்சேரி, அம்மம் பாக்கம், காரணி, சுப்பாநாயுடு கண்டிகை, நந்தனம், கொடியமேபேடு, படயகொடியமேபேடு, வெள்ளாத்துக்கோட்டை, நம்பாக்கம், அரியத்தூர், சென்றான்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாந்தோட்டங்கள் உள்ளன.

    இங்கு பங்கினபள்ளி, ருமானி, ஜவாரி, சில்பசந்த், மல்கோவா, ஹாபிஸ், செந்துரை பழரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த மாம்பழங்களுக்கு கடும் கிராக்கி உண்டு.

    தஷ்போது சீசனையொட்டி ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அதிக அளவில் மாம்பழங்கள் வந்து குவிந்து வருகின்றன.

    இங்கு திருவள்ளூர், பூந்தமல்லி, போரூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், சென்னை போன்ற வெகு தூரத்தில் இருந்து வரும் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் மாம்பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நிபா வைரஸ் பழங்களால் பரவுகிறது என்ற பீதியால் பெரும்பாலான பொதுமக்கள் மாம்பழங்களை சாப்பிட தயங்குகின்றனர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது

    பங்கனபல்லி கிலோ ரூ. 20-க்கு விற்கப்படுறது. அதேபோல் ஜவாரி கிலோ ரூ. 25, ருமானி ரூ. 8, செந்துரை ரூ. 8, நாட்டு ரகம் வெறும் ரூ. 5-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பங்கனபல்லி ரூ. 40, ஜவாரி ரூ. 50, ருமானி ரூ. 25, செந்துரா ரூ. 30 நாட்டு ரகம் ரூ.20 விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிபா வைரஸ் பீதி காரணமாக பொது மக்களிடத்தில் மாம்பழம் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாக புதுகுப்பத்தை சேர்ந்த மாரி என்ற வியாபாரி தெரிவித்தார்.

    வியாபாரம் இல்லாததால் ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த மாம்பழங்கள் அழுகி வருகின்றன. விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று கொட்டி அழித்து வருகின்றனர். #tamilnews
    நீலகிரியில் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு சீல் வைக்க முயன்றதால் வியாபாரிகள் கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காந்தல்:

    ஊட்டி நகராட்சிக்கு சொந்தமாக சுமார் 3 ஆயிரம் கடைகள் உள்ளது. இதனை வாடகைக்கு எடுத்து நடத்தும் வியாபாரிகளுக்கு குறைவான வாடகை தான் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு சில வியாபாரிகள் கடைகளை உள் வாடகைக்கு விட்டு அதிக பணம் சம்பாதிப்பதாகவும் புகார் எழுந்தது. ஊட்டி நகராட்சி ஒரு வருடத்திற்கு முன் கடை வாடகையை உயர்த்தியது.

    இதனை பெரும்பாலான வியாபாரிகள் கட்டவில்லை. ஒரு சில வியாபாரிகள் மட்டுமே கட்டினார்கள். உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க கோரி வியாபாரிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தனர்.

    வாடகையை கட்டா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் வியாபாரிகள் வாடகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    ஊட்டி நகராட்சி கடைகளை 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தினர் தான் நடத்தி வருகிறார்கள். இதனால் பொது ஏல முறையில் விட நகராட்சி முடிவு செய்தது.

    இதற்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான 1,500 கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதனை கண்டித்து ஊட்டி மார்க்கெட் முன்பு வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டியில் இன்று காலை மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் மறியல் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
    ×