search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்புதல்"

    இந்திய கடற்படைக்காக தேவைப்படும் நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பாதுகாப்புத்துறை கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #DefenceMinistry
    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக தேவைப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. #DefenceMinistry
    நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ளதால், மத்திய நிதி அமைச்சக பொறுப்பு பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #ArunJaitley #FinanceMinister #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரை பேரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்
    .
    மேலும், இலாகா இல்லாத மத்திய அமைச்சராக அருண் ஜெட்லி தொடர்வார் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது  #ArunJaitley #FinanceMinister #PiyushGoyal
    சென்னையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. #TNCabinet #AerospaceDefencePolicy
    சென்னை:

    தமிழகத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களுக்கு உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது அனுமதி அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.



    இந்த கூட்டத்தில், வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் 11 புதிய தொழிற்சாலைகளை தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கட்டடம் மற்றும் மனைப்பிரிவுகள் அமைப்பதை நெறிமுறைப்படுத்துவதற்கு, கட்டட விதிகளை ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக வரைவு விதி உருவாக்கப்பட்டுள்ளதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #TNCabinet #AerospaceDefencePolicy
    தமிழகத்தில் ரூ.30,500 கோடி தொழில் முதலீடு செய்வதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. #GIM2019 #TNCabinet #TNGovt
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு, வானூர்தி பூங்கா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் ரூ.30,500 கோடி தொழில் முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.30,500 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் 14 தொழில் நிறுவனங்களால் 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு சென்னையில் வரும் 23 மற்றும் 24  ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt
    செல்போன் எண், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தங்கள் கொண்டுவர மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. #AadhaarCard
    புதுடெல்லி:

    நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. இருப்பினும், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் அல்ல என்று கூறியது.

    இந்நிலையில், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.



    இதன்படி, புதிய செல்போன் இணைப்பு (சிம்கார்டு) பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து ஆதார் எண்ணை அளிக்கலாம். இது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது ஆகும். #AadhaarCard
    பாகிஸ்தானில் உள்ள கர்தார்புர் குருத்வாராவுக்கு சீக்கியர்கள் செல்ல வசதியாக சர்வதேச எல்லைவரை சாலை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #UnionCabinet #Development #Gurdwara #Kartarpur
    புதுடெல்லி:

    சீக்கிய மத குருக்களில் முதன்மையானவர் குருநானக். அவர், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்புரில் சமாதி அடைந்ததாக கருதப்படுகிறது. அங்கு கட்டப்பட்ட குருத்வாராவில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டு உள்ளது. சீக்கியர்கள் அங்கு புனிதப்பயணம் செல்வது வழக்கம்.

    ஆனால், அங்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. ஆகவே, புதிய சாலை அமைக்க பாகிஸ்தானை வற்புறுத்தும் வகையில், பஞ்சாபில் இருந்து சர்வதேச எல்லைவரை சாலை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.



    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் மாவட்டம் தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லைவரை சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:-

    இது, இந்தியா-பாகிஸ்தான் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவு. மத்திய அரசு நிதியில் இந்த சாலை அமைக்கப்படும். அதுபோல், சர்வதேச எல்லையில் இருந்து கர்தார்புர் குருத்வாராவரை சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தப்படும். இதன்மூலம் ஆண்டு முழுவதும் சீக்கியர்கள் அங்கு எளிதாக சென்று வர முடியும்.

    அடுத்த ஆண்டு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், இது சீக்கியர்களுக்கு உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வானிலை ஆய்வை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு தற்போது அமல்படுத்தி வரும் 9 துணை திட்டங்களை 2020-ம் ஆண்டுவரை தொடர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

    மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிகளை உட்பிரிவு செய்வது பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.ரோகிணி தலைமையிலான ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. அதன் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மே 31-ந் தேதிவரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது, இந்த ஆணையத்துக்கு 4-வது கால நீட்டிப்பு ஆகும்.  #UnionCabinet #Development #Gurdwara #Kartarpur
    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட உடன்படிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #TheresaMay #Brexitdeal
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

    ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

    இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

    இதற்கிடையில், சுமார் 500 பக்கங்களை கொண்ட ஒரு செயல்திட்ட அறிக்கையை ஐரோப்பிய யூனியன் தயாரித்துள்ளது.  பிரிட்டனில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் இதுதொடர்பாக விவாதிக்க வரும் 25-ம் தேதி அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.



    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற தேதி நெருங்கி வருவதால் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். சுமார் 5 மணிநேர விவாதத்துக்கு பின்னர் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது அறிவுப்பூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் சிந்தித்து ஒட்டுமொத்த பிரிட்டன் நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த அறிக்கையில் மந்திரிகள் அனைவரும் கையொப்பமிட்ட பின்னர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் உடன்படிக்கை என்ற பெயரில் ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இந்த உடன்படிக்கையின் அம்சங்கள்  ஐரோப்பிய யூனியன் நாட்டு அரசுகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TheresaMay #Brexitdeal
    அனைவருக்கும் அகன்ற அலைவரிசை சேவை வழங்குவதை நோக்கமாக கொண்ட புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #MinisterManojSinha #Broadband #TelecomePolicy
    புதுடெல்லி:

    தற்போது, 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய தொலைத்தொடர்பு கொள்கை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நவீன மாற்றங்களுக்கு ஏற்ப புதிய தொலைத்தொடர்பு கொள்கையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

    ‘தேசிய டிஜிட்டல் தொடர்பு கொள்கை-2018’ என்று இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது. தொலைத்தொடர்பு ஆணையத்தின் பெயரை ‘டிஜிட்டல் தொடர்பு ஆணையம்’ என்று மாற்றவும் இதில் வகை செய்யப்பட்டு உள்ளது.இந்த கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய மந்திரி மனோஜ் சின்கா நிருபர்களிடம் கூறியதாவது:-



    இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து குடிமக்களுக்கும் பிராட்பேண்ட் (அகன்ற அலைவரிசை) சேவை வழங்குவது ஆகும். மேலும், டிஜிட்டல் தொடர்பு துறையில் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், டிஜிட்டல் துறையின் பங்களிப்பு 8 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த துறையில் ரூ.720 கோடி முதலீடு ஈர்க்கப்படும். அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 2020-ம் ஆண்டுக்குள் ஒரு ஜி.பி. திறன்கொண்ட அகன்ற அலை வரிசை சேவையும், 2022-ம் ஆண்டுக்குள் 10 ஜி.பி. திறன்கொண்ட அகன்ற அலைவரிசை சேவையும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:-

    மருத்துவ கல்வியை நிர்வகிக்கும் அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ.) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே சமயத்தில், மருத்துவ கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. ஆகவே, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படும்வரை, மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க பிரபலமான நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.இந்த குழு அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதலுடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

    ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கில் 49 சதவீத பங்குகள் மட்டுமே அரசுக்கு சொந்தமாக உள்ளது. 100 சதவீத பங்குகளையும் வாங்கி, அதை அரசு நிறுவனமாக மாற்றும் முடிவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இதில், 50 சதவீத பங்குகளை மத்திய அரசும், மீதி பங்குகளை மாநில அரசுகளும் வைத்திருக்கும்.சர்க்கரை தொழில்துறைக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி நிதிஉதவி அளிப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.  #MinisterManojSinha #Broadband #TelecomePolicy 
    ரூ.3,466 கோடியில் 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு நேற்று தனது ஒப்புதலை வழங்கியது. #Cabinet #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராமரிப்பதற்கு ஒரு திட்டத்தை உலக வங்கி உதவியுடன் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

    இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.3,466 கோடி செலவாகும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு நேற்று தனது ஒப்புதலை வழங்கியது.



    இதில் ரூ.2,628 கோடியை உலக வங்கி வழங்கும். ரூ.747 கோடியை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தரும். எஞ்சிய ரூ.91 கோடியை மத்திய நீர் ஆணையம் அளிக்கும்.

    இதில் தமிழக அணைகள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.543 கோடி ஆகும்.

    அங்கன்வாடி ஊழியர்கள் மாத சம்பளத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆகவும், சிறிய அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுகிற ஊழியர்கள் சம்பளம் ரூ.2 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும், அங்கன்வாடி உதவியாளர் சம்பளம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 250 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும் மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.250-ம் வழங்கப்படும். இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 
    அஞ்சல் வங்கிக்கு மேலும் ரூ.635 கோடி நிதியை வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது. #PostPaymentBank
    புதுடெல்லி:

    நமது நாட்டில் அஞ்சல் துறையும் வங்கித்துறையில் கால் பதிக்கிறது. அந்த வகையில், அஞ்சல் துறை சார்பில் ‘ஐ.பி.பி.பி.’ என்ற பெயரில் இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி தொடங்கப் படுகிறது. இந்த வங்கியை 1-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வங்கியை தொடங்குவதற்காக ரூ.800 கோடி நிதி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    இப்போது இந்த வங்கி தொடங்குவதற்கான செலவு, திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.1,435 கோடி ஆகும். எனவே இந்த வங்கிக்காக மேலும் ரூ.635 கோடி நிதி வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது.

    இந்த தகவலை தகவல் தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா, நிருபர்களிடம் தெரிவித்தார்.  #PostPaymentBank
    2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. #Sugarcane #ModiCabinet
    புதுடெல்லி:

    பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுவின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    இதனால் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் சந்தை ஆண்டு முதல் விவசாயிகள் அளிக்கும் ஒரு குவிண்டால் கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் குறைந்த பட்சமாக ரூ.275 வழங்கவேண்டும்.

    சந்தை நிலவரத்தையொட்டி, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நேர்மையான மற்றும் லாபகரமான விலை கிடைக்கச் செய்யும் விதமாக வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில் கரும்புக்கு இந்த குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2017-18-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் கரும்புக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ.255 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.  #Sugarcane #ModiCabinet #tamilnews

    உயர் கல்வி ஆராய்ச்சி, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. #Cabinet #Research #HigherEducation
    புதுடெல்லி:

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு உயர் கல்வி நிதி நிறுவனம் (எச்.இ.எப்.ஏ.) இன்னும் 4 ஆண்டுகளில் (2022-ம் ஆண்டுக்குள்) ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டிக்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதேபோன்று உயர் கல்வி நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.

    ஏற்கனவே ரூ.1,000 கோடி வழங்கி உள்ள நிலையில் மத்திய அரசு இந்த நிறுவனத்துக்கு கூடுதலாக அரசு தரப்பு பங்காக ரூ.5 ஆயிரம் கோடி வழங்குவதற்கும் இந்தக் குழு தனது ஒப்புதலை வழங்கியது.

    உயர் கல்வி நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்தும் மத்திய மந்திரிசபையின் முடிவால், தொழில் கல்வி நிறுவனங்கள் நிதி பெற வழி பிறந்து உள்ளது.

    புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள், பிற சுகாதார கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் உயர் கல்வி நிதி நிறுவனத்திடம் இருந்து நிதி வசதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள்:-

    * இணையதளம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிற சூழலில், சர்வதேச காப்புரிமை அமைப்பின்கீழ் அறிவுசார் படைப்பாளர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெற ஏதுவாக உலக அறிவுசார் சொத்துக்கள் அமைப்பின் அறிவுசார் பதிப்புரிமை ஒப்பந்தத்தில் இணைவதற்கு மத்திய மந்திரி ஒப்புதல் வழங்கியது.

    * மரபணு தொழில் நுட்ப ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

    * நலிவுற்ற நிலையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுக்கான நிதியை ரூ.200 கோடியில் இருந்து ரூ.336 கோடியே 24 லட்சமாக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * சட்டம், நீதித்துறையில் கூட்டு ஆலோசனை குழு அமைப்பதற்கு இந்தியாவும், இங்கிலாந்தும் புரிந்து உணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் தந்தது.  #Research #HigherEducation #Tamilnews
    ×