என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 130486"
ஆம்பூர்:
ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் தீ மிதி விழாவையொட்டி காளை விடும் விழா நடந்தது. விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.
காளை விடும் விழாவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். இளைஞர்களின் ஆரவாரத்தால் காளைகள் மிரண்டு போய் குறுக்கு நெடுக்குமாக ஓடின.
அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விழாவில் முகாமிட்டிருந்த டாக்டர்கள் குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி தாலுகா போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விரும்பினார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த ஜல்லிக்கட்டில் 2000 மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது. 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்க இருக்கிறார்கள். 2000 மாடுகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படுவது இதுவே முதன்முறையாகும். இதனால் இந்த போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது.
கின்னஸ் சாதனைப் படைக்க இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 8.15 மணிக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.
பிளாட்பார மனிதர்கள் பற்றி உருவாகி இருக்கும் படம் கபிலவஸ்து. கொள்ளிடம் படத்தை இயக்கிய நேசம் முரளி இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இயக்குனர் சங்கத்தில் நடந்தது.
விழாவில் மன்சூர் அலிகான் பேசும்போது கூறியதாவது:-
நேற்று என் படத்துக்கு விலங்குகள் நல வாரியத்தின் தடை இல்லை என்பதற்காக சான்றிதழுக்கு விண்ணப்பிக்க சென்றேன்.
மைலாப்பூரில் இருந்த விலங்குகள் நல வாரியத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே அரியானா மாநிலத்துக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என தெரிய வந்தது. சினிமா என்றாலே சென்னை தான். இங்கே தான் ஆயிரக்கணக்கில் சினிமா எடுக்கப்படுகிறது.
இங்கு இருந்து எப்படி வடமாநிலத்துக்கு கொண்டு செல்லலாம்? சினிமா சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? ஒரு காட்சியில் காக்கா குறுக்கே வந்தால் கூட படத்தை எடுத்துக்கொண்டு அரியானா ஓட வேண்டும். இது அநியாயம் இல்லையா? இது எல்லாம் பழி வாங்கல் தானே...
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடியதால் பழி வாங்கப்படுகிறோம். தமிழனைப் போல் விலங்கை நேசிப்பவர் யாரும் இல்லை. இதை எல்லாம் யார் கேட்பது? மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கிறேன்.
தூங்கிக் கொண்டிருக்கும் போது நம் வீடு நமக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த மாதிரியான ஆட்சியில் மாட்டிக் கொண்டுள்ளோம். நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குனர் நேசம் முரளி பேசும்போது ‘நாளிதழ்களில் வரும் செய்திகளை வைத்து தான் நான் படம் எடுத்து இருக்கிறேன். இந்த படம் பிளாட்பார மனிதர்கள் பற்றிய உண்மை நிலையை விளக்கும்.
அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் ஆதரவில் தான் அனாதை ஆசிரமங்கள் இயங்குகின்றன. ஆனால் ஆதரவற்ற பிளாட்பார வாசிகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. எங்கு திரும்பினாலும் பிச்சைக்காரர்கள்.
ஓட்டு வாங்க வரும் தலைவர்கள் அதன்பின்னர் ஒருநாள் கூட சுற்றுப்பயணம் வருவதில்லை. வெளி நாடுகளுக்கு தான் செல்கிறார்கள். வெளிநாட்டிலா நீங்கள் ஓட்டு வாங்கினீர்கள்?’ என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, ரமேஷ் கண்ணா இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள சின்னபட்டாகாடு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 காளைகள் பங்கேற்றன. 100 மாடுபீடி வீரர்கள் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஊரின் தெற்குத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளையும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் ஆக்ரோஷத்துடன் மாடுபிடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு சென்றன.
காளைகளை அடக்க முயன்ற போது கோவிலூரை சேர்ந்த ராகுல்(வயது 20), வைப்பூர் ஆசைத்தம்பி(34), தஞ்சாவூர் ஆனந்த்(19) சின்னப்பட்டாகாடு முருகானந்தம்(39), கீழஎசனை புண்ணியமூர்த்தி(24) உள்பட 11 பேர் காயமடைந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரம், மின் விசிறி, சைக்கிள், கட்டில், வேட்டி மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஜல்லிக்கட்டில் விடப்பட்ட காளைகள் திரும்ப திரும்ப விடப்பட்டதாலும், சிறு கன்றுகள் விடப்பட்டதாலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மதியம் 1 மணிக்கு மேல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்