search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்வலி"

    மருத்துவ பரிசோதனை மூலமாக தொண்டை வலியின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, நவீன மருத்துவ சிகிச்சை மூலமாக தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறலாம்.
    நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, அதிக உமிழ்நீர் வடிதல், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் வருடத்தில் பல தடவை வந்து போகும். பலர் இத்தகைய அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு அவ்வப்போது கிடைக்கின்ற தற்காலிக நிவாரணிகளை உட்கொண்டு வருகின்றனர்.

    இத்தகைய நடவடிக்கையால் இந்த நோயின் அடிப்படை காரணமான பி-ஹுமாலிடிக் ஸ்டெப்டோ காக்கை என்னும் ஒருவித நச்சுக்கிருமி ரத்தத்தில் வீரியமடைந்து, நாளடைவில் அதன் நச்சுத்தன்மை கால் மூட்டுகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் நிரந்தர பாதிப்புக்கு காரணமாகி விடும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம்.

    நோயின் அறிகுறியாக தொண்டையில் வலி இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரும். தொண்டையில் வெளிப்பொருள் அடைத்து கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அடிக்கடி உடல் தளர்ந்து போகும். கை, கால் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும். மேல் சுவாசக்குழாய் தொற்று உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது.

    இதற்கு சிறந்த காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி ஆரம்ப கட்டத்திலேயே தொண்டை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நவீன தொண்டை என்டாஸ்கோப்பி பரிசோதனை மூலம் சிகிச்சை பெற்று குணம் அடையலாம். மூக்கு தண்டு வளைதல் இருந்தால் அதனை என்டாஸ்கோப்பி மூலமாக சரி செய்ய முடியும். சைனஸ் நோய் இருந்தால் அதனை நிரந்தரமாக சரி செய்யலாம். சளி பிடிக்கின்ற உணவு வகைகளை தவிர்த்து முக்கு, தொண்டை, வாய், பற்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்.

    இந்த நோயினை ரத்தபரிசோதனை மூலமாக எளிதில் கண்டறியலாம். குறிப்பாக தொண்டையில் இருந்து சிறிது சளியை எடுத்து அதனை கல்சர் டெஸ்டிங் என்று சொல்லப்படுகிற கிருமி ஆய்வு செய்வதன் மூலமாகவும், ஏ.எஸ்.ஓ. டிட்ரி என்று சொல்லப்படுகிற ரத்த பரிசோதனை மூலமாகவும் தற்போதைய அதிநவீன ஆய்வுக்கூட நோய் எதிர்ப்பு திறன் ஆய்வுகள் மூலமாகவும் எளிதில் கண்டறிய முடியும்.

    மருத்துவ பரிசோதனை மூலமாக தொண்டை வலியின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, நவீன மருத்துவ சிகிச்சை மூலமாகவோ அல்லது தேவைப்பட்டால் சைனஸ் அறுவை சிகிச்சை அல்லது டான்சில் அறுவை சிகிச்சை மூலமாகவோ தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறலாம்.
    பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.
    பாதங்கள்தான் ஒட்டுமொத்த உடலையும் தாங்கும் அஸ்திவாரம். பாதங்களில் பிரச்சனை வந்தால் உடல் ஆட்டம் கண்டுவிடும். நிற்கவோ, நடக்கவோ முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி விடுவோம். பாதங்களில் பாதிப்பு ஏற்பட நாம் அணியும் காலணிகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்சனைக்கும் வழிவகுக்கும்’’.

    சியாட்டிகா (Sciatica)

    சியாட்டிகா என்பது ஒருவித அடிப்புற இடுப்புவலி. குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை  பாதம் முதல் தொடை, இடுப்பு மற்றும் பின்புறம் வரைக் கடுமையான வலியை ஏற்படுத்தும்; கால்கள் மரத்துப்போகும். நடக்கும் போதும் குனியும்போதும் வலி அதிகமாக உணரப்படும்.

    தட்டைப்பாதங்கள் (Flat Feet)

    முன் பாதத்துக்கும் குதிகாலுக்கும் இடையே ‘ஆர்ச்’ (Arch) போன்ற இடைவெளி இல்லாமல் தட்டையாக இருப்பதைத் `தட்டைப் பாதம்’ என்பார்கள். இது பெரும்பாலும், குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுகிறது. அதற்கேற்ப ஷூ அணியாவிட்டால் சிலருக்குப் பாதத்தின் `ஆர்ச்’ பகுதியிலும் குதிகால்களிலும் வலி ஏற்படும். நாளடைவில் நிற்பது, நடப்பது போன்ற நிலைகளிலும் மாற்றம்  ஏற்பட்டு, அது கால் மூட்டு, இடுப்பு, பின்புறப்பகுதி, முதுகு ஆகியவற்றிலும் வலியை உண்டாக்கும். பாதங்களின் `ஆர்ச்’ எப்படி இருக்கிறதோ அதற்கேற்ற காலணிகளை அணிய வேண்டும்.



    குதிகால் வலி (Achilles Tendinopathy)

    குதித்து விளையாடும் வகையிலான செயல்பாடுகளால் சிலருக்குக் குதிகால் மற்றும் கெண்டைக்கால் தசையில் வலி, வீக்கம், கணுக்காலில் தசை இறுக்கம் உண்டாகும்.  பெரும்பாலும் நடனக்கலைஞர்கள், டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகைப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், பொருத்தமற்ற காலணிகளை அணிவதே முக்கியக் காரணமாகும். வலியை உணர்பவர்கள் குதிகால்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும். கால்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டு நிவாரணம் பெறலாம்.

    காலணிகள் தேர்வில் கவனம் இருக்கட்டும்

    * காலணிகளின் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்க வேண்டும். அதிக எடையும் அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.

    * இரண்டு அங்குலத்துக்கு மேல் அதிக உயரமுள்ள காலணிகளை (ஹை ஹீல்ஸ்) அணியக் கூடாது.

    * குறுகலான அளவுள்ள (Narrow Shoes) ஷூக்களை அணியக்கூடாது.

    * தரையில் வழுக்காத  செருப்புகளையே பயன்படுத்த வேண்டும்.

    * தோல் செருப்புகளும் ஷூக்களுமே சிறந்தவை.  பிளாஸ்டிக் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

    * சர்க்கரைநோய் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நைட்டு நல்லாதான் தூங்குனேன், ஆனாலும் டயர்டாவே இருக்கு. முதுகு வேற வலிக்குது…” காலையில் அலுவலகத்தில் கம்யூட்டரை ஆன் செய்வதற்கு முன்பாக பக்கத்தில் இருப்பவர்களிடம் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தைகள் இவை. இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    நன்றாக தூங்கி எழுந்தபிறகு, முதுகு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு, நாம் சரியான நிலையில் தூங்காமல் இருப்பதும், சரியான இடத்தில் தலையணை வைத்துத் தூங்காமல் இருப்பதுமே காரணம். தூங்கும் முறையும், தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் ரொம்பவே முக்கியம்.

    கழுத்து மற்றும் முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால்..?


    தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புற முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு பக்கமாக (side lying) அல்லது நேராக(மல்லாந்து) படுத்தால் (Supine lying) வலி குறையும். இப்படிப் படுக்கும்போது, முதுகுத் தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் சென்று, கழுத்துப் பகுதி தளர்வடையும். அதனால் வலி குறையும். வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்கும் தலைக்கும் இடையில் வைத்துத் தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும் .



    முதுகின் கீழ்ப்பகுதியில் வலி இருந்தால்?

    ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தால், முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலி குறையும். ‘நேராகப் படுத்தே பழகிவிட்டேன், ஒரு பக்கமாக படுத்தால் தூக்கம் வராது’ என்பவர்கள் தலையணையை முழங்காலுக்குக் கீழ் வைத்துத் தூங்கலாம். இது ஓரளவுக்குத்தான் பயனளிக்கும். ஒரு பக்கமாக சாய்ந்து தூங்கப் பழகிக் கொள்வது நல்லது.

    முதுகின் கீழ்ப்பகுதியில் வலி உள்ளவர்கள் குப்புறப்படுத்துத் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும். அப்படித் தூங்கினால் வலி அதிகமாகும். தவிர, கழுத்தில் உள்ள தசைகள், நரம்புகளை இறுக்கி வலியை அதிகரிக்கும்.

    முதுகின் நடுவில் ஏற்படும் வலியைக் குறைக்க!

    சேரில் உட்காரும்போது, முன்புறமாக குனிந்து உட்காருவது, வலதுபுறமாகவோ, இடதுபுறமாகவோ சாய்ந்தபடி உட்காருவது, நடக்கும்போது குனிந்தபடியே நடப்பது போன்ற செயல்பாடுகளால் முதுகின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். நேராகவோ அல்லது ஒரு பக்கம் சாய்ந்தவாறோ தூங்கினால் இந்தப் பாதிப்பை ஓரளவுக்குக் குறைக்கலாம்.

    உட்காரும் நிலையை மாற்றினால் மட்டுமே இந்த வலியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து, பின்புறமாக லேசாக சாய்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்கலாம். மேலும், மசாஜ், ஃபோர்ம் ரோலிங், நெஞ்சுப் பகுதிக்கான ஸ்ட்ரெட்ச்சிங், முதுகுப் பகுதிக்கான உடற்பயிற்சிகள் போன்றவை வலியைக் கட்டுப்படுத்தி நன்றாக தூங்க உதவிபுரியும்.
    வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப் பயன்படுத்துவதைவிட, இயற்கையான உணவு முறை, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலமாகவே தலைவலியைப் போக்க முடியும்.
    உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான். அதீத இரைச்சல், செரிமானக் கோளாறு, கணினித்திரை ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் நரம்புகளுக்கு ஏற்படும் அழுத்தம்... எனப் பல பிரச்சனைகள் காரணமாக, நரம்புகள் வீக்கம் அடைந்து தலைவலி ஏற்படுகிறது. தலைவலிக்கு வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப் பயன்படுத்துவதைவிட, இயற்கையான உணவு முறை, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலமாகவே தலைவலியைப் போக்க முடியும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா ?



    மூளை நரம்புகள் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இது அதீதமாகச் செயல்படும்போது தலைவலி ஏற்படும். இதற்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. இஞ்சியில் தலைவலியைப் போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளது. காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு (2 டீஸ்பூன்) குடித்தால், நாள் முழுக்கத் தலைவலி வராமல் தடுக்கலாம்.

    செர்ரிப் பழத்தில் `ஆந்தோசயானின்’ (Anthocyanin) என்னும் நிறமி உள்ளது. இது நரம்பு வீக்கத்துக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது. தினமும் காலையில் செர்ரிப் பழத்தைச் சாப்பிடுவதால், மூளை நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். இதனால், காலை அலுவலகத்துக்குச் செல்லும்போது ஏற்படும் அதீத சத்தம், இரைச்சல் மூலம் ஏற்படும் தலைவலியில் இருந்து தப்பிக்கலாம். இது நாளை இனிமையாகத் தொடங்க உதவும்.

    மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது பட்டை. தினமும் மாலை வேளையில் பட்டை சேர்த்த பிளாக் டீ அருந்திவந்தால் சைனஸால் உண்டாகும் தலைவலி நீங்கும்.

    நாள் முழுவதும் வெயிலில் அலைந்து வேலைசெய்பவர்கள், சில வகை உணவுகளைத் தவிர்த்துவிட்டாலே இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பித்துவிடலாம். சிப்ஸ், ஜாம், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்ற நைட்ரேட், எம்எஸ்ஜி சேர்க்கப்பட்ட உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். புகை, மதுப் பழக்கத்தைக் கைவிடவேண்டியது அவசியம். ஆல்கஹால், நிகோட்டின், கஃபைன் உள்ளிட்டவை வலியை அதிகரிக்கும்.

    எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. இது நாக்கு வறண்டு போவதை தடுக்கும்; மூளை நரம்புகளைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

    செரிமானக் கோளாறுகளாலும் தலை நரம்புகளில் வலி, வாந்தி வரும் உணர்வு உள்ளிட்டவை ஏற்படும். இதற்குச் சீரகம், இஞ்சி, ஓமம் ஆகியவை சிறந்த மருந்துகள். இவற்றில் தயாரிக்கப்பட்ட கஷாயத்தைக் குடித்தால் வலி நீங்கி உடல் புத்துணர்வு பெறும். கிரீன் டீ அருந்துவதும் தலைவலி போக்க நல்ல வழிமுறை.

    50 கிராம் சீரகத்தை அரைத்துப் பொடியாக்கி, 50 கிராம் தேனில் கலக்கவும். இந்தக் கலவையை, எலுமிச்சைச் சாற்றில் கலந்து, ஏழு நாட்கள் வெயிலில் உலரவைக்கவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து மில்லி கிராம் அளவுக்கு சாப்பிட்டுவந்தால், நாள்பட்ட தலைவலி குணமாகும்.
    மூட்டு வலி வீக்கம் என்பது மூட்டில் ஏற்படும் தேய்மானம், பாதிப்பு போன்றவைகளால் ஏற்படுவது ஆகும். இது எந்த மூட்டு பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
    மூட்டு வலி வீக்கம் என்பது மூட்டில் ஏற்படும் தேய்மானம், பாதிப்பு போன்றவைகளால் ஏற்படுவது ஆகும். இது எந்த மூட்டு பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். கட்டை விரலில் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆய்வுகளின் படி 40 வயதினை கடந்தோருக்கு இது ஏற்படுகின்றது.

    ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு கூடுதலாக ஏற்படுகின்றது. கட்டை விரலின் அடிப்பகுதியில் ஏற்படும் இப்பாதிப்பு கார்டிலிலேஜ் தேய்மானம் காரணமாக ஏற்படுகிறது. எதனையாவது கைகளில் எடுக்க முயலும்போது விரலில் வலி ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறியாக வெளிப்படும். மேலும்

    கட்டை விரலின் அடியில் வீக்கம்
    வலி, விரல் அசைப்பதில் கடினம்
    விரலில் பலமின்மை போன்றவை இருக்கலாம்.

    தேய்மானம் காரணமாக இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுவதால் எலும்பு எளிதில் உடையும் அபாயமும் அதிகம் ஆகின்றது. மருத்துவர் பரிசோதனைகள் மூலம் பாதிப்பினை உறுதி செய்வார்.

    கட்டை விரல் பாதுகாப்பு

    * விரல்களுக்கான பயிற்சி
    * வீக்கம் குறைவதற்கான மருந்துகள்
    * அதிக கடின வேலை விரலுக்கு அளிக்காமை ஆகியவை மூலம் விரல் பாதுகாக்கப்படுகின்றது.
    * சில நேரங்களில் சிகிச்சை பயன் அளிக்காத போது அவசியம் ஏற்படின் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.

    வைட்டமின் ஏ.சி.இ. இவைகள் வீக்கத்தினைக் குரைத்து மூட்டு அசைவுகளை எளிதாக்கும். மருத்துவ ஆலோசனை பெற்று இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    கொலஸ்டிரால் அதிகமாக இருப்பின் மருத்துவ உதவியோடு அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். கால்ஷியம், வைட்டமின் டி சத்து இவைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

    மீன், ஆலிவ் எண்ணெய், பால், தயிர், சீஸ், அடர்ந்த பச்சை நிறம் கொண்ட கீரைகள், காய்கறிகள், பிரோகலி, கிரீன்டீ, பூண்டு, கொட்டைகள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள தகுந்த பாதுகாப்பு மூட்டுகளுக்குக் கிடைக்கும்.
    ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்துவந்தால் மூட்டுவலிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் இருக்கும் மூட்டுவலி பிரச்சினைக்கும் நிவாரணம் பெறலாம்.
    வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். உடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்துவந்தால் மூட்டுவலிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் இருக்கும் மூட்டுவலி பிரச்சினைக்கும் நிவாரணம் பெறலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு ஆப்பிள் வினிகருடன் தண்ணீர் சேர்த்தும் பருகிவரலாம்.

    * இஞ்சியும் மூட்டு வலியை விரட்டியடிக்கும். இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டுவலி கட்டுப்படும். இஞ்சியை டீயாக தயாரித்தும் பருகிவரலாம். நீரில் இஞ்சியை கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம்.

    * இஞ்சியுடன் மஞ்சளை சேர்த்தும் பயன்படுத்தலாம். இரண்டையும் நீரில் கால் மணி நேரம் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம். பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகிவரலாம். இவ்வாறு செய்தால் மூட்டுவலி கட்டுப்படும்.

    * எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ தினமும் பருகிவரலாம். இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படு்த்தி வலிகளை குறைக்கும்.
    அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகு வலியில் இருந்து விடுபட 10 வழிகளை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து விடுபடலாம்.
    இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களிடம் உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. உட்கார்ந்த இடத்திலேயே 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதன் காரணமாக அவர்கள் முதுகுவலியில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. இதில் இருந்து விடுபட 10 வழிகளை மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து விடுபடலாம் என்றும், இதனால் கவலை வேண்டாம் என்றும் தெரிவிக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

    1. தினமும் காலை 20 முறை, மாலை 20 முறை கைகளை மேல் நோக்கி நீட்டுங்கள்.

    2. அமரும்போது வளையாதீர்கள்.

    3. தினமும் 21 முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

    4. தினமும் குறைந்தபட்சம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

    5. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்.

    6. இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

    7. சுருண்டு படுக்காதீர்கள்.

    8. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

    9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

    10. 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள். 
    இப்போதைய மைக்ரேன் தலைவலியினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம்.
    இப்போதைய மைக்ரேன் தலைவலியினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. பொதுவில் அதிக பளீர் வெளிச்சம், தூக்கமின்மை, காபி, கேபின், சாக்லெட் இவையெல்லாம் மைக்ரேன் தலைவலியினை தூண்டிவிடும் என்பது பலரின் அனுபவம்.

    ஆயினும் மேலும் சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம். தூக்கமின்மை மைக்ரேன் தலைவலியினைத் தூண்டும் குறைந்தது அன்றாடம் 8 மணிநேர தூக்கம் என்பது அவசியம். முறையான குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க சென்று குறைவான குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவதும் மைக்ரேன் தலைவலியினைத் தவிர்க்க மிக அவசியம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பகலில் தூங்குவது, இரவில் வெகுநேரம் விழித்து காலையில் வெகுநேரம் சென்று எழுவது போன்றவற்றினைச் சொல்வார்கள். மைக்ரேன் பாதிப்பு ஏற்கனவே உடையவர்கள் மேற்கூறியவாறு செய்யும் பொழுது மைக்ரேன் பாதிப்பு உடனடி அதிகமாக ஏற்படுகிறது.

    * பலரும் ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்ளெட் போன்றவை இல்லாது வாழ்வே இல்லை என்று நினைக்கின்றார்கள் தூங்கச் செல்வதற்கு முன்கூட அல்லது படுத்துக் கொண்டே தூங்கும் வரை நீல ஒளி உபயோகிப்பவருக்கு மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

    * சிலருக்கு சில வகை சோபாக்கள், உடைகள், போர்வைகள் அதிலுள்ள டிசைன்கள், வரிகள், வட்டங்கள் போன்றவை மூளையிலுள்ள கார்டெக்ஸ் பகுதியினைக் தூண்டி மைக்ரேன் வலியினை உருவாக்குகின்றன என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே எளிமையான டிசைன் கொண்ட உடைகள், சோபாக்கள், படுக்கை விரிப்புகளை உபயோகிப்பது நல்லது.

    * திடீரென தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாற்றம் மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆக மேற்கூறிய குறிப்புகளை அறிந்து மைக்ரேன் தலைவலி தாக்குதலை தவிர்ப்போம்.

    அதிக வியர்வை: வெய்யில் கொளுத்தும் நேரத்தில் மிக அதிக வியர்வை என்பது சாதாரணமாக ஏற்படும் நிகழ்வுதான். அடிக்கடி சிறிதளவு தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். என்பதுதான் அறிவுரையாக இருக்கும். இதனால் உடலின் நீர்சத்து சீராய் இருக்கும். பல பாதிப்புகள் இதனால் தவிர்க்கலாம்.

    வியர்வை இயற்கையான ஒன்று. தேவையான ஒன்று. உங்கள் உடலை குளுமை செல்கிறது. உடலில் அதிக உஷ்ணம் ஏற்படும் பொழுது நரம்பு மண்டலம் வியர்வை சுரப்பிகளை தூண்டி வியர்வை மூலம் உடல் உஷ்ணத்தினை வெளியேற்றுகிறது. 99 சதவீதம் வியர்வை நீர் தான் சிரிதளவு உப்பும். தாது உப்புகளும் வெளியேறுகின்றன. அதிக நச்சு (அ) கழிவுகள் கல்லீரல், நுரையீரல், சிறு நீரகம் மூலமாகவே வெளியேறுகின்றன.



    இது சாதாரண சூழ்நிலையில் நிகழும் ஒன்று. ஆனால் மிக அதிக அளவில் வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உள்ள சத்து குறைந்து தாது உப்புகள், உள்ள இவற்றிலும் குறைபாடு ஏற்படுகிறது.

    உஷ்ணம், கோடை, ஸ்ட்ரெஸ் போன்ற நேரங்களில் அதிக வியர்வை ஏற்படும். கை மடிப்பு, கால்கள், கைகள், முகம் இந்த இடங்களில் வியர்வை அதிகம் ஏற்படும்.

    * பரம்பரை
    * உடல் அளவு
    * தொடர் உடற்பயிற்சி இவையும் அதிக வியர்வைக்கு காரணம் ஆகின்றன.
    * காபி, ஆல்கஹால் இவை உடலின் உஷ்ணத்தினை உயர்த்தி வியர்வையினை உருவாக்கும்.
    * காரசாரமான உணவுகளில் வியர்வை கொட்டும் ஆயினும் அதிக வியர்வை கொட்டுவதனை நீங்கள் உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறவும்.
    * சிறிது நேரம் ஷவரில் இருப்பது.

    * டீ, காபி, மது இவற்றினைத் தவிர்ப்பது.
    * கார, சார மசாலா உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை சங்கடமான அதிக வியர்வையினைத் தவிர்க்கும்.
    * அதிக எடையினைக் குறைத்தல் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
    * கொழுப்பு உணவுகளைத் தவிர்த்தல்.
    * மருத்துவ உதவியோடு மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை பல விதங்களில் உடல் நலனை பாதுகாக்கும்.
    தோள், முன்னங்கை மற்றும் அவற்றை சார்ந்த தசைகளை மிக அதிகமாக உபயோகிப்பது மற்றும் தவறான உபயோகம் ஆகியவற்றால் டென்னிஸ் எல்போ வியாதி வருகின்றது.
    தோள், முன்னங்கை மற்றும் அவற்றை சார்ந்த தசைகளை மிக அதிகமாக உபயோகிப்பது மற்றும் தவறான உபயோகம் ஆகியவற்றால் இவ்வியாதி வருகின்றது.

    மணிக்கட்டைச்சுற்றியும் வெளிப்புறமாகவும் வலி ஆரம்பிக்கும், கைகுலுக்கும் போதும் ஏதாவது ஒன்றை பிழியும் போதும், பொருட்களை தூக்கும்போதும், மூடியைத் திறக்கும் போதும் வலி அதிகமாகும்.

    ஆயுர்வேத சிகிச்சை

    மூன்று தோஷங்களும் நிலைமாறுவதால் வரலாம் மூட்டுக்களை தவறான முறையில் உபயோகிப்பதாலும் வரலாம், அடிபடுவதாலும் வரலாம்.

    சிகிச்சை

    மூன்று தோஷங்களையும் சமநிலைபடுத்துவதே இதற்கான சிகிச்சை முறையாகும். மூட்டைத் திரும்பத் திரும்ப உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நோய் சரியாகும் வரை குறிப்பிட்ட மூட்டு அசையாமல் கட்டி வைப்பது நல்லது. தன்வந்த்ரம் தைலம் உபயோகிக்கலாம்.

    எள், வெந்தயம் ஆகியவற்றை பாலில் வேக வைத்து பத்துபோடலாம். தசமூலசூரணம், பால் இவற்றை கலந்து பத்து போடலாம். முறிவெண்ணை உபயோகித்து கட்டுப் போடலாம். பஞ்சாம்ல தைலம், முறிவெண்ணை, பிண்ட தைலம், ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

    உள்ளே சாப்பிட

    மஹாமஞ்சிஷ்டாதி கஷாயம், தன்வந்த்ரம் கஷாயம், சந்திரபிரபா குளிகா ஆகியவற்றை உள்ளே சாப்பிடலாம்.

    குதிகால் வலி: (வாத கண்டகம் / அஸ்திகிரந்தி)
    குதிகால் எலும்பில் முள்போன்று வளர்வதால் இந்நோய் வருகின்றது.
    கண்டகம் என்றால் முள், எலும்பின் அதிக வளர்ச்சியே இந்நோய்.

    உள்ளே சாப்பிட மருந்து

    குக்குலு திக்தககஷாயம், பஞ்சதிக்தத ஷீரம், எள், கஷாயம் ஆகியவற்றை உள்ளே எடுக்கலாம்.

    வெளியே போட

    பலா அஸ்வந்தாதி தைலம், கொட்ட ஏசுக்காதி தைலம் ஆகியவற்றால் பத்து போடலாம்.புளி இலை/ஆமணக்கு இலையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, மூட்டை கட்டி, சூடு செய்து கொடுக்கலாம்.

    வீட்டு வைத்தியம்

    செங்கல்லைச் சூடாக்கி அதன்மேல் பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மேல் குதிகாலை வைக்க வேண்டும் முள்போல இருப்பது மழுங்கி விடும்.

    ஆஸ்டியோ மைலைட்டிஸ்

    எலும்பு மஜ்ஜையில் வரும் நோய்தொற்று



    காரணம்

    எலும்பு, எலும்பு மஜ்ஜையில் டி.பி. இருப்பதால் வருவது. குழந்தைகள், பருவ வயதினர்க்கு அதிகம் வரும் நீரிழிவு நோயால் காலில் வரும் புண்கள் மூலம் பரவும் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தால் வரும்.

    அறிகுறிகள்

    பாதிக்கப்பட்ட இடத்தில் வலி இருக்கும், காய்ச்சல் வரும், பாதிக்கப்பட்ட இடம் நெகிழ்ந்து மென்மையாக இருக்கும்.

    சிகிச்சை

    இந்நோய் பித்த அனுபந்த வாதத்தால் வருகிறது. வீக்கம் பித்தத்தால் வருவதே. ஆகவே பித்தம் குறைய, வாத அனுலோபனம் செய்ய வேண்டும் வாதத்தை அதன் போக்கில் திருப்ப வேண்டும்.

    உள்ளே சாப்பிட

    புனர்னவாதி கஷாயம், பலாகுடூச்சியாதி கஷாயம், தீராயந்த்தாதி கஷாயம், சுகுமாரகஷாயம், சுகுமாரக்ருதம் ஆகியன உள்ளே சாப்பிடலாம்.

    வெளியே தேய்க்க


    மதுயஷ்டியாதி தைலம், ஆரணாளாதி தைலம் ஆகியன வெளியே தேய்க்க கூடியவை.அரிசி கழுவிய தண்ணீரை, புளிக்க வைத்து தாரா செய்யலாம். கரும்புச்சாறு கொண்டும் தாரா செய்யலாம்.

    - டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)

    வயிற்று வலி ஏற்படும் பகுதியை வைத்து என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். அதன் பின்னர் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
    வயிறு வலிக்கும் உங்கள் உடல் உறுப்பில் உள்ள பிரச்னைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. நம் வயிறு ஈரல், கல்லீரல், மண்ணீரல், சிறு குடல், பெருங்குடல், மலக் குடல், கணையம், சிறுநீரகம், சிறுநீர் பை, விந்துப் பை, சின்னப்பை உள்ளிட்ட உறுப்புகள் அடங்கியுள்ளன. நம் வயிறு எந்த பகுதியில் வலிக்கின்றதோ, அப்பகுதியில் உள்ள உறுப்பில் பிரச்சனை உள்ளது என்று நாமே கண்டுபிடிக்கலாம்.

    * மேல் வயிறு வலது மூலையில் வலியாக இருந்தால் ஈரல் மற்றும் பித்தப் பை கல் சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம்.

    * மேல் வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்

    * அடிவயிறு வலது மூலை வலித்தால் அது அப்பண்டிஸ்



    * அடிவயிறு நடுவில் வலித்தல் சிறுநீர்ப்பை வீக்கம், கர்பப்பை பிரச்னைகள்

    * அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்

    * நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி இருந்தால் நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன் பிரச்னை

    * தொப்புளை சுற்றி வலி இருந்தால் ஃபுட் பாய்சனாக இருக்கலாம்

    இப்படி வலி ஏற்படும் பகுதியை வைத்து நாமே என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம். 
    வாயுத் கோளாறு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காணலாம்.
    வாயுத் கோளாறு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணமாக அமைவது நாம் அன்றாடம் சாப்பிடும்போது, நீர் குடிக்கும்போது அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவது.

    அதே போல கரியமில வாயு சேர்த்த குளிர்பானங்கள் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் வாயு நம் வயிற்றினுள் சென்று சேர்கிறது. இப்படி கார்பனேடட் பானங்களைக் குடிப்பதாலும் வாய்வுக் கோளாறு ஏற்படுகின்றது.

    இதனை போக்கும் வீட்டு மருத்துவத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    * ஓமத்தை இளம் வறுப்பாக வறுத்து பொடியாக்கி பனை வெல்லம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் வாய்வு கலைந்து இரைச்சல் நிற்கும்.

    * தேங்காயை துருவி பால் எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் சரியாவதுடன் வயிற்றுவலியும் சரியாகும்.

    * கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து இடித்துச் சாறு பிழிந்து அதில் அரை டீஸ்பூன் அளவு சாற்றைக் குடித்து வந்தால் வயிறு உப்புசம் விரைவில் சரியாகிவிடும்.



    * மணத்தக்காளி இலைகளை நன்றாக அரிந்து மண்சட்டியில் போட்டு தாரளாமாக தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்ட அதை காலை மாலை என குடித்து வந்தால் கைகால்களில் வாய்வுத்கோளாறுகளால் ஏற்பட்ட வலிகள் நீங்கும்.

    * இளம் பிரண்டையை நார் உரித்து தேவையான அளவு காய்ந்த மிளகாய், புளி, வெள்ளைப்பூண்டு, தேங்காய், உளுந்து போன்றவற்றைச் சேர்ந்து நல்லெண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து மையாக அரைத்து மூன்றுவேளையும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு வாய்வுக் கோளாறு விலகும்.

    * காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், சுக்கு போன்றவற்றை சம அளவு எடுத்து நெய் விட்டு தனித்தனியாக வறுத்து பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்வுத் தொல்லை விலகும்.

    * இஞ்சியை இடித்துச் சாறு பிழிந்து சிறிது நீர் விட்டு பனைவெல்லம் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அதோடு சிறிதளவு ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்து கிளறி பாகு பதமானதும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வாய்வுத்தொல்லை விலகும்.

    * சுக்கு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை சம அளவு எடுத்து அதனுடன் சிறிது பெருங்காயம் மிளகு சேர்த்து வறுத்துப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் அளவு சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்.

    * சுக்கைப் பொடியாக்கி இரண்டு சிட்டிக்கை எடுத்துக் தேன் சேர்த்துக் குழைத்து காலை, மாலை என இரண்டுவேளைச் சாப்பிட்டால் வயிற்றுவலி சரியாகிவிடும்.

    * ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளை வெந்நீரில் ஊற வைத்து குடியுங்கள், வயிற்று இரைச்சல் தெரியாமல் போய்விடும்.
    சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம்.
    இதயம், நுரையீரல், மூளை போன்று உடலுக்கு ஒவ்வொரு உறுப்பும் முக்கியம் தான். உடலின் அனைத்து உறுப்புகளும் அதனதன் பணியை சிறப்பாக செய்கின்றன. அந்த வகையில் இதயம், ரத்தத்தை சுத்திகரிக்கிறது. நுரையீரல், சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தில் பிராண வாயுவை நிரப்பி அனுப்புகிறது. மூளை, ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இவ்வாறு உடலின் உள்உறுப்புகள் செய்யும் பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

    இத்தகைய உள்உறுப்புகளின் பட்டியலில் தண்டுவடம் என்பது மிக முக்கியமானது. பொதுவாக தண்டுவடம் பாதிக்கப்படுவதால் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. அதனால் சிறு வேலைகளுக்கு கூட பிறர் உதவியை நாடும் நிலை வந்து விடும். இத்தகைய சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை தலைமை மருத்துவர் வடிவேல் கூறியதாவது:-

    தண்டுவட நரம்பு மண்டலம்

    நம் உடலின் இயக்கம் மற்றும் உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடலின் இயக்கத்தை மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடம், மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதாலும், விபத்தினால் ஏற்படும் தண்டுவட எலும்பு முறிவு, அதன் ஜவ்வு பகுதி வீக்கம், எலும்பு நகர்வு, வயது முதிர்வு மற்றும் பிறவிக்குறைபாடு போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுகிறது. இது தவிர காசநோய் கிருமி மற்றும் பிற நோய்க்கிருமி தாக்குதலாலும் தண்டுவட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

    செயல்பாடுகளில் பாதிப்பு

    பொதுவாக விபத்தினால் தண்டுவட எலும்பு முறிந்தால், உடைந்த எலும்புகளுக்கு இடையில் அல்லது தசை நார்களுக்கு இடையில் நரம்புகள் அழுத்தப்படும் நிலை உருவாகும். அதனால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடும். மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டித்து போகும். அதனால் தசைகள் இயக்கமின்மை, மலம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும்.

    அதேபோல் தண்டுவடத்தின் எலும்பு, கழுத்து பகுதியில் முறிந்தால், கை-கால் செயல் இழப்பு, மார்பு மற்றும் வயிறு, முதுகு பகுதி முழுவதும் உணர்ச்சி இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டால் மூச்சு திணறல், உணவு விழுங்குதலில் பிரச்சினை ஏற்படும். கழுத்து எலும்புக்கு கீழ் என்றால் கால்கள், உடல், இடுப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய சூழலில் முதுகில் படுக்கைபுண் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.



    அறிகுறிகள்

    இதுதவிர விபத்தினால் இன்றி, மேற்கூறிய மற்ற காரணங்களால் தண்டுவடத்தின் பாதிப்பு நிலையை அறிய அதன் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின் சக்தி குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய பரிசோதனையில் நேராக, முன், பின்பக்கம் என 3 நிலைகளில் குனியவைத்து எக்ஸ்-ரே எடுத்து பார்த்தாலும், சி.டி.ஸ்கேனிலும் தண்டுவட பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இதுதவிர எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பதால் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம். இதுதவிர ரத்தபரிசோதனையிலும் தெரிந்து கொள்ளலாம்.

    பிசியோதெரபி

    அவ்வாறு கண்டறிவதில் தண்டுவடத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்தால், நோயாளியின் வயது, எலும்பு முறிவின் அளவு, தண்டுவட நரம்பு செயல்பாடுகளை பொறுத்து பிசியோதெரபி மூலம் சரி செய்ய இயலும். அவ்வாறான சிகிச்சையில் சிலருக்கு ஒரு ஆண்டில் குணம் ஆகும். பாதிப்பு அதிகமாக இருந்தால் குணமடைய 2 அல்லது 3 ஆண்டுகள் கூட ஆகலாம். இந்த காலகட்டத்தில் தவறாமல் அதற்குரிய மருந்து, மாத்திரைகளை உண்ண வேண்டும்.

    பொதுவாக பிசியோதெரபி செய்தும், மருந்து மாத்திரைகளை உண்டும் தண்டுவட பாதிப்பு சரி ஆகவில்லை என்றால் அதற்கு அடுத்த கட்டம் அறுவை சிகிச்சைதான். அப்போது தவறான அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது.

    சக்கர நாற்காலி

    தண்டுவடத்தில் முழு அளவில் முறிவு ஏற்பட்டால் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது. ஆனால் அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்த போதிய பயிற்சி, பிசியோதெரபி, ஆலோசனைகளை பெற வேண்டும். இதுதவிர ஒரு சிலருக்கு சக்கர நாற்காலி உதவி தேவைப்படலாம். அதன் உதவியால் வீட்டிற்குள் சிறு பணிகளை செய்யலாம். அலுவலகத்துக்கு செல்ல முடியும். மேலும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு விளையாடவும் முடியும்.

    பொதுவாக தண்டுவட பிரச்சினை என்பது குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வயதானவர்களுக்கு மட்டும் கால்சியம் சத்து குறைபாடால் இந்த பிரச்சினை வர வாய்ப்புண்டு. அதனை உணவு முறையால் சரி செய்ய இயலும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×