search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தார்"

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. #AFCAsianCup #Qatar #UAE
    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்று நடந்த அரைஇறுதியில் கத்தார் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த ஐக்கிய அரபு அமீரகம் அணி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அந்த அணியில் போலெம் கோகி (22-வது நிமிடம்), அல்மோஸ் அலி (37-வது நிமிடம்), ஹசன் அலி ஹைடோஸ் (80-வது நிமிடம்), ஹமித் இஸ்மாயில் (90-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.



    முன்னதாக கத்தார் அணி கோல் அடித்த போது, ஆத்திரமடைந்த உள்ளூர் ரசிகர்களில் சிலர் மைதானத்திற்குள் செருப்புகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்னொரு முறை தண்ணீர் பாட்டில்களை எறிந்தனர். இதனால் இரண்டு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. கத்தாருக்கு எதிராக ரசிகர்கள் அவ்வப்போது கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. வருகிற 1-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் கத்தார் அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. #AFCAsianCup #Qatar #UAE 
    சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் மறுவாழ்வுக்காக கத்தார் நாட்டு மன்னர் 50 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். #Qatar #SyrianRefugees #UNChiefAntonioGuterres
    நியூயார்க்:

    சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்தப் போரினால் கடந்த ஆண்டு நிலவரப்படி சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 24 லட்சம் பேர் அகதிகளாக பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.

    சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் மறுவாழ்வுக்காக கத்தார் நாட்டு மன்னர் 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.355 கோடி) நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இந்த தாராள நிதி உதவியை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.

    இதுபற்றி அவர் சார்பில் ஐ.நா. சபை துணை செய்தி தொடர்பாளர் பர்கான் ஹக் கூறும்போது, “இந்த நிதி உதவிக்காக கத்தார் நாட்டு மன்னருக்கும், அந்த நாட்டு மக்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்” என குறிப்பிட்டார். #Qatar #SyrianRefugees #UNChiefAntonioGuterres
    பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இந்த ஆண்டுடன் விலக கத்தார் தீர்மானித்துள்ளது. #QatarWithdraw #OPEC #QatarEnergyMinister
    தோஹா:

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய  கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.
     
    இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு  சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை மந்திரி காலித் அல் ஃபலி கடந்த மாதம் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

    நாளொன்றுக்கு உற்பத்தியில் 10 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொண்டால் பெட்ரோல் விலையை சமநிலையில் இருக்குமாறு செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.



    சவுதி அரேபியாவும் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினந்தோறும் 5 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்

    இந்நிலையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து 1-1-2019 முதல் விலகப்போவதாக கத்தார் நாடு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பை தோஹாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று வெளியிட்ட கத்தார் நாட்டு எரிசக்தி துறை மந்திரி சாத் அல்-காபி, ‘நாங்கள் தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுவோம்.

    ஆனால், எங்கள் நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இனி இயற்கை எரிவாயு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்திவோம் என்று குறிப்பிட்டுள்ளார். #QatarWithdraw  #OPEC  #QatarEnergyMinister
    பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், கத்தார் நாட்டுக்காக உளவு பார்த்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றுள்ளார். #Bahrain #Qatar #AlWefaqMovement #SheikhAliSalman
    துபாய்:

    பக்ரைன் நாட்டில் முடியரசராக இருப்பவர் மன்னர் ஹமது. இவரது ஆட்சியை எதிர்த்து சியா பிரிவைச் சேர்ந்த அல் வெஃபாக் இயக்கத்தின் தலைவர் ஷேக் அலி சல்மான் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனர். இதனால் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    மன்னரின் முடியாட்சியை கடுமையாக எதிர்த்தும், ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர்.  இதனால், அல் வெஃபாக் இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்களை மன்னர் ஹமது தடை செய்துள்ளார். மேலும், அரசுக்கு எதிராக போராடிய பலரையும் கைது செய்துள்ளார்.



    இந்த நிலையில், பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், ஆளும் அரசை கவிழ்ப்பதற்காக கத்தார் நாட்டுடன் இணைந்து சதி செய்வதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், ஷேக் அலி சல்மானுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    கத்தார் நாடு, ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனும், ஈரானுடனும் தொடர்பு வைத்து இருப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 2017-ம் ஆண்டு பக்ரைன், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கத்தார் நாட்டுடனான உறவை முற்றிலுமாக முறித்து கொள்ள முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  #Bahrain #Qatar #AlWefaqMovement #SheikhAliSalman
    கத்தார் பயணத்தை நிறைவுசெய்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று குவைத் நாட்டின் அமிர் (ஆட்சியாளர்) மற்றும் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwarajinKuwait #KuwaitAmir
    குவைத் சிட்டி:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கத்தார், குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்றார்.

    கத்தார் பயணத்தை நிறைவுசெய்த சுஷ்மா சுவராஜ், இன்று குவைத் நாட்டின் அமிர் (ஆட்சியாளர்) ஷேக் சபாஹ் அல்-அஹமத் அல்-ஜாபெர் அல்-சபா மற்றும் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஜபார் அல் முபாரல் அல் ஹமாத் அல் சபா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இந்தியா-குவைத் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    மேலும், துணை பிரதமரும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷேக் சபாஜ் காலித் அல்-ஹமாட் அல்-சபாஹ் ஆகியோரையும் அவர் சந்தித்தார். குவைத்தில் வாழும் சுமார் 8 லட்சம் இந்தியர்களின் நலன் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்புத்துறை கூட்டுறவு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.  

    இந்த சந்திப்புக்கு பின்னர் சுஷ்மா தனி விமானம் மூலம் இன்று மாலை டெல்லி புறப்பட்டார். #SushmaSwarajinKuwait #KuwaitAmir
    கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது. #Qatar #KeralaFlood #FinancialAid
    துபாய்:

    மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும், வெளிநாடுகளும் உதவி செய்து வருகின்றன. நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி வழங்குவதற்காக அவசர குழு ஒன்றை அமைத்தது. இதன் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது.

    இதற்கான உத்தரவை கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி பிறப்பித்தார். இதையடுத்து, கத்தார் அரசின் அறக்கட்டளை பிரதிநிதிகள் மூலம் இந்தத் தொகை இந்தியாவிடம் அளிக்கப்பட்டது. இத்தொகை கேரள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவி செய்யும்பொருட்டு வழங்கப்படுவதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்து உள்ளது. #Qatar #KeralaFlood #FinancialAid

    ரஷ்யாவிடம் இருந்து விமானங்களை எதிர்த்து அழிக்கும் ஏவுகணைகளை கத்தார் வாங்கினால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. #Saudi #Qatar
    ரியாத்:

    சவூதி அரேபியா, அமெரிக்கா, பஹ்ரைன், எகிப்து உட்பட பல வளைகுடா நாடுகள் கத்தார் உடனான தூதரக மற்றும் வியாபார ரீதியிலான உறவை கடந்தாண்டு துண்டித்தது. இதற்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

    கத்தார் நாட்டு அரசு பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக கூறி வளைகுடா நாடுகள் அந்நாட்டுடனான உறவை துண்டித்தன.
    இந்நிலையில், கடந்த ஆண்டு ரஷ்யாவுடன் கத்தார் அரசு ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரியில், விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சவுதி மன்னர் சல்மான், பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மாக்ரோனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பிரபல நாளிதழில் வெளியான செய்தியில், கத்தார் நாடு ஏவுகணை வாங்குவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க சவுதி அரசு தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்தவும் தயார் எனவும்
    குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பிரான்ஸ் அதிபர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆயுத பரிமாற்றத்தை தடுத்து அமைதி நிலவ வழிசெய்யுமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி வெளியானது.

    ஆனால் இதுவரை இதுகுறித்து பிரான்ஸ் பதில் ஏதும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Saudi #Qatar 
    ×