என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சரவணம்பட்டி"
கோவை:
கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
போலீசாரின் தீவிர விசாரணையில் சின்னவேடம் பட்டியில் 3 பேர் சிக்கினர்.
விசாரணையில் அவர்கள் கணபதி ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்த மோகித் குமார் (22), உக்கடம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த நதிஷ் குமார்(26), மணியகாரம்பாளையத்தை சேர்ந்த நவீன் குமார்(22) என்பது தெரிய வந்தது.
இவர்களில் மோகித் குமார், நவீன்குமார் இருவரும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஆவார்கள். நதிஷ் குமார் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மோகித் குமார், நவீன் குமாரிடம் கொடுத்துள்ளார்.
அவர்கள் காரில் வைத்து கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா, 1 கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், கைதான 3 பேரும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தவர்கள் ஆவர்.
கோவையில் கஞ்சா விற்று வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இதனால் கஞ்சா விற்பனை முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஓன்றிரண்டு பேர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சில மாணவர்கள் தவறான நண்பர்களின் பழக்கத்தால் கஞ்சாவுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாத நிலைக்கு சென்று விடுகின்றனர்.
எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் யார்- யாருடன் நண்பர்களாக பழகுகின்றனர்? வெளியில் அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது? என்பதையும் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை:
ஈரோடு மாவட்டம் கோபி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 65). இவர் சரவணம்பட்டி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். நேற்றுஇரவு சரவணம்பட்டி சத்திரோட்டில் நடந்து சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தர்மலிங்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
சம்பவஇடத்துக்கு போக்கு வரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது எஸ்.எஸ்.குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ரோகித்(18) என்பது தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்