search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 131652"

    உலக அளவில் புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் கோவில் கருவூல சாவிகள் கடந்த ஏப்ரல் மாதம் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் போலி சாவிகள் கிடைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. #LordJagannathTemple
    புவனேஸ்வர்:

    உலக அளவில் புகழ் பெற்ற ஜெகன்நாதர் கோவில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலின் கருவூல அறையில் ஜெகன்நாதருக்கு அலங்காரம் செய்யும் ஆபரணங்கள் மற்றும் பக்தர்கள் செலுத்திய தங்க, வைர நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இந்த கருவூலம் 1905, 1926, 1978 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கு பார்க்கப்பட்டு, பட்டியலிடப்பட்டது.

    இந்நிலையில், ‘ரத்னா பந்தர்’ என்றழைக்கப்படும் பத்து பகுதிகளை கொண்ட இந்த கருவூல அறையின் சுவர், கூரை, தரை ஆகியவற்றின் உறுதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக 34 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. 

    அப்போது, கருவூலத்தின் உள் அறையில் நகைகள், பணம் மற்றும் இதரப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கான சாவிகள் ஆலய நிர்வாகிகள் யாரிடமும் இல்லை என்றும் அந்த சாவிகள் காணாமல் போனதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து, பூரி நகரில் உள்ள ஜெகன்நாதர் ஆலயத்தின் கருவூல சாவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக், ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    நான்கு அதிகாரிகளுடன் 5 நாட்களாக தீவிரமான தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில் நேற்று, பூரி மாவட்ட பதிவு அறையில் இருந்து ‘கரூவூலத்தின் போலி சாவிகள்’ என எழுதப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த கவர் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    அந்த கவரில் கரூவூலத்தை திறக்க பயன்படும் இரண்டு போலி சாவிகள் இருந்துள்ளது. விரைவில் அந்த போலி சாவிகள் ஜெகன்நாதர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என பூரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வால் இன்று தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஒடிசா காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், “கருவூலத்தின் போலி சாவிகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் போலி சாவி போட்டு கருவூலத்தை திறக்க விதிமுறைப்படி அனுமதி இல்லை, இத்தனை நாட்களாக இந்த சாவிகள் எங்கே இருந்தது ? சாவிகள் மாயமான விவகாரத்தில் அரசு மௌனமாக இருப்பது ஏன் ? இப்போது கிடைத்துள்ள போலி சாவிகள் தான் உண்மையான சாவியாக இருக்குமோ என்ற குழப்பத்தில் இந்த அரசு உள்ளது” என தெரிவித்துள்ளார். #LordJagannathTemple
    ஒடிசா மாநிலத்தில் இறந்த 24 மணி நேரத்தில் தாய்,மகன் கண்களை குடும்பத்தினர் நான்கு பேருக்கு தானம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #eyedonation
    புபனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கன்ஞம் மாவட்டத்தில் உள்ள பெர்கம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமேஷ்வர் ராவ்(47). இவர் அப்பகுதியில் உள்ள பிரண்ட்ஸ் கெல்பிங் கிளப் என்ற அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தார். இந்த அமைப்பின் மூலம் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

    காமேஷ்வர் ராவின் தாய் பார்வதி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். மறுநாள் காலை காமேஷ்வர் ராவ் மரணமடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பார்வதியின் கண்களை தானம் செய்தனர். மறுநாள் காமேஷ்வரின் கண்களை தானம் செய்தனர்.


    பின்னர் அந்த கண்கள் பரிசோதனை செய்யப்பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டது. அதன் மூலம் நான்கு பேர் கண் பார்வை பெற்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் குடும்பத்தினர் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். #eyedonation

    சூதாட்டத்தில் பணம், நகைகளை இழந்து கடைசியாக மனைவியை வைத்து சூதாடி தோற்றதால், கணவன் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம் ஒரிசாரில் நடந்துள்ளது.
    புபனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள பாலியாபால் பகுதியைச் சேர்ந்த நபர் ஐதராபாத்தில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ம் தேதி மனைவியை கிராமத்தில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்ற அந்த கணவன், அங்கு ஏற்கனவே காத்துக்கொண்டிருந்த அபிராம் தலாய் என்பவரிடம் மனைவியை ஒப்படைத்துள்ளார்.

    என்ன நடக்கிறது என புரியாமல் இருந்த அந்த பெண்ணை தலாய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை, அந்த பெண்ணின் கணவர் அருகிலிருந்து வேடிக்கை பார்த்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறக்கூடாது என கொலை மிரட்டலும் அப்பெண்ணுக்கு விடப்பட்டுள்ளது.

    கொலை மிரட்டலையும் தாண்டி அப்பெண் போலீசில் சென்று புகாரளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் கணவரும், தலாயும் சூதாடியுள்ளனர். தலாயிடம் கையிலிருக்கும் பணத்தை இழந்த அந்த கணவன் இறுதியாக தனது மனைவியை வைத்து சூதாடியுள்ளான்.

    ஆனால், அதிலிலும் தோற்றுப்போகவே சிறிதும் இரக்கமின்றி தனது மனைவியை குளத்திற்கு அழைத்து வந்து தலாயிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது, இருவரும் தலைமறைவாக இருக்கவே போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 
    ×