search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோதுமை"

    ராஜஸ்தான் ரே‌ஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று முதல் மந்திரி சோக் கெலாட் அறிவித்துள்ளார். #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றார்.

    தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் பணி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் ரே‌ஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.

    சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது:-

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு ரே‌ஷன் கடையில் வழங்கப்படும். இதன்மூலம் ரூ.1.53 கோடி மக்கள் பயன் அடைவார்கள். சிறிய மற்றும் வயதான விவசாயிகள் தற்போது பென்‌ஷன் திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ளனர். அவர்களும் பென்‌ஷன் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்

    பால் கொள்முதல் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.2 போனஸ் வழங்கப்படும் 5 ஆயிரம் பால் பூத்துக்கள் திறக்கப்படும். விவசாயிகள் சிறப்பு சலுகையாக சிறிய கால கடன்தொகை வழங்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி, நில வளர்ச்சி வங்கியில் விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முற்பட்டோர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். ராஜஸ்தானில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AshokGehlot

    உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் 360 டன் கோதுமை அன்பளிப்பாக அனுப்பியது. #Pakistangiftedwheat
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் கொத்து கொத்தாக மக்களை கொன்று குவிக்கின்றனர்.

    அண்டைநாடான ஆப்கானிஸ்தானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கோதுமை அனுப்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன் அடிப்படையில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அனுப்பிவைத்த 360 டன் கோதுமையை தோர்காம் எல்லைப்பகுதியில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பெற்று கொண்டனர். #Pakistangiftedwheat #360tonswheat
    ×