search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நண்பர்"

    பங்குதரகர் ஒருவர், பணப்பிரச்சினையில் நண்பரை கொலை செய்து உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூர சம்பவம் விராரில் நடந்துள்ளது.
    வசாய் :

    நெஞ்சை பதறச்செய்யும் இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    பால்கர் மாவட்டம் விரார் மேற்கு எவர்சைன் அவென்யூ பகுதியில் பச்ராஜ் பாரடைஸ் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. குடியிருப்புவாசிகள் விலங்குகள் ஏதாவது அருகில் செத்து கிடக்கும் என கருதினர்.

    இந்தநிலையில், கட்டிடத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. மேலும் துர்நாற்றம் அதிகமானது. இதுபற்றி குடியிருப்புவாசிகள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். அடைப்பை சரி செய்வதற்காக தொழிலாளர்கள் வந்து அங்குள்ள கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்தனர்.

    அப்போது, கழிவுநீரில் 3 மனித விரல் துண்டுகள் மிதந்து கொண்டு இருந்தன. இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அர்னாலா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த விரல்களை கைப்பற்றினர்.

    இதற்கிடையே கழிவு நீர் குழாய்க்குள் அதிகளவில் மனித உடல் பாகங்கள் துண்டு, துண்டாக சிக்கியிருந்தது. மேலும் அங்குள்ள சாக்கடையிலும் மனித உடல் பாகங்கள் மிதந்து கொண்டிருந்தன. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த உடல் பாகங்களையும் போலீசார் கைப் பற்றினர்.

    150-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் 40 கிலோவுக்கும் மேல் எடை கொண்டதாக இருந்தன.

    கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் கலினாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குடியிருப்புவாசிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இந்தநிலையில், மனித உடல் பாகங்கள் பச்ராஜ் பாரடைஸ் கட்டிடத்தின் 6-வது மாடியில் உள்ள 602-ம் எண் வீட்டில் உள்ள கழிவுநீர் குழாய் வழியாக போடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அந்த வீட்டை மும்பை சாந்தாகுருஸ் வகோலாவை சேர்ந்த பிண்டு சர்மா(வயது42) என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு:-

    பிண்டு சர்மா பங்கு தரகராக உள்ளார். இவரது நண்பர் கணேஷ் கோலட்கர்(58). இவர் தானே மாவட்டம் மிராரோட்டில் வசித்து வந்தார். அச்சகம் நடத்தி வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன் பிண்டு சர்மாவிடம் கடனாக ரூ.1 லட்சம் வாங்கியிருந்தார். அதில், ரூ.40 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதி 60 ஆயிரத்தை கொடுக்கவில்லை. அந்த பணத்தை கேட்டு அவர், கணேஷ் கோலட்கரை தொந்தரவு செய்து வந்தார்.

    இருப்பினும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி விராரில் தான் வாடகைக்கு எடுத்து இருக்கும் வீட்டை பார்த்து வருவோம் என கூறி பிண்டு சர்மா, கணேஷ் கோலட்கரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து இருவருக்கும் இடையே கடன் தொடர்பாக தகராறு உண்டானது. அப்போது, கணேஷ் கோலட்கரை பிடித்து பிண்டு சர்மா தள்ளிவிட்டுள்ளார். இதில், தரையில் மோதியதில் தலையில் படுகாயம் அடைந்த கணேஷ் கோலட்கர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதைப்பார்த்து பிண்டு சர்மா அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

    பின்னர் நடந்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உடலை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சாந்தாகுருஸ் திரும்பினார். மறுநாள் புதிய ஆக்சாபிளேடு ஒன்றை வாங்கிக்கொண்டு விராருக்கு சென்ற அவர், வீட்டுக்குள் இருந்தபடி கணேஷ் கோலட்கரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டார்.

    அதை வெளியில் எடுத்து சென்றால் யாரும் பார்த்து விடுவார்களோ என பயந்துபோன அவர், ஆட்டுக்கறியை நறுக்குவது போல் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கினார்.

    பின்னர் அந்த துண்டுகளை கழிவறை கோப்பைக்குள் கொட்டினார். எஞ்சியிருந்த துண்டுகளை கழிவுநீர் குழாய்க்குள் போட்டு தண்ணீரை ஊற்றினார். இதில், அந்த உடல் துண்டுகள் அடைத்துக்கொண்டன.

    இனி மற்ற உடல் பாகங்களை அங்கு போட முடியாது என தெரிந்ததும் அவர் ஒரு பையில் மூட்டைக்கட்டி கட்டிடம் அருகே உள்ள சாக்கடையில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன.

    இதையடுத்து போலீசார் பிண்டு சர்மாவை அதிரடியாக கைது செய்தனர்.

    கணேஷ் கோலட்கரின் தலையை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தலையையும் சாக்கடையில் தான் வீசியதாக பிண்டு சர்மா போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.

    அவர் ஒருவராக உடலை துண்டு, துண்டாக்கி நறுக்கி வீசியிருக்க முடியாமா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. எனவே இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணப்பிரச்சினையில் நண்பரை கொன்று உடலை கூறுப்போட்டு வீசிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது30), பிரபல ரவுடி. பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி என்பவரை கொன்ற வழக்கிலும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி வந்த மகேஷ் மலைப்பகுதியில் தங்கி வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் மலையில் அவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் மாலை வரை மகேசுடன் அவரது நண்பர் முகவூர் பூபேஸ் குப்தா நகரைச் சேர்ந்த வீரமணிகண்டன் (32) என்பவர் சுற்றி திரிந்ததை சிலர் பார்த்துள்ளனர்.

    ஆனால் தற்போது வீரமணிகண்டன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர்தான் மகேசை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.

    மணமக்களுக்கு மணமகனின் நண்பர்கள் சிலர் மணமக்களிடம் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். #FuelPriceHike #WeddingBride
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழபருத்திக்குடியை சேர்ந்த இளஞ்செழியனுக்கும், நாகை மாவட்டம் செம்மியவழுரை சேர்ந்த கனிமொழிக்கும் குமராட்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினர்.



    அப்போது மணமகனின் நண்பர்கள் சிலர் மணமக்களிடம் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இதை மணமக்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

    பொதுவாக திருமண விழாவில், மணமக்களுக்கு பரிசு பொருட்கள், மொய் பணம் ஆகியவற்றை தான் வழங்குவார்கள். ஆனால் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்கி வருவதால் பெட்ரோலை பரிசாக அளித்த சம்பவம் மணவிழாவுக்கு வந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த நிமிடம் முதல் நெட்டிசன்கள் ‘மீம்ஸ்’களை பறக்க விட்டனர். இதனால் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் என்று எங்கும் இந்த மணமக்களின் ‘மீம்ஸ்’கள் தான் நிரம்பி வழிந்தன. #FuelPriceHike #WeddingBride 
    அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் பேஸ்புக் நண்பர் மூலம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #facebookabuse
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குர்கான் பகுதியியைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த 1 வருடமாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ராகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.

    தற்போது தனது பேஸ்புக் நண்பர் ராகுல் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அந்த பெண், ராகுல் தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டுவதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



    பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சமூக வலைதளங்கள் மீதான மோகமும் அதிகரித்து வருவது வருந்தத்தக்க உண்மையாகும். #facebookabuse
    கோவில் குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி கோவை வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கொழிஞ்சாம்பாறை:

    கோவை கணபதி கே.கே. நகரை சேர்ந்த சாமி- கவிதா தம்பதியின் மகன் பரத் (வயது 19). இவரது தம்பி தினேஷ். இவர்களது நண்பர்கள் சந்தோஷ் (18), சக்தி (19). இவர்கள் 4 பேரும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர்.

    நேற்று மாலை நெம்மாறை நெல்லிககுளக்கரை பகவதியம்மன் கோவில் குளத்தில் குளிக்க சென்றனர். குளத்தில் திடீரென நண்பர் சக்தி ஆழமான பகுதியில் சிக்கி அலறினார்.

    அதிர்ச்சியடைந்த பரத் நண்பரை காப்பாற்ற குளத்தில் குதித்தார். ஆனால் சக்தி தண்ணீரில் இருந்து தப்பி கரையேறினார். அவரை காப்பாற்ற குதித்த பரத் குளத்தில் மூழ்கினார்.

    கரையில் இருந்த மற்ற 3 பேரும் நெம்மாறை போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து பரத்தை தேடினர். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் அவரை மீட்டனர்.

    உடனே பரத்தை நெம்மாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் பரத் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×