search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 132908"

    கூவம் மற்றும் அடையாறு கரையோரத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். #ChennaiCorporation

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை நகரத்தில் 2015-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம், சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களே என நீதி மன்ற ஆணைகளின்படி நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி உறுதியாக உள்ளது.

    அந்த அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

    கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடையாறு நதியின் கரையோரம் 9,539 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர் என கண்டறியப்பட்டு, 4,134 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, கூவம் நதியோரம் 14,257 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 6,879 குடும்பங்கள் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக் கால்வாய்கள் ஓரம் மொத்தம் 3,041 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 1,671 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    விரிவாக்கப்பட்ட பெரு நகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் வெள்ளத்தடுப்பு கட்டும் பணி மேற்கொள்ள நான்கு கால்வாய்களின் ஓரம் வசித்த 81 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கண்டறியப்பட்டு, 81 குடும்பங்களும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கூவம் நதி, அடையாறு நதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழிக்கால்வாய்களில், 26,837 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இதுவரை 12,765 குடும்பங்கள் தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி, மறுகுடியமர்வு செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiCorporation

    நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ராசாமணி கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி களிலும் சாலை பாதுகாப்பு அமைப்பு தொடங்க வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கோர்ட்டு உத்தரவுப்படி உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், நீர் நிலை புறம்போக்கில் செங்கல்சூளை, விவசாயம் போன்ற பணிகள் செய்யப்பட்டு இருந்தாலும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். 

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீரை ஏரி, குளங்களில் நிரப்புவதற்கு முழுவீச்சில் செயல்பட வேண்டும். ஏரி, குளங்களில் நீர் நிரப்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய பயன்பாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், போலீஸ் துணை கமி‌ஷனர்கள் நிஷா, மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) சங்கரநாராயணன், துணை கலெக்டர் கமல்கிஷோர் உள்பட மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் வெளிபட்டினம் பகுதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சுற்றி உள்ள பகுதி நீர்நிலை புறம்போக்கு பகுதி என்று அந்த இடத்தை காலி செய்ய நகரசபை அதிகாரிகள் உத்தரவிட்டனர். கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன்படி நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகரசபை அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர். இதற்கு அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளையும், ஜே.சி.பி. எந்திரத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள் உடனடியாக காலி செய்ய அவகாசம் வழங்கிய அதிகாரிகள் திங்கட்கிழமை மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவித்து சென்றனர்.

    இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் கோவில் நிலத்தில் கோவிலுக்கு வாடகை செலுத்தி முறையாக குடியிருந்து வருவதாகவும், சிலர் தங்களுக்கு சொந்தமான இடம் என்றும் தெரிவித்து வாதிட்டனர். அதற்கு நகரசபை அதிகாரிகள், அலுவலக பதிவேடுகளின்படி மேற்கண்ட இடங்கள் ஊருணி நீர்நிலை புறம்போக்கு பகுதி என்று இருப்பதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். 
    ×