search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாராகி"

    நம்மை காத்து ரட்சிக்கும், இந்த மாபெரும் பேரண்டமெல்லாம் வணங்கும் ‘‘மகாமாயை’’யை நாமும் வணங்கி வெற்றி பெற வேண்டுமென்றால் ஒருசில விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.
    உங்கள் லட்சிய வெற்றியை உங்கள் கரத்தில் கொடுத்து நீங்கள் மகிழும் முகத்தை பார்த்து தன்னை வேண்டி வந்தவன் மகிழ்வோடு இருக்கிறான் என ஆனந்த நடனமிட்டு கொஞ்சி மகிழ்ந்து விளையாடுவாள் என் அன்னை வாராகி. நமக்கு தெரிந்ததெல்லாம் அவள் உக்ரமானவள், ஆவேசமிகுந்தவள் என்று தான். ஆனால் அது அப்படி அல்ல. தன்னை மறவாமல் சிந்திக்கும் பக்தனோடு கொஞ்சி விளையாடும் குழந்தை.

    இவள் அன்புக்கு அழகாய் அடிபணிந்து தன் பக்தனை அனைத்து மகிழ்பவள். வாராகி என்றாலே பயத்தை போக்கி அவள் அபயகரம் நம்மை காத்து ரட்சிக்கும், இந்த மாபெரும் பேரண்டமெல்லாம் வணங்கும் ‘‘மகாமாயை’’யை நாமும் வணங்கி வெற்றி பெற வேண்டுமென்றால் ஒருசில விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.

    வாராகியை வழிபட அவள் அருளாட்சி உங்களை பின்தொடர செய்ய வேண்டியவை:-

    1. வாராகி அன்னை தூய்மையான அன்புக்கு, பக்திக்கு வசப்படுபவள், தன் பக்தனை எந்த நொடியிலும் காத்தருளும் மனோபாவம் கொண்டவள். இப்படி தன் பக்தனையே எந்நேரமும் காத்து அருளும் தேவி அமர ஒரு தூய்மையான இடம் தேவை. இடம் என்றால் மாடமாளிகையோ, அலங்கார தோரணையோ இவையெல்லாம் நான் குறிப்பிடவில்லை. அவள் தூய்மையாக இருக்க வேண்டும் என எண்ணுவது தன் பக்தனின் மனதை மட்டும் தான். அது போதும் அவள் வந்து அமர்ந்து அருள்புரிய.

    2. வாராகியை வழிபட நினைப்பவர்கள் எக்காரணம் கொண்டும் மற்றவர்களை தூற்றவோ சபிக்கவோ கூடாது. அது உங்கள் வலிமையை குறைக்கும்.

    3. எனக்கு இது வேண்டும் தாயே கொடு என கேட்கலாம். ஆனால் வேறொருவரை கெடு என்று இந்த தேவியிடம் வேண்டக்கூடாது. ஏனெனில் கண்ணிமைபோல் காக்கும் அன்னைக்கு நம் சத்ருபத்தி தெரியாமலா போய்விடும். நமக்கு தீங்கு செய்பவர்களை அவள் பார்த்து கொள்வாள்.

    4. வாராகி அருள் நமக்கு இருக்கிறது என்ற கர்வமும், அதனால் மற்றவர்களிடம் தன்னை பற்றி பெருமித பேச்சு இருக்கவே கூடாது.

    5. வாராகி நமக்கு முன்கூட்டியே நிகழ்வுகளை எண்ணவடிவாக சொல்லி எச்சரிப்பாள். அதை உள்வாங்கும் மனதூய்மை நமக்கு என்றும் வேண்டும்.

    6. மற்றவர்களுக்காக உங்கள் பிரார்த்தனை அன்னையிடம் அமைந்தால் இது மிகப்பெரிய வலிமை. அன்னை உடனடியாக அவன் மனதில் குடிகொண்டு நம் ஆசையை நிறைவேற்றுபவள்.

    7. வாராகி அன்னை அருளை பெற முக்கிய விதி புறம்பேச கூடாது. மற்றவர் படும் துயரம் கண்டு நாம் அதில் குளிர்காய கூடாது. இந்த எதிர்மறை எண்ணம் இருந்தால் அன்னை அருள் நம்மை என்றைக்கும் நெருங்காது. ஆயிரம் மந்திரங்கள் லட்ச எந்திரமும் வைத்திருந்தாலும் அன்னை பார்வை நம்மீது படாது.

    8. மனத்தில் பொய், வஞ்சம், இதெல் லாம் இருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் வாராகி அதில் உடனே அமர்ந்து அருள்புரிவாள்.

    9. நெறி எனும் முக்கிய விதியை யார் கடைபிடிக்கின்றார்களோ. அவர்களிடத்தில் பிரியம் கொண்டு அன்போடு அருளாட்சி செய்பவள் தான் இந்த வாராகி அன்னை. என்றைக்கும் ஒவ்வொருவர் எண்ணங்கள் பார்த்து வருபவள் தான் இவள். நன்மை எனில் நல வாழ்வும், அதர்மம் எனில் தண்டனை வாழ்வும் வழங்குபவள். 
    பாலியல் தொழிலாளி என்று அவதூறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது என்று இயக்குநர் வாராகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார். #SriReddy #SriLeaks
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

    தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார். ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது செக்ஸ் புகார் கூறி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இயக்குனரும், நடிகருமான வாராகி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    ஸ்ரீரெட்டியே தான் விரும்பி சிலருடன் பாலியலில் ஈடுபட்டதாக கூறியிருப்பதால் அவர் மீது விபசார பிரிவிலும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவிலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாராகி தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.

    நான் பாலியல் தொழிலாளி இல்லை. பாலியல் தொழிலாளி என்று அவதூறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது என்று ஸ்ரீரெட்டி கூறினார். இந்த நிலையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ஸ்ரீரெட்டி தன்னை விலைமாது என்று கூறிய இயக்குனர் வாராகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனு அளித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-

    இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட அனைத்து மொழி பட உலகிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. பட வாய்ப்பு கேட்பவர்களை படுக்கையில் பயன்படுத்துகிறார்கள். நான் பாதிக்கப்பட்ட பெண். இந்த பிரச்சினையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே போராடுகிறேன். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து இருக்கிறேன். எங்குமே எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.



    நீதிக்காக போராடுகிறேன். இந்த பிரச்சினையை நடிகர் சங்கத்துக்கு கொண்டு சென்றும் பயன் இல்லை. நான் விலைமாது என்றும் என்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாராகி என்பவர் புகார் கூறி இருக்கிறார். அவரை யார் என்றே தெரியாது. என்னை விலைமாது என்கிறாரே? அவர் என்னிடம் வந்தாரா? எனக்கு பணம் கொடுத்தாரா?

    பெண்களுக்கு மரியாதை கொடுக்க அவருக்கு தெரியவில்லை. என்னை விலைமாது என்று கூறிய வாராகி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருக்கிறேன். இந்த புகார் மீது உளவு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார். #SriReddy #SriLeaks #Varaki

    சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வரும் ஸ்ரீரெட்டி, விபச்சாரம் செய்வதாக இயக்குநர் வாராகி கூறிய நிலையில், என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் என்று வாராகிக்கு, ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். #SriReddy #Varaki
    பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றியதாக தெலுங்கு பட உலகினர் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் சினிமா மீது புகார் கூறி வருகிறார். சென்னையில் முகாமிட்டு தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிவருகிறார். 

    ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை கண்டித்தது. தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் போலீஸ் விசாரணை நடத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். 

    இதற்கிடையே இயக்குநர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் அளித்தார். நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபடுவதாகவும் விபச்சாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.



    இந்த நிலையில் ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறி இருப்பதாவது,

    நான் பாலியல் தொழிலாளி இல்லை. என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு உணவு கூட தராமல் வெளியே அனுப்பினார்கள். யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள். பாதிக்கப்பட்ட பெண் நான். எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். #SriReddy #Varaki

    சிவா மனசுல புஷ்பா படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் வாராகி, நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து வரும் ஸ்ரீரெட்டி செய்வது விபச்சாரம் தான் என்று தாக்கிப் பேசினார். #Srireddy #Varaki
    வாராகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் மறுக்கப்பட்டதாக வாராகி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வாராகி, 

    படத்தின் பெயரை மாற்ற சொல்லி தணிக்கை குழு வற்புறுத்தியதாக கூறினார். சென்சார் போர்டு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. என் படத்தின் பெயரும், அதில் வரும் கதாபாத்திரங்களும் தான் பிரச்சனை என்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்று சென்சார் போர்டுக்கு கேள்வி எழுப்பினார். அந்த மாதிரி பெயராக இருந்தால் மாற்றலாம். பெயரை மாற்றுவதற்கான சரியான காரணமும் சொல்லவில்லை. 



    ஸ்ரீரெட்டி மீது புகார் கூறியது பற்றி கேட்டதற்கு வாராகி கூறியதாவது,

    சினிமா துறையே ரொம்ப நலிந்து கிடக்கிறது. சமூக சீர்த்திருத்த கருத்துக்களை மக்களிடையே கொண்டுபோய் சேர்த்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். லாரன்ஸ் யார் என்பது நமக்கு தெரியும், மக்களட, ஊனமுற்றோர் என லாரன்ஸ் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். ஸ்ரீரெட்டி ஒன்றும் குழந்தை கிடையாது. அவர் அனைத்திலும் உடன்பட்டு தான் சென்றிருக்கிறார். படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஒருமுறை ஏமாறி போயிருக்கலாம். பலமுறை ஏமாறினால் அதுக்கு பெயர் என்ன? அது விபச்சாரம் என்று தான் நான் சொல்கிறேன். அதனால் தான் விபச்சார வழக்கில் ஸ்ரீரெட்டியை கைது செய்ய சொல்லி புகார் அளித்துள்ளேன். #Srireddy #Varaki

    ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அன்னை லலிதாம்பிகை, ஒவ்வொரு அரக்கனையும் கொல்ல ஒரு சக்தியை உருவாக்கினார். அந்த வகையில் விசுக்ரன் எனும் அசுரனை கொல்ல வாராகி எனும் சக்தியை அன்னை லலிதாம்பிகை படைத்தாள். வாராகியின் சிறப்பு பற்றி லலிதா சகஸ்ரநாமத்தின் 78-வது சுலோகத்தில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். அதற்கு வழிகாட்ட பெரம்பலூரைச் சேர்ந்த வாராகி உபாசகர் சத்தியசீலன் குருக்கள் வாராகி பற்றிய தகவல்களை தருகிறார். படித்து பலன் பெறுங்கள்...

    ஆதிநாயகி அண்டம் படைத்த தாயும் நீ
    பாதி உடல் தான்யேற்ற சிவபத்தினி நீ
    சோதி வடிவாகி சோதனைகளை முறிப்பவள் நீ
    வேத ஒளியாகி இவ்வுலகை காப்பாய் இனி

    “சர்வம் சத்திமயம் அவளின்றி இவ் வுலகில் எது ஜெயம்”-இவ்வுலகமே அவள் பிடியில் தான் இயங்குகிறது, நான்மறையும், நானிலமும், எண் திசையும் அவளின் அருளாட்சியை தான் போற்றி புகழ்கின்றது. அண்டத்தை காக்கதான் எத்தனை வடிவம்? அதில் வரும் பேராற்றலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆதிசக்தியாய் தோன்றி ஆதிசிவன், ஆதிநாரணன், ஆதிபிரம்மன் ஆகியோரை படைத்த தாய் பற்றி நான்மறை வேதம் போற்றும் புகழ் போதாது,போதாது.

    அன்னையவள் உலக உயிர்காக்க எடுத்த வடிவங்கள் சில. கொடுத்த வரங்களும் நலங்களும் பல,
    காஞ்சியிலே காமாட்சி
    மதுரையில் மீனாட்சி

    காசியிலே விசாலாட்சியாக, உருவெடுத்து உயிர் களை காத்தருள்பவள், வடிவங்களில் வகைகோடி இருந்தாலும் சக்தி என்ற வடிவின் நாயகி தான் அவள், வரங்களை அளிப்பதில் வரலெட்சுமியாய், கல்வியை அளிப்பதில் கலைமகளாய், வீரத்தை கொடுப்பதில் மலை மகளாய் வடிவெடித்து வையகத்தை வாழ செய்பவள்.

    சரி அவள் பெருமைகளை சொல்ல இந்த ஒரு ஜென்ம வாழ்நாள் போதாது சொல்லி கொண்டே போகலாம்.

    அனைத்திலும் அவள் உறைந்திருக்கிறாள், இறுதியில் அவளே கதி என் பதையும் அவளே முக்தி தரும் மூகாம்பிகா என்றும் நம்மை சொல்லால் சொல்ல வைத்து உணர்வால் உணர்த்துகிறாள் என் அன்னை.

    அவள் அவதாரம் மன்மத வருடம் கொண்டே தொடங்கியதை நான் உணர் வேன். அதை உங்களுக்கும் உணர்த்த நான் கடமைபட்டுள்ளேன்.
    யார் இந்த வாராகி?

    (1) சக்திகளிலே சாந்த சொரூபமும் உண்டு, உக்ர சொரூபமும் உண்டு. பக்தர்கள் பூஜை செய்யும் போது சாந்த கோலம் கொண்ட புன்சிரிப்போடு திகழ்கிறாள் அன்னை.

    (2) பக்தர்களை சத்ருக்கள் சோதிக்கும் போது கோபம் கொண்டு அசுரனை வதம் செய்ய உக்ர நிலையை அடைகிறாள், ஆதி பராசக்தி வடிவங்களில் உயர்ந்த வடிவம். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.

    பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், தபோலோகம் உள்ளிட்ட ஏழு லோகங்களின் காவல் படைத்தலைவி, தன்னை நம்பிய பக்தர்களுக்கு துளிகூட தீவினை அண்டாது காப்பதில் மூங்கில் போன்ற திடமான உடலை கொண்ட வெற்றி தேவதை அவள். எட்டு திசை அதிபர்களின் ஆயுதங்களில் உறைந்திருப்பவள் இந்த வாராகி.

    வாராகி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவி யாகவும் விளங்குகிறாள்.

    “எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்க வல்லாள்
    ஒரு மெல்லியதன் பாதம் விரும்புகவே”

    என கூறுகின்றது வாராகி மாலை, அதாவது எத்தனை சேனைகள் கோடியளவில் நின்றாலும் அவள் பாதத்தை பணிந்த பக்தனுக்காக அத்துனை பேரையும் வீழ்த்தி தன் பக்தனை காத்து ரட்சிப்பாள் என்று வாராகி மாலை அவள் வீரத்தை புகழ்கின்றது.

    வாராகியின் வடிவம்

    வாராகி=வாராகம் என்பது பன்றியை குறிக்க கூடிய சொல், அன்னையவள் எதிரிகளை தவிடு பொடியாக்கி உலகை காக்க இந்த அவதாரம் எடுத்தாள்.
    மனித உடலும் மிருகத்தலையும் கொண்ட வர்கள் அதர்வண வேத தெய் வங்கள். இவர் களுக்கு நூறு மடங்கு சக்தி அதிகம்.

    அதில் அன்னையாகப்பட்டவள் உலக நன்மைக்காக அழகிய பெண்ணின் உட லும் வராகி முகமும் (காட்டு பன்றி முகம்) கொண்டு ஆவேச வடிவாய் எதிரியை வெல்லும் பேராற்றலாய் காட்சியளிக்கிறாள். அவள் வடிவத்தை அழகாய் சொல்கிறது வாராகி மாலை:

    “இருகுழை கோமளம், தாள்புஷ்பராகம் இரண்டுகண்ணும்
    குருமணிநீலம் கைகோமேதகம் நகம் கூர்வ யிரம்
    திருநகைமுத்து கனிவாய் பவளம் சிறந்த வளல்லி
    மரகதநாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே-

    வாராகியின் இரு செவிகளும் மாணிக்க ஒளியுடையதாம், இரண்டு பாதங்களும் புஷ்பராகம் போன்று மலர்கிறதாம். அந்த அழகிய இரு விழிகளும் நீலக்கல் போன்றதாம். அவள் நகம் வைரம் போன்று மின்னுகிறதாம். அவள் புன்னகையோ முத்தை போன்று உள்ளதாம். அவள் செவ்வாய் பவள நிறத்தில் அமைந்து ஆர்ப்பரிக்கின்றதாம். இடையோ மரகதம், உடலோ பச்சை நிற ஒளி ரும் திருமேனி என அவள் அம்சத்தை விவரிக்கின்றது.

    இவள் உறுகொண்டு உருவான காரணமே மானிட பிறப்புக்கும், அரசாள் பவர்களுக்கும் வெற்றியை, வாக்கு வலிமையை தருவதற்கே. அதைவிட ஒரு பக்தனை பக்குவப்படுத்தி ஞானத்தை தந்து வெற்றி உருவாக வடிவெடுக்க செய்வதில் வாராகி அன்னையே முதலிடம் வகிக்கின்றாள்.

    அருள்காட்சி வடிவம்:-

    வாராகி என்பவள் புவனேஸ்வரியின் படைத்தலைவி. அவளின் எதிரிகளை பொடிபொடியாக்கும் பைரவியும் வாராகியே.

    புவனேஸ்வரி மாதாவிற்கு யார் எதிரிகள்? அசுரர்கள்தான் மானிட பிறப்பு களில் உள்ள அசுர குணம், காமம், குரோதம், தான் எனும் அகந்தை இவற்றை எல்லாம் அழித்து தவிடுபொடியாக்கி நலமுற செய்யவே அவதரித் திருக்கிறாள் வாராகி.

    வாராகிதேவியின் பிறப்பிடம் பூபுரம் என்று சொல்லப்படும் பதினாறாவது ஆவரணமாகும். இது லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீசக்ர மாகும். இது சிந்தாமணி கிருகத்தின் நுழைவுவாயில். இங்கு ஆயிரம் தூண்கள் கொண்ட மாபெரும் கோட் டையில் அவதரித்து சூரிய சந்திரர்கள் முக்கோடி தேவர் களின் ஒட்டுமொத்த வடிவாகி சுடர்விட காட்சியளிக்கிறாள்.

    “ஸ்ரீசக்ர வடிவில் திகழும் அன்னை புவனேஸ்வரிக்கு எட்டு திக்கிலும் அமர்ந்து எட்டு நாமங்களை கொண்டு வாராகி திகழ்கின்றாள்.

    அவை 1. ஆதி வாராகி, 2.லகு வாராகி, 3. பஞ்சமி, 4. அஸ்வாரூடா வாராகி, 5.தண்டநாத வாராகி, 6. தூம்ர வாராகி, 7.பரூகத் வாராகி, 8. ஸ்வப்ந வாராகி.
    வாராகி அன்னை கரிய நிறம் உடையவள். கையில் “உலக்கையும்”, “கலப்பையும்” ஏந்தியவள். வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வாராகி.

    வாராகி உதித்த நட்சத்திரம்:- ஆயில்யம்
    வாராகி உதித்த திதி:- பஞ்சமி (வளர்பிறை)
    வாராகி உதித்த மாதம்:-ஆடி
    வாராகிக்கு உகந்த நிறம் :- நீலம், கருப்பு, பவள நிறம் ஆனால் நீல நிற வஸ் திரமே முதன்மையானது.
    வாராகிக்கு உகந்த மலர் :- நீல சங்கு பூ, கருந்துளசி, வில்வம்
    வாராகிக்கு வலிமை கூடும் நாள்:- பவுர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதி சிறப்பு
    வாராகி வந்து நம்மோடு பேசும் நேரம்:- இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பூஜை செய்ய சிறப்பு
    பிடித்த அமுது:- சர்க்கரை வள்ளிகிழங்கு, எருமை தயிர், பயிர் வகை கள், மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை.

    பூர்வபுண்ணிய படி யாரெல்லாம் வாராகியை நாடுவார்கள்?....

    ஒருவர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்கள் அன்னையின் அருள் பெற்றவர்கள். பிறக்கும் போதே ஜாதகத்தில் (சனி+கேது) அல்லது சனிக்கு(1,5,9) எனும் திருகோண ஸ்தானங்கள் கேது அமர்ந் தாலும் அன்னையின் அருள் எளிமையாக கிட்டும். மேலும் பனிரெண்டாம் இடத்தில் ராகு அமைய பெற்றவரும் (சுக்ரன்+புதன்+ ராகு) சேர்க்கை பெற்று பாவத்தில் அமைந்தவர் அன்னை பிறக்கும் போதே தேடி வருவாள், ராகு என்பவனே ஜோதிடத்தில் மாந்திரீக சக்தி, சித்திக்கு அதிபதி. அவர் மோட்ச ஸ்தானம் எனும் 12-ம் இடத்தில் அமரும் போது நிச்சயம் இப்பிறப்பில் அவன் ‘வாராகி’-யை நாடியே தீர வேண்டும் அவள் அருள் பெற வேண்டும் என்பதே நியதி,

    வாராகி எனும் நாமமே இனி நம்மை கரை சேர்க்க இருக்கின்றது. சிங்கத்தின் மீதேறி அண்டமெல்லாம் அஞ்சிநடுங்க அதர்மங்கள் ஒடுங்கி ஓட, சத்ருக்கள் குடலை பிடுங்கி வீச வருகிறாள் வாராகி.

    இனி உங்கள் வாழ்வில் வசந்தமே. வரம் தர வாழ்வு தர வர இருக்கிறாள் வாரம் தோறும், இனி உங்கள் வாழ்வில் அனைத் தும் சுகமே, நிம்மதியே. செல்கின்ற இடமெல்லாம் அன்னையால் வெகுமதியே

    யார் கையில் எல்லாம் யார் இல்லங்களில் எல்லாம் இந்த மலர் செல்கின்றதோ அங்கெல்லாம் அவள் அமர்ந்து ஆட்சி செய்ய இருக்கிறாள் என்று அர்த்தம்...
    ×