search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷம்சி"

    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. #SAvPAK
    டர்பன்:

    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. 

    இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறினார்கள். பாகிஸ்தானின் ஹசன் அலி 59 (45) மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் கண்டார். இவர் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களையும் விளாசினார். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 41 (59) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது.



    தென்ஆப்பரிக்கா சார்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டுகளும், ஷம்சி 3 விக்கெட்டுக்களையும், ரபாடா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    204 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஹெண்ட்ரிக்ஸ், அம்லா களமிறங்கினர். ஷகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட அம்லா 8 (5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். ஷகின் ஷா அப்ரிடி வீசிய நான்காவது ஓவரில், 5 ரன்கள் எடுத்திருந்த ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். கேப்டன் பேஃப் டு பிளசிஸ் 8 ரன்னில் வெளியேறினர். 



    இதையடுத்து ஹி வேன் டெர் டுசன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 42 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பொறுப்புடன் விளையாடிய டுசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 (123) ரன்கள் சேர்த்தார். மில்லர் 31 (26) ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் சார்பில் ஷகின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களும், ஷதப் கான் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.



    4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்காவின் பெலுக்வாயோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 1-1 என தென்ஆப்பிரிக்க அணி சமன் செய்தது. 3-வது ஒருநாள் போட்டி 25-ந் தேதி செஞ்சூரியனில் நடைபெற இருக்கிறது. #SAvPAK

    ஹசன் அலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க தென்ஆப்பிரிக்காவிற்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் (5), அடுத்து வந்த பாபர் ஆசம் (12) ஆகியோரை ரபாடா வெளியேற்றி பாகிஸ்தானுக்கு தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை போட்டார். அதன்பின் பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. 112 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது.


    3 விக்கெட் வீழ்த்திய ஷம்சி

    அந்த நேரத்தில் கேப்டன் சர்பிராஸ் அகமது உடன் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஜோடி சேர்ந்தார். ஹசன் அலி ருத்ரதாண்டவம் ஆட பாகிஸ்தான் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஹசன் அலி 38 பந்தில் தலா மூன்று பவுண்டரி, சிக்சருடன் அரைசதம் அடித்தார்.


    4 விக்கெட் வீழ்த்திய பெலுக்வாயோ

    பாகிஸ்தான் ஸ்கோர் 202 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. சர்பிராஸ் அகமது 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அகமது - ஹசன் அலி ஜோடி 90 ரன்கள் குவித்தது. அடுத்து ஷஹீன் அப்ரிடி களம் இறங்கினார். ஹசன் அலி 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 45.5 ஓவரில் 203 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    முதல் ஒருநாள் போட்டியில் ரபாடா மற்றும் ஷம்சி ஆகியோரின் அபார பந்து வீச்சால் இலங்கை அணி 193 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #SLvSA #Rabada
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, உபுல் தரங்காக ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினார்கள். டிக்வெல்லா 2 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். தரங்கா 10 ரன்னில் ரன்அவுட் ஆனார்.


    குசால் பேரேரா

    அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 3 ரன்னில் ரபாடா பந்தில் வெளியேறினார். 4-வது வீரராக களம் இறங்கிய குசால் பேரேரா தாக்குப்பிடித்து விளையாட, கேப்டன் மேத்யூஸ் 5 ரன்னிலும், ஜெயசூர்யா ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 36 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு குசால் பெரேராவுடன், ஆல்ரவுண்டர் திசார பெரேரா ஜோடி ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. குசால் பெரேரா 81 ரன்களும், திசாரா பெரேரா 49 ரன்களும் எடுக்க இலங்கை அணி 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.



    ரபாடா 8 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஷம்சி 8.3 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. இந்த அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
    ×