search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சளி"

    சளி பிடித்து 7 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக சளி முழுமையாய் விடவில்லையே என்பர். இதற்கான காரணத்தை அறந்து கொள்ளலாம்.
    சளித்தொல்லை: இந்த சீசனில் அநேகர் சிந்திய மூக்கும், லொக், லொக்கென்ற இருமல் சத்தத்துடனும் இருக்கின்றனர். சளிபிடித்து 7 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக சளி முழுமையாய் விடவில்லையே என்பர்.

    இதற்கான சில காரணங்கள்: சளி முழுமையாய் விடவில்லை என்பதுதான். மேலும் வீட்டில் உள்ள சுவிட்சுகள், கதவு கைப்பிடிகள், உடன் இருப்பவர்கள், பாதிக்கப்பட்டவரின் காபி கப், டம்ளர், டி.வி. ரிமோட், குழாய் பிடிகள், துண்டுகள், ஒரே கப்பில் வைக்கும் டூத் பிரஷ்கள் இவை சளி, ஜலதோஷம் இவற்றினை பரப்பலாம். அல்லது மேலும் தூண்டி விடலாம். கவனம் தேவை.

    • நூற்றுக்கணக்கான வைரஸ்கள் ஜலதோஷத்தினை உருவாக்க வல்லவை. ஆக ஒன்றை அடுத்து பாதிப்பாக ஜலதோஷம் தொடரலாம்.

    • அலர்ஜி இருக்கக்கூடும். அலர்ஜியின் காரணத்தினை கண்டறிந்து அதனை தவிர்க்க வேண்டும்.

    • கிருமிகள் பாதிப்பு இருக்கலாம்.

    • ஆஸ்துமா மற்றும் சுவாச குழாய் பாதிப்புகள் இருக்கின்றதா என மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    • நிமோனியா போன்ற பாதிப்புகளுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம்.

    • அசிடிடி பிரச்சினை, வயிற்று பிரட்டல், அடிக்கடி ஏப்பம் போன்ற பிரச்சினைக்கு கவனம் செலுத்துங்கள்.

    • தொடர் இருமல் இருந்தால் டி.பி. பாதிப்பு உள்ளதா என்பதனையும் அறிய வேண்டும்.

    • நோய் எதிர்ப்பு குறைபாடு இருக்கலாம். மருத்துவ ஆலோசனை மூலம் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவால் இரவில் நடமாட்டம் குறைந்துள்ளது. சளி மற்றும் காய்ச்சலால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மேலும் நாள் முழுவதும் பகலில் குளிர் காற்று வீசுகிறது. இதன் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாகவே மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை கடும் குளிர் மற்றும் மூடுபனி காணப்படுகிறது. இந்த கடும் குளிரால் பொதுமக்களுக்கு காய்ச்சல் இருமல், சளி, சரும நோய் போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ஓசூர் அரசு மருத்து வமனைக்கு நாள்தோறும் 1200 முதல் 1500 புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோன்று தனியார் மருத்துவமனைகளிலும், குளிர்க்கால நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    கடந்த ஒரு வார காலமாக ஓசூரில் குறைந்தபட்ச சீதோஷ்ணமாக ஞாயிற்றுக் கிழமை 11 டிகிரி செல்சியஸ் பதிவாகின. குறிப்பாக ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை மக்களின் நடமாட்டம் குறைவாக உள்ளது. குறிப்பாக நகரத்தைக் காட்டிலும், கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைவாக உள்ளது. இந்தக் குளிர் மேலும் ஒரு வாரம் தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

    தொப்பூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை கடும் பனி கொட்டுகிறது. குறிப்பாக தொப்பூர் மலைப்பாதையில் மூடு பனி அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.

    மூடு பனியால் தொப்பூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் வாகனங்கள் மோதிக் கொள்ளும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன. நேற்று அதிகாலை தருமபுரி குமாரசாமிப்பேட்டையை அடுத்த பென்னாகரம் மேம்பாலம் அருகே லாரியின் பின்னால் கேரளாவில் இருந்து மாணவர்கள் வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. மூடு பனி காரணமாக இப்படி விபத்துக்கள் நடப்பது அதிகமாகி விட்டது.
    குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் அத்தகைய உணவுகள் உடலை மேலும் பலவீனப்படுத்தும். உடல் உபாதைகள் ஏற்படவும் வழி வகுத்துவிடும். துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பவை. அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்துவிடும்.

    தொண்டை எரிச்சல் பிரச்சினையும் அதிகமாகிவிடும். தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் குளிர்காலத்துக்கு உகந்ததல்ல. மார்புச்சளி இருக்கும் போது உணவில் தயிர் சேர்த்துக்கொண்டால் அது சளியை இறுக வைத்துவிடும். குளிர் பானங்கள் பருகுவதும் தொண்டை வலியை அதிகப்படுத்திவிடும்.

    வறுத்த உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது. அவையும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும். காபின் கலந்த பானங்கள், மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த திராட்சை பழம், மிளகுத்தூள், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, அன்னாசிபழம், கொய்யா போன்றவற்றையும், வைட்டமின் இ சத்துக்களை கொண்ட கீரை வகைகள், பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள், ப்ரோக்கோலி, நெல்லிக்காய், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

    அதுபோல் செலினியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்திருக்கிறது. அந்த சத்து நிறைந்த இறால், முட்டை, இறைச்சி வகைகளை சாப்பிடலாம். சிக்கன் சூப் பருகுவதும் சளிக்கு இதமாக இருக்கும். கிரீன் டீ பருகுவதும் சளித்தொல்லைக்கு நிவாரணம் தரும். அதில் சளி பிரச்சினைக்கு காரணமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. குறைந்தபட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகுவதும் அவசியமானது.
    சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.
    இருமல்: கடந்த ஒரு மாத காலமாக பலருக்கும் சளி, இருமல் பிரச்சனைதான். மருந்து சாப்பிட்டு சளி கூட நீங்கி விட்டது. இருமல் தான் நிற்கவே இல்லை என பலரும் கூறுகின்றனர். பல இருமல் மருந்துகளை சாப்பிட்டும் குறையவில்லை என்பதும் தொடர் இருமல் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.

    * தேன் மிகச் சிறந்தது வறட்டு இருமலுக்கு என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1-2 டீஸ்பூன் தேனினை வெதுவெதுப்பான நீரில் 2-3 முறை அன்றாடம் குடித்து வர இருமல் கட்டுப்படும். இதனை சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

    * பைன் ஆப்பிள்: அன்னாசி பழமானது மூக்கு, சைனஸ் பகுதிகளில் உள்ள வீக்கத்தினை குறைக்க வெகுவாய் உதவுகின்றது. இருமல் இருக்கும் பொழுது அன்னாசி பழ ஜூஸ் சிறிதளவு அவ்வப்போது குடிப்பது சளியினை வெளியேற்றி இருமலைக் குறைக்கும்.

    * அதிமதுரம்: இதற்கு பல நாடுகளில் இன்று வரவேற்பு வெகுவாய் கிடைத்துள்ளது. அதிமதுர பொடி வாங்கி 2 கப் நீரில் 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் இறக்கி 15-20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பின் இதனை வடிகட்டி காலை-மாலை இரு வேளை அருந்துங்கள். இருமல் வெகுவாய் கட்டுப்படும்.

    * வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு கொப்பளியுங்கள்.

    நெஞ்செரிச்சல்: அசிடிடி-நெஞ்செரிச்சல் என்ற இந்த இரு வார்த்தைகளை கேட்காதவர், அனுபவிக்காதவர் மிகக் குறைவு எனலாம். இதற்கு தானே மருந்து கடையில் மருந்து வாங்கி எடுத்துக் கொள்பவர்கள் ஏராளம். ஆனால் இது அடிக்கடி அவர்களை தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

    மிக அதிகமாகவும், அடிக்கடியும் இந்த ஆசிட் கட்டுப்படுத்தும் மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

    விடாமல் அசிடிடி நிவாரண மருந்தினை பாக்கெட்டிலேயே வைத்து உணவு போல் அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது

    * தேவையான சத்துக்களான பி12, கால்ஷியம், இரும்பு மற்றும் மக்னீஷிய சத்துக்கள் உறிஞ்சப்படுவது வெகுவாய் குறைகின்றது.

    * உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.



    இயற்கை முறையில் அசிடிடி பாதிப்பினை தடுக்க சில முறைகள் இருக்கின்றன.

    * குளிர்ந்த பால் அருந்துவது அசிடிடி பாதிப்பினை வெகுவாய் குறைக்கும். நீக்கும். உங்களுக்கு சளி பாதிப்பு ஏற்படாது எனில் ஐஸ்கிரீம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

    * மோர் குடிக்கலாம். இதனை அன்றாடம் அடிக்கடி கூட குடிக்கலாம்.

    * சிகரெட், மது இரண்டினையும் அடியோடு தவிர்த்து விடவேண்டும்.

    * பாதாம் வயிற்றிலுள்ள ஆசிட் சக்தியினை குறைத்து விடும். சாப்பிட்ட பிறகு 3-4 பாதாம் மென்று சாப்பிடுங்கள்.

    * மசாலா, எண்ணெய், காரம் இவைகளை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

    * போதுவான தூக்கமின்மை நெஞ்செரிச்சல், ஆசிட் எதிர்ப்பு ஆகியவற்றினை உருவாக்கும். எனவே குறைந்தது 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் இரவில் தேவை.

    * ஆப்பிள், வாழைப்பழம் உண்ணலாம்.

    * சோற்றுக்கற்றாழை ஜூஸ் மிக நல்ல சிகிச்சை ஆகும்.

    * அரிசி உணவும் நெஞ்செரிச்சல், ஆசிட் இவற்றுக்கு நல்ல தீர்வாகும்.

    இன்னும் ஒரு 30 நாட்கள் லேசான குளிர் இருக்கலாம்.

    ஆனால் பலருக்கு இந்த குளிர் நாட்கள் சளி, ஜீரம், ஆஸ்துமா என பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம், தோய்க்கும் துணிகளை வீட்டுக்குள்ளேயே அதுவும் சூரிய ஒளி இல்லாத இடத்தில் ஈரத் துணிகளை காயப் போடுவது தான். நம்மில் அநேகருக்கு பல கிருமி, பூஞ்ஞைகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. சிலருக்கு இந்த ஈர துணிகளை உள்ளே காயப்போடும் பொழுது அந்த ஈரம் அவரைத் தாக்குவதால் சளி, ஆஸ்த்மா பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மிக அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான தகுந்த பாதுகாப்பினை இவர்கள் மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
    சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.
    காரவகை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் சமையலில் பச்சை மிளகாயை அதிகமாக சேர்த்துக்கொள்கிறார்கள். பச்சை மிளகாயில் உடல் நலத்தை மேம்படுத்தும் விஷயங்கள் உள்ளன.



    அதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் ஆகியவை நோய்களுக்கு எதிராகவும், விரைவாக நோயை குணப்படுத்தவும் துணைபுரியும். சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.

    வெட்டுக்காயத்தால் அவதிப்படுபவர்களும் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம். காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கான சக்தியை அது வழங்கும்.

    மன நிலையை மேம்படுத்தும் ஆற்றலும் பச்சைமிளகாய்க்கு இருக்கிறது. வலியை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 
    அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்றதா? நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
    அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்றதா? நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
    சாப்பிடும் முன் கை கழுவும் பழக்கம் இன்று எல்லோரிடமும் இருக்கின்றது. ஆனால் அதனை முறையாய் செய்கின்றோமா என்றுதான் கவனிக்க வேண்டும். வலது கையை குழாயின் கீழ் நீட்டி ஒரு நொடியில் ‘நானும் கை சுத்தம் செய்து விட்டேன்’ என்று வருவது கை கழுவாது உண்பதற்கும் சமம். இரு கைகளையும் நீரில் நனைத்து சோப் கொண்டு 20 நொடிகளாவது நன்கு கை, நகங்களை தேய்த்து கழுவுதே கிருமிகளை நீக்கும் முறையாகும்.

    இல்லையெனில் கிருமிகள் பாதிப்பு உடனே ஓடி வந்து விடும். இளம் வயதினருக்கு இன்று ஒரு பழக்கம் உள்ளது. செல்போனை தன் தலையணை அருகேயே வைத்திருப்பார்கள். தூக்கத்தில் அவ்வப்போது எழுந்து தன் செல்போனில் வாட்ஸ்அப் செய்திகளை படித்துக் கொண்டும், செய்தி அனுப்பிக் கொண்டும் இருப்பார்கள். இப்படி தூக்கம் கெடுவது அதிக தீய பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்துகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது. வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் குறைகின்றன. அதனால் இவர்கள் எளிதில் வைரஸ் மற்றும் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றீர்களாம்.

    * அதிக மனஉளைச்சல் உங்களை ஆட்கொள்ளாது தவிருங்கள். இவைகளை கவனத்துடன் செய்தாலே வைரஸ், கிருமிகள் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். கூடவே பொது கைப்பிடிகளில் டிஷ்யூ பேப்பரை கொண்டு உபயோகிப்பதும், கடன் வாங்காததும், கொடுக்காததும் உங்கள் பேனாவினை பயன்படுத்துவதும் கூடுதல் நம்மை பயக்கும்.

    * கை குலுக்குவதனைக் காட்டிலும் வணக்கம் சொல்வது சுகாதார வெளிப்பாடும் கூட.
    * வேலை செய்யும் டேபிளிலேயே உணவையும் வைத்து சாப்பிடாதீர்கள்.
    * அன்றாட காலை இளம் வெய்யில் உடலுக்கு அவசியம்.
    * யோகா பழகுங்கள்.
    * மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
    * காலை உணவை கண்டிப்பாய் எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஆக மேற்கூறியவற்றில் முறையான கவனம் கொடுக்கும் பொழுது ஜலதோஷ பாதிப்பு வெகுவாய் குறையும்.

    தலைவலி சில சமயங்களில் ஆபத்தானதாகக் கூட இருக்கலாம்.

    * மூளைக்கும் அதனை படர்ந்து இருக்கும் மெல்லிய ஜவ்வு படலத்திற்கும் இடையே சில சமயங்களில் ரத்த கசிவு ஏற்படலாம். இதனால் ஏற்படும் தலைவலி ஆபத்தானது.
    * உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலி உடனே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
    * மூளையில் கட்டி.
    * மூளையில் கிருமி தாக்குதல் இதனால் ஏற்படும் தலைவலி உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது அவசியம்.
    * மண்டைக்குள் நீர் சேர்ந்து மூளை வீக்கம் ஏற்படுதல்.
    * விஷவாயு தாக்குதல்.
    * மூளையில் ரத்தக் குழாய் உடைந்து ரத்தப் போக்கு ஏற்படுதல்.

    இவற்றினால் ஏற்படும் தலைவலியினை உடனடி மிக அவசர சிகிச்சையாக கவனிக்க வேண்டும். இதற்கான அறிகுறிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * திடீரென ஏற்படும் தாங்க முடியாத தலைவலி.
    * எப்பொழுதும் வரும் தலைவலியினைக் காட்டிலும் வித்தியாசமான கடும் தலைவலி.
    * தலைவலியுடன் குழறிய பேச்சு, பார்வை மங்குதல், கை, கால் அசைப்பதில் கடினம், மறதி ஏற்படுதல்.
    * தலையில் அடிப்பட்டு ஏற்படும் தலைவலி.
    * 50 வயதிற்கு மேல் இருந்து ஏற்படும் தலைவலி.
    * கண் வலி, கண் சிகப்பு ஒரு கண்ணில் இருந்து ஏற்படும் தலைவலி இப்படிப்பட்ட அறிகுறிகள் இருக்கும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    மருத்துவ தந்தை என்று அழைக்கப்படும் ‘ஹிப்போக்ரேட்ஸ்’ பல காலங்களுக்கு முன்னாள் கூறியுள்ள ஒரு மருத்துவ செய்தினை நினைவு கூர்ந்து பார்ப்போம். ‘எல்லா நோய்களும் உணவுப் பாதையிலே ஆரம்பிக்கின்றது’ என்பதுதான். மருத்துவ உலகில் எண் சான் உடம்பிற்கு உணவு பாதையும், ஜீரண உறுப்புகளுமே பிரதானம்’ எனலாம்.

    குடலின் உள் சுவரில் மெல்லிய படலம் உள்ளது. இந்த படலம் நல்ல சத்துக்களை உடலுக்குள் செலுத்தி தீய, நச்சுகளை வெளியேற்றி விடுகின்றது. இப்படலத்தில் மிக நுண் துளைகள் ஏற்படும் பொழுது நச்சுகளும் ரத்தத்தில் கலந்து விடுகின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பல விதத்தில் பாதிக்கப்படுகின்றது என்பதனை சிலர் நீண்ட ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றனர். சரி இந்த பாதிப்பு ஏன் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது?

    * பரம்பரை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம்.
    * முறையில்லாத உணவுகள் குடலை பாதிக்கின்றன. நல்ல பாக்டீரியாக்களை அழிக்கின்றன. கெட்ட பாக்டீரியாக்களை பெருக்குகின்றன. குடல் வீக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
    * உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள், குடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    * மிக அதிக மனஉளைச்சல் ஜீரண மண்டலத்தினையே அதிகம் பாதிக்கின்றது.
    * சுத்தமில்லா நீர் காரணமாக இருக்கலாம்.

    பொதுவில்

    * குடலில் புண் ஏற்பட்டாலோ
    * கிருமிகள் தாக்குதலால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ
    * உடலில் சத்து குறைபாடு இருந்தாலோ
    * குடல் வீக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டாலோ
    * நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலோ
    * எடை கூடுதல், நீரிழிவு நோய் 2-ம் பிரிவு என தாக்குத்ல ஏற்பட்டாலோ
    முதலில் உங்கள் உணவுப் பாதை, கல்லீரல், பித்தப்பை என உணவு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இதற்கு உங்கள் மருத்துவர் உதவியினை உடனடி பெறுவது பல்வேறு நோய்களில் இருந்து உங்களைக் காக்கும்.
    ×