search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகுபலி"

    பாகுபலி கதாநாயகன் பிரபாசுடன், ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையை இணைத்து கிசு கிசு செய்திகள் இணைய தளங்களில் உலா வருவது குறித்து தெலுங்குதேசம் கட்சி மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். #Prabhas #JaganmohanReddy #sharmilareddy

    ஐதராபாத்:

    ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இருந்து வருகிறது. இதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ‌ஷர்மிளாவும் தீவிர அரசியலில் இருந்து வருகிறார். அவருக்கு தற்போது 45 வயது ஆகிறது. இவரது கணவர் பெயர் அனில்குமார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ‌ஷர்மிளாவையும், பாகுபலி பட கதாநாயகன் பிரபாசையும் இணைத்து கிசு கிசு செய்திகள் இணைய தளங்களில் உலா வருகின்றன.

    இது ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியான தெலுங்தேசம் கட்சி தான் இந்த கிசு கிசுவை பரப்பி வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.


    இது சம்பந்தமாக ‌ஷர்மிளா தனது கணவர் அணில்குமாருடன் சென்று ஐதராபாத் போலீஸ் கமி‌ஷனர் அஞ்சனிகுமாரை சந்தித்தார்.

    அதில், தன்னைப்பற்றி தெலுங்குதேசம் கட்சியினர் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த சந்திப்புக்கு பின் வெளியே வந்த ‌ஷர்மிளா நிருபர்களிடம் கூறியதாவது:-

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் எங்கள் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் என்னைப்பற்றி தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். 2014 பாராளுமன்ற தேர்தலின் போதும் இதேபோல வதந்திகளை பரப்பினார்கள். இப்போதும் அதேபோன்ற வதந்தி பரப்பப்படுகிறது.

    இதன் பின்னணியில் தெலுங்குதேசம் கட்சி இருப்பதாக உறுதியாக கருதுகிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.

    நான் எனது கணவர், குழந்தைகளுடன் ஒரு தாயாக, மனைவியாக குடும்ப பிணைப்புடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு மோசமான வதந்தியை பரப்புகிறார்கள். நான் இதில் மவுனம் சாதித்தால் தவறான அர்த்தம் உருவாகி விடும். எனவே தான் புகார் கொடுத்தேன்.

    இவ்வாறு ‌ஷர்மிளா கூறினார். #Prabhas #JaganmohanReddy #sharmilareddy

    சரிப்பட்டு வராததால் திரிஷாவுடனான காதலை முறித்துக் கொண்டதாக ராணா கூறிய நிலையில், ராணாவையும், திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் என்று பிரபாஸ் கூறினார். #Prabhas #RanaDaggubati #Trisha #Rajamouli
    பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இணைந்த பிரபாசும், ராணாவும் அந்த படத்துக்கு பின்னர் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தை கடத்தி வருகிறார்கள்.

    பிரபாஸ் அனுஷ்காவுடனும், ராணா திரிஷாவுடனும் சிலகாலம் கிசுகிசுக்கப்பட்டவர்கள். இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்பது தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.

    ராணாவும், திரிஷாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது நெருக்கமானார்கள். பட விழாக்களுக்கு சேர்ந்தே வந்தார்கள். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து திரிஷா கருத்து சொல்லாமல் இருந்தார். ராணாவிடம் கேட்டபோது நட்பாகத்தான் பழகுகிறோம் என்று மறுத்து வந்தார்.

    எனினும் இருவரையும் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணமாகவே இருந்தது. இந்த நிலையில் நடிகர்கள் பிரபாஸ், ராணா, இயக்குனர்கள் ராஜமவுலி ஆகியோர் கரண் ஜோஹருடன் டி.வி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டனர். இதில் திரிஷாவுடனான காதல் பற்றி ராணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த ராணா, எனக்கு திரிஷா 10 வருடங்களுக்கு மேலாக தோழியாக இருந்தார். அவர் எனது நீண்ட நாள் தோழி. கொஞ்ச காலம் அவரை காதலிக்கவும் செய்தேன். பின்னர் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து காதலை முறித்துக் கொண்டேன்.’’ என்றார். 

    பிரபாஸ் பேசும்போது, ‘‘ராணாவையும் திரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன் என்றார். அனுஷ்காவுடன் கிசுகிசுக்கப்படுவது பற்றி கேட்ட போது, எனக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை’’ என்றார்.

    இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்விக்கு, பிரபாசுக்கு முன்பே ராணா தான் திருமணம் செய்துகொள்வார் என்று ராஜமவுலி கூறி இருக்கிறார். #Prabhas #RanaDaggubati #Trisha #Rajamouli

    பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ், ராணா இருவரில் யார் முதலில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ராஜமவுலியிடம் கேட்டதற்கு, ராணா தான் என்று அவர் பதிலளித்தார். #Prabhas #RanaDaggubati #Rajamouli
    பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இணைந்த பிரபாசும், ராணாவும் அந்த படத்துக்கு பின்னர் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தை கடத்தி வருகிறார்கள்.

    பிரபாஸ் அனுஷ்காவுடனும், ராணா திரிஷாவுடனும் சிலகாலம் கிசுகிசுக்கப்பட்டவர்கள். இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்பது தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. 



    ராஜமவுலி, ராணா, பிரபாஸ் மூவரும் இணைந்து கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்த கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது. இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்விக்கு பிரபாசுக்கு முன்பே ராணா தான் திருமணம் செய்துகொள்வார் என்று ராஜமவுலி கூறி இருக்கிறார். இருவருக்கும் நெருக்கமானவர் என்பதால் ராஜமவுலி சொன்னது நிச்சயம் பலிக்கும் என்கிறார்கள். #Prabhas #RanaDaggubati #Rajamouli

    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல், காலா மற்றும் பாகுபலி படத்தை விட அதிகமாக வசூலித்திருக்கிறது. #Sarkar
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் அரசியல் சூழ்நிலையை பற்றியும், கள்ள ஓட்டு பற்றியும் சமூக அக்கறையுடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

    ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் தற்போது வெளியாகி இருக்கிறது. சென்னையில் ரூ.2.37 லட்சம் முதல் நாள் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசூல் ரஜினியின் காலா, பிரம்மாண்ட படமான பாகுபலி கலெக்‌ஷனை முறியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் நடித்த தெறி, மெர்சல் படங்களின் வசூலையும் மிஞ்சியிருக்கிறது.



    சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
    எங் மங் சங் என்ற படத்திற்காக நடிகர் பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் நேருக்கு நேர் மோதியிருக்கிறார். #PrabhuDeva #YungMungSung
    வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்".

    இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

    கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன்.எம்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.



    படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக எங் மங் சங் இருக்கும் என்கிறார் இயக்குனர்.
    டப்ஸ்மாஷ் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்த பாகுபலி படக்குழுவினர்கள் வியந்து படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். #Baahubali
    ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. 

    இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்று பெரிய விவாதமே நடந்தது.



    இந்நிலையில், பாகுபலியை கட்டப்பா கொல்லும் காட்சியை டப்ஸ்மாஷில் இளைஞர்கள் படமாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த பாகுபலி படக்குழுவினர்கள் ‘ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க சூப்பர்’ என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 
    பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் ராஜமவுலி இறங்கியுள்ளார். #Baahubali3 #Rajamouli
    பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் உலக அளவில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆரையும் ராம்சரணையும் இணைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

    அதற்கு முன்பு தற்போது அவர் பாகுபலி படத்தில் இடம்பெற்ற சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘தி ரைஸ் ஆஃப் சிவகாமி’ புத்தகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் புத்தகத்தை தழுவி ராஜமவுலி மூன்று பாகங்களாக தொடரை இயக்க உள்ளார்.



    நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள இந்தத் தொடருக்கு, ஒரு எபிசோடு தயாரிக்க 20 மில்லியன் டாலர்கள் வரை செலவாகும். லக்னோவில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் சஞ்சய் தத், மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடிக்கிறார்கள். #Baahubali3 #Rajamouli

    பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்திற்கு பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் ஒரு விருதுகள் கூட கிடைக்கவில்லை என்று பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #Prabhas
    பாகுபலி படத்துக்காக பிரபாசுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லையே என்று சமூக வலைதளங்களில் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

    பிரபாஸ் ரசிகர்களின் சமூக வலைதள பக்கங்களில் ‘இந்த படத்திற்காக தன்னுடைய திருமணத்தையே தள்ளி வைத்தார். 5 ஆண்டுகள் தன் உழைப்பையும் நேரத்தையும் கொடுத்தார். ஒரு நாளைக்கு 40 முட்டைகள் சாப்பிட்டார்.

    6000 திருமண கோரிக்கைகளை நிராகரித்தார். தோள்பட்டையில் பெரிய காயம் அடைந்தார். அவரது நடிப்பால் இந்த ஒட்டுமொத்த நாட்டுமக்களையே கண்ணீர் விடவைத்தார்.



    ஆனால் அவரது நடிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு விருதுகூட இல்லையா? இங்கே விருதுகள் என்பது அங்கீகரிப்பு இல்லை’ என்று சோகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

    சமீபத்தில் நடந்த பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் பிரபாசுக்கு விருது வழங்கப்படாததே இதற்கு காரணம் என்கிறார்கள். #Prabhas #Baahubali
    பாகுபலி படம் மூலம் இந்தியாவின் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் பிரபாஸ், தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் 37 கார்களை அடித்து நொறுக்கி இருக்கிறார். #Prabhas
    பாகுபலி படம் மூலம் தென் இந்தியாவின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அவர் அடுத்து நடிக்கும் படம் சாஹோ. பாகுபலிக்கு நிகரான செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இதில் பிரபாசுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

    அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக 37 கார்களையும் 5 டிரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொறுக்கும் பெரிய சண்டைக்காட்சி அபுதாபியில் படமாக்கப்பட்டுள்ளது.



    தொடர்ந்து 20 நாட்கள் எடுக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிக்காக 100 நாட்கள், முன் தயாரிப்பு பணிக்காக மட்டும் எடுத்துக் கொண்டுள்ளார் படத்தின் சண்டை பயிற்சியாளர் கென்னி பேட். ஹாலிவுட்டை சேர்ந்த இவரும் ஒளிப்பதிவாளர் மதியும் திட்டமிட்டு இந்த சண்டைக் காட்சியை உருவாக்கி உள்ளனர். வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது சாஹோ திரைப்படம்.
    ×