என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொடநாடு"
பழனி:
பழனியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வலிமையான கூட்டணி அமைத்து போட்டியிடும். தமிழகத்தில் 80 சதவீத இடங்களை கைப்பற்றுவோம். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர்.
சமீப காலமாகவே மக்கள் திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருவது துரதிர்ஷ்டவசமானது. நீண்ட கால தொழிற்சாலைகள் மூடப்படுவதால் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இதற்கு எல்லாம் மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என்று செயல்படும் சில தீய சக்திகள்தான் காரணம்.
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உரிய வசதிகள் செய்து கொடுத்து அவர் நேர்மையாக செயல்பட அதிகாரங்கள் வழங்க வேண்டும்.
பிரதமர் மோடி குறித்து கெஜிரிவால் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குறியது. ஒரு மாநிலத்தில் கூட ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாத அரவிந்த்கெஜிரிவால் ஒரு நாட்டையே வழிநடத்தி செல்லும் பிரதமரையே தரம் தாழ்த்தி விமர்சனம் செய்கிறார். வரும் தேர்தலோடு அவர் காணாமல் போய்விடுவார்.
இவ்வாறு அவர் கூறினார். #KodanadEstate
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்