search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீர்"

    குழந்தைகளுக்கு கீர் என்றால் விரும்பி குடிப்பார்கள். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து சூப்பரான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - 5 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கு
    சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
    முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பால் - 3 கப்
    ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    முந்திரி, பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் ஜவ்வரிசி சேர்க்கவும்

    நன்றாக கலக்கி அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஜவ்வரிசியை வேக விடவும்.

    ஜவ்வரிசி வெந்தவுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வைக்கவும்.

    வேக வைத்து நறுக்கி வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்

    பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்

    அடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

    அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.

    சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி

    குறிப்பு :

    ஜவ்வரிசியை முன்பே ஊற வைத்து கொண்டால் பாயசத்துக்கு மென்மையான பதம் கிடைக்கும். வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவிக் கொண்டால் பாயசம் ரொம்பவும் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். பேரீச்சம் பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பேரீச்சம் பழத்தில் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - ஒரு கப்
    கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
    உலர்திராட்சை - அரை கப்
    பனை வெல்லம் - அரை கப்
    பாதாம், முந்திரி கலவை - அரை கப்
    தேங்காய்ப்பால் - 2 கப்
    சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்



    செய்முறை:

    பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேரீச்சம் பழத்தை கொட்டையை எடுத்து விட்டு தனியாக வைக்கவும்.

    பனை வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

    வெறும் வாணலியில் கசகசாவை வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

    பேரீச்சம்பழத்தினை உலர் திராட்சை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருகியதும் பாதாம், முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே பாத்திரத்தில் அரைத்த பேரீச்சம் விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

    பின்பு அதனுடன் பனை வெல்லம் சேர்த்துக் கிளறவும்.

    பிறகு சோள கரைசல், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும்.

    கசகசா பவுடர் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும்.

    திக்கான பதம் வந்தவுடன் மேலே வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து அலங்கரித்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

    சூப்பரான பேரீச்சம்பழ கீர் ரெடி.

    அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பை, சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான கீர் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாசுமதி அரிசியை வைத்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்
    பாசுமதி அரிசி - 2 கைப்பிடி
    ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
    பாதாம் பருப்பு - 100 கிராம்
    சர்க்கரை - 300 கிராம்
    நெய் - 4 டீஸ்பூன்
    முந்திரிப் பருப்பு - 10



    செய்முறை :

    பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோலுரித்து, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    பாசுமதி அரிசியை இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு நன்கு வறுத்து, இரண்டாக உடைத்துக்கொள்ளுங்கள்.

    குக்கரில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியைச் சேர்த்து மீதமான தீயில் 15 நிமிடம் வேகவிடுங்கள்.

    பின் அதை வாணலியில் ஊற்றி ஏலக்காய்ப் பொடி, நறுக்கிய பாதம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேகவிடுங்கள்.

    அரிசி வெந்து பால் சிறிது கெட்டியானவுடன் நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து இறக்குங்கள்.

    சூப்பரான பாசுமதி அரிசி கீர் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சை பட்டாணியில் கீர் என பலர் வியப்பது தெரிகிறது. இன்று இந்த பச்சை பட்டாணியில் சுவையான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சைப்பட்டாணி - 1 கப்,
    பச்சைப்பட்டாணி வேக வைக்க தண்ணீர் - 1 கப்,
    உப்பு - கொஞ்சம்,  
    பால் - அரை கப்.

    கீர் தயார் செய்ய

    பால் - 2 கப்,
    சர்க்கரை - ¾கப் ,
    பிஸ்தா - தேவையான அளவு,
    பாதாம் - தேவையான அளவு,
    குங்குமப்பூ - சிறிதளவு,
    ஏலக்காய் தூள் - கொஞ்சம்



    செய்முறை

    வேக வைத்த பட்டாணியை ஆறவைத்து பின் அதனை கொஞ்சம் பால் விட்டு நல்ல கூழாக அரைத்து கொள்ளவும்.

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் நெய் விட்டு மசித்த பட்டாணி கூழை போட்டு நன்கு கிளறவும்.

    இந்த கலவை கட்டியானவுடன் 2 கப் பாலில் முதலில் ½கப் பால் விட்டு கிளறவும்.

    பின் கொஞ்ச நேரம் கழித்து ½ கப் பால் விட்டு கிளறவும்.

    நன்கு கொதித்தபின் சர்க்கரை போட்டு கிளறவும்.

    பின் மீதமுள்ள பாலை விட்டு கிளறவும். நன்கு கொதித்து முட்டை விடும் சமயத்தில் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் ஏலக்காய் தூள், குங்குமப்பூ போட்டு கிளறி பரிமாறவும்.

    பசுமையான பச்சை பட்டாணி கீர் செய்து பிரிட்ஜில் வைத்தும் குளிர்ச்சியான நிலையிலும் பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×