search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெஸ்சி"

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் மெஸ்சி மற்றும் ரொனால்டோ சிறப்பாக விளையாடி தங்கள் அணிக்கு வெற்றியை தேடி தருவார்களா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. #worldcup2018 #LionelMessi #Ronaldo
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

    2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும். இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. தற்போது கால்பந்து உலகில் நட்சத்திர வீரர்களாக மெஸ்சி (அர்ஜென்டினா), ரொனால்டோ (போர்ச்சுக்கல்) வலம் வருகிறார்கள்.

    அவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்கும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் கிளப் அணிக்கும் விளையாடி வருகிறார்கள்.

    இந்த இரு அணிகளும் மோதும்போது மெஸ்சி- ரொனால்டோ இருவருக்கும் இடையே நேரடி போட்டியாகவே கருதப்படும். அந்த அளவுக்கு இருவரும் களத்தில் நேருக்கு நேர் மல்லு கட்டுவார்கள்.

    உலக கோப்பையில் இன்று நடக்கும் ஆட்டங்களில் இருவரும் களம் இறங்குகிறார்கள். மெஸ்சி பிரான்சு அணிக்கு எதிராகவும், ரொனால்டோ உருகுவே அணிக்கு எதிராகவும் விளையாடுகிறார்கள். இதில் தங்களது அணியை வெற்றி பெற வைத்து கால் இறுதிக்கு அழைத்து செல்வது மெஸ்சியா, ரொனால்டோவா? என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நிலவுகிறது.

    இருவருமே தங்களது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜொலிக்க வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

    இன்றைய போட்டியில் அர்ஜென்டினா- போர்ச் சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் கால் இறுதி யில் இவ்விரு அணிகளும் மோதும் வாய்ப்பு ஏற்படும்.
    ஆனால் இருவரும் இன்று களம் இறங்கி எதிராக விளையாடும் அணிகள் பலம் பொருந்தியதாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

    மெஸ்சி மற்றும் ரொனால்டோ விளையாடும் போட்டி என்பதால் இது மிகவும் முக்கியமான ஆட்டங்களாக கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்றால் காலிறுதியில் போர்ச்சுக்கல் - அர்ஜெண்டினா அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அனைவரும் இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் உள்ளனர். #worldcup2018 #LionelMessi #Ronaldo
    உலக கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி தோற்ற விரக்தியில் ரசிகர் ஒருவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது.


    இதனால் மனமுடைந்த அலெக்ஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். கால்பந்து அணி தோல்வியடைந்தற்கு வாலிபர் வீடை விட்டு வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த வாலிபர் கால்பந்து வீரர் மெஸ்சியிடம் ஆட்டோகிராப் வாங்க தனது சைக்கிளுடன் ரஷ்யா சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #FIFA2018 #ClifinFrancis
    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டிக்காக இந்தியாவிலும் பல கோடி ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். பல கால்பந்து ரசிகர்கள் கால்பந்து அணியின் கொடி அல்லது வீரர்களின் புகைப்படங்களை வீட்டின் சுவரில் பொருத்தி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் கிளிஃபின் பிரான்சிஸ். 28 வயதான இவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கால்பந்து வீரர் மெஸ்சியின் தீவிர ரசிகரான இவர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நேரில் காண வேண்டும் என எண்ணினார். இதையடுத்து, கேரளாவிலிருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து ஈரான் வழியாக கப்பலில் ரஷியா சென்றடைந்தார். அங்கிருந்து தனது சைக்கிளில் 600 கி.மீ. பயணம் செய்து போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல உள்ளார்.


    அங்கு நடக்கும் போட்டியை நேரில் பார்த்து விட்டு, மெஸ்சியிடன் தனது சைக்கிளில் ஆட்டோகிராப் வாங்குவதே தனது கனவு என்றார். பிப்ரவரி 23-ம் தேதி தனது பயணத்தை தொடங்கிய பிரான்சிஸ் தற்போது ரஷ்யா சென்றடைந்துள்ளார். தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார். விரைவில் போட்டியை நேரில் காண்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். #FIFA2018  #ClifinFrancis

    ×