என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 136067"
பொன்னமராவதி:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா வழிகாட்டுதலின்படி 2018-2019ம் கல்விஆண்டிற்கான 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைப் பயிற்சியானது பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட 18 நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்று கொண்டிருக்கும் இப்பயிற்சிக்கு பெற்றோர்கள் பங்களிப்பாக பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவிகளுக்கும் டி-சர்ட்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் தாங்கள் பயிற்சி செய்ய எளிமையாக இருப்பதாக 6 முதல் 8 வகுப்புகளில் உள்ள மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். பயிற்சியை பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் பார்வையிட்டு மாணவிகளுக்கு டி-சர்ட்கள் வழங்கிய பெற்றோர்களையும் , இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி மற்றும் பயிற்சி பொறுப்பாசிரியை சசிகலாதேவி ஆகியோரையும் வாழ்த்தி பாராட்டினார்.
இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம் ,கராத்தே பயிற்சியாளர் குணசேகரன், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மீனாள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருக்கும் மார்த்தாண்டத்தில் திருமணம் நடைபெறுவதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமு தாவுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அதிகாரி குமுதா, சமூக நல அதிகாரி பியூலா, சைல்டு லைன் அமைப்பினர், ஆள் கடத்தல் தடுப்பு போலீசார் ஆகியோருடன் மார்த்தாண்டத்திற்கு சென்றார். அங்கு அவர்கள் விசாரணை நடத்திய போது அந்த சிறுமிக்கு காலையிலேயே திருமணம் நடைபெற்றதும், தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.
அங்குச் சென்று அதிகாரிகள் இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண்ணுக்கு 17 வயது தான் ஆவது உறுதியானது.
10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவருக்கு பெற்றோர் திருமணம் செய்ததும் தெரிய வந்தது. திருமண வயது ஆவதற்கு முன்பே அந்த சிறுமிக்கு திருமணம் செய்தது சட்டப்படி தவறு என்பதால் இது பற்றி இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் கூறினார்கள். சிறுமிக்கு 18 வயது நிரம்பிய பின்னர் தான் திருமண வாழ்க்கையை தொடர வேண்டும் என்றும் கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திரண்டிருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு அந்த சிறுமியையும், வாலிபரையும் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சிறுமி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் வற்புறுத்தியதால் திருமணத்திற்கு தான் சம்மதித்ததாக கூறினார். மேலும் தனக்கு தொடர்ந்து படிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்தார்.
விசாரணைக்கு பிறகு அந்த சிறுமியை நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்த அதிகாரிகள் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மாவட்ட சமூக நல அதிகாரி பியூலா முன்பு அந்த சிறுமி 2-வது நாளாக ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வாலிபரும் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு அந்த சிறுமியை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிப்பை தொடர வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்