search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    பொன்னமராவதி அருகே பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    பொன்னமராவதி:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா வழிகாட்டுதலின்படி 2018-2019ம் கல்விஆண்டிற்கான 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைப் பயிற்சியானது பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட 18 நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்று கொண்டிருக்கும் இப்பயிற்சிக்கு பெற்றோர்கள் பங்களிப்பாக பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவிகளுக்கும் டி-சர்ட்கள் வழங்கப்பட்டன.

    இதன் மூலம் தாங்கள் பயிற்சி செய்ய எளிமையாக இருப்பதாக 6 முதல் 8 வகுப்புகளில் உள்ள மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். பயிற்சியை பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் பார்வையிட்டு மாணவிகளுக்கு டி-சர்ட்கள் வழங்கிய பெற்றோர்களையும் , இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி மற்றும் பயிற்சி பொறுப்பாசிரியை சசிகலாதேவி ஆகியோரையும் வாழ்த்தி பாராட்டினார்.

    இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம் ,கராத்தே பயிற்சியாளர் குணசேகரன், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மீனாள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    அரியானா மாநிலம் ரெவாரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்ட ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். #RewariGangRape
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் சி.பி.எஸ்.இ. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம்  விருது பெற்றவர்.

    அவர், கடந்த 15-ம் தேதி சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது வழிமறித்த மூன்று வாலிபர்கள் ஒரு காரில் கடத்தி சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அங்கு வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை  பலாத்காரம் செய்துள்ளனர்.

    அப்போது அந்த பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். 

    இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து விழிப்படைந்த காவல்துறை குற்றவாளிகளை தேடும் பணியில் இறங்கியது. பங்கஜ், மணிஷ், நிஷ்ஷு ஆகிய மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இதில் பங்கஜ் என்ற முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருபவர் என தெரியவந்து உள்ளது.  

    இதனை அடுத்து, நிஷ்ஷு மற்றும் அவருக்கு உதவி செய்ததாக சஞ்சிவ் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பங்கஜ் மற்றும் மணிஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அரியானா போலீசார் தெரிவித்துள்ளனர். 
    பெற்றோர் வற்புறுத்தலால் 17 வயதில் திருமணம் செய்துக்கொண்டேன், நான் தொடர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன் என்று குழந்தைகள் நல அதிகாரியிடம் குமரி மாணவி கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருக்கும் மார்த்தாண்டத்தில் திருமணம் நடைபெறுவதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமு தாவுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து அதிகாரி குமுதா, சமூக நல அதிகாரி பியூலா, சைல்டு லைன் அமைப்பினர், ஆள் கடத்தல் தடுப்பு போலீசார் ஆகியோருடன் மார்த்தாண்டத்திற்கு சென்றார். அங்கு அவர்கள் விசாரணை நடத்திய போது அந்த சிறுமிக்கு காலையிலேயே திருமணம் நடைபெற்றதும், தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    அங்குச் சென்று அதிகாரிகள் இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண்ணுக்கு 17 வயது தான் ஆவது உறுதியானது.

    10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவருக்கு பெற்றோர் திருமணம் செய்ததும் தெரிய வந்தது. திருமண வயது ஆவதற்கு முன்பே அந்த சிறுமிக்கு திருமணம் செய்தது சட்டப்படி தவறு என்பதால் இது பற்றி இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் கூறினார்கள். சிறுமிக்கு 18 வயது நிரம்பிய பின்னர் தான் திருமண வாழ்க்கையை தொடர வேண்டும் என்றும் கூறினார்கள்.

    அதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திரண்டிருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பிறகு அந்த சிறுமியையும், வாலிபரையும் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சிறுமி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் வற்புறுத்தியதால் திருமணத்திற்கு தான் சம்மதித்ததாக கூறினார். மேலும் தனக்கு தொடர்ந்து படிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்தார்.

    விசாரணைக்கு பிறகு அந்த சிறுமியை நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்த அதிகாரிகள் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட சமூக நல அதிகாரி பியூலா முன்பு அந்த சிறுமி 2-வது நாளாக ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வாலிபரும் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு அந்த சிறுமியை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிப்பை தொடர வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    ×