search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் சிறுமியிடம் சென்ற பேச்சு கொடுத்தார்.
    • சேலம் சென்ற மாணவி அங்கு தனது காதலனை சந்தித்து பேசி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 8-ந்தேதி பள்ளிக்கு சென்றார். அன்று மதியம் உடல்நிலை சரியில்லை வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு மாணவி பள்ளியை விட்டு வெளியேறினார். மாலையில் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் தேடினார்கள். ஆனால் மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து செம்பியம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் மாயமான சிறுமி பள்ளி சீருடையுடன் சேலம் பஸ் நிலைய பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் சிறுமியிடம் சென்ற பேச்சு கொடுத்தார். அப்போது சிறுமி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை பார்ப்பதற்காகவே சேலத்துக்கு வந்தேன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து இதுபற்றி சேலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமியை மீட்டு செம்பியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து பெற்றோருடன் சேலத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை சென்னைக்கு அழைத்து வந்தனர். அறியா பருவத்தில் ஏற்பட்ட காதலால் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி முன்பின் அறிமுகம் இல்லாத வாலிபரை பார்க்க மாணவி சேலம் சென்ற சம்பவம், பெரம்பூரில் அவர் படித்த பள்ளியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    சேலம் சென்ற மாணவி அங்கு தனது காதலனை சந்தித்து பேசி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் மாணவிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    • மாணவிகளுடன் “காபி வித் கலெக்டர்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
    • அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 53 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும், 2020-ம் ஆண்டு 41 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும், 2021 -ம் ஆண்டு 24 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும் 2022 -ம் ஆண்டு 18 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும் என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டு மீட்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி பயிலவும். தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் குறித்தான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி பயின்றுவரும் மாணவிகளுடன் "காபி வித் கலெக்டர்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடை பெற்றது.

    இந்த கூட்டத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டம்-2006 குறித்தும் குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தெளிவாக விவரித்தும், குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி பயிலும் உங்களை போன்று உள்ள மற்றவர்களுக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும் சம்பந்த ப்பட்ட துறைகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். அதற்கு அரசு சார்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே, எந்தவித அச்சமுமின்றி உங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி படித்து நாளை நல்லதொரு சமுதாயத்தை கட்டமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நடை பெறவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் 16 மாணவியர்க ளோடு "காபி வித் கலெக்டர்" என்ற தலைப்பில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துரையாடி அம்மாணவிகளை பாராட்டி, புத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும் தொடர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்.

    • ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள்.
    • படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    குஜராத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. இதனால் மாணவிகள் கல்வி கற்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    தலிபான்களின் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து மீண்ட ஆப்கானிஸ்தான் மாணவி ஒருவர் இந்தியாவில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அந்த மாணவியின் பெயர் ரஷியா முராடி. இவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பொது நிர்வாகம்) படித்தார். இதில் அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதித்து உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனால் ரஷியா முராடி மகிழ்ச்சியுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

    கடந்த ஆண்டு நான் எம்.ஏ முடித்தேன். தற்போது பி.எச்.டி படித்து வருகிறேன். எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த சந்தோஷத்தை எனது பெற்றோருடன் கொண்டாட முடியவில்லையே? என்ற ஏக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெற்றோர்களை பார்த்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி நான் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் சந்தோஷப்பட்டனர். நான் ஆப்கானிஸ்தான் பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே கருதுகிறேன். தலிபான் அரசுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிப்பார்கள். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு படிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கும், சாதனை படைக்க ஊக்குவித்ததற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள். படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க நிகழ்ச்சி நடந்தது.
    • அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    உடுமலை :

    பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க நிகழ்ச்சி உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. இதில் தேவதானூர், ஜல்லிபட்டி, இளைய முத்தூர் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த அரசுப்பள்ளிகளில் பயிலும் 130 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். கணினி பயன்பாட்டு துறைத்தலைவர் மணிமேகலை கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் செடிபவுன் சரியான கல்லூரியை தேர்ந்தெடுப்பது குறித்தும் கல்லூரிகளில் பாடப் பிரிவினை தேர்ந்தெடுப்பது குறித்தும் பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

    கல்லூரியில் பயிலும் மாணவிகள் விஷ்ணு பிரியா , மீனாட்சி ,அபிநயா, காளீஸ்வரி ஆகியோர் கல்லூரியில் இருக்கும் வசதிகள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும்விடுதிகள் குறித்தும் கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்தும் பேசினர். இயற்பியல் துறை இணை பேராசிரியரும் கல்லூரி மாணவர் சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஆர்.எம்., நன்றி கூறினார். நிறைவாக மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்கள் ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாளர் எஸ். அறம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் திருநங்கைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

    கன்னியாகுமரி, பிப்.26-

    மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் ஒரே பாரதம், உண்மையான பாரதம் மற்றும் பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    சைக்கிள் பயண வீராங்கனை மிஸ்கான்ரகுவன்சி கூறுகையில், தான் தினமும் 100 முதல் 150 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகவும், நாட்டில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழுந்து உள்ளதால் அதனை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நர்மதை நதிக்கரையில் 3200 கிலோமீட்டர் தூரத்தை 19 நாட்களில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

    • நாமக்கலில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
    • இந்த நிலையில் கோவை மாணவியிடம் நெருங்கி பழகிய லட்சுமணன், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கலில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    கோவையில் உள்ள பிரபல பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் இந்த போட்டியில் பங்கேற்க நாமக்கல் வந்திருந்தார். அதே போட்டியில் பங்கேற்க மாணவர் ஒருவரை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பயிற்சியாளர் லல் கோத் லட்சுமணன் (வயது 24) என்பவர் அழைத்து வந்திருந்தார்.

    இந்த நிலையில் கோவை மாணவியிடம் நெருங்கி பழகிய லட்சுமணன், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதை அடுத்து நடந்த சம்பவங்களை கேட்டு அறிந்த பெற்றோர், நாமக்கல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் போலீசார் தெலுங்கானா மாநிலம் சென்று அங்கு உள்ள நல்கெண்டா மாவட்டம் எல்லாபுரம் கிராமத்தில் இருந்த பயிற்சியாளர் லட்சுமணனை கைது செய்தனர். பின்னர் நாமக்கல் அழைத்து வந்த அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

    • குமரி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக வழங்கப்படுகிறது
    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட் டத்தின் கீழ் அரசு பள்ளி களில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் 2-வது கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    குமரி மாவட்டத்தில் இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்தார். சமூக நல அதிகாரி சரோஜினி வரவேற்று பேசினார்.

    விழாவில் மாணவ மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து 981 மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.

    விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    புதுமைப்பெண் திட்டம் என்பது மிக முக்கிய மான திட்டம் ஆகும். பெண் குழந்தைகள் கல்வி இடைநில்லாமல் தடுப்பதற்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சில இடங் களில் திருமணங்கள் நடைபெறும். அதை தடுப்பதற்கும் இந்த திட்டம் உதவும். இந்த திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்ஜினீயரிங், மருத்து வம் தவிர பல்வேறு படிப்பு கள் உள்ளது. சட்டம், வேளாண்மை போன்ற படிப்புகள் எல்லாம் உள்ளது. தற்போது நுழைவுத் தேர்வு எழுதுவதிலும் மாணவிகள் கவனம் செலுத்தி தங்களது திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாணவிகளிடமும் ஒவ்வொரு திறமைகள் உள்ளது. தங்களது திறமைகளை நீங்கள் வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகை யில் இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெறும் மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது

    அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பெறும் மாணவிகள் இணைய தளம் வாயிலாக இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக குமரியில் முதல் கட்டமாக 1987 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக 981 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., பத்மநாபபுரம் சப்- கலெக்டர் கவுசிக், கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, ஸ்காட் கல்லூரி முதல்வர் எட்வர்ட், மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ், முன்னோடி வங்கி மேலாளர் பீரவின்,கவுன்சிலர் கவுசிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவதாஸ் நன்றி கூறினார்.

    • பஸ்சை வழிமறித்து செல்லத்துரையை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.
    • மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குப்பதிவு செய்யாமல் கண்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது41). இவர் ஈரோட்டில் இருந்து குமாரபாளையத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்சில், கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை அந்த பஸ் பள்ளிப்பாளையம் வந்ததும், ஒரு மாணவி குமாரபாளையம் கல்லூரிக்கு செல்ல ஏறினார்.

    பஸ் புறப்பட்டதும் அவரது காதை பிடித்து செல்லத்துரை திருகியுள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான மாணவி தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த உறவினர்கள், ஒட்டமெத்தை பகுதியில் பஸ்சை வழிமறித்து, செல்லத்துரையை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது, மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குப்பதிவு செய்யாமல் கண்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள்.
    • ரமேஷ் தனது மகளை திட்டி வெளியே அனுப்பி வைத்தார்.

    கோவை,

    சூலூர் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவை சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது இளைய மகள் திவ்யா (வயது 20).

    பல்லடம் அரசு கல்லூரியில் பி.காம். 3-வது ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் ரமேஷின் மூத்த மகள் நர்மதா என்பவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் மகேந்திரன் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் தனது வீட்டிற்கு சென்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் தனது மகளை திட்டி வெளியே அனுப்பி வைத்தார். இதுகுறித்து கல்லூரிக்கு சென்ற திவ்யாவிடம் அவரது பாட்டி செல்போன் மூலமாக தெரிவித்தார். தனக்கு தெரியாமல் தனது அக்கா திருமணம் செய்ததால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    பின்னர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய திவ்யா வரும் வழியில் அந்த பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலுக்கு சென்றார். வாய்க்கால் முன்பு அழுது கொண்ேட நின்று கொண்டு இருந்த அவர் திடீரென வாய்க்காலில் குதித்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை தேடி வருகிறார்கள். 

    • இன்ஜினியரிங் மாணவி காதலுடன் ஓட்டம் பிடித்தார்
    • பெற்றோர் போலீசில் புகார்

    திருச்சி:

    திருச்சி பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இ.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அருகாமையில் உள்ள கடைக்கு செல்வதாக அந்த மாணவி புறப்பட்டுச் சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். பின்னர் தோழிகளிடம் விசாரித்த போது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த டோனி என்ற வாலிபரை அவர் காதலித்து வந்ததாக தகவல் கிடைத்தது. இதனால் காதலுடன் அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, அதன் பேரில் சோமரசம்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9-ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கட்டாய திருமணம் நடத்தியதாக திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

    அவர் இதுதொடர்பாக சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது 9-ம் வகுப்பு மாணவியை சட்டவிரோத மாக கீழக்குயில்குடியை சேர்ந்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகன் செல்வகுமார் (23) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரியவந்தது.

    இதுகுறித்து அதிகாரி முத்துலட்சுமி, திருப்ப ரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 

    • போதை பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரமிக்கும் வகையில் இருந்தது.
    • இந்த ஓவியங்களை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அனுப்பி இருந்தனர்.

    அந்த ஓவியங்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் டதி பள்ளியில் உள்ள வகுப்பறையில் மாணவ-மாணவிகள் வரைந்து அனுப்பிய ஓவியங்கள் பொது மக்கள், மற்றும் மாணவ மாணவிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதனை நெல்லை சரக போலீஸ் டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் திறந்து வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் மற்றும் போலீ சார் அந்த ஓவியங்களை பார்வையிட்டனர்.

    இன்று பள்ளி மாணவ, மாணவிகள் அந்த ஓவியங்களை நேரில் சென்று பார்வையிட்ட னர். நாகர்கோவில் நகரில் உள்ள பல்வேறு பள்ளி களில் இருந்து மாணவ-மாணவி கள் இந்த ஓவியத்தை பார்த்து சென்றனர்.

    போதை பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரமிக்கும் வகையில் இருந்தது. இந்த ஓவியங்களை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    ×