search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெண்டுல்கர்"

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்துள்ளது என்று தெண்டுல்கர் மற்றும் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளனர். #AUSvIND

    மும்பை:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்தது. 72 ஆண்டு கால வரலாற்றில் புதிய சரித்திரத்தை வீராட்கோலி படைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

    அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மழையால் ‘டிரா’ ஆனது.

    இந்தியா தொடரை வெல்ல புஜாராவும் (521 ரன் குவிப்பு), பும்ராவும் (21 விக்கெட்) முக்கிய பங்கு வகித்தனர்.

    ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்திய அணியை முன்னாள் கேப்டன்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர். அதன் விவரம்:-

    தெண்டுல்கர்: ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான நாள் ஆகும். இதை பொக்கி‌ஷமாக கருதுகிறேன். இந்திய வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

    பேட்டிங்கில் புஜாரா மாறுபட்ட நிலையில் சிறப்பாக செயல்பட்டார். சீனியர் வீரர்களும், ஜூனியர் வீரர்களும் இணைந்து இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். ரிசப்பன்ட், குல்தீப் யாதவ் அணிக்கு மேலும் பலம் சேர்க்க கூடியவர்கள்.

    கவாஸ்கர்: இந்திய கிரிக்கெட்டை வீரர்கள் பெருமை அடைய செய்து விட்டனர். வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபோது நானும் அணியில் இருந்தேன். அந்த தருணங்கள் மிகவும் சிறப்பானது. தற்போதைய இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சாதித்தபோது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி முற்றிலும் மாறுபட்டது. உடல் தகுதியிலும் சிறப்பாக உள்ளது. இதை கேப்டன் நிரூபித்து விட்டார். ஆஸ்திரேலிய அணியில் சுமித், வார்னர் இல்லாதது இந்தியாவின் தவறு அல்ல. ஆஸ்திரேலிய அணி தான் அவர்கள் இல்லாமல் களம் இறங்கியது. இருவரது தடை காலத்தை குறைத்து இருக்கலாம்.

    கங்குலி: இது ஒரு வெறித்தனமான வெற்றியாகும். இந்திய வீரர்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள். 400 முதல் 600 ரன்கள் வரை குவித்தது மிகவும் முக்கியமானது. புஜாரா, பும்ரா அபாரமாக செயல்பட்டு தொடரை வெல்ல காரணமாக இருந்தார்கள்.

    ரிசப்பன்ட் நன்றாக விளையாடினார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. 2003-04-ல் இருந்த எனது அணியுடன், தற்போதுள்ள வீராட்கோலி அணியை ஓப்பீட்டு கேட்கப்படுகிறது. நான் எப்போதுமே ஒப்ரீஜீடமாட்டேன். அதனால் தான் இது மாதிரியான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது.

    வி.வி.எஸ்.லட்சுமண்: ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி பாராட்டு மழையில் நனைகிறது. வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வரலாறு படைக்க முடிந்தது. ஒவ்வொரு வீரரின் செயல்பாடும் சிறப்பாக இருந்தது.

    பி‌ஷன்சிங் பெடி: தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மண்ணில் தோல்வியை சந்தித்த பிறகு ஆஸ்திரேலியாவில் பெற்ற இந்த வெற்றி வியக்கத்தக்கது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் வீழ்த்தியது சிறப்பானது. புஜாராவும், பும்ராவும் நிலையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்கள்.

    ஷேவாக்: இந்திய வீரர்களை நினைத்து ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறோம். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் வெற்றிக்காக முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். #AUSvIND

    ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி சமன் செய்தார். #AUSvIND #ViratKohli #Tendulkar
    பெர்த் டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்து சதம் கண்டதோடு, நிறைய சாதனைகளையும் படைத்தார். அதன் விவரம் வருமாறு:-

    * டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 25-வது சதம் (127 இன்னிங்ஸ்) இதுவாகும். இதன் மூலம் அதிவேகமாக 25 சதங்களை எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை கோலி பெற்றார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 68 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக நீடிக்கிறது. சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் தங்களது 25-வது சதங்களை முறையே 130 மற்றும் 138 இன்னிங்ஸ்களில் எடுத்தனர்.



    * ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலியின் 6-வது செஞ்சுரியாக இது பதிவானது. இதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய இந்தியரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார். ஆஸ்திரேலியாவில், வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஜாக் ஹோப்ஸ் (9 ), வாலி ஹேமன்ட் (7) ஆகியோருக்கு அடுத்து தெண்டுல்கர், இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சுட்கிளிப் (தலா 6 சதம்) ஆகியோருடன் 3-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார்.

    * 30 வயதான விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 10 டெஸ்டில் பங்கேற்று அதில் 19 இன்னிங்சில் பேட் செய்து 1,152 ரன்கள் (சராசரி 60.63) சேர்த்துள்ளார். அங்கு குறைந்தது 15 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் அதிக சராசரியை பெற்றுள்ள ஆசிய நாட்டவர் கோலி தான். #AUSvIND #ViratKohli #Tendulkar

    அந்த காலத்து பேட்ஸ்மேன்களையும், தற்போதுள்ள பேட்ஸ்மேன்களையும் ஒப்பிட்டு பார்ப்பது தேவையற்றது என தெண்டுல்கர் கூறியுள்ளார். #SachinTendulkar #ViratKohli
    மும்பை:

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து, தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் போட்டியில் தெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையையும் கோலி (38 சதம்) தகர்த்து விடுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இருவரது சாதனைகளையும் ஒப்பிட்டு நிறைய விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    ஒரு வீரராக விராட் கோலியின் வளர்ச்சியை பார்த்தால், மிக பிரமாண்டமாக உள்ளது. அவரது ஆட்டத்தில் எப்போதுமே அனல் பறக்கும். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக அவர் வருவார் என்று நான் எப்போதும் நினைப்பது உண்டு. இந்த தலைமுறையில் மட்டுமல்ல, அனைத்து காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவராக அவர் இருப்பார். என்னையும், அவரையும் அடிக்கடி ஒப்பிட்டு பேசுகிறார்கள். அப்படி நீங்கள் ஒப்பிட்டு பேசினால், அதற்குள் நான் நுழைய விரும்பவில்லை. அதில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது. ஏனெனில் 1960, 70, 80, 90-களில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விதவிதமான பவுலர்கள் அந்த காலக் கிரிக்கெட்டுக்கு ஏற்றபடி இருந்தார்கள். தற்போது எந்த மாதிரியான பவுலர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பாருங்கள்.

    கிரிக்கெட் தொடங்கிய முதல் நாளில் இருந்து இன்று வரை தொடர்ந்து அந்த விளையாட்டில் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையினர் விளையாடும் போதும் வித்தியாசமான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், வெவ்வேறான ஆடுகளங்கள், மாறுதல் செய்யப்பட்ட பந்துகள் என்று எத்தனையோ மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மைதான எல்லையும் மாறி விட்டது. முந்தைய காலக்கட்டத்தில் எல்லைக்கோடு விரிவாக இருந்ததால், பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டுவதே கடினமாக இருந்தது. எனவே அந்த காலத்து பேட்ஸ்மேன்களையும், தற்போதுள்ள பேட்ஸ்மேன்களையும் ஒப்பிட்டு பார்ப்பது தேவையற்றது. அதை நான் நம்புவதும் இல்லை.

    இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.
    அறிமுக போட்டியில் பிரித்விஷா பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளதால் அவரது பேட்டிங்கில் தெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். #ravishastri

    மும்பையை சேர்ந்த பிரித்விஷா அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். குறைந்த வயதில் அறிமுக போட்டியில் சதம் அடித்து இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    பிரித்விஷா பயமின்றியும், பதற்றமின்றியும் அருமையாக விளையாடினார். அவரது ஆட்டத்தை தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர்.

    பிரித்விஷாவை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

    பிரித்வி ஷா அருமையாக விளையாடினார். அவர் அறிமுக போட்டியில் பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளார். அவரது பேட்டிங்கில் தெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்றார்.


    பிரித்விஷாவுக்கு இது தனி சிறப்பு வாய்ந்த நாளாக இருந்திருக்க வேண்டும். அறிமுக டெஸ்டில் சதம் அடித்துள்ளார். ரஞ்சி கோப்பை, துலிப் டிராபி ஆகியவற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த அவர் சர்வதேச போட்டியிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார். ஆனால் அவரை ஷேவாக்குடன் ஒப்பிடக் கூடாது.

    பிரித்விஷாவை அவரது உலகத்தை பார்க்க விட வேண்டும். அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து. தென் ஆப்பிரிக்க மண்ணிலும் ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன். ஆனாலும் அவர் ஷோவாக்குடன் ஒப்பிட கூடாது என்றார்.

    சுரேஷ் ரெய்னா கூறும் போது, பிரித்விஷா கடினமாக உழைக்கும் வீரர். அவரது பேட்டிங் எனக்கு ஷேவாக்கை ஞாபகப்படுத்துகிறது. அவரது ஷாட்டுகள் உயர்தரமானது. அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. #PrithviShaw #ravishastri #sachin #sehwag 

    புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று சச்சின் தெண்டுல்கர் கவலை தெரிவித்துள்ளார். #ENGvIND #Bhuvi
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு, முக்கியமாக ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஸ்வர் குமார் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இங்கிலாந்துக்கு ஏதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

    விரைவில் காயம் குணமடைந்து அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புவனேஸ்வர் காயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘புவனேஸ்வர் குமார் காயம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு. நான் அவரிடம் அதிக அளவிலான ஆட்டத்தை எதிர்பார்த்தேன். அவரிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரில் அவருடைய ஸ்விங் திறமை இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும்.

    புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டியில் அடித்துள்ள ரன்களையும் மறந்து விடக்கூடாது. கடைசி கட்டத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த வகையில் பார்ட்னர்ஷிப் கொடுக்கக்கூடியவர். இருந்தாலும் இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.
    இந்திய அணியில் எப்பொழுதும் இல்லாத வகையில் விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் நமது அணியில் உள்ளதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். #Tendulkar
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு நிறைவுடன் காணப்படுகிறது. சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணிகளில் ஒன்றாக இதனை நான் கணிக்கிறேன். எப்பொழுதும் இல்லாத வகையில் விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் நமது அணியில் உள்ளனர். ஸ்விங் செய்வதில் கில்லாடியான புவனேஷ்வர்குமார், உயரமான பவுலரான இஷாந்த் ஷர்மா, வித்தியாசமாக பந்து வீசக்கூடிய பும்ரா, மிகவும் வேகமாக பந்து வீசக்கூடிய உமேஷ்யாதவ் என்று நல்ல கலவையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அமைந்துள்ளனர்.

    இதில் புவனேஷ்வர்குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய லெவன் அணியில் எந்தெந்த பந்து வீச்சாளர் இடம் பெற வேண்டும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதனை எதிரணியை பொறுத்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார். 
    ×