search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலிவுட்"

    தமிழில் ஆடுகளம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை டாப்சி, தற்போது இந்தி படத்தில் இருந்து விலகி இருக்கிறார். #Taapsee #Bollywood
    டாப்சி இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். அனுராக் பாசு இயக்கும் புதிய படத்தில் இணைந்து இருந்த அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.

    டாப்சி பன்னு, ராஜ்குமார் ராவ், பாத்திமா சனா சாகித், ஆதித்யா ராய் கபூர், அபிஷேக் பச்சன் எனப் பெரிய நட்சத்திர கூட்டணியை உருவாக்கி அனுராக் பாசு புதிய படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

    இப்படத்தில் நடிக்க டாப்சி எந்தத் தேதிகளில் தனது கால்ஷீட் வேண்டும் எனப் படக்குழுவிடம் கேட்டதற்கு முறையான தகவல்கள் கிடைக்காததால் படத்திலிருந்து விலகியுள்ளார். டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மன்மஸ்ரியான், முல்க் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாகின.



    இந்த ஆண்டு இவர் நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளன. அவர் நடித்துள்ள தாட்கா, பாடியா ஆகிய இந்திப்படங்களின் படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கில் நடித்த கேம் ஓவர் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்தது.

    இது தவிர துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் புதிய படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக டாப்சி நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
    எனது மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் என்று நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். #ManishaKoirala
    மனிஷா கொய்ராலா 1990களில் தமிழ், இந்தித் திரையுலகை கலக்கியவர். மணிரத்னத்தின் `பம்பாய்’, ‌ஷங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

    அதன்பின், முழு நம்பிக்கையுடன் புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ளார். தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததை ‘ஹீல்டு’ என்ற சுயசரிதைப் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், ‘கேன்சர் என் வாழ்வில் நிறைய தைரியங்களை கொடுத்துள்ளது. என்னுடைய மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன்.

    நான் பல இருட்டான நாள்களையும், தனியான இரவுகளையும் கடந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. என் காலடியில்தான் உலகமே இருப்பதாகக் கருதினேன். இடைவிடாத தொடர் படப்பிடிப்புகளால் 1999ஆம் ஆண்டு உடல் அளவிலும் மனதளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டேன்.



    அதிலிருந்து மீள்வதற்கு மது மட்டுமே எனக்கு சிறந்த வழியாக இருந்தது. என் நண்பர்கள் நிறைய அறிவுரை கூறியும் நான் அதைக் கேட்கவில்லை. கேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன். என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியது. முன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன்” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். #ManishaKoirala
    இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் நடிகை கங்கனா ரணாவத் முதலிடம் பெற்றுள்ளார். #KanganaRanaut #Bollywood
    இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமன்றி மற்ற பகுதிகளிலும் வசூல் குவிக்கின்றன. இதனால் அந்த படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பெரிய அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்.

    கடந்த வருடம் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று முதல் இடத்தில் இருந்தார். இவர் நடித்து வெளிவந்த பத்மாவத் படம் ரூ.215 கோடி செலவில் தயாராகி ரூ.580 கோடி வசூல் பார்த்தது. கங்கனா ரணாவத் ரூ.12 கோடி பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார்.

    இந்த வருடம் கங்கனா ரணாவத் முதல் இடத்தை பிடித்துள்ளார். ராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா படத்தில் லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் ரூ.14 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நடிகைகள் எவரும் இதுவரை இவ்வளவு சம்பளம் பெற்றது இல்லை.



    கங்கனா ரணாவத் நடித்த குயீன் படம் வசூல் சாதனைகள் நிகழ்த்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு படத்துக்கு படம் சம்பளத்தை கூட்டி வந்த அவர் இப்போது ரூ.14 கோடி பெற்று இருக்கிறார். கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ளார்.
    இந்தி திரையுலகில் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரிஷி கபூர், சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். #RishiKapoor #Bollywood
    இந்தி திரையுலகில் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரிஷிகபூருக்கு 66 வயது ஆகிறது. இவர் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். ரிஷி கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹெல் ஹெல் மெயின், ஹபி ஹபி, கர்ஷ், அமர் அக்பர் அந்தோனி, ரபூ சக்கர், பனா, லவ் ஆஸ்கல், உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தின.

    நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்டார். ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். ரிஷி கபூருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மும்பையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அவர் புறப்பட்டு செல்கிறார்.

    இதுகுறித்து ரிஷிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பணியில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். தேவையில்லாத வதந்திகளையும் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் அமலாபால் தற்போது முதல்முறையாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Amalapaul
    அமலாபால் நடிப்பில் இறுதியாக ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்ப்பார்த்தளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. இப்படத்தை அடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘ராட்ச்சசன்’ படத்தில் நடித்து வருகிறார். முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    அதுபோல், கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அமலாபால்.



    அர்ஜுன் ராம்பால் நடிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் அமலாபால். இப்படத்தை நரேஷ் மல்ஹோத்ரா இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக இந்தி படத்தில் அறிமுகமாக இருக்கிறார் அமலாபால்.
    பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பயன்படுத்தும் கைப்பையின் விலை, ஒரு கார் விலையை விட அதிகம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. #PriyankaChopra
    இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா குவான்டிகா டி.வி தொடர் மூலம் ஹாலிவுட் பட வாய்ப்புகள் பெற்று உலக அளவில் பிரபலமாகி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

    அமெரிக்காவில் உள்ள நடிகர்-நடிகைகள், பாடகர்கள், விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாகி விருந்து, கொண்டாட்டம் என்று அதிக நாட்கள் அந்த நாட்டிலேயே இருக்கிறார்.

    சமீபத்தில் அவரிடம் நேரில் சென்று பேசி வற்புறுத்தி சல்மான்கானுடன் பரத் என்ற படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார். அந்த தொகையை கொடுக்க படக்குழுவினரும் சம்மதித்து உள்ளனர்.

    உலக புகழ் பெற்ற அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் பிரியங்கா சோப்ராவுக்கு நெருக்கம் ஏற்பட்டு இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர். பணம், புகழ் என்று ஆடம்பரமாக வாழும் பிரியங்கா சோப்ரா இப்போது விலை உயர்ந்த கைப்பைகளுடன் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார்.

    ஒரு வாரத்தில் மட்டும் அவர் கையில் மூன்று வெவ்வேறு கைப்பைகள் வைத்து இருந்தார். ஒரு பை சிமெண்ட் நிறத்தில் இருந்தது. அந்த பையின் விலை ரூ.4.50 லட்சம். இன்னொரு நாள் விமான நிலையத்தில் வெறொரு கைப்பையுடன் சென்றார். அதன் விலை ரூ.4.50 லட்சம். மற்றொரு நாள் பூப்போட்ட கைப்பை ஒன்றை வைத்து இருந்தார். அதன் விலை ரூ.4 லட்சம் என்று மதிப்பிட்டனர்.

    குறைந்த பட்சமாக குறிப்பிட்ட ஒரு காரின் விலை ரூ.3.5 லட்சத்துக்கும் இன்னொரு கார் ரூ.3.6 லட்சத்துக்கும் கிடைக்கிறது என்றும் அதைவிட விலை உயர்ந்த கைப்பைகளை பிரியங்கா சோப்ரா பயன்படுத்துகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

    பிரியங்கா சோப்ராவின் கைப்பைகளைப் பற்றித்தான் இந்தி பட உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
    ×