search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனி"

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காலம் தொடங்கி விட்டது. மாவட்டம் முழுவதும் காஷ்மீர்போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது. தலைக்குந்தா, கிளன்மார்கன், போர்வே, இத்தலார், போர்த்தி ஆகிய இடங்களில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

    நகர் பகுதியான ரேஸ்கோர்ஸ், கூடைப்பந்து மைதானம், அரசு தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் வெப்ப நிலை 6 டிகிரி செல்சியசாக பதிவானது. தலைகுந்தா, கிளன்மார்கன் ஆகிய இடங்களில் 0 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்தது.

    வெப்பநிலை குறைவால் தண்ணீர் பனிக்கட்டியானது. இதனால் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழாய்களிலும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    டீசல் உறைந்ததால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்களை அதிகம் காணமுடியவில்லை. உறைபனியால் 1000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட தேயிலைச் செடிகள், மலைக்காய் கறிச்செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பனியின் தாக்கத்தால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டனர். ரோட்டோரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். மாலை நேரங்களில் மக்கள் கூட்டமின்றி ஊட்டி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. #tamilnews
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்குநாள் குளிர் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக பனி வாட்டி வதைத்து வருகிறது.

    போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பனி மூட்டம் மற்றும் குளிர் மாறி, மாறி வந்தநிலையில் இன்று காலை சுமார் 16 டிகிரி அளவில் போச்சம்பள்ளி பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் சாலை ஓரத்தில் இருக்கும் குப்பைகளை வைத்து நேருப்பூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். போச்சம்பள்ளி பகுதிகளில் பெரும்பாலும், நீர் நிலைகள் மற்றும் தென்னந்தோப்புகள் இருப்பதால் கடுமையான குளிர்ஏற்பட்டு சீதோஷ்ண நிலை மாறி உள்ளதால் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதம் சளி, ஜொரம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற குவிந்து வருகின்றன.

    சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் நாளுக்குநாள் குளிர் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது.

    இரவு 12 மணி முதல் காலை 10 மணி வரை அதிக குளிர் நிலவி வருவதால் அதிகாலை 4, 5 மணிக்கு திறக்கப்படும் டீகடை, காய்கறி கடை, மளிகை கடை வியாபாரிகள் தாமதமாக தங்கள் கடைகளை திறந்து, வேலைகளை செய்து வருகின்றனர். கடும்குளிர் என்பதால் சொட்டர், குல்லா, அணிந்து செல்கின்றனர். கால், கைகள் மறைக்கப்படாத பகுதியில் குளிரினால் விரைப்பு ஏற்பட்டு வாகனம்கூட இயக்க முடியவில்லை எனவும், வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

    மேலும், சூளகிரி பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவும் இந்தது.

    சூளகிரி சந்தை வீதியில் புதன்கிழமைதோறும் கோழி, ஆடுசந்தை நடைபெறுவது வழக்கம். அதிகாலை 5 மணிக்கே கூடும் இந்த சந்தை இன்று கடும் பனியின் காரணமாக காலை 8 மணிக்கு பிறகு தான் கூடியது. எனவே தாமதமாக கோழிகள், ஆடுகள் கொண்டு வரப்பட்டன. #tamilnews
    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்றும், இன்றும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்பட்டது. #Kashmir #Snowfall
    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தாங்க முடியாத அளவுக்கு கடும் குளிர் நீடித்து வருகிறது.

    டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் அதிகாலையில் பயங்கர குளிர் காற்று வீசுகிறது. இதனால் போக்குவரத்துகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்றும், இன்றும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்பட்டது.

    இதனால் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள் குளிர் தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் காரணமாக நீர் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஏரிகள், குளங்களில் உள்ள தண்ணீர் பனிக் கட்டியாக மாறி வருகிறது. புகழ்பெற்ற டால்ஏரி முற்றிலும் பனிக்கட்டியாக உறைந்து விட்டது.

    அதிகாலையில் குளிர் காற்று வீசுகிறது. வாட்டி வதைக்கும் அந்த குளிர் காற்றை எதிர்கொண்டு செல்ல முடியாததால் பகல் 11 மணி வரை வாகன போக்குவரத்தும் குறைவாகவே உள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் 1990-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி மிக குறைவான மைனர் 8 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தது. தற்போது மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது.

    இதனால் காஷ்மீருக்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கார்கில் பகுதியில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவுகிறது.

    குளிர் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாரடைப்பு உள்பட உடல்நலக்குறைவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காஷ்மீர் மாநில டாக்டர்கள் சங்கம் எச்சரித்து உள்ளது. #Kashmir #Snowfall
    போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் காலை 8 மணிவரை முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஓட்டி செல்கின்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர் பனியாக உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசம்பட்டி, புலியூர், மஞ்சமேடு, பண்ணந்தூர், பாரூர், பாப்பானூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

    எப்போதும் லேசன பனிப் பொழிவு ஏற்படும் இப்பகுதிகளில், தற்போது அதிகஅளவு பனிப் பொழிவு  நாலுக்கு நாள் உள்ளது. கடந்த 4 தினங்களாக தொடர் பனிப் பொழிவு வழக்கத்திரற்கு மாறாக ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மட்டுமே தொடர் பனிப் பொழிவு ஏற்படும் நிலையில், இப்பகுதிகளில் அதிகாலை முதலே பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் ரோடு தெரியாமல் வாகனத்தை ஆமைபோல் இயக்குகின்றனர். காலை 8 மணிவரை முகப்பு விளக்கு எரிய விட்டவாறு ஓட்டி செல்கின்றனர். 

    மேலும், வீடுகளில் வைக்கப்பட்டுள்ள ரோஜா போன்ற பூக்கள் கருக தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    ×