search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டவிரோதம்"

    சென்னை வடபழனி கட்டிட தீ விபத்து விவகாரத்தில் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #chennaihighcourt #VadapalaniApartmentfire

    சென்னை:

    சென்னை, வடபழனியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் கடந்த 2017ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியானார்கள்.

    இதுகுறித்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தீ விபத்துக்கு உள்ளான கட்டிடத்தை இடிக்கவும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

    ஆனாலும் கட்டிடம் இடிக்கப்பட வில்லை. இதையடுத்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. தீ விபத்துக்குள்ளான சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த நடவடிக்கை குறித்த அறிக்கையை இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் மாநகராட்சி ஆணையருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘20 ஆண்டுகளாக சட்டவிரோத கட்டிடத்துக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த மொத்த தொகையையும், தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்.

    அதுமட்டுமல்ல, தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையும் திருப்திகரமாக இல்லை. அந்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டை விசாரித்த விசாரணை அதிகாரியின் பெயர் கூட அறிக்கையில் இல்லை’ என்று கூறி நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    அன்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆஜராகத் தேவையில்லை என்றும் கூறினர். #chennaihighcourt #VadapalaniAppartmentfire

    இந்தியாவில் வாழும் வங்காள தேசம், ரோஹிங்கியா அகதிகள் தாமாக நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், சுட்டு கொலை செய்யவேண்டும் என தெலுங்கு தேச பா.ஜ.க எம்.பி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #AssamNRC #RajaSinghLodh
    ஐதராபாத்:

    அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து சுமார் 40 லட்சம் இந்தியர்கள் விடுபட்டுபோனதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதற்கான கண்டனம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக தெலுங்கானா மாநில  பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் லோத், தனது கருத்தை சமூக வலைதளங்களில் காணொளி காட்சி மூலம் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் அத்துமீறி குடியேறிய வங்காளதேசம் மற்றும் ரோஹிங்கியாவைச் சேர்ந்த அகதிகள் அவர்களாகவே வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு அவர்கள் வெளியேறாவிட்டால் சுட்டுக் கொலை செய்வது தான் இந்தியாவுக்கு பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார்.

    மேலும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியாவினை சிதைக்க சதி செய்வதாகவும், அவர்களை வெளியேற்றுவதே அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தனது மற்றொரு பதிவில், இந்தியாவில் சட்டவிரோதமாக வாழும் அனைத்து முஸ்லிம்களும் அவர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் அவர்கள் போக மறுத்தால், துப்பாக்கி முனையில் அவர்களை வெளியேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் இந்த சர்ச்சை கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP #AssamNRC #RajaSinghLodh
    தென்கொரியாவில் எந்த வித காரணமும் இன்றி இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. #SouthKoreancourt
    சியோல்:

    தென் கொரியாவில் நாய்களின் இறைச்சியை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் இறைச்சிக்காக ஆண்டுதோறும் 10 லட்சம் நாய்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் நாய்கள் மனிதர்களின் உற்ற நண்பனாக, தோழனாக பழகுகின்றன. எனவே அவற்றை கொன்று உணவாக சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் தென் கொரியாவில் இளைய சமூகத்தினரிடம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு விலங்குகள் நல அமைப்பான ‘கேர்’ புசியோன் நகரை சேர்ந்த நாய் பண்ணை உரிமையாளர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் எந்த வித காரணமும் இன்றி நாய்களை கொல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.

    அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புசியான் பண்ணை உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பு அளித்த கோர்ட்டு அவருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் விதித்தது.

    இதற்கு ‘கேர்’ அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் தென்கொரியா முழுவதும் இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. #SouthKoreancourt
    ×