search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசு"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெருக்களில் திரியும் பசுக்களை பராமரிக்க அரை சதவீதம் செஸ் வரி விதிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #UPGovt #Gaukalyancess #StrayCattle
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கடந்த மாதம் 27-ம் தேதி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, தொழுவங்கள், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதற்கு தேவையான செலவினங்களுக்காக சில பொருட்களின் மீது கூடுதலாக அரை சதவீதம் செஸ் வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்த வகை பொருட்களின்மீது கூடுதல் செஸ் வரி விதிப்பது என்பது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் இதுதொடர்பான அரசு அறிவிக்கை வெளியிடப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.



    இந்த அறிவிப்பின்படி மது வகைகள், சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வருமானத்தின் மீதான வரிவிதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், பசுக்களின் பராமரிப்புக்காக விவசாய விளைபொருள் விற்பனை கூடங்கள் தற்போது செலுத்திவரும் ஒரு சதவிகிதம் வரியும் இரண்டு சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

    அரசின் இந்த முடிவுக்கு அம்மாநிலத்தின் முன்னாள் ஆளும்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    கோசாலைகளை அமைத்து பசுக்களை பராமரித்து பாதுகாப்பது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையாக இருக்குமானால் இதை மத்திய அரசு நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தவில்லை? என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பசுக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடைமைகளில் ஒன்று. இதற்காக தனியாக புதிய வரியை திணித்து மக்களை ஏன் துன்புறுத்த வேண்டும்? என சமாஜ்வாதி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுதரி குறிப்பிட்டுள்ளார். #UPGovt #Gaukalyancess #StrayCattle
    உத்தரபிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். #BJP #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.



    அதோடு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, ஷெட், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். #BJP #YogiAdityanath
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்கும் அரசு கோசாலையில் 18 பசுக்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #CowSafty
    ராய்ப்பூர்:

    இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு வன்முறைகள் நடைபெறுகின்றன. பசுக்களை இறைச்சிக்காக கடத்துவதாக கூறி, பலர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலவும் இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

    வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. ஆங்காங்கே இருக்கும் பசுக்களை மீட்டு, மாவட்ட நிர்வாகம் நடத்தி வரும் கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமே பசுக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பசுபாதுகாவலர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ரோஹாசி எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசு கோசாலையில் 18 பசுமாடுகள் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் ஜானக் பிரசாத் பதக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோசாலையில் இருந்து இறந்த பசுக்களின் உடல்களை எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது, அங்கு பசுக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், அவற்றுக்கு தேவையான உணவை கிராம மக்களும், கோசாலை நிர்வாகிகளும் வழங்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மிகச்சிறிய அறையில் வைத்து பூட்டப்பட்ட அதிகப்படியான பசுக்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கலெக்டர் ஜானக் பிரசாத் தெரிவித்துள்ளார். #CowSafty
    இந்துக்கள் புனிதமாக வணங்கும் பசுவை கொல்வது பயங்கரவாதத்தை விட பெரிய குற்றமாகும் என ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #GyanDevAhuja
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தின் ராம்கர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கியான் தேவ் ஆஜா. இவெ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:

    பயங்கரவாத செயல்களால் இரண்டு அல்லது மூன்று பேர் பாதிக்கப்படுவார்கள். ஆனால், பசுவை கொன்று கொடுமைப்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கிலான மக்களின் உணர்வுகள் புண்படுகிறது.

    எனவே, பசுவை கொல்வது என்பது பயங்கரவாதத்தை விட மிக பெரிய குற்றமாகும் என பேசினார். இவரது கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் பசுவை கொன்றதாக கூறப்படும் அக்பர் கானை தாக்கி கொன்ற விவகாரத்தில் தொடர்புடையவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  #BJPMLA #GyanDevAhuja
    சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய உத்தவ் தாக்ரே, இந்தியாவில் பெண்களை விட பசுக்கள் பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
    மும்பை:

    பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பசுக்களை பாதுகாப்பதாக நடத்தப்படும் வன்முறையால் உயிர்கள் பலியாவது குறித்து பேசிய அவர், இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன, ஆனால் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பாஜகவின் இந்துத்துவா கொள்கை போலியானது என்றும், இந்தியாவில் இந்துத்துவா கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



    தொடர்ந்து பேசிய சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்ரே, நாங்கள் பசுக்களை பாதுகாக்க வேண்டாம் என கூறவில்லை எனவும், பசுக்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தியதால், பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் யார் தேச விரோதி என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது எனவும், மிகவும் எதிர்ப்பார்ப்புடன் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்ததாகவும், ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியைப் போலவே இப்போதும் ஆட்சி நடப்பதாகவும் உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டியுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
    ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியதாக கருதி வாலிபர் ஒருவரை வன்முறைக் கும்பல் அடித்துக் கொன்றது. இதற்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார்.
    ஜெய்ப்பூர்:

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.

    இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவுக்கு பிறகும் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகர் அருகே பசு பாதுகாவலர்கள் அப்பாவி ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

    அரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28). இவர் தனது நண்பரான அஸ்லாம் என்பவருடன் 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு அல்வார் அருகேயுள்ள லாலாவாண்டி காட்டு்ப் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக கருதிய பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் இருவரையும் வழி மறித்து கடுமையாக தாக்கினர்.

    அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர்கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரை வன்முறைக் கும்பல் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தது.

    இதில் படுகாயம் அடைந்த வாலிபர் அக்பர் கானை சிலர் மீட்டு அருகில் உள்ள ராம்கார் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய உடல் ராம்கார் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அக்பர்கானின் குடும்பத்தினர் விரைந்தனர்.

    இந்த படுகொலை தொடர்பாக ராம்கார் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 பசுக்களும் கிராம மக்களிடம் இருந்து மீட்கப்பட்டன.

    இந்த சம்பவத்துக்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 
    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பசுவை கொன்றவருக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இந்துக்கள் அதிகம் உள்ளனர். இங்கு பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பசுவதை தடுப்பு சட்டம் இங்கு அமலில் உள்ளது.

    இந்தநிலையில் யாம் பகதூர் காத்ரி என்பவர் தான் வளர்த்த 3 பசுக்களை கொன்றுவிட்டார். இதை பார்த்த அவரது பக்கத்து வீட்டுக்காரர். பல்தேவ் பட் போலீசில் புகார் செய்தார்.

    எனவே பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் காத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீதிபதி ராம்சந்திர பதேல் முன்னிலையில் நடந்தது. முடிவில் பசுக்களை கொன்ற காத்ரிக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    ×