search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து பரமக்குடியில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். #ImmanuvelSekaran
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு குருபூஜை விழா நடந்தது.

    காலை முதலே போலீசார் ஒதுக்கிய நேரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலா ளர் எம்.ஏ. முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    இதே போல் தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சுப.த. திவாகர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குணா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கிரஸ், தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரமக்குடி மற்றும் முக்கிய பகுதிகளில் 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்களின் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. #ImmanuvelSekaran

    அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். #EdappadiPalaniswami #Paneerselvam #AnnaBirthDay
    சென்னை:

    அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அறிஞர் அண்ணா 110-வது பிறந்தநாளையொட்டி 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2018 முதல் 17.9.2018 வரை 3 நாட்கள், அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டங்கள் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் நகரங்களிலும், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை அனைத்து நிர்வாகிகளுடனும் இணைந்து நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பொன்னேரியில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், காஞ்சீபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கின்றனர். மற்ற மாவட்டங்களில் மாவட்டங்களை சார்ந்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். 
    சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். #AtalBihariVajpayee #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது.  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மூத்த தலைவர்கள் அஸ்தியை 7 கலசங்களில் எடுத்து வந்தனர்.

    சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் 7 அஸ்தி கலசங்களுக்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    இன்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கமலாலயம் வந்து, வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு  வரும் 26-ம் தேதி வாஜ்பாய் அஸ்தி கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை கடற்கரை, ராமேஸ்வரம் கடல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், காவிரி, பவானி, வைகை என 6 இடங்களில் ஒரே சமயத்தில் கரைக்கப்பட உள்ளது. #AtalBihariVajpayee #EdappadiPalaniswami #OPS
    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். #AbdulKalam
    மானாமதுரை:

    மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மேலாளர் சுஜய் தலைமையில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்துல்கலாம் குறித்த சொற்பொழிவு, கவிதை, பாடல் உள்ளிட்டவற்றை மாணவர்கள் படைத்தனர். முடிவில் அதில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்பத்தூர் நேஷனல் கேட்டரிங் சமுதாயக்கல்லூரியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு முதல்வர் சுரேஷ்பிரபாகர் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மரம் நடுவதின் அவசியத்தை வலியுறுத்தி நினைவு அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    இதேபோல் கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் பள்ளியில் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமையில் மாணவர்கள், ஆசிரிய-ஆசிரியர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் எஸ்.பழனியப்பன் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜோதிராஜா வரவேற்றார். பின்னர் ‘கலாம் இறக்கவில்லை, சற்று இளைப்பாறுகிறார்’ என்ற தலைப்பில் மாணவ-மாணவிகள் கலாமின் சாதனைகளை விளக்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மலேசியவாழ் தமிழர்கள் காயத்ரி, மணிகண்டன், சஞ்சய்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளிச் செயலாளர் குணாளன் நன்றி கூறினார்.

    தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பஞ்சு தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் ‘மாமனிதர் அப்துல்கலாம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    காரைக்குடி ராகவேந்திரா பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி செயலாளர் கார்த்திக், முதன்மை முதல்வர் நாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் மாணவர்கள் அப்துல்கலாம் வேடமணிந்தும், அவரது முகமூடி அணிந்தும் வந்தனர். 
    அரியலூர் மாவட்டத்தில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பில் கார்கில் போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    கார்கில் போரில் தம் இன்னுயிர் நீத்து நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்ற போராடிய ராணுவ வீரர் களுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பாக கார்கில் விஜய் திவாஸ்- ஐ முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள டி.வி.எஸ். ஷோரூம்களில் கார்கில் காலிங் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் கே.ஆர்.டி., டி.வி.எஸ். சார்பில், நடைபெற்ற ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கே.கே.சி. கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான சின்னப்பன், போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் ராமதாஸ், அரிமா சங்க தலைவர் லயன் சக்தி ரவிச்சந்திரன், செயலாளர் கண்ணையன், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்களது டி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்து ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், மரியாதை செலுத்தும் விதமாகவும் நாட்டுப்பற்றை தூண்டும் முழக்கங்களை முழங்கி கொண்டு வந்தனர்.

    இந்த ஊர்வலம் கே.ஆர்.டி., டி.வி.எஸ். ஷோரூமிலிருந்து பஸ் நிலையம், அண்ணாசிலை, கடைவீதி, டாக்டர் கருப்பையா நகர் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பொது மேலாளர் ராஜேஷ்குமார், மேலாளர் சண்முகம் மற்றும் சர்வீஸ் மேலாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவன உரிமையாளர் ராஜன் நன்றி கூறினார்.
    அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக சென்ற டி.டிவி தினகரனுக்கு மாவட்ட கழகம் சார்பில் மணலூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை போன்ற சிவகங்கை மாவட்ட எல்கையில் இருந்து மாவட்ட முடிவு வரை பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    மாவட்ட செயலாளர் உமாதேவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன்கென்னடி மாவட்ட துணை செயலாளர் மேப்பல்ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் சக்தி, இளைஞரணி இணைச் செயலாளர் இறகு சேரிமுருகன் வக்கீல் பிரிவு இணை செயலாளர் அன்பரசன் பாசறை இணைசெயலாளர் அந்தோணிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் தேர்போகிபாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் மந்தகாளை, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முத்து, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அண்ணாமலை, விவசாய பிரிவு இணை செயலாளர்அர்ச்சுணன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் கார்த்திகைசாமி, காரைக்குடி நகர செயலாளர் சரவணன், நகர செயலாளர் அன்புமணி, தொகுதி செயலாளர் மகேஷ் மற்றும் நகர, ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.

    காயிதே மில்லத் 123-வது பிறந்த நாளான நாளை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் மரியாதை செலுத்துகிறார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காயிதே மில்லத் 123-வது பிறந்த நாளான நாளை (5-ந்தேதி) காலை 10 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVdhinakaran
    இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவுதினத்தையொட்டி, டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #JawaharLalNehru #deathanniversary #leaderspaytribute
    புதுடெல்லி:

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற பண்டிதர் ஜவஹர்லால் நேரு 27.5.1964 அன்று இயற்கை எய்தினார். அவர் மறைந்த 54-வது நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அங்கு நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.



    இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் நேருவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். #JawaharLalNehru #deathanniversary #leaderspaytribute
    ×