search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெஸ்ட்"

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது. #NZvSL

    கிரைஸ்ட்சர்ச்:

    இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 178 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. சவுத்தி அதிகபட்சமாக 68 ரன் எடுத்தார். லக்மல் 5 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 90 ரன்கள் பின்தங்கிய நிலை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.

    நியூசிலாந்தின் வேகப்பந்து வீரர் போலட்டின் அதிரடியான பந்து வீச்சால் இலங்கை அணி நிலைகுலைந்தது. அவர் 15 பந்துகளில் 4 ரன் கொடுத்து இலங்கை அணியின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் 4 வீரர்கள் பேரைரா, லக்மல், சமிரா, குமார ‘டக்அவுட்’ ஆனார்கள்.

    அவர் வீசிய 4-வது பந்தில் சில்வா (21 ரன்) ஆட்டம் இழந்தார். 5-வது பாலில் பவுண்டரி கொடுத்தார். அடுத்த பந்தில் ரன் கொடுக்கவில்லை. அதற்கு அடுத்த 2 ஓவர்களில் அவர் 3 விக்கெட்டையும், 2 விக்கெட்டையும் ரன் கொடுக்காமல் கைப்பற்றினார்.

    போலட்டின் அதிரடியான பந்து வீச்சில் இலங்கை அணி 41 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. மேத்யூஸ் 33 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    74 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் ராம்டாம், லாதம் அரைசதம் அடித்தனர். ராவல் 76 ரன்னில் ஆட்டம் இழந்தார். #NZvSL

    கடைசி நாளில் நாங்கள் ஹீரோவாக ஜொலிப்போம் என்று ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #AUSvIND

    4 -வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நிருபர்களிடம் கூறுகையில், ‘சமீபத்தில் துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் கடைசி நாளில் எப்படி போராடி மீண்டோம் என்பது குறித்து விவாதித்தோம். இந்த டெஸ்டில் எங்களால் வெற்றி பெற முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். அந்த மாதிரி நினைப்பது தான் நல்லது. நாளைய (இன்று) நாளில் முதல் பந்து, முதல் ஓவர், முதல் மணி நேரம் எல்லாவற்றையும் வெற்றிகரமாக மாற்ற வேண்டியது முக்கியம். எங்களது வீரர்கள் நெருக்கடியை பற்றி நினைக்காமல் உற்சாகமாக, நம்பிக்கையுடன் போராட வேண்டும்.

    ஷான் மார்ஷ், ஒரு சூப்பர் ஸ்டார். முதல்தர கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக நிறைய பந்து வீசியிருக்கிறேன். எனது பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் விரட்டியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் விளையாடுவதில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். அவரும், டிராவிஸ் ஹெட்டும் கடைசி நாளில் ஹீரோவாக உருவெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.’ என்றார். கடந்த மாதம் இதே மைதானத்தில் நடந்த முதல்தர கிரிக்கெட்டில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக இறங்கிய ஷான் மார்ஷ் 163 ரன்கள் விளாசி, 313 ரன்கள் இலக்கை எட்ட வைத்தது நினைவு கூரத்தக்கது.

    இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறுகையில், ‘பின்வரிசை பேட்ஸ்மேன்களிடம் இருந்து குறைந்தது 25 ரன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். இந்த பகுதியில் நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. 9, 10, 11-வது வரிசை ஆட்டக்காரர்கள் கொஞ்சமாவது சிறப்பாக ஆட வேண்டும். புஜாராவும், ரஹானேவும் தரமான டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள். எப்போதெல்லாம் அவர்கள் நன்றாக ஆடுகிறார்களோ, அப்போது அணியும் வலுவான நிலைக்கு சென்று விடும்.

    கேப்டவுன் (தென்ஆப்பிரிக்கா), லண்டன் ஓவல் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு கட்டத்தில் நல்ல நிலைமையில் இருந்து தோல்வியை தழுவினோம். ஒரு அணியாக நாங்கள் எப்போதும் சவால் மிக்க அணியாக உணருகிறோம். இப்போது தேவை, முன்பு போல் அல்லாமல் தடையை வெற்றிகரமாக கடக்க வேண்டும்’ என்றார். #AUSvIND 
    டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். #ENGvIND #JamesAnderson
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். ஓவல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் (தவான், புஜாரா) கைப்பற்றினார். இறுதி கட்டத்தில் சமியை போல்ட் செய்த அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

    டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் இருந்த மெக்ராத்தை (ஆஸ்திரேலியா) கீழே தள்ளி ஆண்டர்சன் அந்த இடத்தை பிடித்துள்ளார். மெக்ராத் 124 டெஸ்டில் 563 விக்கெட் எடுத்துள்ளார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் 564 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 

    சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், அனில் கும்ளே (இந்தியா) 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். #ENGvIND #JamesAnderson 
    இலங்கை, தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. #SriLanka #SouthAfrica
    கொழும்பு:

    பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை 3-வது நாளுக்குள் சுருட்டிய இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று (காலை 10 மணி) தொடங்குகிறது. முந்தைய டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியின் 17 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சில் தான் சரிந்தன. இந்த டெஸ்டிலும் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் ஹெராத், தில்ருவான் பெரேரா, சன்டகன் ஆகிய சுழல்தாக்குதலை சமாளிப்பதை பொறுத்தே தென்ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்குமா அல்லது சரண் அடையுமா? என்பது தெரியும்.

    ஹெராத் கூறுகையில், ‘உள்ளூரில் இந்த தொடரை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தென்ஆப்பிரிக்க அணி உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறது. அவர்களை வீழ்த்தும் போது நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது’ என்றார். தனிப்பட்ட முறையில் சில வீரர்கள் சாதனையின் விளிம்பில் இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா இன்னும் 3 ரன் எடுத்தால் 9 ஆயிரம் ரன்களையும், இலங்கையின் மேத்யூஸ் 8 ரன் எடுத்தால் 5 ஆயிரம் ரன்களையும் கடப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஒரு விக்கெட் எடுத்தால், தென்ஆப்பிரிக்க பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவரான பொல்லாக்கின் (421 விக்கெட்) சாதனையை முறியடிப்பார்.இந்த டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளும் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 2-வது நாளில் மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நாளை தொடங்குகிறது. #IND #AFG #INDvAFG
    பெங்களூர்:

    ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்டில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது.

    அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட திட்டமிடப்பட்டது.

    அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது.

    கேப்டன் விராட்கோலி இங்கிலாந்து தொடருக்காக இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    தவானும், முரளி விஜய்யும் தொடக்க வீரராக ஆடுவார்கள். ஐ.பி.எல். போட்டியில் முத்திரை பதித்த லோகேஷ் ராகுலுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் இந்தியா வலிமையுடன் இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தும் என்று கருதப்டுகிறது. புஜாரா, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோர் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

    சுழற்பந்து வீரர்களான அஸ்வின்-ஜடேஜா கூட்டணி டெஸ்ட் தொடர்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தி வருகிறது. இதனால் இருவரும் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள். வேகப்பந்து வீச்சில் உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா உள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சில் பலமாக உள்ளது. ரஷீத்கான், முஜீபுர் ரகுமான் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.



    இந்த டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரகானே (கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, கருண்நாயர், ஹர்த்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி.

    ஆப்கானிஸ்தான்: அஸ்கர் ஸ்டானி ஸ்காய் (கேப்டன்), அப்சர் சசாய், அமீர்கம்சா, அஸ்மத்துல்லா, இஷானுல்லா, ஜாவீத் அகமது, முகமது ‌ஷசாத், முஜீப் -உர்- ரகுமான், நசீர் ஜமால், ரக்மத்ஷா, ரஷீத்கான், சயீத் ஷிரசாத், வபதார், யாமின் அகமது, ஜாகீர்கான். #IND #AFG #INDvAFG
    ×