என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு ஊழியர்கள்"

    • சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை காலமுறை ஊதிய அடிப்படையில் நிலைப்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும்.
    • இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும், தமிழ்நாடு அரசு அதனை நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் (எண்: 313) வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை வழங்காமல் ஏமாற்றி வருவது நம்பி வாக்களித்த சத்துணவு ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளின் கல்வி தடைபடாமலிருக்க பெருந்தலைவர் காமராசர் 1955ஆம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் அத்திட்டம் 1982ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு மையங்கள் அமைக்கப்பட்டு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என்று பணியிடங்கள் உருவாக்கப்பட்டது.

    தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1,95,000 பணியாளர்களுடன் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் 65,000 சத்துணவு மையங்களில் நாள்தோறும் 55 லட்சம் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ– மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.

    கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றியும் சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை காலமுறை ஊதிய அடிப்படையில் நிலைப்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும். அதோடு இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது அவர்களின் உழைப்பினை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொடுங்கோன்மையாகும்.

    மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அரசு நியமித்த சத்துணவு பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட காலை உணவு தயாரிப்புப் பணியினை திமுக அரசு தனியாருக்கு வழங்குவது ஏன்?

    தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தரகுத் தொகைக்காகவா? அல்லது சத்துணவு திட்டத்தையே மெல்ல மெல்ல தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமா? என்ற ஐயமும் எழுகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமுள்ள 1,95,000 சத்துணவுப் பணியிடங்களில் தற்போது 60,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

    ஆகவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் தயாரிக்கும் பணியையும் சத்துணவுப் பணியாளர்களிடமே முழுவதுமாக ஒப்படைத்து, அவர்களை காலமுறை ஊதியப் பணியாளர்களாக மாற்றி உரிய ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    மேலும், தற்போது காலியாகவுள்ள 60,000 சத்துணவு பணியிடங்களை நேர்மையான முறையில் உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மாதம் 10,000 ரூபாயாகவும், பணிக்கொடையை 5 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும், பணி மூப்பு மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்குப் பதவி உயர்வும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் இன்று சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சுப்புலட்சுமி, செல்வி, கவுரி, சாந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இந்த போராட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.

    காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    மணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம்மும், உதவியாள ர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது.
    • காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி நடந்த இந்த ஆர்ப்பா ட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெபமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கவிதா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பொன் பாக்கிய தீபா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    நிர்வாகிகள் உதயகுமார், நாஞ்சில் நதி, ரிச்சர்ட் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணைத்தலைவர் கவிதா, துணை செயலாளர் பிரபா ராணி, செயற்குழு உறுப்பினர் லூயிஸ் மேரி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • மதுரை வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பாளர் வேல்மயில் பேசினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம், பணிக்கொடை ரூ.5 லட்சம், காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சூசைநாதன் தலைமை தாங்கினார். மூர்த்தி, பிச்சையம்மாள் முன்னிலை வகித்தனர். ராஜகுமாரி வரவேற்றார்.

    டி.என்.ஜி.ஏ. தலைவர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பாளர் வேல்மயில் பேசினார். இதில் பானு, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைச்செயலாளர் கார்த்திகை லட்சுமி நன்றி கூறினார்.

    • சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • சத்துணவு ஊழியர்கள், மனுவில் உள்ள தங்களின் கையெழுத்து அருகே ரத்தத்தில் கைவிரல் ரேகைகளை பதிவிட்டனர்.

    பொன்னேரி:

    பள்ளிகளில் காலை உணவு திட்டம் மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மீஞ்சூர் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் வட்டார தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வளர்மதி, செயலாளர் லதா, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் குடும்ப பாதுகாப்பு ஓய்வு ஊதியம் ரூ.8,750 வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தினர். அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவில் ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.

    இதற்காக நர்சு ஒருவர் வந்து இருந்தார். அவர் சத்துணவு ஊழியர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஊசியால் குத்தி ரத்தத்தை எடுத்தார். பின்னர் சத்துணவு ஊழியர்கள், மனுவில் உள்ள தங்களின் கையெழுத்து அருகே ரத்தத்தில் கைவிரல் ரேகைகளை பதிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கூறும்போது, இந்த ரத்த கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க உள்ளோம். அவர் வாங்க மறுத்தால் முதலமைச்சருக்கு அனுப்பி வைப்போம் என்றனர்.

    • சத்துண ஊழியர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
    • ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களைக் கொண்டு அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்க ளை நிரப்பிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துண ஊழியர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார்.

    மாவட்டத் துணைத் தலைவர்கள் அறிவழகன், கருணாநிதி, ராமாமிர்தம், சுகந்தி, இணை செயலாளர்கள் நாவலரசன், முத்துராமன், மதிவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார்.

    இதில் கலந்துகொண்ட சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

    இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் கோதண்டபாணி நிறைவுறையாற்றினார்.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் சிவ ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் ரங்கசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்ட செயலாளர்கள் தமிழ் மாறன், அஜய்ராஜ், துறை தணிக்கை மற்றும் மாநிலத் தலைவர் அம்பேத்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார்.

    • சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்படி இன்று காலை கோட்டை பகுதியில் மாவட்ட தலைவர் வடிவேல் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து மறியல் முயற்சியில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 132 பேரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருணம மண்டபத்தில் அடைத்தனர்.

    • கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்
    • சகுந்தலா, அபிராமி உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 5-வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் இணைச்செயலாளா் ஜெயந்தி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளா் முருகேசன் திட்ட அறிக்கையையும், பொருளாளா் ராஜேஸ்வரி வரவு- செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனா்.இதை தொடா்ந்து, ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் பள்ளிகளில் அமல்படுத்தும் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடமே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட தலைவராக ஜெயந்தி, செயலாளராக மாசிலாமணி, பொருளாளராக தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா்களாக விஜயலட்சுமி, தெய்வானை, சகுந்தலா, அபிராமி உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
    • இரவிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நாளை காலையில் முடிக்க திட்டம்.

    சென்னை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை தொடங்கியது. சேப்பாக்கம் சமூக நல ஆணையரகம் அருகில் போடப்பட்ட சாமினா பந்தலில் உண்ணாவிரதம் இருந்தனர்.

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யவும், 95 அரசாணையை ரத்து செய்தல், ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெஸி வரவேற்றார்.

    மாநில துணை தலைவர்கள் பெரியசாமி, அண்ணாதுரை, தமிழரசன், மஞ்சுளா, வாசுகி, மாநில செயலாளர்கள் கற்பகம், சுமதி, மகேஸ்வரி, பாண்டிச் செல்வி, லதா, நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இரவிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நாளை காலையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் வெங்கடேசன், மலர்க்கொடி, மாலா, மாவட்ட இணை செயலாளர்கள் கருணாகரன், தேன்மொழி வனிதா, மாநில செயற்குழு உறுப்பினர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கொளுத்தும் வெயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தியதைப்போல் சத்துணவு ஊழியர்களின் பணி காலத்தை 60 வயதில் இருந்து 62 வயதாக உயர்த்த வேண்டும்.

    வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் ஆயிரக்கணக்கான அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூபாய் 6750 குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் குணசுந்தரி நன்றி கூறினார்.
    • தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
    • ஓய்வு ஊதியம் ரூ.7850 வழங்க வேண்டும்.

     கோவை,

    கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் நான்கு அம்ச கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக சத்துணவு ஊழியர்கள் தமிழகத்தில் முதல் முதலாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.

    இதில் சத்துணவு ஊழியர்கள் அரசு பணியாளராக கருதி கால முறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வு ஊதியம் ரூ.7850 வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர், சமையல் உதவியாளருக்கு மூன்று லட்சமும் வழங்க வேண்டும், முதல்வரின் காலை சிற்றுண்டி தயாரிப்பை சத்துணவு ஊழியருக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

    இதனை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமசாமி மற்றும் முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி ஒன்றிய பொறுப்பாளர் சிவகாமி ஒன்றிய தலைவர் வசந்தி ஆகியோர் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

    இது குறித்து பேசிய மாவட்ட தலைவர் ராமசாமி, சத்துணவு உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுல்தான் பேட்டையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் அனைவரும் கையெழுத்திட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்க உள்ளோம். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு கொடுக்காமல் சத்துணவு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும், தனியாருக்கு கொடுக்கும் விலையை விட சத்துணவு ஊழியருக்கு குறைவான தொகை மட்டுமே செலவிடப்படுகிறது. எனவே அதை சத்துணவு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

    • ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுப்புலட்சுமி, செல்வி, மஞ்சுளா , சபானா, ஆஸ்மி, மணிமேகலை, சாந்தி, கவுரி, கொடிமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா வரவேற்றார். பாஸ்கர் பாபு தொடக்க உரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும். ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    பணிக்கொடை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×