search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கறிஞர்"

    நாக்பூரில் இன்று நீதிமன்றத்தில் நீதிபதியை அரசு வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #JudgeAssaust
    நாக்பூர்:

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று மூத்த சிவில் நீதிபதி கே.ஆர்.தேஷ்பாண்டே ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கினார். பின்னர் அவர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வந்தபோது, அவரை அரசுத் தரப்பு உதவி வழக்கறிஞர் டிஎம் பராதே தாக்கியதாக தெரிகிறது.

    இதுபற்றி சதார் காவல் நிலையத்தில் நீதிபதி தேஷ்பாண்டே புகார் அளித்துள்ளார். வழக்கின் தீர்ப்பு தொடர்பாக நீதிபதியுடன் வழக்கறிஞர் பராதே வாக்குவாதத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. ஆனால், இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மாவட்ட அரசு பிளீடர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு (குற்றம்சாட்டப்பட்டவர்) ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை சரியான முறையில் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்களிடம் இருந்து இதுபோன்ற செய்கைகளை சமூகம் எதிர்பார்க்கவில்லை என்றும் பிளீடர் கூறியுள்ளார். #JudgeAssaust
    மதநிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீவியின் வழக்கறிஞரை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாக கூறியதாக ஐ.நா. மறுத்துள்ளது. #AsiaBibi #UN #LawyerSaifulMulook
    நியூயார்க்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்புகிறது.



    இற்கிடையே ஆசியா பீவி தரப்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் சைபுல் மாலூக் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.

    பாகிஸ்தானில் இருந்து நெதர்லாந்தின் தி ஹேக் நகருக்கு சென்றடைந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது, தனக்கு ஐநா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் பாதுகாப்பு அளித்ததாகவும், பின்னர் தனது விருப்பத்திற்கு மாறாக வெளிநாடு செல்லும்படி விமானத்தில் ஏற்றி அனுப்பியதாகவும் கூறினார்.

    இந்த குற்றச்சாட்டை ஐநா செய்தித் தொடர்பாளர் எரி கனேகோ மறுத்துள்ளார். வழக்கறிஞர் சாய்புல் முலூக் கேட்டுக்கொண்டதால் பாகிஸ்தானில் உள்ள ஐநா அலுவலகம் அவருக்கு உதவி செய்ததாகவும், நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் ஐநா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். #AsiaBibi #UN #LawyerSaifulMulook
    சிங்கப்பூர் நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி வழக்கறிஞரான டேடர் சிங் கில் அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். #JudicialCommissioner #Singapore #DedarSinghGill
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் டேடர் சிங் கில். இவர் கடந்த 30 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். 59 வயதான டேடர் சிங் கில்லை, சிங்கப்பூர் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை ஆணையராக அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் நியமித்துள்ளார்.

    2 ஆண்டுகள் நீதித்துறை ஆணையராக பொறுப்பு வகிக்க உள்ள டேடர் சிங், ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவர், ஆசிய காப்புரிமை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் என்பதும், காப்புரிமை ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #JudicialCommissioner #Singapore #DedarSinghGill
    அவதூறு வழக்கில் தேடப்படும் எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சென்னை காவல் ஆணையருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #Shekher #PoliceCommisioner #Notice
    சென்னை:

    பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே, போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர் 2 முறை சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். ஆனாலும், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். இதையடுத்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை சார்பில் வக்கீல் டி.அருண், சென்னை காவல் ஆணையருக்கும், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டருக்கும் கோர்ட்டு அவமதிப்பு நோட்டீசை நேற்று அனுப்பியுள்ளார்.

    அதில்,  ஐகோர்ட்டு உத்தரவிட்டும் எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 12-ம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேகரை கைது செய்யாதது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே எஸ்.வி.சேகரை கைது செய்து சட்டத்தின் முன் 7 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என குறிப்பிட்டுள்ளது. #Shekher #PoliceCommisioner #Notice
    ×