search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடிப்பட்டி"

    மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவரது மனைவி பாலாமணி (37). இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், வீரகுரு என்ற மகனும் உள்ளனர்.

    வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு முருகன் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை அவருக்கும் மனைவி பாலாமணிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முருகன், மனைவியை தாக்கினார். இதிலும் கோபம் தணியாத அவர், அங்கு கிடந்த கல்லை எடுத்து பாலாமணி தலையில் போட்டார்.

    இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாலாமணி இறந்தார். இதனால் முருகன் அதிர்ச்சியடைந்தார். ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்ததை நினைத்து வேதனை அடைந்தார்.

    மேலும் போலீசுக்கு பயந்த முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முருகன்- பாலாமணி உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    வாடிப்பட்டி அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக தாய்- கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், இவரது மனைவி உமாராணி (வயது 29) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளாள். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் உமா ராணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி (22) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. சிவமூர்த்தி உமாராணியின் மகளையும் பாலியல் தொந்தரவு செய்ய தொடங்கினார். இதனால் சிறுமி தனது அத்தை நல்லம்மாள் தேவியிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதாள்.

    இந்நிலையில சிவமூர்த்தி அந்த சிறுமியை திருமணம் செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு உமாராணியும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு நல்லம்மாள் தேவியை சிவமூர்த்தியும் உமாராணியும் மிரட்டினர்.

    இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரெஜினா, போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் உமாராணி, கள்ளக்காதலன் சிவமூர்த்தி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
    வாடிப்பட்டியில் வீட்டை உடைத்து நகை - பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ஆண்டார் (வயது58). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மதுரை கூடல்நகரில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய ஆண்டார், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

    இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் ஆண்டார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

    வாடிப்பட்டி:

    மதுரை கோச்சடை முத்தையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சண்முகநாதன் (வயது 24). இவர் சமயநல்லூர் அருகே பரவையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

    திண்டுக்கல்-திருமங்கலம் சாலையில் வைகை ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்தது. திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடியது.

    அப்போது சண்முகநாதன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சண்முகநாதன் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    வாடிப்பட்டியில் 4 தலை முறைகளை கடந்த மூதாட்டி தனது 104-வது பிறந்தநாள்விழாவை கேக் வெட்டி கொண்டாடினார்.
    வாடிப்பட்டி:

    வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜுப்பிள்ளை, தந்தை பெரியாருடன் நெருக்கமானவர்.

    திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடியான இவரது மனைவி  மீனாட்சியம்மாள் (வயது 104) ராஜுப்பிள்ளை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில் மனைவி மீனாட்சியம்மாள் 4 தலைமுறைகளை கடந்து 104வயதாகியும் தனது மகன் பராமரிப்பில் நலமுடன் உள்ளார்,

    அவரது 104-வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது, மூதாட்டியின் குடும்பத்தினர், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகள் புடைசூழ கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய மீனாட்சியம்மாளுக்கு வண்ண மாலை, மலர் கிரீடம், மற்றும் மலர்களால் ஆன கதமும் வழங்கப்பட்டது

    விழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று 4 தலை முறைகளை கடந்த பாட்டியிடம் ஆசி பெற்றனர்.#tamilnews
    ×