search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலித்"

    ராமபக்தனான அனுமானை தலித், ஜாட், முஸ்லிம் என பலர் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் பா.ஜ.க. விளக்கம் அளிக்க வேண்டுமென மதுரா ஜீயர் வலியுறுத்தியுள்ளார். #AdhokshajanandDeo #LordHanuman #Mathuraseer
    லக்னோ:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட.

    இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதைதொடர்ந்து, அம்மாநில மத விவகாரங்கள்துறை மந்திரி லக்‌ஷ்மி நாராயண் சவுத்ரி அனுமான் ஜாட் வம்சத்தை சேர்ந்தவர். அதனால்தான் அவர் மற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சகித்துகொள்ள முடியாமல் ராமனுக்கு ஆதரவாக நின்றார் என குறிப்பிட்டார்.

    இதற்கும் மேலே ஒருபடி ஏறிச்சென்ற உ.பி. சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. உறுப்பினர் புக்கல் நவாப் அனுமான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ரஹ்மான், அர்மான், குர்பான் என்ற ஒலிவடிவத்தில் அனுமானின் பெயரும் அமைந்திருப்பதால் அவர் முஸ்லிம்தான் என்று அவருக்கு தெரிந்த ஆதாரத்தை அவர் முன்வைத்திருந்தார்.


    இந்நிலையில், ஆளுக்கொரு மாதிரியாக அனுமானை உரிமை கொண்டாடும் வகையில் இதுதொடர்பாக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? என மதுரா ஜீயர் அதோக்‌ஷாஜானந்த் டியோ கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஒருபுறம் காலத்துக்கு தக்கவாறு ராமர் கோவில் பிரச்சனையை பா.ஜ.க. கையாண்டு வருகிறது, இன்னொருபுறம், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தலைவர்கள் இந்து கடவுள்களைப் பற்றி தகாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. உறுப்பினர் புக்கல் நவாப் கூறிய கருத்து பா.ஜ.க. ஆமோதித்தால் பின்னர் அக்கட்சி அனுமானுக்கு ஒரு மசூதி கட்டித்தர வேண்டி இருக்கும் என்றும் அதோக்‌ஷாஜானந்த் டியோ காட்டமாக குறிப்பிட்டார். #AdhokshajanandDeo #LordHanuman #Mathuraseer
    அனுமாரை தலித் என்று குறிப்பிட்ட உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில மந்திரி கடவுள்களை சாதியால் பிரிப்பது தவறு என்று குறிப்பிட்டார். #DivideGods #UPminister #YogiAdityanath
    லக்னோ:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட. இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.



    அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தலித் இயக்கமான ‘பீம் படை’ தலைவர் சந்திரசேகர், நாட்டில் உள்ள அனைத்து அனுமார் கோவில்களையும் இனி தலித்துகள் கைப்பற்ற வேண்டும். அந்த கோவில்களில் எல்லாம் தலித்துகளையே அர்ச்சகர்களாக பணியமர்த்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர், ‘கடவுள்களை சாதியின் பெயரால் பிரிவுப்படுத்துவது தவறு. இதனால் தற்போது அனுமார் கோவில்களை தலித் சமூகத்தினர் கைப்பற்றுவது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது’ என்று யோகி ஆதித்யாநாத்தின் பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்துள்ளார். #DivideGods #UPminister #YogiAdityanath

    தாழ்த்தப்பட்ட பிரிவினரை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி குறிப்பிடலாம் என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Dalit
    ஐதராபாத்:

    தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை ‘தலித்’ என்று குறிப்பிட்டு வருகிறார்கள். 1940-ம் ஆண்டு ஐதராபாத்தில் சுதந்திர போராட்டத்தின் போது தாழ்த்தப்பட்டோர் ஒன்று கூடி இயக்கம் நடத்தினார்கள். அப்போது ‘தலித்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. 1970-ல் மராட்டியத்தில் ‘தலித் பாந்தர்ஸ்’ என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது.

    தற்போதும் தொடர்ந்து ‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட பிரிவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாதி ரீதியாக தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ‘தலித்’ வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

    அதில் விவாதங்கள், கட்டுரைகள், மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் ‘தலித்’ வார்த்தையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்காது.

    எனவே தாழ்த்தப்பட்ட பிரிவினரை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி குறிப்பிடலாம். அதே சமயம் போலீஸ் புகார்கள், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் ‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது. ஏனெனில் அரசியல் சட்டப்படி தாழ்த்தப்பட்டோர் என்ற வார்த்தை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. #Dalit
    தலித் என்ற முத்திரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பலவீனமாக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #VCK
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் திருமாவளவன் பேசியதாவது:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கியபோது, அதன் தலைவர் திருமாவளவன். இந்த சமூகம் இதை எப்படி பார்க்கிறது என்றால், திருமாவளவன் தலித் என்பதால் அந்த கட்சி தலித் கட்சி.  ஒரு நொடியில் அது  தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.

    தலித் கட்சி என்றவுடன் அந்த பரிமாணம் என்னவாக முடிகிறது என்றால், 80 சதவீத மக்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று முடிகிறது. 20 சதவீத தலித்துகளுக்கானது தான் என்ற நிலையை உருவாக்கிவிடுகிறது. இந்த முத்திரையானது எனக்கும், நான் உருவாக்கிய கட்சிக்கும் ஒரு பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 80 சதவீத மக்களை அது என்னிடம் இருந்து தனிமைப்படுத்துகிறது.

    ரஜினி, கமல், விஜயகாந்த் கட்சி தொடங்கினால் அது அனைவருக்குமான கட்சி. திருமாவளவன் கட்சி தொடங்கினால் அது தலித்துகளுக்கான கட்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thirumavalavan #VCK
    வெறுக்கத்தக்க வகையில் தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக சர்வதேச மனித உரிமை ஆணையமான ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் கூறுகிறது. #AmnestyInternational
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மை மக்கள் போன்றவர்கள் மீது பரவலாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    அதில், சில தாக்குதல்கள் அவர்களை கடுமையாக அவமதிக்கும் வகையிலும், கீழ்த்தரமாக நடத்தும் வகையிலும் இருக்கிறது. இதை வெறுக்கத்தக்க தாக்குதல் என்று அழைக்கிறார்கள்.

    இந்த வகை தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் கூறி இருக்கிறது.

    2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கூறி முகமது அக்லக் என்பவர் கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இது போன்ற வெறுக்கத்தக்க தாக்குதல்கள் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்பது பற்றி ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் கணக்கெடுத்தது. அதில், 2015 செப்டம்பருக்கு பிறகு இதுவரை 603 வெறுக்கத்தக்க குற்றங்கள் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டில் முதல் 6 மாதத்தில் மட்டும் 100 குற்றங்கள் நடந்துள்ளன. அதில், உத்தரபிரதேசத்தில் தான் அதிக குற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அங்கு மட்டும் 18 குற்றங்கள் நடந்துள்ளன. குஜராத்தில் 13 குற்றங்களும், ராஜஸ்தானில் 8 குற்றங்களும், தமிழ்நாடு, பீகாரில் தலா 7 குற்றங்களும் நடந்துள்ளன.

    கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஹபூரில் முகமது காசிம் என்பவர் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கூறி கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த 6 மாதத்தில் தலித்துகளுக்கு எதிராக 67 குற்றங்களும், முஸ்லிம்களுக்கு 22 குற்றங்களும் நடந்துள்ளன.

    குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிதான் இத்தகைய குற்றங்கள் நடப்பதன் மைய பகுதியாக இருப்பதாகவும் ஆம்னெஸ்டி இண்டர் நே‌ஷனல் கூறி இருக்கிறது.

    அதில், குறிப்பாக மீரட், முசாப்பர் நகர், சகரான் பூர், புலந்த்சாகர் ஆகிய பகுதிகளில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி மீரட்டில் உள்ள சொகாப்பூர் கிராமத்தில் தலித் இளைஞர் உயர் ஜாதியினரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.

    பாக்பட் என்ற இடத்தில் குர்ஜார் சமூக பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்ததால் அந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    புலந்த்சாகர் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் அந்த வாலிபரின் தந்தையை தனது எச்சிலை துப்பி பின்னர் நக்க வைத்து உள்ளூர் பஞ்சாயத்தார் அவமதித்த சம்பவம் நடந்தது.

    இதுபோல் நடந்த பல குற்றங்களையும் ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் சுட்டிக்காட்டி தனது இணைய தளத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது. #AmnestyInternational
    மத்திய பிரதேச மாநிலம் டிகம்கர் மாவட்டத்தில் உள்ள தரம்பூர் கிராமத்தில் தன் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக தலித் இளைஞரை பஞ்சாயத்து தலைவர் கொடூரமாக தாக்கியுள்ளார். #BanPartiality #DalitManAttacked
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் டிகம்பர் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது தரம்பூர் கிராமம். இந்த கிராமத்தில் வாழும் தலித் சமூகத்தைச் சார்ந்த தயாராம் அகிர்வால் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான ஹேமந்த் குர்மியின் வீட்டின் வழியாக சென்றுள்ளார். அவரை வழிமறித்த ஹேமந்த் குர்மி, அவரது சகோதரர் வினோத் குர்மி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான தினேஷ் யாதவ் ஆகியோர் தயாராம் அகிர்வாலை மிக கொடூரமான முறையில் தாக்கினர்.

    இந்த சம்பவம் குறித்து தயாராம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் ஹேமந்த் குர்மி, வினோத் குர்மி, முன்னு குர்மி, அனிருத் குர்மி, மற்றும் அவர்களது அண்டை வீட்டார் தினேஷ் யாதவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று இரவு ஹேமந்த் குர்மி உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். #BanPartiality #DalitManAttacked
    தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி, கொடூரமாக தாக்கியது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலத்தில் மற்றொரு சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் மீது உயர் சாதி வகுப்பினர் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட அந்த மனித மிருகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    மராட்டிய மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் 2 தலித் சிறுவர்கள், ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு, மற்றொரு சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்ததுதான்.

    ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவின் மனுதர்மம் பரப்பிய இத்தகைய நச்சுத்தன்மை நிறைந்த வெறுப்புணர்வு அரசியலை நாம் எதிர்க்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #Dalit Boys
    மகாராஷ்டிராவின் ஜல்காவோன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கிணற்றில் குளித்ததற்காக 3 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.

    மேலும், சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அங்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 சிறுவர்களும் தலித் பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சமூக நீதி துறை மந்திரி தெரிவித்துள்ளார். 
    காங்கிரஸ் கட்சியின் இதயத்தில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடம் இல்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.#karnatakaelection2018 #Modi
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. பா.ஜ.க. சார்பில் இன்று 23 தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க.வின் எஸ்.டி., எஸ்டி, ஓ.பி.சி. மற்றும் ஸ்லம் மோர்ச்சா தொண்டர்களிடையே  நமோ ஆப் வாயிலாக மோடி உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை அவர் தாறுமாறாக விமர்சித்தார்.

    ‘1952ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதும், 1953ல் பந்தாரா மக்களவை தொகுதி இடைத் தேர்தலின்போதும் அம்பேத்கரை தோற்கடிக்க காங்கிரஸ் தனது அனைத்து சக்திகளையும் பயன்படுத்தியது.  



    அதனால்தான், அம்பேத்கர் தோல்வி அடைந்து அவமானத்தை சந்தித்தார். அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு காரியத்தையாவது காங்கிரஸ் செய்தது உண்டா என்பதை தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் இதயத்தில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடம் இடம் இல்லை. இது பல தசாப்தங்களாக நடந்தது. காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்த வரை, அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.

    பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. சமூக நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய பா.ஜ.க. அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது’ என மோடி பேசினார். #karnatakaelection2018 #Modi
    ×