search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமார்"

    ராமபக்தனான அனுமானை தலித், ஜாட், முஸ்லிம் என பலர் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் பா.ஜ.க. விளக்கம் அளிக்க வேண்டுமென மதுரா ஜீயர் வலியுறுத்தியுள்ளார். #AdhokshajanandDeo #LordHanuman #Mathuraseer
    லக்னோ:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட.

    இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதைதொடர்ந்து, அம்மாநில மத விவகாரங்கள்துறை மந்திரி லக்‌ஷ்மி நாராயண் சவுத்ரி அனுமான் ஜாட் வம்சத்தை சேர்ந்தவர். அதனால்தான் அவர் மற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சகித்துகொள்ள முடியாமல் ராமனுக்கு ஆதரவாக நின்றார் என குறிப்பிட்டார்.

    இதற்கும் மேலே ஒருபடி ஏறிச்சென்ற உ.பி. சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. உறுப்பினர் புக்கல் நவாப் அனுமான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ரஹ்மான், அர்மான், குர்பான் என்ற ஒலிவடிவத்தில் அனுமானின் பெயரும் அமைந்திருப்பதால் அவர் முஸ்லிம்தான் என்று அவருக்கு தெரிந்த ஆதாரத்தை அவர் முன்வைத்திருந்தார்.


    இந்நிலையில், ஆளுக்கொரு மாதிரியாக அனுமானை உரிமை கொண்டாடும் வகையில் இதுதொடர்பாக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? என மதுரா ஜீயர் அதோக்‌ஷாஜானந்த் டியோ கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஒருபுறம் காலத்துக்கு தக்கவாறு ராமர் கோவில் பிரச்சனையை பா.ஜ.க. கையாண்டு வருகிறது, இன்னொருபுறம், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தலைவர்கள் இந்து கடவுள்களைப் பற்றி தகாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. உறுப்பினர் புக்கல் நவாப் கூறிய கருத்து பா.ஜ.க. ஆமோதித்தால் பின்னர் அக்கட்சி அனுமானுக்கு ஒரு மசூதி கட்டித்தர வேண்டி இருக்கும் என்றும் அதோக்‌ஷாஜானந்த் டியோ காட்டமாக குறிப்பிட்டார். #AdhokshajanandDeo #LordHanuman #Mathuraseer
    அனுமாரை தலித் என்று குறிப்பிட்ட உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில மந்திரி கடவுள்களை சாதியால் பிரிப்பது தவறு என்று குறிப்பிட்டார். #DivideGods #UPminister #YogiAdityanath
    லக்னோ:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட. இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.



    அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தலித் இயக்கமான ‘பீம் படை’ தலைவர் சந்திரசேகர், நாட்டில் உள்ள அனைத்து அனுமார் கோவில்களையும் இனி தலித்துகள் கைப்பற்ற வேண்டும். அந்த கோவில்களில் எல்லாம் தலித்துகளையே அர்ச்சகர்களாக பணியமர்த்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர், ‘கடவுள்களை சாதியின் பெயரால் பிரிவுப்படுத்துவது தவறு. இதனால் தற்போது அனுமார் கோவில்களை தலித் சமூகத்தினர் கைப்பற்றுவது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது’ என்று யோகி ஆதித்யாநாத்தின் பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்துள்ளார். #DivideGods #UPminister #YogiAdityanath

    ×