search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான 14-11-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் கீழ்க்காணும் தலைப்புகளில் நடத்தப்பட உள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் ) வருமாறு :- குழந்தைகள் தின விழா , ரோசாவின் ராசா ,ஜவகர்லால் நேருவின் தியாகங்கள் , நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு,இளைஞரின் வழிகாட்டி நேரு

    கல்லூரி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் வருமாறு :- இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு ,,நேரு கட்டமைத்த இந்தியா ,காந்தியும் நேருவும்*ந,ருவின் பஞ்சசீலக் கொள்கை ,உலக அமைதிக்கு நேருவின் தொண்டு , அமைதிப்புறா - நேரு.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்குமாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • பேருநது படியில் நின்று கொண்டு மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்கோரிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை, மாலை இருவேளையும் பேருந்து உள்ளே செல்லாமல் படியில் தொங்கியபடி பள்ளி கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் படியில் நிற்காமல் உள்ளே செல்லுமாறு கூறியும், மாணவர்கள் அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது ஆபத்தான பயணத்தை படிக்கட்டில் தொங்கியபடியே செல்கின்றனர்.

    இப்படி ஆபத்தை உணராமல் படியில் தொங்கி செல்வதால் தவறி விழுந்து விடுவார்களோ என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ள நேரிடுகிறது. நடத்துனர், ஓட்டுநர்களும் மாணவர்கள் நலன் கருதி பேருந்தை மெதுவாக பள்ளம் மேடு பார்த்து இயக்கிவருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அசம்பாவிதம் ஏற்ப்படும் முன்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 300 சாரணர், 300 சாரணியர்கள், 60 ஆசிரியர்கள், 40தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
    • கேம்புரி முகாம் குன்னூர், ஸ்டேன்லி பார்க் மாநில பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    காங்கயம் :

     பாரத சாரண சாரணியர் இயக்கம் தமிழ்நாடு சார்பில் மண்டல அளவிலான கேம்புரி முகாம் குன்னூர், ஸ்டேன்லி பார்க் மாநில பயிற்சி மையத்தில் நடைபெற்றது.  இம்முகாமில் கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரிஎன ஐந்து மாவட்டங்களில் இருந்து 300 சாரணர், 300 சாரணியர்கள், 60 ஆசிரியர்கள், 40தன்னார்வலர்கள் பங்கேற்றனர். காங்கயம் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியின் சார்பில் 4 சாரணர்களும், 5சாரணியர்களும், சாரண ஆசிரியர் பொன்சங்கர்  கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி சாரணசாரணியர்கள் கண்காட்சி மற்றும் கயிற்றுக்கலையில் முதலிடமும், இசைக்குழுஅணிவகுப்பு, படை அணிவகுப்பு, கிராமிய உணவுத் திருவிழா, கலாச்சார உடைஅணிவகுப்பு, மற்றும் கிராமிய நடனம் ஆகிய போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றுஒட்டுமொத்த புள்ளி பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

    வெற்றி பெற்ற சாரண சாரணியர்களை பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி,பொருளாளர் மோகனசுந்தரம், முதல்வர் சுப்பிரமணி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர். மேலும் பள்ளியின் தலைவர் கோபால்,  அகடமிக் டைரக்டர்சாவித்திரி சுப்பிரமணியம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோர் பாராட்டுதெரிவித்தனர்.

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • நேற்று காலை பள்ளி கேட்டின் பூட்டை திறக்க முயன்றபோது, முடியாததால் பள்ளிக்கு மாணவர்கள் அவதி அடைந்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்தவுடன் கேட்டை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளி கேட்டின் பூட்டை திறக்க முயன்றபோது, முடியாததால் பள்ளிக்கு மாணவர்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து பள்ளியை திறந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.

    • தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.
    • சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்–கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டு–வரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது.

    இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது. இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர்.

    இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.

    மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.

    இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது.

    இதனால் நகர் பகுதி முழுவதும் சாலைகள் சவுடு நிறைந்து இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி நேரங்களில் கூட இந்த லாரிகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்படுகிறது.

    நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணில் சறுக்கி விழுந்து அடுத்தடுத்து விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.

    எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேரணியை மாவட்ட உதவி ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
    • பேரணி சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நி லைப் பள்ளி, ரோட்டரி கிளப் ஆப் சீர்காழிடெம்பிள் டவுன் இணைந்துநாட்டு நலப்பணி திட்ட மாணவ ர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரணியை. மாவட்ட உதவி ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.

    முகாம் அலுவலர் முரளிதரன், ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள் சுப்பு சொர்ண பால், தங்க.ரவிச்சந்திரன், மலர்கண்ணன், பாலாஜி, முரளி, மோகனசுந்தரம், முன்னாள் செயலாளர்கள் வெங்கடாஜலபதி, விஜயன், குமார், சந்தோஷ் மற்றும் காவல்துறை, போக்குவரத்து காவல்த் துறையினர், கலந்துக் கொண்டனர். பேரணி சீர்காழி முக்கிய வீதி வழியாக சென்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை உதவி திட்ட அலுவலர் மணிகண்டன் செய்தார். நிறைவில் சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் பிரபாகரன் நன்றிக் கூறினார்.

    • மேஜை, நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
    • செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அநாகரீகமாக பதிலளிப்பது கண்டிக்கத்தக்கது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டையில் உள்ள கும்பகோணம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

    வட்டார கல்வி அலுவலர் மதியழகன் முன்னிலை வகித்தார். இதில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.3.29 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கி னார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    அரசியலில் நாகரீகம் அற்ற போக்கை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணா மலை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். கடலூரில் செய்தியா ளர்களை தரக்குறைவாக அநாகரீ கமாக பொதுவெளியில் பேசி உள்ளார்.

    செய்தியாளர்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நாகரீகமாக பதில் அளிக்காமல் அநாகரீகமாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவை அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    கூடிய விரைவில் அண்ணா மலைக்கும் பா.ஜ.க.வுக்கும் உரிய பதிலடி மக்கள் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ். கே. முத்துச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் பாதுஷா, மாவட்ட நிர்வாகிகள் ஹிபாயதுல்லா, மைதீன், அப்துல் ரஹ்மான், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர்.

    பள்ளி தலைமை ஆசிரியை சகோ.பவுலின் தெரசாள் தலைமை வகித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி ஊழியர் ஞானசேகரன், ஆசிரியை எஸ்தர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.

    சமூகப்பணித்துறை பேராசிரியர் வனிதா பேசுகையில், கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது என பாராட்டி பேசினார்.

    சமூகப்பணித்துறை தலைவர் முத்துக்குமார் வழிகாட்டுதல்படி நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    முன்னதாக பள்ளி ஆசிரியை ரோஸ்லின் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தை ஒருங்கிணைத்த கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகளான ஜோ, புவனா, தேவி, அலெக்ஸ், அசோக், வனஜா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் தெரசாள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அரசு உதவி பெறும் பள்ளியான வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ பள்ளியில் ஏற்படுத்தியதன் மூலம் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    • மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பேசினார்.
    • பள்ளி வளாகத்தில் மாணவர்களுடைய பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் காரப்பிடாகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் இன்டராக்ட் கிளப் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க பள்ளி) கார்த்திகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாகை வனச்சரகர் ஆதி லிங்கம் மாணவர்களுக்கு 100 மரக்கன்றுகளை வழங்கி மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பேசினார்.

    தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் "சுற்றுச்சூழல் காப்பதில் மாணவர்களின் பங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். வேளாங்கண்ணி ரோட்டரி கிளப் சார்பில் ஐந்து இரும்பு கூண்டுகள் வழங்கப்பட்டன.

    இன்டராக்ட் சங்க தொடக்க விழாவில் ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர் சாமிநாதன், பிரகாஷ், அனுஷா நீலகண்டன், ஆராமுதன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவிகள் சுதர்ஷினி மற்றும் ஹரிணி இன்ட்ராக்ட் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். தேசிய பசுமைப்படை பள்ளி பொறுப்பாசிரியர் கயிலை ராஜன் நன்றி கூறினார்.

    பின்னர் பள்ளி வளாகத்தில் 100 மாணவர்களுக்கு நூறு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மாணவர்களுடைய பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • இந்த இயக்கம் இன்று 50 ஆண்டுகளை கடந்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
    • எடப்பாடி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காந்தி தலைமை தாங்கினார்.

    அ.தி.மு.க. அவைத்தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், தஞ்சை ஒன்றிய செயலாளர் நாகத்திகலியமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. பேச்சாளர்கள் நள்ளாற்று நடராஜன், மணிமுரசு, ருத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    உரிமையை பாதுகாத்தது

    கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி- சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:- தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்த போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கினார்.

    அப்போது இந்த கட்சி 100 நாட்களை தாண்டுமா? என்று ஏளனம் பேசினர். ஆனால் இந்த இயக்கம் இன்று 50 ஆண்டுகளை கடந்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதில் 32 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

    இந்த காலக்கட்டத்தில் தமிழர்களின் உரிமையை பாதுகாத்த, நிலை நாட்டிய கட்சி அ.தி.மு.க.. இந்த ஆட்சியில் தான் தமிழகத்தில் பேர் சொல்லும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

    ஜெயலலிதா விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.

    ஆனால் தி.மு.க. ஆட்சி சொன்னதை கூட செய்யாத ஆட்சியாக உள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். கேட்டால் மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள்.

    மக்களும் பயப்படுகிறார்கள்

    தி.மு.க.வின் 16 மாத ஆட்சியில் எந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர் என்று கூற முடியுமா? ஆனால் காவிரி பிரச்சினையில் தொடர்ந்து பேராடியது அ.தி.மு.க. தான். ஆனால் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றவர் கருணாநிதி. உலகில் பெண்களுக்கு எந்த பிரச்சினை நடந்தாலும் உடனடியாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியை பார்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் அல்ல, மக்களும் பயப்படுகிறார்கள்.

    இனி எப்போதும், ஏன் நாளையே தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், சேகர், கோவிந்தராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் பாலை.ரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒரத்தநாடு நகர செயலாளர் கதிரேசன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, திராவிட நகர கூட்டுறவு வங்கி தலைவர் பஞ்சாபிகேசன், ஒரத்தநாடு ஐ.டி.விங்க் நகர செயலாளர் கதிரேசன் , மாவட்ட பொருளாளர் தம்பித்துரை, மாணவர் அணி முருகேசன், விளார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், கவுன்சிலர்கள் கோபால், யு.என்.கேசவன், காந்திமதி, தெட்சிணாமூர்த்தி, கலைவாணி சிவக்குமார்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் வக்கீல் சரவணன் நன்றி கூறினார்.

    • திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் சென்றதால், அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை குறைவாக இருந்தது.

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரம் தொழிலாளர்கள் இன்றி காணப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் திருப்பூரில் ஹோட்டல்கள் நடத்திய வருகிறார்கள். தற்போது அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், திருப்பூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

    இதுபோல் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பாத நிலையில் அவர்கள் குழந்தைகள் பல பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள பல பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகை குறைந்தது. பள்ளி வகுப்பறைகள் பலவும், மாணவ- மாணவிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    • விழாவில் 20 மாற்றுதிறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • விழாவிற்கு பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் தலைமை வகித்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் தலைமை வகித்து வரவேற்று பேசினார்.

    இவ்விழாவில் பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா ஆகியோர் கலந்துகொண்டு 20 மாற்றுதிறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்கள். விழாவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களும் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இயன்முறை மருத்துவர் ராஜராஜன், சிறப்பாசிரியர்கள் அனிதா, மேரி, தேன்மொழி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் சுதாகர் நன்றி கூறினார்.

    ×